search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளகாதலாக"

    • 11 வயதில் இரட்டை ஆண் குழந்தையும், 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
    • வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் பச்சிளம் குழந்தை உடல் புதைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா, வேடம்பூர் தோப்புத் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்.இவரது மனைவி ரேவதி. இவர்களது மூத்த மகள் ரேணுகா (வயது 33).

    இவருக்கும் நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்த முத்து என்பவருக்கும் 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 11 வயதில் இரட்டை ஆண் குழந்தையும், 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

    முத்து கடந்த 7 வருடங்களாக ரேணுகாவை பிரிந்து விட்டு திருப்பூரில் பணியாற்றி வருகிறார். இதனால் ரேணுகா தனது மூன்று குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். அங்கிருந்து குடவாசலில் உள்ள ஒரு ஜவுளி கடையில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது இவருக்கு கமலேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளகாதலாக மாறியது. இவர்கள் நெருங்கி பழகியதால் ரேணுகா கர்ப்பமடைந்து கடந்த 22 -ஆம் தேதி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் இவரது வீட்டு பின்புறம் உள்ள இடத்தில் அந்த பச்சிளம் குழந்தை உடல் புதைக்கப்பட்டு உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை தோண்ட முடிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் குழந்தை இறந்து அதன் பிறகு புதைக்கப்பட்டதா? அல்லது கள்ளகாதலில் பிறந்த குழந்தை என்பதால் கொன்று புதைக்கப்பட்டதா? என்ற பல்வேறு கோணங்களில் ரேணுகா, கமலேஷ் உள்ளிட்ட சிலரிடம் துருவி துருவி விசாரித்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் உண்மை நிலவரம் என்னவென்று தெரியவரும்.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×