search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்ப்பிணிகள்"

    • டிரைமெஸ்டரில் எந்த பொசிஷனில் வேண்டுமானாலும் தூங்கலாம்.
    • இடப்பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்குவதே சரியானது.

    கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில் (முதல் டிரைமெஸ்டர்) இருக்கும்போது எந்த பொசிஷனில் வேண்டுமானாலும் தூங்கலாம். அதாவது, உங்களுக்குப் பிடித்த, வசதியான எந்த நிலையிலும் தூங்கலாம். ஒருக்களித்தும் படுக்கலாம், மல்லாந்தும் படுக்கலாம், குப்புறகூட படுத்தும் தூங்கலாம், பிரச்னை இல்லை.

     முதல் மூன்று மாதங்களில் எந்த பொசிஷனில் படுத்து உறங்கினாலும் பெரும்பாலும் கர்ப்பிணிகளுக்கு அது எந்த சிரமத்தையும் தருவதில்லை. அதுவே, இரண்டாவது, மூன்றாவது டிரைமெஸ்டரில், ஒருக்களித்துப் படுத்து உறங்குவதுதான் சரியானது. அதிலும் குறிப்பாக, இடப்பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்குவதே சரியானது. அது சவுகரியமாகவும் இருக்கும், அந்த பொசிஷன் பாதுகாப்பானதும்கூட.

    இடப்பக்கமாக ஒருக்களித்துப் படுப்பதன் மூலம், நஞ்சுக்கொடிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். கர்ப்ப கால சிக்கல்களையும் தவிர்க்க உதவும். படுத்திருக்கும்போது இரண்டு கால்களுக்கு இடையில் தலையணை வைத்துக்கொள்வது, முதுகுப் பகுதிக்கு தலையணை வைத்துக்கொள்வது போன்றவையும் கர்ப்பிணிகளுக்கு சவுகரியமான உணர்வைத் தரும். நல்ல தூக்கத்தையும் கொடுக்கும்.

     முதுகுப்பகுதி சமமாக இருக்கும்படி மல்லாந்து படுக்கும்போது, அதிலும், பிரசவ காலம் நெருங்கும் நேரத்தில் அப்படிப்படுப்பது, ஒருவித அசவுகரியத்தைத் தரும். ரத்தக் குழாய்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும். அதன் காரணமாக ரத்த ஓட்டம் குறையலாம். அதனால் உங்களுக்கு மயக்கம், மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை ஏற்படலாம். ரத்த அழுத்த அளவும் குறையலாம்.

    இந்த பிரச்சினைகளை எல்லாம் தவிர்க்கவே, ஒருக்களித்துப் படுக்கவும், தலையணை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒருக்களித்துப் படுத்த நிலையிலும் உங்களுக்கு மூச்சு விட சிரமம் இருந்தாலோ, அசவுகரிகயமாக உணர்ந்தாலோ மருத்துவ ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது.

    • கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • 150 கர்பிணிகளுக்கு வளையல் அணிவித்து 5 வகையான உணவு வகை களை பரிமாரினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கொங்கம்பட்டி ஊராட்சி இடையவலசை கிராமத்தில் தமிழக அரசின் வரும்முன் காப்போம் திட்டம் தொடங்கியது. இதில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனை முகாம்மை மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    அதை தொடர்ந்து முகாமில் கலந்து கொண்ட கர்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருள்கள் அடங்கிய மருந்து பெட்ட கங்களை வழங்கினார்.

    பின்னர் இளையான்குடி நகரில் நடை பெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 150 கர்பிணி பெண் களுக்கு வளையல் அணிவித்து 5 வகையான உணவு வகை களை பரிமாரினார்.

    விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ சுபமதியரசன், பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் மற்றும் வட்டார ஊட்டச்சத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூரில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • பூ மற்றும் பழங்கள் உள்ளிட்ட வளைகாப்பு பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி வட்டார பகுதிகளில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் சமூக நலம் மகளிர் உரிமைத்துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு அமைச் சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை வகித்து கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசின் வளைகாப்பு பொருள்கள் மற்றும் தனது சார்பில் சேலை, பாதாம் பருப்பு, ஹார்லிக்ஸ், பேரிச்சம்பழம் உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருட்கள் தொகுப்பினை வழங்கி வாழ்த்தினார்.

    அப்போது அவர் பேசுகையில், கர்ப்பிணி தாய்மார்கள் அனைவருக்கும் இவ்விழா வின் மூலம் 5 வகையான கலவை சாதம், வளையல்கள், பூ மற்றும் பழங்கள் உள்ளிட்ட வளை காப்பு பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

    திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி வட்டாரத் திற்குட்பட்ட மொத்தம் 200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

    கர்ப்பிணி தாய்மார்கள், கர்ப்பகால மாதம் முதல் தொடங்கி 10 மாதமும் அரசு மருத்துவமனையில் பதிவு செய்து சரியான மாதாந்திர பரிசோதனை மேற்கொண்டு ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுப்பது டன் தானும் ஆரோக்கியமாக இருந்திட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்.மணிபாஸ்கரன், தேவ கோட்டை வருவாய் கோட் டாட்சியர் பால்துரை, சுகாதார துணை இயக்குநர் விஜய்சந்திரன் ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவர் முத்து மாரியப்பன், திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சண்முகவடிவேல், பேரூ ராட்சி தலைவர் கோகிலா ராணி நாராயணன், துணைத்தலைவர் கான்முக மது, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கோமதி சண்முகம், ராஜேஸ்வரி சேகர், சரண்யாஹரி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் மன அழுத்தம், பதற்றம், படபடப்பு ஏற்படும்.
    • அதிக தூரம் நடக்கும் போது இளைப்பு ஏற்படும்.

    அவினாசி :

    சோமனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கு யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி அளிக்கப்படுகிறது.கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி அளித்து ஆயுஷ் மருத்துவ அலுவலர் அருள் ஜோதி பேசியதாவது:- கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் மன அழுத்தம், பதற்றம், படபடப்பு ஏற்படும். சிறிய பிரச்னைக்கு பெரிய அளவில் பதற்றம் உண்டாகும். அதை எளிதில் தவிர்க்க முடியும். மேலும் எடை அதிகரிப்பு, உணவு சாப்பிடும் போது மூச்சடைப்பு, அதிக தூரம் நடக்கும் போது இளைப்பு ஆகியவை ஏற்படும். பிரசவ நேரத்திலும் அவதி ஏற்படும்.இவற்றை தவிர்க்க தினமும் மூச்சு பயிற்சி செய்வது அவசியமாகும்.

    காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். இதன்மூலம் மனதுக்கு அமைதியும் உடலுக்கு வலிமையும் கிடைக்கும்.அதேபோல் சிறு சிறு யோக பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.கர்ப்ப காலத்தில் உடல் முழுவதும் தசை நார்கள், ரத்த குழாய்கள் நீட்சி அடைய பயிற்சி செய்யவேண்டும். அப்போதுதான் பிரசவ காலத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாது.இவ்வாறு அவர் பேசினார். 

    • 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் சிக்கலான பிரசவங்களை எதிர்நோக்கியிருப்பவர்களாக கருதப்படுகின்றனர்.
    • 'ஹை ரிஸ்க் மதர் டிராகிங்' எனும் மொபைல்போன் செயலியில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தாராபுரம் :

    தமிழகத்தில் கர்ப்பிணிகள், சிசு இறப்பை பூஜ்யமாக்க சுகாதாரத் துறை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சிக்கலான பிரசவத்தை எதிர்நோக்கியிருக்கும் பெண்களை பிரத்யேக மொபைல்போன் செயலி வாயிலாக கண்காணிக்கும் நடவடிக்கையை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது :- கர்ப்பகாலத்தில் ஏற்படும் ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய பாதிப்புக்கு உள்ளானவர்கள், 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் சிக்கலான பிரசவங்களை எதிர்நோக்கியிருப்பவர்களாக கருதப்படுகின்றனர்.தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளின் தகவல்களை பகிரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கர்ப்பிணிகளை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள 'ஹை ரிஸ்க் மதர் டிராகிங்' எனும் மொபைல்போன் செயலியில், கர்ப்பிணிகளின் முழு விவரங்களையும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் விவரங்களை அந்தந்த பகுதி கிராம சுகாதார செவிலியர்கள் பார்க்கலாம். பிரச்னைக்குரிய கர்ப்பிணிகளை அடையாளம் கண்டு எளிதில் கண்காணிக்க முடியும்.

    ஒவ்வொரு மாதமும் அவர்களின் உடல் நிலை குறித்து அறிந்து உரிய ஆலோசனைகள், சிகிச்சையை பரிந்துரைக்க முடியும். இதனால் கர்ப்பகாலங்களில் ஏற்படும் இறப்புகளை கட்டுப்படுத்த முடியும் என்றனர்.

    • சிங்கம்புணரி அருகே 50 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • அர்களுக்கு சர்க்கரை பொங்கல், லெமன் சாதம், புளிசாதம், தயிர் சாதம், வெஜிடேபிள் பிரியாணி உள்ளிட்ட 5 வகையான உணவுகள் பரிமாறப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள ஏரியூரில் திருமலை மருதீஸ்வரர் திருமண மண்டபத்தில் அரசு சார்பில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடந்தது.

    சமூகநலன் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணை ந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகிய துறைகளின் சார்பில் இந்த வளைகாப்பு விழா நடைபெற்றது. ஒன்றிய தலைவர் திவ்யாபிரபு தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    விழாவில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு மாலை அணிவித்து கன்னத்தில் சந்தனம் பூசி, நெற்றியில் குங்குமமிட்டு, கைகளில் கண்ணாடி வளையல் அணிந்து வளைகாப்பை நடத்தினர். அதனை தொடர்ந்து அவர்களுக்கு சில்வர் கிண்ணம், வாழைப்பழம், மஞ்சள், குங்குமம், ரவிக்கைதுணி, மஞ்சள் கயிறு, தாம்பூலத்தில் வைத்து சீதனமாக வழங்கப்பட்டது.

    இதை தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு சர்க்கரை பொங்கல், லெமன் சாதம், புளிசாதம், தயிர் சாதம், வெஜிடேபிள் பிரியாணி உள்ளிட்ட 5 வகையான உணவுகள் பரிமாறப்பட்டது.

    இந்த விழாவில் மாவட்ட திட்ட அலுவலர், வட்டார குழந்தைகள் திட்ட அலுவலர், ஏரியூர் ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    • அரசு மருத்துவமனையில் எலிகள் தொல்லையால் மகப்பேறு வார்டில் அச்சத்துடன் கர்ப்பிணிகள் உள்ளனர்
    • உணவு பொருட்களை கண்ட இடங்களில் வீசக்கூடாது

    திருச்சி:

    சமீபத்தில் தெலுங்கான மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தையை எலிகள் கடித்துக்குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல் ஜார்கண்ட் மாநிலத்திலும் சிகிச்சைக்காக வந்த பெண் ஒருவரின் கண்களில் எலி கடித்ததால் பார்வையிழக்கும் நிலை உருவானது. தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் மகப்பேறு வார்டில் உள்ள முதல் தளத்தில் எலிகள் தொல்லை அதிகமாக இருப்பதாக அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர்.

    இதுகுறித்து அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவரின் கணவர் கூறுகையில், என் மனைவியை பிரசவத்திற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு வார்டில் சேர்த்து இருக்கிறேன். இங்கு மிகவும் சுகாதாரம் இல்லாமல் வார்டுகள் இருக்கிறது. குறிப்பாக கழிப்பறைக்கு சென்றால் தண்ணீர் இல்லாத நிலை உள்ளது.

    முக்கிய பிரச்சினையாக முதல் தளத்தில் உள்ள வார்டுகளில் எலிகள் அதிகமாக நடமாடுகிறது. திடீரென பொது மக்கள் அசந்த நேரத்தில் பிறந்த குழந்தைகளை கூட கடிக்கும் அபாயமும் உள்ளது. ஆகவே இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவும் எலிகள் மிகப்பெரிய அளவில் எடை கொண்டதாக இருப்பதால் அதை சமாளிப்பதற்கு பொது மக்கள் பெரும் சிரமம் அடைகிறார்கள்.

    இரவு நேரத்தில் நோயாளிகள் தூங்கி கொண்டிருக்கும் போது அவர்கள் உண்பதற்காக வைத்திருக்கும் உணவு பொருட்களை எலிகள் சாப்பிடுவதற்காக சரளமாக வார்டிற்குள் நுழைகிறது. மேலும் இதுகுறித்து முதல் தளத்தில் இருக்கு அச்சப்பட்டு வேறு தளத்திற்கு தங்களை மாற்றுங்கள் என்று மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் நோயாளிகள் முறையிடுகின்றனர்.

    மேலும் நோயாளிகளுக்கு காலில் புண்கள் இருந்தால் அந்த ரத்த வாசனைக்கு எலிகள் வந்து காலை கடித்து விடுகின்றன. கழிப்பறைக்கு சென்றால் உள்ளே பெரிய அளவிலான எலிகள் உலாவிக் கொண்டிருக்கிறது. இதனால் மகப்பேறு வார்டில் முதல் தளத்தில் இருப்பதே ஒரு பெரும் சவாலாக உள்ளது. ஆகவே எலிகள் தொல்லையை ஒழிக்க திருச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேரு கூறுகையில், எலிகள் மருத்துவமனை வார்டிற்குள் வர காரணம் பொதுமக்கள் தான். என்னவென்றால் தாங்கள் கொண்டு வரும் உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டு மீதமுள்ள உணவுகளை குப்பை தொட்டியில் போடாமல் கண்ட இடங்களில் வீசுகிறார்கள் இதனால் எலிகள் அதை சாப்பிடுவதற்காக வருகிறது.

    மேலும் சுவர்களில் அதிக துளைளையும் ஏற்படுத்தி இருக்கிறது.அதை அடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்கள் தாங்கள் கொண்டு வரும் உணவு கழிவுகளை குப்பை தொட்டியில் போடுங்கள். மருத்துவமனையை சுகாதாரமாக பயன்படுத்துங்கள்.எலிகளை அழிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    • கர்ப்பிணிகளுக்கு ஜிடிடி எனப்படும் சர்க்கரை நோய் கண்டறியும் சோதனை வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் செய்யப்படுகிறது.
    • 4 மாதம் முடிந்து 5-வது மாத கருவைச் சுமந்து வரும் கர்ப்பிணிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த பரிசோதனைக்கு செல்லும், கர்ப்பிணி பெண்களுக்கு வழங்க வேண்டிய குளுகோஸ் இல்லை என பல வாரங்களாக திருப்பி அனுப்பப்படுவதால், கர்ப்பிணிகள் அவதி அடைந்துள்ளனர்.

    திருப்பூர் கோவில்வழியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கர்ப்பிணிகளுக்கு ஜிடிடி எனப்படும் சர்க்கரை நோய் கண்டறியும் சோதனை வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் செய்யப்படுகிறது. இந்த சோதனைக்கு வரக்கூடிய கர்ப்பிணிகளுக்கு குளுகோஸ் சாப்பிடுவதற்கு கொடுக்கப்படும். அதை சாப்பிட்டு ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ரத்தத்தில் சர்க்கரை அளவு கணக்கிடப்படும். இந்த சோதனையை செய்வதன் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்பதை துல்லியமாக கண்டறிவதுடன், அதற்குரிய மருந்துகளும் வழங்கப்படும். இந்த சோதனையை மேற்கொண்டு சிகிச்சை அளிப்பதன் மூலம் கருக் கலைப்பு ஆவதை தடுக்க முடியும், வயிற்றில் வளரும் சிசுவுக்கு ஏற்படக்கூடிய இதர பாதிப்புகளையும் முன்கூட்டியே தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

    இந்நிலையில் கோவில்வழியைச் சேர்ந்த 22 வயது, கர்ப்பிணி குளுகோஸ் ரத்த பரிசோதனை செய்வதற்காக கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு அங்குள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார். அப்போது அங்கு குளுகோஸ் இருப்பு இல்லை, புதிதாக வந்தால்தான் கொடுக்க முடியும் என்று கூறி ரத்தபரிசோதனை செய்யாமல் திருப்பி அனுப்பி விட்டனர். அவருடன் அவரைப் போலவே பலரையும் திருப்பி அனுப்பினர். அதன் பிறகு ஒரு வார காலம் கழித்து மீண்டும் அங்கு போயிருக்கிறார். அப்போதும் குளுகோஸ் வரவில்லை என்று அங்கிருந்த செவிலியர்கள் தெரிவித்துள்ளனர். எப்போது குளுகோஸ் வரும், எப்போது ரத்த பரிசோதனை செய்ய வர வேண்டும் என கர்ப்பிணிகள் கேட்டபோது அவர்களிடம் உரிய பதில் இல்லை. இந்நிலையில் கடந்த 23-ம் தேதி, கோவில்வழி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 22 வயது கர்ப்பிணி உட்பட சிலர் சென்றனர். அப்போதும் குளூகோஸ் இல்லை என தெரிவித்து திருப்பி அனுப்பிவிட்டனர்.

    இது தொடர்பாக கர்ப்பிணிகளின் கணவன்மார்கள் கூறும்போது, " தற்போது 4 மாதம் முடிந்து 5-வது மாத கருவைச் சுமந்து வரும் கர்ப்பிணிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரத்த சர்க்கரை அளவை கணிக்கும் குளுகோஸ் ரத்தப் பரி சோதனை செய்வார்கள் எனத் தெரியவில்லை. திருப்பூர் மாநகர் மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் இந்த பிரச்சினை இருப்பதாக தெரிகிறது. அரசு மருத்துவமனையின் சின்னச்சின்ன விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தினாலே பொதுமக்களுக்கு நல்ல மருத்துவம் கிடைக்கும்" என்றனர்.

    ×