என் மலர்
நீங்கள் தேடியது "ஊட்டச்சத்து"
- இயற்கையாகவே நன்மை பயக்கும் சேர்மங்கள், நிறமிகளை கொண்டது.
- காட்டு அரிசி என அழைக்கப்பட்டாலும் உண்மையாக இது அரிசி அல்ல.
அரிசி... இந்தியர்களின் உணவுப்பொருள் மட்டுமல்ல. உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் விருப்ப உணவாக அமைந்திருக்கிறது. அரிசியில் பல வகைகள், நிறங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் வெள்ளை, பழுப்பு, சிவப்பு, கருப்பு உள்ளிட்ட நிற அரிசிகள் முக்கியமானவை. நிறத்திற்கு ஏற்ப ஒவ்வொரு அரிசியின் சர்க்கரை சத்து அளவு குறியீடு, நார்ச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்து மதிப்புகள் வெவ்வேறானவை. அவை பற்றிய தொகுப்பு இது.
வெள்ளை அரிசி
தவிடு மற்றும் கிருமி நீக்கம் செய்யப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட தானியம். மென்மையான தன்மை கொண்டது, நீண்ட ஆயுட்காலம் உடையது, விரைவில் சமைக்கக்கூடியது. முழு தானியங்களுடன் ஒப்பிடும்போது இவற்றில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைவாகவே இருக்கிறது.
சிவப்பு அரிசி
இயற்கையாகவே நன்மை பயக்கும் சேர்மங்கள், நிறமிகளை கொண்டது. தவிடு அடுக்கையும் நீக்காமல் தக்கவைத்துக்கொள்ளும் முழு தானியம் இது. நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களும் மிகுந்தது. மண் வாசனை கொண்டது.
பாஸ்மதி அரிசி
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அதிகம் விளைவிக்கப்படும் நீண்ட தானிய நறுமண அரிசியாகும். சமைக்கும்போது பஞ்சு போன்று மென்மையாகும். ஒன்றோடொன்று ஒட்டாது. இதில் பழுப்பு பாஸ்மதி அரிசியானது வெள்ளை பாஸ்மதியை விட அதிக நார்ச்சத்து கொண்ட முழு தானியமாகும்.
கருப்பு அரிசி
அதிக அளவு அந்தோசயினின்கள் கொண்டது. இது சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். வெள்ளை அரிசியை விட அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து உடையது. எளிதில் மெல்லக்கூடியது.
பழுப்பு அரிசி
வெளிப்புற உமி மட்டுமே அகற்றப்பட்ட முழு தானியம் இது. நார்ச்சத்து, பி வகை வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது. வெள்ளை அரிசியை விட குறைந்த சர்க்கரை சத்து அளவு குறியீடு கொண்டது.
காட்டு அரிசி
காட்டு அரிசி என அழைக்கப்பட்டாலும் உண்மையாக இது அரிசி அல்ல. நீர்வாழ் புல் வகையை சேர்ந்தது. புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் கொண்டது. காய்கறிகள் அல்லது தானிய உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது.
நீரிழிவு நோய்க்கு எந்த அரிசி சிறந்தது?
நீரிழிவு நோயாளிகளுக்கு பழுப்பு, கருப்பு, சிவப்பு மற்றும் முழு தானிய பாஸ்மதி அரிசி வகைகள் ஏற்றவை. ஏனெனில் குறைந்த சர்க்கரை சத்து அளவு குறியீட்டையும், அதிக நார்ச்சத்தையும் கொண்டுள்ளன. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவி புரியும். இந்த அரிசியை அளவாக எடுத்துக்கொண்டு காய்கறிகள் போன்ற அதிக நார்ச்சத்துமிக்க உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது பலன் அளிக்கும்.
- இரண்டு சமையல் முறைகளும் கடினமான நார்ச்சத்துக்களை உடைப்பதன் மூலம் காய்கறிகள் எளிதில் ஜீரணிக்க உதவும்.
- தண்ணீரைப் பயன்படுத்தாதபோது ஊட்டச்சத்துக்கள் வீணாகிவிடும்.
காய்கறிகளை நீராவியில் வேகவைப்பது, நீரில் கொதிக்கவிட்டு வேகவைப்பது இதில் எந்த முறையில் சமைப்பது சிறந்தது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. இந்த இரு சமையல் முறையும் சுவை, நிறம், ஊட்டச்சத்துக்கள் விஷயத்தில் குறிப்பிடத்தக்க மாறுபாடுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? எந்த முறையில் சமைப்பது காய்கறிகளில் அதிக ஊட்டச்சத்துக்களை தக்கவைக்க உதவிடும் என்பது குறித்து பார்ப்போம்.
காய்கறிகளை நீரில் வேகவைக்கும்போது என்ன நடக்கும்?
காய்கறிகளை நீரில் கொதிக்கவைத்து சமைப்பது எளிய மற்றும் வழக்கமான சமையல் முறையாகும். தண்ணீரில் காய்கறிகளை மூழ்கவைத்து 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குள் வேகவைப்பது நல்லது. இந்த சமையல் முறை தொந்தரவு இல்லாதது. ஒரே சமயத்தில் வேறு சமையல் வேலைகளிலும் ஈடுபட ஏதுவானது. இருப்பினும் நீரில் கொதிக்க வைக்கும் செயல்முறையின்போது பல ஊட்டச்சத்துக்கள் தண்ணீரில் இழக்கக்கூடும். அதனால் காய்கறிகளை வேகவைத்த தண்ணீரை வீணாக்காமல் சூப் தயாரிக்கலாம். குழம்பில் ஊற்றிவிடலாம். அப்படி செய்யும்போது மட்டுமே ஊட்டச்சத்துக்களை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
நீரில் கொதிக்கவிட்டு வேகவைத்த காய்கறிகள் பெரும்பாலும் மென்மையாக மாறும். கொதிக்க வைக்கும்போது காய்கறிகளின் செல் சுவர்கள் உடைந்து அதன் இயற்கையான சுவை தன்மை வெளியேறக்கூடும். இருப்பினும் உருளைக்கிழங்கு, பீட்ரூட் போன்ற மாவுச்சத்து நிறைந்த காய்கறிகளை நீரில் வேகவைப்பதே சரியானது. அவை ஜீரணிக்க எளிதாகவும் மாறும்.
எந்த முறை அதிக ஊட்டச்சத்துக்களை தக்கவைக்கும்?
இரண்டு சமையல் முறைகளும் கடினமான நார்ச்சத்துக்களை உடைப்பதன் மூலம் காய்கறிகள் எளிதில் ஜீரணிக்க உதவும். அதே வேளையில், நீராவி முறை அதிக நன்மை தரும். இது செரிமானத்திற்கு உகந்த சேர்மங்களை அப்படியே தக்கவைத்துவிடும். குறிப்பாக முட்டைக்கோஸ், காலிபிளவர் மற்றும் புரோக்கோலி போன்ற காய்கறிகளை நீராவியில் சமைப்பதே சிறந்தது. அவற்றை தண்ணீரில் வேகவைப்பது சில ஊட்டச்சத்துக்களை குறைத்துவிடும்.
ஆயுர்வேதத்தில் நீராவியில் சமைக்கும் முறையே சிறந்ததாக மதிப்பிடப்படுகிறது. இது உணவில் இருக்கும் உயிர் சக்தியை பாதுகாக்க உதவுகிறது. உணவை இலகுவாகவும், புத்துணர்ச்சியுடனும், அதிக ஆற்றலுடனும் வைத்திருக்கும்.
நீராவி-கொதிக்கவைத்தல்: முக்கிய வேறுபாடுகள்
ஊட்டச்சத்து தக்கவைப்பு: நீராவியில் வேகவைக்கும்போது மிக குறைவான வைட்டமின்களே இழக்கப்படுகின்றன. நீரில் கொதிக்க வைக்கும்போது வைட்டமின்கள் தண்ணீரில் கசிந்து விடும். அந்த தண்ணீரைப் பயன்படுத்தாதபோது ஊட்டச்சத்துக்கள் வீணாகிவிடும்.
அமைப்பு: நீராவியில் வேகவைப்பது, காய்கறிகளை உறுதியாகவும், மிருதுவாகவும், வண்ணமயமாகவும் தக்கவைத்துவிடும். அதே நேரத்தில் தண்ணீரில் கொதிக்க விடும்போது, காய்கறிகள் மென்மையாக மாறும்.
சுவை: இயற்கையான மற்றும் இனிப்பு சுவைகளை தக்கவைக்க நீராவி சமையல் உதவும். கொதிக்க வைப்பது, காய்கறிகளை லேசானதாக மாற்றும்.
நேரம் - எளிமை: கொதிக்கவைக்கும் முறையுடன் ஒப்பிடும்போது நீராவியில் சமைப்பதற்கு அதிக நேரம் தேவைப்படும்.
காய்கறிகளை நீராவியில் வேகவைக்கும்போது என்ன நடக்கும்?
கொதிக்கும் நீரில் இருந்து வெளிப்படும் நீராவி மூலம் காய்கறிகளை சமைக்கும்போது தண்ணீருடன் நேரடி தொடர்பு இல்லாமல் வேகும். அந்த நீராவி காய்கறிகளின் எல்லா பகுதியிலும் சமமாக பரவி நன்றாக வேக தொடங்கும். காய்கறிகளை மென்மைத்தன்மைக்கு மாற்றுவதோடு சுவையும் குறையாமல் பார்த்துக்கொள்ளும். தண்ணீருடன் நேரடி தொடர்பு இல்லாததால் காய்கறிகளில் பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் பாதுகாக்கப்படும். குறிப்பாக நீரில் கரையும் வைட்டமின்களான பி-காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி போன்றவை தக்கவைக்கப்படும். நீராவியில் வேகவைத்த காய்கறிகள் புத்துணர்ச்சியுடனும், பிரகாசமாகவும் இருப்பதற்கு இதுதான் காரணம். உதாரணமாக கேரட் நிறம் பளிச்சென்று மாறும். புரோக்கோலி மொறுமொறுப்பு தன்மையை தக்கவைத்துக்கொள்ளும். மேலும் நீராவியில் வேகவைப்பது காய்கறிகளின் இயற்கையான இனிப்புத்தன்மையை மீட்டெடுக்கவும் உதவிடும். நீராவியில் வேகவைக்கும்போது தண்ணீரில் சில துளி எலுமிச்சை சாறு சேர்க்கலாம். இது கலோரிகளை கூடுதலாக்காமல் சுவை மற்றும் நறுமணத்தை மேம்படுத்த துணைபுரியும்.
- வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் நெற்பயிர்கள் அவ்வப்போது மழையால் மூழ்க வாய்ப்புள்ளது.
- வேளாண் இணை இயக்குனர் கனகராஜன் வழிகாட்டலின் படி கீழ்கண்ட ஆலோசனைகள் விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
நீடாமங்கலம்:
வேளாண்மை உழவர் நலத்துறை உதவி இயக்குநர் குடவாசல் மற்றும்வ லங்கைமான் (பொ) கோ.ஜெயசீலன் லெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் நெற்பயிர்கள் அவ்வப்போது மழையால் மூழ்க வாய்ப்புள்ளது.
வேளாண் இணை இயக்குனர் கனகராஜன் வழிகாட்டலின் படி கீழ்கண்ட ஆலோசனைகள் விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் மகசூல் இழப்பை தவிர்ப்பதற்கு முதல்வழி வடிகால் வசதி அமைப்பது தான் இன்றியமையாதது. நீரினை வடித்து வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்ய வேண்டும்சமீபத்தில் நடவு செய்யப்பட்ட இளம் பயிர்கள்நீரினால் அடித்துச் செல்லப்பட்டிருந்தால்,நாற்றங்காலில் மீதமுள்ள நாற்றுக்களை பயன்படுத்தி நடவு செய்ய வேண்டும்.
துார் வெடித்த பயிரினைக் கலைத்து வழித்தடங்களில் நடவு செய்து பயிர் எண்ணிக்கையை பராமரி க்கலாம் முழுவதுமாக நடவு பயிர் அழுகியிருந்தால் குறுகிய கால நெல் ரகங்களை நடலாம் (அல்லது) நேரடி ஈர விதைப்பு செய்யலாம்.
நீரில் மூழ்கிய பயிரில் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்பட்டால்ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன்18 கிலோ ஜிப்சம்4 கிலோ வேப்பம் புண்ணாக்கு என்ற அளவில் கலந்து இரவு முழுவதும் வைத்து தண்ணீர் வடிந்த உடன் வயலில் இட வேண்டும்.
போதிய அளவு சூரிய வெளிச்சம் தென்பட்டபிறகு ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன் ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து இலைவழி உரமாக தெளிக்க வேண்டும்.
இலை மடக்குப்புழுவின் சேதாரம் 10 சதவீதத்திற்கு அதிகமாக இருந்தால் ஏக்கருக்கு 400 மி.லி. புரோபோனோபாஸ் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
குலைநோயின் சிறு புள்ளிகள் காணப்ப ட்டால் ஏக்கருக்கு 100 கிராம் கார்பன்டசிம் பூசணக்கொல்லி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். நோயின் அறிகுறி காணப்பட்டால் தழைச்சத்து உரமிடுவதை தவிர்க்கலாம்.
மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண் துறை அலுவலர்களைஅணுகி விபரம் தெரிந்து கொள்ளவும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம்
- கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் நலத்திட்ட உதவி
தாராபுரம்:
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம் அலங்கியம் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.முகாமுக்கு வட்டார மருத்துவர் டாக்டர் தேன்மொழி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.மகேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் தேவிகுப்பு, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குணர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
- ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தில் சத்துமிகு சிறுதானியங்கள் குறித்த திட்ட விளக்க விழிப்புணர்வு பிரசார வாகனத்தினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, வேட்டாம்பாடி கிராமத்தில் நடைபெற்றது.
- அட்மா தலைவர் பழனிவேல் கலந்து கொண்டு, பிரசார வாகனத்தினை கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் வட்டார வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தில் சத்துமிகு சிறுதானியங்கள் குறித்த திட்ட விளக்க விழிப்புணர்வு பிரசார வாகனத்தினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, வேட்டாம்பாடி கிராமத்தில் நடைபெற்றது.
அட்மா தலைவர் பழனிவேல் கலந்து கொண்டு, பிரசார வாகனத்தினை கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினார்.
இதில் வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா, வேளாண்மை அலுவலர் ரசிகப்பிரியா, உதவி வேளாண்மை அலுவலர்கள் கோபிநாத், சதீஸ்குமார், மாலதி, திலீப்குமார் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட அலுவலர்கள் ரமேஷ், கவிசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தென்னையில் மரம் ஏறும் கருவி மற்றும் ஊட்டச்சத்து டானிக் பிற விவசாயிகள் மூலம் காண்பிக்கப்பட்டது.
- கருவியை பயன்படுத்தும் போது விவசாயிகளுக்கு குறைந்த செலவில் ஆட்கள் தேவைப்படுகிறது.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூரில் வட்டார குழு அமைப்பாளர் வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் உத்தரவுபடி, விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் தென்னை மரம் ஏறும் கருவி மற்றும் ஊட்டச்சத்து டானிக் குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ் குமார் உதவி தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், உதவி வேளாண்மை அலுவலர் ஜெயசேரன் ஆகியோரின் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் தென்னை விவசாயிகள் ராஜேந்திரன், கண்ணன்சாமி ஆகியோரின் தென்னையில் மரம் ஏறும் கருவி மற்றும் ஊட்டச்சத்து டானிக் மூலம் பிற விவசாயிகளை கொண்டு செய்து காண்பிக்கப்பட்டது.
தென்னை ஊட்டச்சத்து குறித்து வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுரேஷ்குமார் கூறுகையில்:-
தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் தென்னையை கைவிடாமல் இருக்க மண்ணின் வளம் குறையும் வகையில் தென்னையில் அதிக சத்து பற்றாக்குறை குறைந்து வருகிறது.
இதனால், தென்னை ஊட்டச்சத்து டானிக் தென்னை மர வேர் பகுதியில் 4 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் தென்னை டானிக்கை கலந்து 200 மில்லி பாலித்தீன் கவரில் ஒரு மரத்து வேரில் நுனியை சீவி விட்டு அதில் கட்டி வந்தால் மரத்திற்கு சத்து அதிகரித்து நல்ல காய்ப்பு தரும் என்றார்.
தென்னையில் மரம் ஏறும் கருவி குறித்து உதவி தொழில் நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம் கூறுகையில்:-
இந்த கருவியை பயன்படுத்தும் போது விவசாயிகளுக்கு குறைந்த செலவில் ஆட்கள் தேவைப்படுகிறது. தேங்காய் மேலிருந்து கீழே விழும் போது சேதம் ஏற்படாது, குறைந்த நேரத்தை பயன்படுத்தவும் மிக எளிய முறையில் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம் என்றார்.
இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
- ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான சிறப்பு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் திட்டத்தினை சென்னையில் நடைபெற்ற “ஏற்றுமிகு ஏழு திட்டங்கள்” நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- சேலம், அய்யந்திரு மாளிகை, வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு உணவு மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்களை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
சேலம்:
தமிழக அரசின் "ஊட்டச்சத்தை உறுதிசெய்" திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான சிறப்பு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் திட்டத்தினை சென்னையில் நடைபெற்ற "ஏற்றுமிகு ஏழு திட்டங்கள்" நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் 6 மாதம் முதல் 2 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் ஆகியோர்களுக்கு 8 வாரங்கள் சிறப்பு உணவாக, உடனடியாக உட்கொள்ளும் சிகிச்சை உணவு அளிக்கவும், முதல் 6 மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு அவர்களின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்தி குழந்தைகளுக்கு தேவையான தாய்பால் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் 2 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 6 மாதம் வரையுள்ள 468 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 2 ஊட்டச்சத்து பெட்டகமும் தொகுப்பும், மிதமான எடை குறைவுள்ள 616 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 1 ஊட்டச்சத்து பெட்டக தொகுப்பு வழங்கப்படுகிறது. மேலும், 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 2,581 குழந்தைகளுக்கு தொகுப்பும் வழங்கப்படுகிறது.
சேலம், அய்யந்திரு மாளிகை, வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு உணவு மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்களை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
பின்னர் அவர் கூறுகையில், உடனடியாக உட்கொள்ளும் சிகிச்சை குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தக்கூடிய உணவு என்பது யுனிசெப் அமைப்பினால் பரிந்துரைக்கப்பட்ட வழுவழுப்பான பசை (paste) போன்று இருக்கும் உணவுப் பொருளாகும். இதில், அரைத்த வேர்க்கடலை, பால் பவுடர், எண்ணெய், சர்க்கரை, வைட்டமின்கள் மற்றும் மினரல் ஆகிய பொருட்கள் அடங்கி இருக்கும்.
ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகத்தில், தாய்மார்களுக்கான சிறப்பு ஆரோக்கிய உணவுக் கலவை, இரும்புச் சத்து மருந்து, விதை நீக்கப்பட்ட பேரீச்சம் பழம், குடற்புழு நீக்க மாத்திரை, ஆவின் நெய் மற்றும் பருத்தி துண்டு ஆகியன அடங்கியிருக்கும் என்றார்.
நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, மாநகர் நல அலுவலர் யோகானந்த், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர் பரிமளாதேவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- “ஊட்டச்சத்தை உறுதிசெய்” திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தினை மாவட்ட கலெக்டர்.ஸ்ரேயா பி தொடங்கி வைத்தார்.
- மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1,227 குழந்தைகளுக்கு உடனடியாக உட்கொள்ளும் சிகிச்சை உணவு வகைகள் வழங்கப்படுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், போதுப்பட்டியில் உள்ள குழந்தைகள் மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில் "ஊட்டச்சத்தை உறுதிசெய்" திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தினை மாவட்ட கலெக்டர்.ஸ்ரேயா பி தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் கூறியதாவது:-
முதலமைச்சரின் முன்னோடி திட்டமான "ஊட்டச்சத்தை உறுதிசெய்" திட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் பயனாளர்களான 6 மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்க–ளுக்கு 2 ஊட்டச்சத்து பெட்டகங்க–ளும், 6 மாதம் வரை மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்க–ளுக்கு ஒரு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குவதும், மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை–களுக்கு 8 வாரங்களுக்கு (56 நாட்களுக்கு) உடனடியாக உட்கொள்ளும் சிகிச்சை உணவு போன்றவைகளை வழங்கி குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்துவதாகும்.
நாமக்கல் மாவட்டத்தில் 6 மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 365 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 730 எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பும், 6 மாதம் வரை மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 738 குழந்தைகளின் தாய்மார்க–ளுக்கு 738 எண்ணிக்கை–யிலான ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பும், மொத்தம் 1,468 ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பு வழங்கப்பட உள்ளது, மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1,227 குழந்தைகளுக்கு உடனடியாக உட்கொள்ளும் சிகிச்சை உணவு வகைகள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, போதுப்பட்டியில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் போதுப்பட்டி, லக்கம்பா–ளையத்தில் உள்ள குழந்தை–கள் மையத்தை நேரில் பார்வையிட்டு, குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறைகள் குழந்தைகளுக்கு வழங்கும் இணை உணவு, குழந்தைகளின் கற்றல் திறன், குழந்தைகளுக்கு வழங்கும் உணவின் தரம், குழந்தைகள் மையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் கீதா, அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகம்.
- தொழு நோயாளிகளுக்கு சுயஉதவி மருந்து பெட்டகம் மற்றும் காலணிகள்.
திருவோணம்:
திருவோணம் அருகே ஊரணிபுரத்தில் டாக்டர் கலைஞர் வருமுன் காப்போம் வட்டார சுகாதார திருவிழா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஊரணிபுரம் ஜோதி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சரும் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ.எஸ்.பழனிமாணிக்கம், கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி மருத்துவ முகாமை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் , கண்ணொளி காப்போம் திட்ட மூலம் பள்ளி மாணவர்களுக்கு கண்ணாடி, தொழு நோயாளிகளுக்கு சுய உதவி மருந்து பெட்டகம் மற்றும் காலணிகள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாவட்ட சுகாதார துணை இயக்குனர் நமச்சிவாயம் திட்ட விளக்க உரையாற்றி பேசினார்.
முகாமில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திருஞானசம்பந்தம், திருவோணம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், மருத்துவமி ல்லா மேற்பார்வையாளர், துரைராஜ், சுகாதார ஆய்வாளர் பஷீர்முகமது, மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் திருவோணம் வட்டார மருத்துவ அலுவலர் காயத்ரி நன்றி கூறினார்.
- கால்நடைகளுக்கு இயற்கை ஊட்டச்சத்து மாவு இலவசமாக வழங்கப்பட்டது.
- யோகம் தொண்டு நிறுவனத்தின் டிரஸ்டி தமயந்தி தலைமை தாங்கினார்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் தனியார் சோலார் மின் உற்பத்தி நிறுவனம் மற்றும் யோகம் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் கால்நடைகளுக்கு இயற்கை ஊட்டச்சத்து மாவு இலவசமாக வழங்கப்பட்டது. இதில் செங்கப்படை, புதுக்கோட்டை, ஒ.கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்போர் கலந்து கொண்டு இயற்கை ஊட்டச்சத்து மாவை பெற்றுக்கொண்டனர். மேலும் இந்த மாவின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து, விவசாயிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு யோகம் தொண்டு நிறுவனத்தின் டிரஸ்டி தமயந்தி தலைமை தாங்கினார். தனியார் சோலார் நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி ஜெனார்தனன், தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் யோகேஷ் மணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனிதவள மேம்பாடு சபரீஷ், வழக்கறிஞர் அப்துல்சமதுசேட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நாம் நல்ல நிலையில் இருக்கிறோம்,
- நிலையை மாற்ற வேண்டும் என உடனே தொடங்கப்பட்ட திட்டம் தான் “ஊட்டச்சத்தை உறுதிசெய்”.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
பல்வேறு மாவட்டங்களுக்கு நான் ஆய்வுப் பணிகளுக்கு செல்லும்போது, ஓர் அங்கன்வாடி மையத்தில், மிகவும் மெலிந்த ஒரு குழந்தையைப் பார்த்தேன். அதற்கு காரணம் என்ன வென்று கேட்டபோது, ஊட்டச்சத்துக் குறைபாடு என்றார்கள்.
மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நாம் நல்ல நிலையில் இருக்கிறோம் என்று நான் சமாதானம் அடைய விரும்பவில்லை. அந்த நிலையை மாற்ற வேண்டும் என உடனே தொடங்கப்பட்ட திட்டம் தான் "ஊட்டச்சத்தை உறுதிசெய்". இந்த திட்டம் வெற்றி அடைந்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
- சத்தான ஊட்டச்சத்து நிறைந்தது, அனைத்து வயதினருக்கும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:-
பாசி பயறு - 200 கிராம்
நாட்டுச்சர்க்கரை 250 கிராம்
வேர்கடலை - 100 கிராம்
ஏலக்காய் - 4 நம்பர்
உப்பு -ஒரு சிட்டிகை
நெய் - 3 கரண்டி
செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் பாசிபயறு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு கடாயில் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். நன்றாக மனம் வரும் வரை வறுத்து எடுக்க வேண்டும். அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்து எடுத்துள்ள பாசிபயறு மாவு கலவையை ஒரு வானொலியில் சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்சி ஜாரில் 250 கிராம் நாட்டு சர்க்கரை, 4 நம்பர் ஏலக்காய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதே மிக்சி ஜாரில் 100 கிராம் வறுத்த வேர்கடலையையும் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
வறுத்த பாசிபயறு மாவு கலவையுடன், வறுத்த வேர்கடலை பொடி, பொடித்த நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதனுடன் காய்ச்சிய 3 கரண்டி நெய் சேர்த்து கிளர வேண்டும். இதனை நன்றாக பிசைந்து உருண்டைகளாக உருட்டி எடுக்க வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த பாசிபயறு லட்டு தயார். https://www.maalaimalar.com/health






