search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "passenger"

    • தென் மாநிலத்தில் உள்ள பக்தர்களும், பிற நாடுகளில் இருந்தும் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
    • குருவாயூர் - ராமேஸ்வரத்திற்கு 496 கி.மீ தூரத்தில் நேரடியாக வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும்.

    உடுமலை

    கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி ெரயில்வே நிலையத்தை பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, ஆனைமலை , உடுமலை ஆகிய தாலுகா மக்கள் பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில் குருவாயூர் - ராமேஸ்வரத்துக்கு வந்தே பாரத் ெரயில் இயக்க வேண்டுமென பொள்ளாச்சி ெரயில் பயணிகள் நலச்சங்கத்தினர், தெற்கு ெரயில்வே பொது மேலாளருக்கு மனு அனுப்பினர். மனுவுடன் எந்த வழித்தடத்தில் ெரயில் இயக்க வேண்டுமென வரைபடத்தையும் சேர்த்து அனுப்பியுள்ளனர்.

    இது குறித்து பொள்ளாச்சி ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கூறியதாவது:-

    குருவாயூரில், ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலும், பாலக்காட்டில் சைலண்ட் வேலி, நெல்லியம்பதி மலை, மலம்புழா அணை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன.ராமேஸ்வரத்தில், ராமநாத சுவாமி கோவில், ராமநாதபுரத்தில் ஏர்வாடி தர்கா போன்ற முக்கிய புனித தலங்கள் உள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழநியில் முருகன் கோவில் உள்ளது.

    தென் மாநிலத்தில் உள்ள பக்தர்களும், பிற நாடுகளில் இருந்தும் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். பழநி அருகே புகழ் பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானலும் உள்ளது.பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவிலும், வால்பாறை மலை, ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் ஆழியாறு போன்ற சுற்றுலா தலங்களும் உள்ளன. உடுமலை அருகே, திருமூர்த்தி மலை கோவிலும்,மூணாறு, அமராவதி போன்ற வனப்பகுதிகளும் உள்ளன.

    ஆனால் பொள்ளாச்சி - உடுமலை - பழநி - ஒட்டன்சத்திரம் - மதுரை - ராமநாதபுரம் - ராமேஸ்வரத்துக்கு நேரடி ெரயில் வசதியில்லை. இதனால், பயணிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

    எனவே, குருவாயூர் - ராமேஸ்வரம் இடையே குறைந்த தொலைவாக உள்ள, 496 கி.மீ., தூரத்துக்கு நேரடியாக வந்தே பாரத் ெரயில் இயக்க வேண்டும்.இந்த ெரயில், திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, பழநி, மதுரை வழியாக இயக்கப்பட வேண்டும். இதன் வாயிலாக, கேரளா மாநிலத்தின், பொன்னானி, திருச்சூர், பாலக்காடு, ஆலத்தூர் உள்ளிட்ட 4 பாராளுமன்ற தொகுதிகளும், தமிழகத்தின்,பொள்ளாச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 பாராளுமன்ற தொகுதி மக்களும் பயன் பெற முடியும்.எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, ெரயில் இயக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என வலியுறுத்தி மனு அனுப்பியுள்ளோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
    • பஸ் நிலையம் முன்புள்ள தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றியும், இறக்கியும் விடுகின்றனர்.

    பல்லடம், ஆக.22-

    பல்லடம் பஸ் நிலையத்தில் கோவை, திருச்சி, உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் இரவு மற்றும் காலை நேரங்களில் பஸ் நிலையத்திற்குள் செல்லாமல் பஸ் நிலையத்தின் முன்பு ரோட்டில் இறக்கி விடப்படுவதால் பயணிகள் அவதிபடுகின்றனர். இதனால் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். இது குறித்து பயணிகள் கூறியதாவது:- இரவு மற்றும் காலை நேரங்களில், திருச்சி, மதுரை போன்ற வெளியூர் செல்லும் பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் வருவதில்லை.

    பஸ் நிலையம் முன்புள்ள தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றியும், இறக்கியும் விடுகின்றனர். இது ஒரு புறம் பயணிகளுக்கு வீண் அலைச்சலை ஏற்படுத்துகிறது. மேலும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் அதிக வாகன போக்குவரத்து உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

    எனவே அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்வதற்கு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பயணிகள் தெரிவித்தனர்.

    • இந்தியாவின் 9 மாநிலங்களை இந்த திட்டங்கள் உள்ளடக்கியது
    • முக்கிய பொருட்களை இந்தியா முழுவதும் விரைவாக எடுத்து செல்ல முடியும்

    பிரதமரின் தலைமையில் இன்று கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCE) ரெயில்வே துறையில் ரூ.32, 500 கோடி மதிப்பிலான இருப்பு பாதைகளை அமைக்கும் 7 "மல்டி டிராக்கிங்" திட்டங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது.

    இத்திட்டங்கள் உத்தர பிரதேசம், பீகார், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிஷா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இந்தியாவின் 9 மாநிலங்களில் 35 மாவட்டங்களை உள்ளடக்கி கட்டமைக்கப்படும்.

    இத்திட்டத்தின்படி ரூ.32,500 கோடி செலவில் இந்திய ரெயில்வேயின் 2339 கிலோமீட்டர்கள் இருப்பு பாதைகள் உருவாக்கப்படும். இந்த 9 மாநிலங்களில் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் இதன் மூலம் உறுதி செய்யப்படும்.

    இருப்பு பாதைகளை அதிகரித்தல், ரெயில் போக்குவரத்தை சீராக்குதல், பயணிகளுக்கு நெரிசலை குறைத்தல் மற்றும் பயணிகள் தடையின்றி பயணம் மேற்கொள்வதை உறுதி செய்தல் ஆகியவை இந்த திட்டங்களின் நோக்கமாகும்.

    உணவு தானியங்கள், உரங்கள், நிலக்கரி, சிமென்ட், இரும்பு, ஸ்டீல், எக்கு, கச்சா எண்ணெய், சுண்ணாம்பு, சமையல் எண்ணெய் முதலிய முக்கிய பொருட்களின் விரைவான போக்குவரத்திற்கும் இது மிகவும் உதவியாக இருக்கும். இதன் மூலம் வருங்காலங்களில் ரெயில்வே துறை 200 மில்லியன் டன் சரக்குகளை கூடுதலாக எடுத்து செல்ல முடியும்.

    பாரத்மாலா, சாகர்மாலா, உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து, துறைமுக வழியான கப்பல் போக்குவரத்து மற்றும் உடான் விமான சேவை உட்பட பலவித போக்குவரத்து கட்டமைப்புகளையும், வழிமுறைகளையும் ஒன்றிணைத்து சீரான, சிறப்பான மற்றும் மக்களால் எளிதில் விரைவாக பயன்படுத்த கூடிய ஒரு போக்குவரத்து அமைப்பை உருவாக்கும் பிரதம மந்திரி கடி ஷக்தி தேசிய திட்டம் (PM-Gati Shakti National Master Plan) எனும் மிகப்பெரும் திட்டத்தின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.

    • சுமார் 1 லட்சம் பேர் திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
    • மாற்றுத்திறனாளிகள் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்ல சாய்தளம் அமைக்க வலியுறுத்தியும் அது சம்மந்தமான எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது.

    திருவள்ளூர் ரெயில் நிலையம் வழியாக தினந்தோறும் சென்னையில் இருந்து அரக்கோணம், திருத்தணி மற்றும் காட்பாடி வழியாக திருப்பதி, மும்பை, பெங்களூர் செல்லும் விரைவு ரெயில்களும், மின்சார புறநகர் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் என நாள் ஒன்றுக்கு 350-க்கும் மேற்பட்ட ரெயில்கள் கடந்தும் செல்கின்றன.

    மாவட்டத் தலைநகரான திருவள்ளூரில் இருந்து நாள்தோறும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், வியாபாரிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள் என சுமார் 1 லட்சம் பேர் திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    திருவள்ளூரில் இருந்து சென்னைக்கும், அரக்கோணத்திற்கும் செல்லும் ரெயில்களில் அதிகளவில் பயணிகள் செல்வதால் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த ரெயில் நிலையமாக இந்த திருவள்ளூர் ரெயில் நிலையம் உள்ளது.

    திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உள்ள 6 நடைமேடைகளில் இரு புறமும் மேம்பாலம் இருந்தும் ஒரு சிலரைத் தவிர ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர் என அனைத்து பொது மக்களும் ரெயில் தண்டவாளத்தை கடந்து தான் செல்கின்றனர். இதனால் அடிக்கடி ரெயில்கள் மோதி விபத்துக்களும் உயிரிழப்பும் ஏற்படுகிறது. மணவாளநகர் பகுதியில் இருந்து பெரிய குப்பம் செல்லும் பொது மக்களும் ரெயில் தண்டவாளங்களை கடந்து செல்கின்றனர்.

    இதனை தடுக்கும் வகையில் கடந்த 2019-ல் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை, மற்றும் எஸ்கலேட்டர் தானியங்கி நடை மேடை, முதியவர்கள் படிக்கட்டுகளில் ஏறி இறங்க முடியாததால் அவர்களின் வசதிக்காக லிப்ட் வசதி, ஆகியவை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

    2019 - ல் கொரோனா தொற்று காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் காலதாமதமாக தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. ஆனால் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில் ரெயில் பயணிகள் பாதுகாப்பு நடவடிக்கை, மழை நீர் ஒழுகுதல், மின் விளக்கு, ஒலி பெருக்கி வசதி, சி.சி.டிவி கேமரா வசதி, மின்சாரம் தடைபடும் நேரங்களில் பயன் படுத்தக் கூடிய தடை இல்லா மின்சார விளக்கு வசதி, நடைமேடை செல்லும் வழி காட்டி பலகைகள், மின்னணு தகவல் பலகை, டைல்ஸ் பதிக்கப்பட்ட நடந்து செல்லும் பாதை, நீர் வடிகால் அமைப்பு, குப்பை தொட்டிகள் போன்ற ஒரு சில பணிகள் நிறைவடையாததால் மக்கள் பயன்பாட்டிற்குகொண்டு வர தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    ரூ. 6 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட இந்த பணியானது 2 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ரெயில் பயணிகளின் அத்தியாவசிய பணிகள் முடிவடையாமல் இருப்பதால் ரெயில் பயணிகள் ஆபத்தான நிலையில் ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலையே மேலும் தொடர்கிறது.

    அதே நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்ல சாய்தளம் அமைக்க வலியுறுத்தியும் அது சம்மந்தமான எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது.

    இதனால் சாய்தளம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே பொது மக்கள் பயணிகள் ரெயில் தண்டவா ளத்தை ஆபத்தான முறையில் கடக்கும் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மீதமுள்ள சுரங்கப்பாதைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் முதிய வர்கள் படியில் ஏறி இறங்க முடியாத காரணத்தால் லிப்ட் வசதியும் ஏற்படுத்த வேண்டும் என்றும், எஸ்கலேட்டர் எனப்படும் தானியங்கி நடைமேடையை முதல் பிளாட்பாரத்திலும் அமைக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • டெல்டா பாசனத்திற்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
    • பூலாம்பட்டி நெரிஞ்சிப்பேட்டை இடையேயான விசைப்படகு போக்குவரத்து நடந்து வருகிறது.

    எடப்பாடி:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இதனால், செக்கானூர், பூலாம்பட்டி, நெரிஞ்சிப் பேட்டை கோனேரிப்பட்டி, ஊராட்சிகோட்டை ஆகிய நீர் மின் கதவணை வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால், மின்சார உற்பத்தி நடைபெறுகிறது.

    பூலாம்பட்டி நெரிஞ்சிப்பேட்டை இடையேயான விசைப்படகு போக்குவரத்து நடந்து வருகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் குடும் பம் குடும்பமாக வந்திருந்து விசைப்படகில் உற்சாக சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    மேலும், இங்குள்ள நீர்மின் தகவணை பாலம், பஸ் நிலையம், கைலாசநாதர் கோவில் பஸ் நிலையத்தில் உள்ள பூங்கா, மூலப்பாதை பெருமாள் கோவில், மாட்டுக்கார பெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதி களில் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    • கடைசியில் ஏற்றப்படும் இடைநிறுத்த ஊா்களின் பயணிகள் பல மணி நேரம் நின்று கொண்டே செல்ல வேண்டியுள்ளது.
    • அனைத்து நிலைப் பயணிகளையும் ஏற்றி, இறக்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது

    காங்கயம்:

    கோவை காந்திபுரம், சிங்காநல்லூா் பேருந்து நிலையங்களில் இருந்து கரூா், திருச்சி, நாகப்பட்டினத்துக்கு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இந்த வழித் தடத்தில் சூலூா், பல்லடம், அவிநாசிபாளையம், காங்கயம், வெள்ளக்கோவில், தென்னிலை, பரமத்தி ஆகிய ஊா்கள் உள்ளன.

    இந்த ஊா்களுக்குச் செல்லும் பயணிகளை கோவையில் பேருந்து நடத்துநா்கள் முதலில் ஏற்றுவதில்லை. தொலைதூரங்களுக்குச் செல்லும் பயணிகளையே முதலில் ஏற்றுகின்றனா். இதனால் கடைசியில் ஏற்றப்படும் இடைநிறுத்த ஊா்களின் பயணிகள் பல மணி நேரம் நின்று கொண்டே செல்ல வேண்டியுள்ளது.

    இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெள்ளக்கோவிலைச் சோ்ந்த ஆசிரியா் வடிவேல் என்பவா் புகாா் தெரிவித்திருந்தாா். அதனடிப்படையில் கோவை மண்டல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப்பொது மேலாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கோவையிலிருந்து குறிப்பிட்ட வழியாகச் செல்லும் பேருந்துகளில் பேருந்து நிலையப் பொறுப்பாளா்கள் மூலம் அனைத்து நிலைப் பயணிகளையும் ஏற்றி, இறக்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அவிநாசியில் இருந்து இன்று காலை அரசு பஸ் ஒன்று திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.
    • பயணி உடலில் இருந்து எந்த அசைவும் இல்லை.

    திருப்பூர் :

    அவிநாசியில் இருந்து இன்று காலை அரசு பஸ் ஒன்று திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. ஜெயபால் என்பவர் ஓட்டி வந்தார். இந்தநிலையில் பஸ் பழைய பஸ் நிலையம் வந்ததும் பயணிகள் அனைவரும் இறங்கினர்.

    ஆனால் ஒரு பயணி மட்டும் இறங்காமல் சீட்டில் தூங்கிய நிலையில் இருந்தார். இதையடுத்து நடத்துனர் தேவராஜ் அவரிடம் பஸ் நிலையம் வந்து விட்டது, கீழே இறங்கவும் என்று கூறினார். ஆனால் அந்தப் பயணி உடலில் இருந்து எந்த அசைவும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த நடத்துனர் அவரை சோதித்துப் பார்த்தபோது அவர் இறந்து இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ்சில் பிணமாக இருந்தவரை மீட்டு பிேரத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த அசோக்குமார் (வயது 52) என்பதும் வேலைக்காக இன்று காலை பஸ்சில் பழைய பஸ் நிலையத்துக்கு வந்த போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து இருப்பதும் தெரியவந்தது.இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள்.
    • போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    கொல்கத்தா:

    கத்தார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இன்று அதிகாலை 3.29 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 541 பயணிகள் இருந்தனர்.

    அப்போது ஒரு பயணி திடீரென எழுந்து விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூச்சலிட்டார். இதனால் மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்,

    இது பற்றி உடனடியாக மத்திய தொழில்பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டனர். பின்னர் வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள். ஆனால் இந்த சோதனையில் வெடி குண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதை அறிந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இதையடுத்து போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் பக்கத்தில் இருந்த ஒருவர் தன்னிடம் இதுபற்றி கூறியதாக தெரிவித்தார்.

    உடனே போலீசார் அவரது தந்தையை விமானநிலையத்துக்கு வரவழைத்து விசாரித்த போது அந்த பயணிக்கு சற்று மனநலம் பாதிக்கப்ட்டு இருந்தது தெரியவந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாக தந்தை தெரிவித்தார்.

    அந்த பயணி செய்த களேபாரத்தால் லண்டன் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    • தென்காசி ரெயில் நிலையத்தில் குடிநீர் நிலையம் பயன்பாடற்ற நிலையில் கிடக்கிறது.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் தென்காசி ரெயில் நிலையம், தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் முக்கியமான ரெயில் நிலையமாக விளங்கி வருகிறது. இங்கு வரும் பயணிகள், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஆர்.ஓ. குடிதண்ணீர் நிலையம் அமைக்கப்பட்டது.

    ஆனால் தற்போது அந்த குடிநீர் நிலையம் பயன்பாடற்ற நிலையில் கிடக்கிறது. இதன் அருகே குடிதண்ணீர் தொட்டி இருக்கிறது. ஆனால் அதன் குடிதண்ணீர் குழாய் மக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு தரையை ஒட்டி வைக்கப்பட்டு உள்ளது. இது மட்டுமல்லாமல் பயணிகள் பயன்பாட்டிற்கு கழிப்பிடங்கள் இல்லாத நிலை இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

    மேலும் இரவு நேரங்களில் மகளிர் மற்றும் குழந்தைகள் கழிப்பிடம் இல்லாமல் அவதிப்படும் நிலைமையும் இருப்பதாக பயணிகள் புகார் கூறி வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் மிக முக்கியமான ரெயில் நிலையத்தின் நிலைமை இப்படி உள்ளதே என்று ரெயில் பயணிகள் வருத்தப்படும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

    • குறிப்பிட்ட நேரத்தில் விமான நிலையத்தின் புறப்பாடு பகுதிக்கு வராததால் விமானத்தை தவறவிட்டார்.
    • போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அமெரிக்காவில் விமானத்தை தவற விட்ட பயணி ஒருவர் கோபத்தில் செய்த காரியத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் லாஸ் வேகாசில் இருந்து நேற்று (வியாழன் கிழமை) மதியம் 2 மணி அளவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்ல இருந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணி, குறிப்பிட்ட நேரத்தில் விமான நிலையத்தின் புறப்பாடு பகுதிக்கு வராததால் விமானத்தை தவறவிட்டார்.

    விமானத்தை தவறவிட்ட கோபத்தில், அந்த பயணி விமான நிலைய அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விமானத்தில் ஏற்றப்பட்ட தனது லக்கேஜில் வெடிபொருட்கள் இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

     

    இதையடுத்து விமான நிலையம் விரைந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் புறப்பட தயாராக இருந்த விமானத்திற்குள் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    எனினும், பயணி கூறியதை போன்று வெடிபொருட்கள் எதுவும் அவரது லக்கேஜில் கிடைக்கவில்லை. இதையடுத்து பயணியை போலீசார் கைது செய்தனர். பயணி கோபத்தில் விடுத்த மிரட்டல் காரணமாக விமானம் 37 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    • 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
    • 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் பஸ் நிலையத்தில் உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, கோவை, திருச்சி, போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில், உள்ளூர் பஸ்கள், வெளியூர் பஸ்கள் நிற்கும் இடங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் பயணிகள் அமரும் நாற்காலிகள், அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில்,அதில் சில நாற்காலிகள் உடைந்து, சாய்ந்து கிடக்கின்றன.இதனால் கூட்ட நேரங்களில் பயணிகள் அமர்வதற்கு சிரமமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே உடனடி நடவடிக்கை எடுத்து நாற்காலிகளை சீரமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையானது தற்போது சிதிலமடைந்து உள்ளது.
    • மதுபானங்கள் அருந்தி விட்டு பாட்டில்கள், தம்ளர்கள், உள்ளிட்டவைக ளை வீசிச் செல்கின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அவரப்பாளையம் பிரிவில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இதனை அவரப்பாளையம், மற்றும் அருகிலுள்ள பகுதிவாழ் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையானது தற்போது சிதிலமடைந்து உள்ளது. மேலும் குடிமகன்கள் அங்கே அமர்ந்து மதுபானங்கள் அருந்தி விட்டு பாட்டில்கள், தம்ளர்கள், உள்ளிட்டவைக ளை வீசிச் செல்கின்றனர். மேலும் குடிமகன்கள் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் படுத்தும் தூங்குகின்றனர்.

    இதனால் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் சுவர்கள் பழுதடைந்து எந்நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடையை பராமரித்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×