search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்டகம்"

    • “ஊட்டச்சத்தை உறுதிசெய்” திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தினை மாவட்ட கலெக்டர்.ஸ்ரேயா பி தொடங்கி வைத்தார்.
    • மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1,227 குழந்தைகளுக்கு உடனடியாக உட்கொள்ளும் சிகிச்சை உணவு வகைகள் வழங்கப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், போதுப்பட்டியில் உள்ள குழந்தைகள் மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில் "ஊட்டச்சத்தை உறுதிசெய்" திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தினை மாவட்ட கலெக்டர்.ஸ்ரேயா பி தொடங்கி வைத்தார்.

    பின்னர், அவர் கூறியதாவது:-

    முதலமைச்சரின் முன்னோடி திட்டமான "ஊட்டச்சத்தை உறுதிசெய்" திட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் பயனாளர்களான 6 மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்க–ளுக்கு 2 ஊட்டச்சத்து பெட்டகங்க–ளும், 6 மாதம் வரை மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்க–ளுக்கு ஒரு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குவதும், மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை–களுக்கு 8 வாரங்களுக்கு (56 நாட்களுக்கு) உடனடியாக உட்கொள்ளும் சிகிச்சை உணவு போன்றவைகளை வழங்கி குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்துவதாகும்.

    நாமக்கல் மாவட்டத்தில் 6 மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 365 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 730 எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பும், 6 மாதம் வரை மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 738 குழந்தைகளின் தாய்மார்க–ளுக்கு 738 எண்ணிக்கை–யிலான ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பும், மொத்தம் 1,468 ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பு வழங்கப்பட உள்ளது, மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1,227 குழந்தைகளுக்கு உடனடியாக உட்கொள்ளும் சிகிச்சை உணவு வகைகள் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அதனைத்தொடர்ந்து, போதுப்பட்டியில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் போதுப்பட்டி, லக்கம்பா–ளையத்தில் உள்ள குழந்தை–கள் மையத்தை நேரில் பார்வையிட்டு, குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறைகள் குழந்தைகளுக்கு வழங்கும் இணை உணவு, குழந்தைகளின் கற்றல் திறன், குழந்தைகளுக்கு வழங்கும் உணவின் தரம், குழந்தைகள் மையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் கீதா, அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம்
    • கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் நலத்திட்ட உதவி

     தாராபுரம்:

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம் அலங்கியம் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.முகாமுக்கு வட்டார மருத்துவர் டாக்டர் தேன்மொழி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.மகேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் தேவிகுப்பு, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குணர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்‌.

    முகாமில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    • மார்பக பரிசோதனை, வாய்ப்புண் புற்றுநோய், சிறுநீரக பரிசோதனைகள் செய்யப்பட்டது.
    • 860 வீடுகளுக்கு மருத்துவ குழுவினர் நேரில் சென்று பரிசோதனை செய்து கணக்கெடுப்பு மேற்கொண்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில், மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவின்படியும், மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் குமரகுருபரன் பரிந்துரையின் பேரிலும் வட்டார சுகாதார துறை சார்பில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார் தலைமையில் மக்களைத் தேடி மருத்துவ கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

    இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், காச நோய், தோல்நோய், கர்ப்பப்பை பரிசோதனை, மார்பக பரிசோதனை, வாய்ப்புண் புற்றுநோய், சிறுநீரக பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணை, பூஸ்டர் டோஸ் வழங்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்யப்பட்டது.

    மக்களை தேடி மருத்துவ நோயாளிகளுக்கு அடையாள அட்டை, மருந்து பெட்டகம் கடைசியாக வழங்கிய தேதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. முட நீக்கியல் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

    இம் முகாமில் ஒவ்வொரு பணியாளருக்கும் 40 வீடு வீதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதை தொடர்ந்து மணியிருப்பு கிராமத்தில் 252 வீடுகள், சேத்திருப்பு 136 வீடு, நாணல் படுகை188 வீடு, வெள்ளை மணல் 98 வீடு, காடுவெட்டி 186 வீடு ஆக மொத்தம் 860 வீடுகளுக்கு மருத்துவ குழுவினர் நேரில் சென்று ஒவ்வொரு நபரையும் விசாரணை செய்து பரிசோதனை செய்து கணக்கெடுப்பு மேற்கொண்டனர்.

    இந்த முகாமில் மருத்துவர் மோகனா, நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் சிவனேசன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினிரமேஷ், சேத்திருப்பு பள்ளி தலைமை ஆசிரியர் பாலு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கொளஞ்சியன், மருத்துவ சாரா மேற்பார்வையாளர் தவபாலன், சுகாதார ஆய்வாளர்கள் சுந்தரம், இள ஞ்செழியன், வேங்கட பிரசாத், வசந்த், செவிலியர்கள் அனுராதா, இந்திரா, தொழில்நுட்ப வல்லுனர் உஷா, மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் மற்றும் டெங்கு கொசு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×