search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு  ஊட்டச்சத்து பெட்டகம்
    X

    சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

    • “ஊட்டச்சத்தை உறுதிசெய்” திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தினை மாவட்ட கலெக்டர்.ஸ்ரேயா பி தொடங்கி வைத்தார்.
    • மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1,227 குழந்தைகளுக்கு உடனடியாக உட்கொள்ளும் சிகிச்சை உணவு வகைகள் வழங்கப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், போதுப்பட்டியில் உள்ள குழந்தைகள் மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில் "ஊட்டச்சத்தை உறுதிசெய்" திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தினை மாவட்ட கலெக்டர்.ஸ்ரேயா பி தொடங்கி வைத்தார்.

    பின்னர், அவர் கூறியதாவது:-

    முதலமைச்சரின் முன்னோடி திட்டமான "ஊட்டச்சத்தை உறுதிசெய்" திட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் பயனாளர்களான 6 மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்க–ளுக்கு 2 ஊட்டச்சத்து பெட்டகங்க–ளும், 6 மாதம் வரை மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்க–ளுக்கு ஒரு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குவதும், மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை–களுக்கு 8 வாரங்களுக்கு (56 நாட்களுக்கு) உடனடியாக உட்கொள்ளும் சிகிச்சை உணவு போன்றவைகளை வழங்கி குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்துவதாகும்.

    நாமக்கல் மாவட்டத்தில் 6 மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 365 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 730 எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பும், 6 மாதம் வரை மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 738 குழந்தைகளின் தாய்மார்க–ளுக்கு 738 எண்ணிக்கை–யிலான ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பும், மொத்தம் 1,468 ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பு வழங்கப்பட உள்ளது, மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1,227 குழந்தைகளுக்கு உடனடியாக உட்கொள்ளும் சிகிச்சை உணவு வகைகள் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அதனைத்தொடர்ந்து, போதுப்பட்டியில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் போதுப்பட்டி, லக்கம்பா–ளையத்தில் உள்ள குழந்தை–கள் மையத்தை நேரில் பார்வையிட்டு, குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறைகள் குழந்தைகளுக்கு வழங்கும் இணை உணவு, குழந்தைகளின் கற்றல் திறன், குழந்தைகளுக்கு வழங்கும் உணவின் தரம், குழந்தைகள் மையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் கீதா, அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×