search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vault"

    • மார்பக பரிசோதனை, வாய்ப்புண் புற்றுநோய், சிறுநீரக பரிசோதனைகள் செய்யப்பட்டது.
    • 860 வீடுகளுக்கு மருத்துவ குழுவினர் நேரில் சென்று பரிசோதனை செய்து கணக்கெடுப்பு மேற்கொண்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில், மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவின்படியும், மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் குமரகுருபரன் பரிந்துரையின் பேரிலும் வட்டார சுகாதார துறை சார்பில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார் தலைமையில் மக்களைத் தேடி மருத்துவ கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

    இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், காச நோய், தோல்நோய், கர்ப்பப்பை பரிசோதனை, மார்பக பரிசோதனை, வாய்ப்புண் புற்றுநோய், சிறுநீரக பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணை, பூஸ்டர் டோஸ் வழங்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்யப்பட்டது.

    மக்களை தேடி மருத்துவ நோயாளிகளுக்கு அடையாள அட்டை, மருந்து பெட்டகம் கடைசியாக வழங்கிய தேதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. முட நீக்கியல் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

    இம் முகாமில் ஒவ்வொரு பணியாளருக்கும் 40 வீடு வீதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதை தொடர்ந்து மணியிருப்பு கிராமத்தில் 252 வீடுகள், சேத்திருப்பு 136 வீடு, நாணல் படுகை188 வீடு, வெள்ளை மணல் 98 வீடு, காடுவெட்டி 186 வீடு ஆக மொத்தம் 860 வீடுகளுக்கு மருத்துவ குழுவினர் நேரில் சென்று ஒவ்வொரு நபரையும் விசாரணை செய்து பரிசோதனை செய்து கணக்கெடுப்பு மேற்கொண்டனர்.

    இந்த முகாமில் மருத்துவர் மோகனா, நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் சிவனேசன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினிரமேஷ், சேத்திருப்பு பள்ளி தலைமை ஆசிரியர் பாலு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கொளஞ்சியன், மருத்துவ சாரா மேற்பார்வையாளர் தவபாலன், சுகாதார ஆய்வாளர்கள் சுந்தரம், இள ஞ்செழியன், வேங்கட பிரசாத், வசந்த், செவிலியர்கள் அனுராதா, இந்திரா, தொழில்நுட்ப வல்லுனர் உஷா, மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் மற்றும் டெங்கு கொசு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×