search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plus two student"

    குரோம்பேட்டையை அருகே வாகனத்துக்கு வழிவிடும் தகராறில் பிளஸ்-2 மாணவரை குத்திக்கொலை செய்த பா.ஜனதா பிரமுகர்-மகன் கைது செய்யப்பட்டனர்.

    தாம்பரம்:

    குரோம்பேட்டையை அடுத்த நாகல்கேணி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் விக்னேஷ் (வயது16) தாம்பரத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 சேர்ந்து உள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அதே பகுதியை சேர்ந்த நண்பரான கல்லூரி மாணவர் நந்தாவுடன்(19) மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள மற்றொரு நண்பரை சந்திக்க சென்றார்.

    குரோம்பட்டை சி.எல்.சி. லைன் ரோட்டில் சென்ற போது முன்னாள் மற்றொரு மோட்டார் சைக்கிளில் அதே பகுதியைச் சேர்ந்த பாரதீய ஜனதா பிரமுகர் மதன் மற்றும் அவரது மகன் நித்தியானந்தம் ஆகியோர் சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவது தொடர்பாக விக்னேஷ், நந்தா ஆகியோருக்கும் மதன், அவரது மகன் நித்தியானந்தம் ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் விக்னேசும், நந்தாவும் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மதனும், அவரது மகன் நித்தியானந்தாவும் அங்கேயே காத்திருந்தனர்.

    சிறிது நேரத்துக்கு பின்னர் விக்னேசும், நந்தாவும் மீண்டும் அதே வழியில் மோட்டார்சைக்கிளில் வந்தனர். அவர்களை வழிமறித்து மதனும், நித்தியானந்தமும் சரமாரியாக குத்தினர்.

    இதில் விக்னேசும், நந்தாவும் படுகாயம் அடைந்தனர். இருவரும் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் இன்று காலை பரிதாபமாக இறந்தார். ஏற்கனவே மதனையும், அவரது மகன் நித்தியானந்தத்தையும் கொலை முயற்சி வழக்கில் போலீசார் கைது செய்திருந்தனர்.

    இப்போது விக்னேஷ் இறந்ததால் அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அரசு கல்லூரியில் படிக்க பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள வேலாவள்ளி பகுதியை சேர்ந்தவர் சின்னமாதன். இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு மங்கம்மாள் (வயது 17) என்ற மகள் உள்ளார்.

    இவர் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து அவரது தந்தை சின்னமாதன் தருமபுரி தனியார் கல்லூரியில் படிப்பதற்காக விண்ணப்பம் பெற்று வந்தார்.

    ஆனால் மங்கம்மாள் அரசு கல்லூரியில் தான் படிப்பேன், அங்குதான் எனது நண்பர்கள் படிக்கப் போகிறார்கள் என்று சின்னமாதனிடம் கூறினார். எனவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மங்கம்மாள் நேற்று மதியம் அவரது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மங்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே பிளஸ்-2 மாணவிகளை கடத்திய வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள எரியோடு பண்ணைப்பட்டியை சேர்ந்தவர் வனிதா (வயது17), மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் காவியா (17). இவர்கள் 2 பேரும் வடமதுரை அருகே உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர்.

    கடைசி தேர்வு எழுத சென்ற மாணவிகள் 2 பேரும் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதோடு மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

    வடமதுரை போலீசார் 2 மாணவிகளையும் தீவிரமாக தேடி வந்தனர். அவர்கள் பயன்படுத்தி வந்த செல்போன் எண்களை ஆய்வு செய்து பார்த்த போது மாணவிகள் ஐதராபாத்தில் இருப்பது தெரியவந்தது. மேலும் சென்ட்ரிங் வேலை பார்த்து வரும் நாட்ராயன் என்பவரும், பிளஸ்-2 மாணவர் பாலமுருகன் என்பவரும் மாணவிகளை கடத்தி சென்றது தெரியவந்தது.

    போலீசார் உடனே ஐதராபாத்துக்கு விரைந்தனர். மாணவிகளையும், அவர்களை கடத்தி சென்ற வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு உத்தரவுபடி மைனர் பெண்களை கடத்தியதாக 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தனியார் பள்ளி வேன் டிரைவர் மீது மாணவியின் தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அடுத்துள்ள ஆலாப்புரம் பகுதியை சேர்ந்த  உறவினர் வீட்டில் ராமசாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது 17 வயது மகள், மகன் ஆகியோருடன் தங்கி உள்ளார். இவரது 17 வயது மகள் தொட்டப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    அப்போது மாணவிக்கும் தனியார் பள்ளியில் வேன் டிரைவராக  வேலை பார்க்கும் மாதேஸ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி தனியாக பல்வேறு இடங்களில் சென்று சுற்றி பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

    ராமசாமி மற்றும் அவரது மனைவி இருவரும் பெங்களூருரில் தங்கி வேலை பார்த்து வந்தனர். விடுமுறை காலங்களில் மட்டும் தனது மகளை ராமசாமி வந்து பார்த்து செல்வது வழக்கம். கடந்த 1-ந்தேதி அன்று மாணவியின் பாட்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவரை தருமபுரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    இது குறித்து மாணவி தனது தந்தைக்கு போன் செய்தார். உடனே ராமசாமி குடும்பத்துடன் பெங்களூரில் இருந்து தருமபுரி தனியார் மருத்துவ மனைக்கு வந்து பார்த்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மாணவி தனது காதலன் மாதேஸ்சுக்கு போன் செய்து மருத்துவ மனை அருகே வரவழைத்தார். அவர் வந்து மாணவியை மாதேஸ் தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். 
    அப்போது மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி மாதேஸ் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

    மாதேஸ்சிடம் மாணவி நான் எங்க வீட்டிற்கு போக வேண்டும் என்று கதறினார். இதனால் மாதேஸ் மாணவியை ஆலாப்புரம் வீட்டின் அருகே கடந்த 5-ந்தேதி அன்று விட்டு தப்பி சென்றுள்ளார். நடந்த சம்பவம் குறித்து அந்த மாணவி தனது தந்தையிடம் கூறி கதறி அழுதார். 

    இது குறித்து தருமபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ராமசாமி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தம்மாள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    தர்மபுரி அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய உதவி பேராசிரியர் தர்மபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
    தர்மபுரி:

    தர்மபுரியை அடுத்த குப்பூர் பகுதியில் உள்ள எஸ்.கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 17 வயது மதிக்கத்தக்க சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். 

    இவர் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தர்மபுரி  அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அதே பகுதியைச் சேர்ந்தவரும் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் கோபாலகிருஷ்ணன் என்பவர் மாணவியை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் தேடிவந்தனர். 

    இந்த நிலையில் நேற்று மாணவியை கடத்தி சென்ற உதவி பேராசிரியர் கோபால கிருஷ்ணனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை போக்சோ சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.  அவரிடம் இருந்து மாணவியை மீட்டு தொப்பூர் அருகே உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். கைதான கோபால கிருஷ்ணனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
    பாடாலூர் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்த முயன்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய காதலன் உள்பட 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் மகன் வெங்கடேசன்(வயது 22). இவர் பாடாலூர் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்து வந்தார். அந்த மாணவியும் அவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்கள் 8 பேர் சேர்ந்து மாணவியை கடத்த திட்டமிட்டனர். 

    இந்த நிலையில் நேற்று காலை அந்த மாணவி பிளஸ்-2 கடைசி தேர்வு எழுதுவதற்காக பஸ்சில் ஏறி செட்டிகுளம் வந்தார். செட்டிகுளத்தில் இறங்கி பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். மாணவியின் தாய் அவரது பின்னால் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. அங்கு வெங்கடேசன் உள்பட 8 பேர் காத்திருந்தனர். அப்போது திடீரென வெங்கடேசன் மாணவியை கடத்தி செல்வதற்காக தன்னுடன் வருமாறு கையை பிடித்து இழுக்க முயன்றார். இதனை பார்த்த மாணவியின் தாயும், செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்த தாமோதரன் மற்றும் பொதுமக்களும் மாணவியிடம் தகராறு செய்தது குறித்து தட்டி கேட்டனர்.

    இதனால் அச்சமடைந்த வெங்கடேசன், மற்றும் அவரது நண்பர்கள் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு தப்பி செல்ல முயன்றனர். அதனை பார்த்த பொதுமக்கள் அவர்களை தடுக்க முயன்றனர். இதில் தாமோதரனை வெங்கடேசன் உள்பட 8 பேரும் சேர்ந்து தாக்கி காயப்படுத்தினர். பின்னர் வெங்கடேசனின் நண்பர்கள் ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன்(22), கருப்புசாமி(18) ஆகிய இருவரையும் பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். மற்ற 6 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து செட்டிகுளம் பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் பிடித்து வைத்து இருந்த இருவரையும் கைது செய்தனர். மேலும் தப்பி சென்ற மற்ற 6 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுப்பதாக வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    அவனியாபுரம் தந்தை பெரியார் நகர் ஜெகதீஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் பிரவீன்குமார் (வயது22). இவர் 17 வயது பிளஸ்-2 மாணவியுடன் நெருங்கி பழகி உள்ளார்.

    மேலும் மாணவிக்கு திருமண ஆசை காட்டி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமானார்.

    இதனை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாணவி கேட்டார். ஆனால் பிரவீன் குமார் மறுத்து விட்டார். இதுகுறித்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை ஏமாற்றிய பிரவீன்குமாரை தேடி வருகின்றனர்.

    இதேபோல் மதுரை எஸ்.ஆலங்குளம் குலமங்கலம் மெயின்ரோடு அன்பு நகரைச் சேர்ந்தவர் ராஜபூபதி, கூலி தொழிலாளி (35). இவருக்கும், 17 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    தினமும் கல்லூரிக்கு சென்றுவரும்போது அவர்களிடையே நெருக்கம் அதிகரித்தது. இதனை தொடர்ந்து மாணவியை தனது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தண்டான்தோப்பு பகுதிக்கு ராஜபூபதி அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பம் அடைந்தார்.

    இதுகுறித்து ராஜபூபதியிடம் தெரிவித்தபோது அவரும், உறவினர்கள் செல்வராணி, முருகேச பாண்டியன், வளர்மதி ஆகியோரும் கருவை கலைக்கும்படி கூறி உள்ளனர். மேலும் அதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் மாணவி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபூபதி மற்றும் முருகேசபாண்டியனை கைது செய்தனர்.

    சிறப்பு வகுப்பு காரணமாக திண்டுக்கல்லில் பிளஸ்-2 மாணவன் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் யூசுப்பியா நகரைச் சேர்ந்த சாதிக் மகன் பாட்ஷா (வயது 17). திண்டுக்கல் நேருஜி நகரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அரசு பொதுத் தேர்வு என்பதால் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் அனைவரும் பள்ளியிலேயே தங்கி அதிகாலை நேரத்திலும், இரவு நேரத்திலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    பிளஸ்-2 மட்டுமின்றி 10 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இன்று காலை படிப்பதற்காக எழுந்த பாட்ஷாவின் உடல் சோர்வுடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

    அவரை காட்டாஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது பெற்றோர் தெரிவிக்கையில் எனது மகனுக்கு அவ்வப்போது வலிப்பு நோய் வரும். அதனுடன் சிறப்பு வகுப்புக்காக மிகுந்த நேரம் ஒதுக்கி படித்ததால் மனச்சோர்வு மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டது. அதனால் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்தார். மாணவர்களை அவர்கள் சக்திக்கு தகுந்தவாறு அதிக சிரமம் கொடுக்காமல் படிக்க வைத்தால் அவர்கள் நல்ல முறையில் முன்னேறுவார்கள் என்றனர்.

    திண்டுக்கல்லில் பிளஸ்-2 மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பிளஸ்-2 மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே உள்ள சிக்கபூவத்தியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 24). கூலித்தொழிலாளி. அந்த பகுதியில் 17 வயது இளம்பெண் ஒருவர் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2.11.2016 அன்று அந்த மாணவியை சக்திவேல் அழைத்து பேசி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார்.

    மேலும் பொன்மலை கொட்டாய் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் சக்திவேலை கைது செய்தனர்.

    அவர் மீது கடத்தல், குழந்தை திருமண தடுப்பு சட்டம், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சக்திவேலுவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார்.
    ரெட்டியார்பாளையத்தில் பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார்பாளையம் சுதாகர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது23). வேலை ஏதும் செய்யாமல் நண்பர்களுடன் சுற்றி திரிந்து வந்த இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது பிளஸ்-2 மாணவியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

    இதுபற்றிய தகவலின் அடிப்படையில் புதுவை குழந்தைகள் நல குழுவினர் அதன் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த மாணவியை செல்வராஜ் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து குழந்தைகள் நல குழுவினர் புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வாகுப்தாவிடம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன்படி ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர்.

    அரக்கோணத்தில் பிளஸ்-2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

    அரக்கோணம்:

    திருவண்ணாமலை மாவட்டம் கம்பந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 28), முதுகலை பட்டதாரி ஆசிரியரான இவர் அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார். அரக்கோணம் அருகே உள்ள காவனூர் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வருகிறார்.

    இவர் 12-ம் வகுப்புக்கு பாடம் நடத்தும்போது தவறாக நடந்து கொள்வதாகவும், பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாகவும் பெற்றோர்களிடம் மாணவிகள் புகார் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து கலெக்டர் ராமனுக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. அதன் மீது விசாரணை நடத்த மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு அலுவலர் நிஷாந்திக்கு அவர் உத்தரவிட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிஷாந்தி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

    அப்போது ஆசிரியர் வெங்கடேசன் வகுப்பறையில் எங்களை தொட்டு பேசுகிறார், தவறான, ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார் என்று மாணவிகள் கூறி உள்ளனர். மேலும் நடந்த சம்பவம் குறித்து 18 மாணவிகள் எழுத்துபூர்வமாக நிஷாந்தியிடம் கொடுத்து உள்ளனர்.

    இதன் மூலம் ஆசிரியர் வெங்கடேசன், பாலியல் ரீதியாக மாணவிகளுக்கு தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்த தனது விசாரணை அறிக்கையை கலெக்டர் ராமனிடம் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தி சமர்ப்பித்தார். அறிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் வெங்கடேசன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீஸ் துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் அரக்கோணம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு துரைப்பாண்டியன் மேற்பார்வையில், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    இந்த நிலையில் நேற்று காவனூர் தோல்ஷாப் அருகே பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த போலீசார் ஆசிரியர் வெங்கடேசனை பிடித்து ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    திருமண ஆசை காட்டி பிளஸ்-2 மாணவிகளை கடத்தி சென்ற வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள காவேரியம்மாபட்டியை சேர்ந்த மாரிமுத்து மகன் கவிபிரியா (வயது17), காப்பிளிய பட்டியை சேர்ந்த பிச்சை முத்து மகள் கவுரி (17). இவர்கள் 2 பேரும் ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவிகள் வீடு திரும்பவில்லை. அவர்களது பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை.

    இதனால் ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் கவிபிரியாவின் தந்தை மாரிமுத்து புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருமண ஆசை காட்டி மாணவிகளை 2 வாலிபர்கள் கடத்தி சென்றது தெரியவந்தது.

    பெரியகோட்டையை சேர்ந்த சூர்யா (19), மகேந்திரன் (19) ஆகிய 2 பேரும் பஸ்சில் ஒட்டன்சத்திரம் வந்தபோது மாணவிகளிடம் பழகி வந்துள்ளனர்.

    பின்னர் காதலிப்பதாக கூறினர். இந்த சூழ்நிலையில் திருமண ஆசை காட்டி அவர்களை சென்னைக்கு கடத்தி சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

    ×