search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காடையாம்பட்டி அருகே கர்ப்பிணி தற்கொலை குறித்து கணவரிடம் போலீஸ் விசாரணை
    X

    தனது கணவர் மணிகண்டனுடன் கோபிகாஸ்ரீ திருமணத்தின்போது எடுத்துக்கொண்ட படம்.

    காடையாம்பட்டி அருகே கர்ப்பிணி தற்கொலை குறித்து கணவரிடம் போலீஸ் விசாரணை

    • காடையாம்பட்டி கரட்டு கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் மணிகண்டன். டிப்பர் லாரி உரிமையாளர்.
    • கோபிகாஸ்ரீ (வயது 19) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி கரட்டு கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் மணிகண்டன். டிப்பர் லாரி உரிமையாளர்.

    4 மாத கர்ப்பிணி

    இவருக்கும் தாசசமுத்தி ரம் பகுதியை சேர்ந்த சந்திரன்- சத்தியா ஆகியோ ரது மகள் கோபிகாஸ்ரீ (வயது 19) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது. கோபிகா ஸ்ரீ 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்த நிலையில் கோபிகாஸ்ரீயின் தந்தை சந்திரனின் பாட்டி மெல்லியம்மாள் என்பவர் நேற்று முன்தினம் இரவு இறந்துவிட்டார். இதற்கு துக்கம் விசாரிக்க தனது தந்தை வீட்டிற்கு செல்ல வேண்டுமென கோபிகாஸ்ரீ கூறியதாக தெரிகிறது.

    வாக்குவாதம்

    இதற்கு மணிகண்டன், தனது தந்தை மாரியப்பனுக்கு உடல்நிலை சரியில்லை, அவரைப் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மணிகண்டன் தனது மனைவி கோபிகா ஸ்ரீயை அவரது தந்தை வீட்டிற்கு அனுப்பி உள்ளார்.

    தற்கொலை

    இதுபற்றி கோபிகா ஸ்ரீ தனது தந்தை வீட்டாரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து நேற்று கோபிகா ஸ்ரீயை அவரது கணவர் வீட்டில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.

    பின்னர் மதியம் மெல்லி யம்மாள் உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது, கோபிகா ஸ்ரீ உடல்நிலை பாதிக்கப்பட்டு காடை யாம்பட்டி அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டு உள்ளதாக அவரது கணவன் வீட்டார், சந்திரன் வீட்டாரிடம் தெரிவித்தனர்.

    இதனை அடுத்து சந்திரன் உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது, கோபிகா ஸ்ரீ இறந்து உள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து கேட்ட போது, கோபிகாஸ்ரீ தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

    மறியல்

    இதனால் ஆத்திரமடைந்த கோபிகா ஸ்ரீயின் தந்தை சந்திரன் மற்றும் அவரது உறவினர்கள் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்ப தாகவும் அவரது சாவிற்கு காரணமான கணவர் மணிகண்டன், மாமனார் மாரியப்பன், மாமியார் அலமேலு ஆகியோரை கைது செய்ய வேண்டும் என கூறி தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையம் முன்பு, சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    போலீசார் விசாரணை

    இதனை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா, இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த தின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, கோபிகாஸ்ரீயின் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் திருமணம் நடந்து 7 ஆண்டுகளுக்கு குறைவாக இருப்பதால் மேட்டூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்தனர். அவர் இதுபற்றி விசாரணை நடத்த உள்ளார். கோபிகா ஸ்ரீ யின் கணவர் மணிகண்டன், மாமனார் மாரியப்பன், மாமியார் அலமேலு ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட இருக்கிறது. 4 மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×