search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்ப்பமாக்கிய வாலிபர்"

    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
    • போலீசார் தேடி வருகின்றனர்

    வேலூர்:

    காட்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. பன்மடங்கி கிராமத்தைச் சேர்ந்த கோபி (வயது 23), சிறுமியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.

    திருமணம் செய்து கொள்வதாக கூறி கோபி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

    அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில், சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர.

    அதன்பேரில் போலீசார் கோபி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.

    • ஆசை வார்த்தை கூறி அஜய் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
    • அஜய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    கோவை,

    கோவை பேரூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது கல்லூரி மாணவி. இவர் தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு ஈச்சனாரியை சேர்ந்த தொழிலாளி அஜய் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி அஜய் மாணவியை மருதமலை ரோட்டில் உள்ள காலி இடத்துக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அஜய் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    கடந்த சில நாட்களாக மாணவி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

    இது குறித்து மாணவி தனது காதலன் அஜயிடம் தெரிவித்தார். மேலும் தன்னை உடனடியாக திருமணம் செய்யும்படி கூறினார். அதற்கு அவர் கருவை கலைத்து விடு என கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனால் அதிர்ச்சிய டைந்த மாணவி இது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அனைத்து மகளிர் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த புகாரின் பேரின் கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி அஜய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • 2 பேரும் கடந்த மார்ச் மாதம் தென்னம்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்தனர்.
    • போலீசார் தினேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கோவை பேரூர் அருகே உள்ள பஞ்சு மில்லுக்கு வேலைக்கு வந்தார்.

    அப்போது சிறுமிக்கு முள்ளங்காடு பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் கடந்த மார்ச் மாதம் தென்னம்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். பின்னர் தினேஷ் அந்த பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்தார். இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானார். சிறுமியை கவனிக்க யாரும் இல்லாததால் தினேஷ் அவரை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அவர் தனது பெற்றோரிடம் சிறுமிக்கு 19 வயது ஆகி விட்டது என கூறினார்.

    இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தினேஷ் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் தினேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×