என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண் கர்ப்பம்"
- பெண்களை கர்ப்பம் ஆக்கினால் மாதம் ரூ.25 லட்சம் வரை சம்பளம் பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
- இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் மாகே பிராந்தியத்தில் உள்ள கெஸ்ட் ஹவுசில் நேபாளத்தைச் சேர்ந்த ஷாஜன் பட்டாராய் (வயது34) என்பவர் தங்கி வேலை செய்து வருகிறார்.
இவரை கடந்த மாதம் செல்போனில் ஒரு மர்ம நபர் தொடர்பு கொண்டு தன்னிடம் ஒரு சிறந்த ஆபர் உள்ளது. தாங்கள் ஒத்துழைத்தால் அதிக சம்பளம் பெறலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.
அதாவது தான் ஒரு குழந்தை பேறு வைத்திய சாலை நடத்தி வருகிறேன். அங்கு வரும் பெண்களை கர்ப்பம் ஆக்கினால் மாதம் ரூ.25 லட்சம் வரை சம்பளம் பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு அட்வான்சாக ரூ.2 லட்சம் தரப்படும் என கூறவே ஷாஜன், தனது அடையாள அட்டை, ஆதார் கார்டு, வங்கி கணக்கு எண் உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர் அவரது செல்போனுக்கு மர்ம நபரிடமிருந்து குறுந்தகவல் வந்துள்ளது. அதில் இவர் ஒரு பெண்ணுடன் பாலியல் ரீதியான தொடர்பு கொள்வதற்காக ரூ.5.5 லட்சம் மற்றும் ரூ.1000 ஆகியவற்றை ஷாஜனின் வங்கிக் கணக்கில் செலுத்தியதற்கான போலி ஆவணங்களை அனுப்பி விட்டு விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்தல் கட்டணம் உள்ளிட்ட செலவினங்களுக்காக கியூ.ஆர். கோர்டை அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து அந்த கியூ.ஆர். கோர்டை ஸ்கேன் செய்து ரூ.50 ஆயிரம் வரை பணத்தை செலுத்தி உள்ளார்.
பின்னர் அந்த மர்ம நபரை ஷாஜன் தொடர்பு கொள்ள முடியவில்லை. கெஸ்ட் அவுஸில் வேலை செய்து சேமித்து வைத்திருந்த பணத்தை இழந்த சோகத்தில் புலம்பியபடி இருந்துள்ளார்.
இது குறித்து புகாரின் பேரில் மாகே இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அவர்களுக்குஇடையேயான தொடர்பு அவரது அக்கா கணவரான உடுமலை தாலுகா சர்க்கார் புதூரைச் சேர்ந்த தங்கராஜ்(29) என்பவருக்கு தெரியவந்தது.
- உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதாவிடம் புகார் தெரிவித்தார்.
உடுமலை:
மடத்துக்குளத்தை அடுத்த நரசிங்காபுரத்தை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 23) , டிரைவர் .இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க பெண்ணை காதலித்து வந்து உள்ளார். அந்தப் பெண் பத்தாம் வகுப்பில் பாதியில் நின்று விட்டார். இதை சாதகமாகக் கொண்டு அந்த பெண்ணை வீரமுத்து ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் உறவில் ஈடுபட்டு உள்ளார்.
அவர்களுக்குஇடையேயான தொடர்பு அவரது அக்கா கணவரான உடுமலை தாலுகா சர்க்கார் புதூரைச் சேர்ந்த தங்கராஜ்(29) என்பவருக்கு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து தங்கராஜ் அவர்கள் இருவருக்குமான உறவை வெளியில் சொல்லி விடுவேன் என்று மிரட்டி அந்த பெண்ணை பாலியல் உறவுக்கு உட்படுத்தி உள்ளார். இருவரும் மாறி மாறி சிறுமியை பாலியல் உறவுக்கு உட்படுத்தியதில் அவரது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து அந்த சிறுமி பரிசோதனை மேற்கொண்டார்.அதில் நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து தனது காதலனான வீரமுத்துவை சந்தித்து திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமி கேட்டு உள்ளார். அதற்கு அவர் உனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு நான் தகப்பன் அல்ல உனது அக்கா வீட்டுக்காரரை போய் கேள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அந்த சிறுமி உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதாவிடம் புகார் தெரிவித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அதன் முடிவில் வீரமுத்து மற்றும் தங்கராஜ் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆசை வார்த்தை கூறி காதலனும், அக்கா வீட்டுக்காரரும் சிறுமியை கர்ப்பம் ஆக்கிய சம்பவம் மடத்துக்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்