என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "False love"
- 11 வயதில் இரட்டை ஆண் குழந்தையும், 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
- வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் பச்சிளம் குழந்தை உடல் புதைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா, வேடம்பூர் தோப்புத் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்.இவரது மனைவி ரேவதி. இவர்களது மூத்த மகள் ரேணுகா (வயது 33).
இவருக்கும் நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்த முத்து என்பவருக்கும் 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 11 வயதில் இரட்டை ஆண் குழந்தையும், 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
முத்து கடந்த 7 வருடங்களாக ரேணுகாவை பிரிந்து விட்டு திருப்பூரில் பணியாற்றி வருகிறார். இதனால் ரேணுகா தனது மூன்று குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். அங்கிருந்து குடவாசலில் உள்ள ஒரு ஜவுளி கடையில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது இவருக்கு கமலேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளகாதலாக மாறியது. இவர்கள் நெருங்கி பழகியதால் ரேணுகா கர்ப்பமடைந்து கடந்த 22 -ஆம் தேதி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் இவரது வீட்டு பின்புறம் உள்ள இடத்தில் அந்த பச்சிளம் குழந்தை உடல் புதைக்கப்பட்டு உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை தோண்ட முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் குழந்தை இறந்து அதன் பிறகு புதைக்கப்பட்டதா? அல்லது கள்ளகாதலில் பிறந்த குழந்தை என்பதால் கொன்று புதைக்கப்பட்டதா? என்ற பல்வேறு கோணங்களில் ரேணுகா, கமலேஷ் உள்ளிட்ட சிலரிடம் துருவி துருவி விசாரித்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் உண்மை நிலவரம் என்னவென்று தெரியவரும்.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- குறிஞ்சிபாடியை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் கள்ளக்காதல் தகராறில் கொலை செய்யப்பட்டார்.
- முன்பு செந்தில்குமார் கடலூரில் வாடகை வீட்டில் குடியேறி, தனது குழந்தைகளை அங்குள்ள தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வந்தார்.
கடலூர் :
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் முருகவேல் (வயது 65) இவரது மகன் செந்தில்குமார் (40) தந்தை-மகன் இருவரும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தனர். செந்தில்குமாருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர் .கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமார் கடலூரில் வாடகை வீட்டில் குடியேறி, தனது குழந்தைகளை அங்குள்ள தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வந்தார். இவர் கடலூர் அருகே குருவிநத்தம் கரும்பு தோட்டத்தில் செந்தில்குமார் மது பாட்டிலால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். .
இது குறித்து தகவலறிந்த போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்- இன்ஸ்பெக்டர் நந்தக்குமார், கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செந்தில்குமார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அங்கிருந்து ஓடிய மோப்ப நாய், சோரியாங்குப்பத்தில் உள்ள தனியார் மதுக்கடையில் சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் வல்லுனர்கள் முக்கிய தடயங்களை கைப்பற்றினர். புதுவை போலீஸ் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் குற்றவாளிகளை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய குமார், நந்தகுமார் ரமேஷ் தலைமையிலான தனிப்படை குறிஞ்சிப்பாடி, கம்மியம்பேட்டை, குருவிநத்தம், சோரியாங்குப்பம் பகுதியில் முகாமிட்டு தீவிர விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர். கொலை சம்பந்தமாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் செல்போன் டவர்களை கொண்டு விசாரணையை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் முடுக்கி விட்டுள்ளார். முதல் கட்ட விசாரணையில் செந்தில் குமார் ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததும் அந்த கள்ளக்காதலியுடன் பல லட்சம் ரூபாய் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை இருந்து வந்தது தெரியவந்தது. அதனால் கூலிப்படையை கொண்டு கள்ளக்காதலி செந்தில் குமாரை கொலைசெய்து இருக்கலாமா? என்ற கோணத்திலும், மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் சோரியாங்குப்பம், குருவிநத்தம் பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில் குமாரை விரட்டி சென்று கொலை செய்திருக்கக் கலாமா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார்.
- குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு கணவரின் தம்பியுடன் ஓடிய இளம் பெண்ணை தேடி வருகிறார்கள்.
கோவை:
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் குடும்பத்துடன் ஆர்.எஸ்.புரத்தில் வசித்து வருகின்றனர். இளம் பெண்ணின் கணவர் உணவு சமைத்து அந்த பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வரும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அந்தப் பகுதியில் வசித்து வந்த கணவரின் தம்பி உடன் பழக்கம் ஏற்பட்டது நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.
2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று இளம் பெண்ணின் கணவர் வெளியே சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த இளம்பெண் மாயமாகி இருந்தார். அக்கம்பக்கத்தில் தேடியபோது இளம்பெண் தனது தம்பியுடன் ஓடியது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் ஆர்எஸ் புரம் போலீசில் புகார் செய்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு கணவரின் தம்பியுடன் ஓடிய இளம் பெண்ணை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்