குடியாத்தத்தில் வீடு புகுந்து பிளஸ்-2 மாணவியை கற்பழித்த ஆந்திர வாலிபர்

குடியாத்தத்தில் வீட்டில் தனியாக இருந்த பிளஸ்-2 மாணவியை ஆந்திர வாலிபர் கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

குடியாத்தம்:

குடியாத்தம் சித்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அவரது பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர்.

ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த வாலிபர் அப்பகுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். திருமணமான இவர் மாணவி வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டார்.

வீட்டிற்குள் திடீரென நுழைந்து கதவை தாழ்பாள் போட்டு மாணவியை கற்பழித்தார். மாணவி கூச்சலிட்டார். ஆனால் யாருக்கும் கேட்கவில்லை. பின்னர் அங்கிருந்த அவர் தலைமறைவாகி விட்டார்.

பெற்றோர் வீட்டிற்கு வந்ததும் நடந்த சம்பவம் பற்றி மாணவி கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பரதராமி போலீசில் புகார் செய்தனர். போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறனர்.

வீடு புகுந்து பிளஸ்-2 மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com