search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் கல்லூரி மாணவியை கற்பழித்து கர்ப்பமாக்கிய வாலிபர்
    X

    கோவையில் கல்லூரி மாணவியை கற்பழித்து கர்ப்பமாக்கிய வாலிபர்

    • ஆசை வார்த்தை கூறி அஜய் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
    • அஜய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    கோவை,

    கோவை பேரூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது கல்லூரி மாணவி. இவர் தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு ஈச்சனாரியை சேர்ந்த தொழிலாளி அஜய் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி அஜய் மாணவியை மருதமலை ரோட்டில் உள்ள காலி இடத்துக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அஜய் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    கடந்த சில நாட்களாக மாணவி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

    இது குறித்து மாணவி தனது காதலன் அஜயிடம் தெரிவித்தார். மேலும் தன்னை உடனடியாக திருமணம் செய்யும்படி கூறினார். அதற்கு அவர் கருவை கலைத்து விடு என கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனால் அதிர்ச்சிய டைந்த மாணவி இது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அனைத்து மகளிர் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த புகாரின் பேரின் கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி அஜய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×