என் மலர்
செய்திகள்

கோவையில் 9-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்- போலீசார் விசாரணை
கோவையில் 9-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் அடைந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சிறுமியின் வயிறு பெரிதாக காணப்பட்டதோடு அடிக்கடி உடல்நலக்குறைவும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் சிறுமியை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் செல்வபுரம் மற்றும் மாநகர மேற்கு பிரிவு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story