search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு சீதன பொருட்கள்
    X

    விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு சீதன பொருட்களை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். அருகில் கலெக்டர் மேகநாதரெட்டி உள்ளார்.

    100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு சீதன பொருட்கள்

    • 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு சீதன பொருட்களை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
    • ரூ.43 ஆயிரம் மதிப்பில் முதியோர், ஆதரவற்ற விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகைகளையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கி பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், நரிக்குடி மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

    இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை வழங்கினார்.

    மேலும் கர்ப்பிணி பெண்களின் இரும்புச் சத்து குறைபாட்டை சரி செய்ய மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மூலம் இரும்பு பெண்மணி என்ற சிறப்பு திட்டத்தையும் தொடங்கி வைத்து, இரும்பு சத்து மற்றும் ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அமைச்சர் பயனாளிகளுக்கு வழங்கினார்.

    கருப்பு உலர் திராட்சை, உலர் அத்தி பழம், சிவப்பு அவல், புரதச்சத்து மற்றும் இரும்புச் சத்து பொருட்கள் அடங்கிய இந்த தொகுப்பு மாதம் ஒரு முறை 3 மாதங்களுக்கு வழங்கப்படும். பின்னர் 43 பயனாளி களுக்கு ரூ.43 ஆயிரம் மதிப்பில் முதியோர், ஆதரவற்ற விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகைகளையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கி பேசினார்.

    விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் யசோதாமணி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், திருச்சுழி யூனியன் தலைவர் பொன்னுதம்பி, வட்டாட்சியர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×