search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுரங்கப்பாதை"

    • கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையிலான உயர்மட்ட பாதை வழித்தடத்தில் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
    • பூந்தமல்லி இடையேயான வழித்தடத்தில் உயர்மட்டப் பாதையில் மொத்தம் 811 தூண்கள் அமைக்க வேண்டும். இதுவரை 598 தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.

    இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 26.1 கி.மீ. வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்டபாதையாகவும் அமைக்கப்படுகிறது.

    இந்த வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரெயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களும் அமைக்கப்படுகின்றன. தற்போது, உயர்மட்ட பாதை பணிகள், சுரங்கப் பாதை பணிகள், மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் ஆகியவை முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இந்த வழித்தடத்தில் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையிலான உயர்மட்ட பாதை வழித்தடத்தில் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான வழித்தடத்தின் ஒரு பகுதியாக, கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் - பூந்தமல்லி இடையேயான வழித்தடத்தில் உயர்மட்டப் பாதையில் மொத்தம் 811 தூண்கள் அமைக்க வேண்டும். இதுவரை 598 தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள தூண்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    தூண்கள் அமைக்கப்பட்ட இடங்களில் உயர்மட்ட இரும்பு பாலம் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. ஆலப்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, சாலிகிராமம், காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, கரையான்சாவடி, பூந்தமல்லி ஆகிய இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இந்த வழித்தடத்தில் உயர்மட்டப்பாதையில் 18 ரெயில் நிலையங்களில் 13 ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தீவிர மடைந்துள்ளன. மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கான நுழைவு வாயில், வெளியேறும் பகுதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடைய வாய்ப்பு உள்ளது.

    இதையடுத்து பவர் ஹவுஸ்- பூந்தமல்லி இடையே உள்ள பாதையை மக்கள் பயன்பாட்டுக்காக, 2025-ம் ஆண்டில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழித்தடத்தில் அடுத்த ஆண்டு மெட்ரோ ரெயில் ஓடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் இரட்டை அடுக்கு பாதையில் கட்டுமானப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பணிக்காக, கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில்நிலையத்தில் இருந்து முதல் சுரங்கம் தோண்டும் எந்திரமான 'பிளமிக்கோ' கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி பணியை தொடங்கியது. இதையடுத்து, 2-வது சுரங்கம் தோண்டும் எந்திரமான 'கழுகு' தனது பணியை கடந்த 18-ந்தேதி தொடங்கியது. இது கலங்கரை விளக்கத்தில் இருந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தொடங்கி, கச்சேரி சாலை, திருமயிலை, பாரதிதாசன் சாலை ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் வழியாக போட்கிளப்பை 2026-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அடைய உள்ளது.

    இதற்கிடையில், தி.நகர் பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் நோக்கி 'பிகாக்' என்ற எந்திரம் மூலமாக, சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது. தற்போது, இந்த எந்திர பாகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பூமிக்கடியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • ரெயில்வே கேட் வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
    • ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கான டெண்டர் பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் விம்கோ நகர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல ரெயில்வே கேட் உள்ளது.

    இது திருவொற்றியூர் மேற்கு பகுதி மற்றும் திருவொற்றியூர் நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய இடம் ஆகும். தினந்தோறும் சுமார் 60 முதல் 70 ரெயில்கள் வரை இந்த பாதை வழியாக செல்வதால் பெரும்பாலும் மூடிகிடக்கும். இதனால் இந்த ரெயில்வே கேட் வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து இந்த இடத்தில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரெயில்வே கேட்டின் இருபக்கத்திலும் இருந்த கடைகள் மற்றும் கட்டிடங்கள் அகற்றப்பட்டன. தற்போது ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கான டெண்டர் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதைத்தெடர்ந்து விம்கோ நகர் ரெயில்வே சுரங்கப்பாதை பணிகள் இன்னும் சில வாரங்களில் தொடங்கப்படும் என்று தெரிகிறது. இந்த சுரங்கப்பாதை ரூ.21 கோடி செலவில் 343 மீட்டர் நீளம் 7.5 மீட்டர் அகலத்தில் அமைய உள்ளது. 1½ ஆண்டுகளில் ரெயில்வே சுரங்கப்பாதை பணியை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. விம்கோ நகர் ரெயில்வே சுரங்கப் பாதை பயன்பாட்டுக்கு வரும்போது பல ஆண்டு போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று பொது மக்கள் தெரிவித்து உள்ளனர்.

    • 5 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது.
    • மழைநீரை அகற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இன்று (நவம்பர் 29) மாலை முதலே நகரின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவம்பர் 30) விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நாளை காலை வரை மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் மொத்தமாக உள்ள 20 சுரங்கப்பாதைகளில் 5 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது.

     

    மழைநீர் தேக்கம் காரணமாக பெரம்பூர் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. மேலும் நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து இருக்கிறது.

    சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற போர்க்கால அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சென்னை கிண்டி, வடபழனி, போரூர், தாம்ரம், சைதாப்பேட்டை செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

    • மீட்பு பணி தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டம் நடத்தப்பட்டது.
    • சிலர் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தங்களது உறவினர்களிடம் அவ்வப்போது செல்போனில் பேசி வருகிறார்கள்.

    உத்தரகாசி:

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா- தண்டல்கான் இடையே சுமார் 4.5 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி கடந்த 12-ந்தேதி இடிந்து விழுந்தது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்கள் ஆக்சிஜன் குறைந்த சூழ்நிலையில் அதற்குள் தவித்து வருகிறார்கள்.

    சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் வெளியே வருவதற்காக இடிந்து விழுந்த பகுதிக்குள் துளையிட்டு குழாய்களை செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அமெரிக் காவில் தயாரிக்கப்பட்ட எந்திரம் பயன்படுத்தப்பட்டது.

    நேற்று பிற்பகலில் அந்த எந்திரம் மூலம் துளையிட்டு 5-வது குழாயை செலுத்தும் பணி நடைபெற்றது. அப்போது சுரங்கப்பாதைக்குள் ஒரு பலத்த விரிசல் சத்தம் கேட்டது. இந்த இடையூறு காரணமாக மீட்பு பணி நிறுத்தப்பட்டது.

    இதற்கிடையே மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து மற்றொரு அதிக சக்தி வாய்ந்த துளையிடும் எந்திரம் விமானம் மூலம் சுரங்கப பாதை பகுதிக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அதன் மூலம் துளியிடும் பணிக்கு மீட்பு படையினர் தயாராகி வருகிறார்கள். இதற்காக மலை உச்சியில் இருந்து செங்குத்தாக துளைபோட முயற்சி செய்து வருகிறார்கள்.

    சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் நிபுணர்கள் குழுவுடன் பிரமதர் அலுவலகத்தின் அதிகாரிகள் குழுவும் இணைந்துள்ளனர். இது தொடர்பாக பிரதமரின் முன்னாள் ஆலோசகர் பாஸ்கர் குல்பே கூறுகையில், 'தொழிலாளர்களை மீட்க நிபுணர்களுடன் இணைந்து 5 திட்டங்களை வகுத்துள்ளோம். ஒரே வழியில் மட்டும் முயற்சி செய்யாமல் 5 திட்டங்களையும் ஒரே நேரத்தில் செயல்படுத்தி மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதில் நிபுணர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் உள்ளனர்.

    மீட்பு படையினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் தொழிலாளர்கள் இன்னும் 4 அல்லது 5 நாட்களில் மீட்கப்படுவார்கள். ஆனால் கடவுள் போதுமான அளவில் கருணை காட்டினால், அவர்கள் அதற்கு முன்பே மீட்கப்படுவார்கள்' என்றார்.

    இதன் அடிப்படையில் மீட்பு பணி தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் தொழிலாளர்களை மீட்பதற்கான 5 திட்டங்கள் தொடர்பாக அவர்கள் கலந்தாலோசித்தனர்.

    இதற்கிடையே சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் உறவினர்கள் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் சுரங்கப்பாதைக்கு வெளியே தொடர்ந்து வேதனையுடன் காத்திருக்கிறார்கள். அதில் சிலர் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தங்களது உறவினர்களிடம் அவ்வப்போது செல்போனில் பேசி வருகிறார்கள்.

    சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் முன்பு இருந்ததை விட தற்போது மிகவும் சோர்வாக இருப்பதாகவும், அவர்கள் உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

    • அதிக அளவு தண்ணீர் தேங்கி நின்றதால் போலீசார் பேரிகார்டு அமைத்து வாகனங்களை திருப்பிவிட்டனர்.
    • மேம்பால சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க கடந்த சில மாதங்களாக மழைநீர் செல்ல பணிகள் நடை பெற்றன.

    சென்னை:

    தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர்பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. ஆனால் பலத்த மழை இல்லாமல் இருந்தது.

    இந்நிலையில் இன்று அதிகாலை சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. பின்னர் சாரல் மழையாக நீடித்தது. வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், வண்ணாரப் பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர், கொளத்தூர், வில்லிவாக்கம், கோயம்பேடு, ஈக்காட்டுதாங்கல், மாடம்பாக்கம், கோவிலம்பாக்கம், புழல், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு பலத்த மழை கொட்டியது. பலத்த மழை காரணமாக ஓட்டேரி, பேரன்ஸ் சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதேபோல் பெரம்பூரில் உள்ள முரசொலிமாறன் மேம்பால சுரங்கப்பாதையில் அதிக அளவு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    அதிக அளவு தண்ணீர் தேங்கி நின்றதால் போலீசார் பேரிகார்டு அமைத்து வாகனங்களை திருப்பிவிட்டனர். ஆனால் பெரும்பாலானோர் தேங்கி தண்ணீரில் வாகனங்களை ஓட்டிச்சென்றதால் அவர்கள் வாகனங்கள் பழுதாகி நின்றன. இதையடுத்து அவர்கள் தண்ணீரில் வாகனங்களை தள்ளிக் கொண்டு சென்றனர்.

    இந்த மேம்பால சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க கடந்த சில மாதங்களாக மழைநீர் செல்ல பணிகள் நடை பெற்றன. ஆனால் இன்று சிறிது நேரம் பெய்த மழைக்கே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மழைநீர் செல்ல முறையான பணிகள் செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டினர்.

    இதேபோல் அயனாவரம் இ.எஸ்.ஐ. அரசு ஆஸ்பத்திரி முன்பு மழைநீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு கடந்த சில நாட்களாக பணிகள் நடந்து வருகின்றன. பலத்த மழை காரணமாக கழிவு நீர் முழுவதும் சாலையில் தேங்கி ஆறாக ஓடியது. மழைநீருடன் கலந்து சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு வெள்ளமாக காட்சி அளித்தது. அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றமும் வீசியது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் கடும் அவதி அடைந்தனர். ஆஸ்பத்திரி முன்பு உள்ள சாலையில் தண்ணீர் தேங்கியதால் நடந்து செல்லவே முடியாத நிலை ஏற்பட்டது.

    இதேபோல் திடீர் மழை காரணமாக மழைநீர் கால்வாய் மற்றும் மெட்ரோ ரெயில் பணிக்கு தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது. இத னால் பணிகள் பாதிக்கப்பட்டன.

    • திருப்பரங்குன்றத்தில் சுரங்கப்பாதை அமைக்க விரைவில் ஆய்வு நடத்தப்படும்.
    • சிந்தாமணி பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே திறந்தவெளியில் ரெயில்வே தண்டவாளம் இருந்தது. இதனை அந்தப்பகுதி மக்கள் கடந்து சென்று வந்தனர். இதனால் பஸ் நிலையத்தில் இருந்து ஹார்விபட்டிக்கு எளிதாக சென்று வர முடிந்தது. இந்த நிலையில் திறந்தவெளி ரெயில்வே தண்டவாள பகுதியில் அடிக்கடி விபத்து நடந்தது. இதையடுத்து ரெயில்வே நிர்வாகம் ரெயில்வே தண்டவாள பகுதியை மூடியது. இதனால் அந்தப்பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பாலத்தின் வழியாக செல்லும் நிலை ஏற்பட்டது.

    பொதுமக்களின் நலன் கருதி ஏற்கனவே இருந்தபடி ரெயில் நிலைய தண்டவாள பகுதி திறந்த வெளியாக இருக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

    இது தொடர்பாக திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவும், மத்திய ரெயில்வே மந்திரிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில் ரெயில்வே நிர்வாகம் தற்போது பதில் அளித்துள்ளது. அதில் திருப்பரங்குன்றம் பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஆய்வு பணிகள் விரைவில் மேற்கொள்ள உள்ளதாகவும், அருகில் தென்கால் கண்மாய் இருப்பதால் சுரங்கப்பாதை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசுடன் இணைந்து விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதேபோல் சிந்தாமணி பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கரை பகுதிகளில் கான்கிரீட் அமைக்க துரித நடவடிக்கை
    • 8 மீட்டர் அகலத்திற்கு 4 ½ மீட்டர் உயரத்திற்கு 80 அடி நீளத்தில் பள்ளம் தோண்டப்பட்டது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஊட்டு வாழ் மடத்தில் ரெயில்வே கிராசிங்கில் சுரங்கப்பாதை அமைப்ப தற்கு ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பகுதி மக்களுக்கு வசதியாக தற்காலிக பாதை அமைத்து கொடுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சுரங்கப்பாதை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் கட்டமாக தண்டவாளத்தின் கீழ் கர்டர் கருவி பொருத்தப்பட்டு கான்கிரீட் அமைக்கப்பட்டது. பின்னர் தண்டவாளத்தின் கீழே பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது.

    ஜே.சி.பி. எந்திரம் மூலமாக கடந்த 2 வாரங்களாக பள்ளம் தோண்டும் பணி நடந்தது. 8 மீட்டர் அகலத்திற்கு 4 ½ மீட்டர் உயரத்திற்கு 80 அடி நீளத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளம் தோண்டப்பட்டதையடுத்து தரையில் காங்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.

    இந்த பணியை துரிதமாக முடிக்க இரவு பகலாக பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்பொழுது சுரங்கப்பாதையில் கம்பி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இந்த பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் கம்பி கட்டும் பணி முடிவடைந்து சுரங்கப்பாதையின் கரை பகுதி காங்கிரீட் அமைக்கப்படும் என்று தெரிகிறது.

    சுரங்கப்பாதை பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருவதால் குறிப்பிட்ட காலத்திற்குள் பணியை முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணியில் முடிவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சுரங்கப்பாதை வரும் பட்சத்தில் அந்த பகுதியை சேர்ந்த பல்வேறு கிராம மக்களுக்கு இந்த சுரங்கப்பாதை பயனுள்ளதாக இருக்கும்.

    ஏற்கனவே பல மணி நேரம் காத்திருந்து ரெயில்வே தண்டவாளத்தை கடந்து பொதுமக்கள் வருவதால் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வந்தனர். இதை கருத்தில் கொண்டே தற்பொழுது சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. சுரங்கப்பாதை பணி முடிவுக்கு வரும் பட்சத்தில் பொதுமக்களுக்கு மிகவும் பேருதவியாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

    • இரவு பகலாக பணிகள் தீவிரம்
    • இரட்டை ரெயில் பாதையில் விரைவில் ரெயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில் ரெயில்வே கேட் உள்ளது. நாகர் நகரில் இருந்து இந்த கேட் வழியாக ஊட்டு வாழ்மடம், கருப்புக் கோட்டை, இலுப்பையடி போன்ற கிராமங்களுக்கு மக்கள் சென்று வருகின்ற னர்.

    இந்த கிராமங்களில் வசிக்கும் சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது பல தேவைகளுக்காக ரெயில்வே கேட்டை கடந்து தான் நாகர்கோவில் செல்ல வேண்டும். ஆனால் ரெயில் நிலையத்தின் அருகே கேட் இருப்பதால், ரெயில்கள் வருகை, என்ஜின் சோதனை ஓட்டம் போன்றவற்றுக்காக தினமும் 40 முறைக்கும் மேல் கேட் அடைத்து திறக்கப்படுகிறது. இதனால் 13 மணி நேரம் வரை கேட் மூடப்பட்டே இருக்கும்.

    எனவே இந்த வழியாக செல்லும் வாகனங்கள், கேட் முன்பு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் பள்ளி- கல்லூ ரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்வோர் அவதிக் குள்ளாகி வருகின்ற னர். இதனை கருத்தில் கொண்டு ரெயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. 8 மீட்டர் அகலத்திலும், 80 மீட்டர் நீளத்திலும், 4½ மீட்டர் உயரத்திலும் சுரங் கப்பாதை அமைக்க திட்ட மிடப்பட்டு பணிகள் கடந்த மே மாதம் தொடங்கியது.

    இதற்காக ரெயில்வே கேட் மூடப்பட்டது.4 மா தங்கள் வரை கேட் மூடப்ப டும் என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஊட்டுவாழ்மடம் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனை தொ டர்ந்து தற்காலிக ரெயில்வே கேட் அமைக்கப்பட்டது. தொடர்ந்து சுரங்கப்பாதை பணிகள் தொடங்கின. ரூ.4½ கோடி மதிப்பிலான இந்த பணிகள் இரவு-பகலாக முழு வேகத்தில் நடந்து வருகிறது. முதலில் சுரங்கப்பாதை அமைய உள்ள பகுதியில் ரெயில்வே தண்டவாளங்களின் கீழ் கர்டர் பாலம் அமைக்க ப்பட்டது. தொடர்ந்து தண்டவா ளத்தின் கீழ் பகுதியில் சுரங்கம் அமைப்ப தற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. ராட்சத எந்திரங்கள் கடந்த சில நாட்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மழையின் காரணமாக சில நாட்கள் பணிகள் பாதிக்கப்பட்டன.

    தோண்டப்பட்ட பள்ளத் தில் மழை நீர் தேங்கியது. அதனை ஊழியர்கள் மோட்டார் மூலம் வெளி யேற்றினர். அதன்பிறகு பணிகள் தொடர்ந்து நடை பெற்றன. இதன் காரணமாக சுரங்கத்தின் ஒரு பகுதியில் பணி முடிவு பெற்று சிமெண்ட் காங்கிரீட் பூச்சு பணி தொடங்கப்பட் டுள்ளது. அடுத்த கட்டமாக மற்றொரு பகுதியிலும் முழுமையாக பள்ளம் தோண்டப்பட்டு சிமெண்ட் காங்கிரீட் அமைக்கப்படும். அதன்பிறகு சுரங்கப்பாதை யின் இருபுறமும் சுவர் அமைக்கப்பட்டு, மேல் தளமும் பூசப்படும்.

    இந்தப் பணிகளை விரைந்து முடிக்க தீவிரமாக பணிகள் நடந்து வருவதால் விரைவில் சுரங்கப்பாதை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இரட்டை ரெயில் பாதை பணிகள் நாகர்கோ வில்-ஆரல்வாய்மொழி இடையே முடியும் தருவா யில் உள்ளது. தண்டவாள பணிகள் பெரும்பகுதி முடிவடைந்து விட்ட நிலையில், சிக்னல் கம்பங்கள் உள்ளிட்ட சில பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே இரட்டை ரெயில் பாதையில் விரைவில் ரெயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு இயக்கப்பட்டால் பயண நேரம் வெகுவாக குறையும்.

    • இங்கு 30,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.
    • மழைக்காலங்களில் மழை தண்ணீர் வெள்ளம் போல் தேங்கி காட்சி அளிக்கிறது.

    ஊத்துக்குளி:

    திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் ரோட்டில் பாளையக்காடு உள்ளது. இங்கிருந்து கோல்டன் நகர் செல்லும் பாதையில் ெரயில்வே பாலத்தில் இருந்து ஆர்.எஸ்.புரம், பண்டிட்நகர், எம்.ஜி.ஆர். காலனி, ஆர்.கே.ஜி. நகர், சத்யா காலனி, சூர்யா காலனி ,சஞ்சய் நகர், கருணாபுரி ஆகிய காலனிகள் உள்ளது. இவை அனைத்தும் கோல்டன்நகரை உள்ளடக்கிறது.

    ஆரம்ப காலத்தில் முட்புதர்கள் நிறைந்து தனி காடாக காட்சி அளித்தது. இந்த பகுதிக்குள் மக்கள் குடியேற மிகவும் அச்சப்பட்டனர். இன்று மக்கள் தொகை அதிகம் கொண்ட திருப்பூர் மாநகரில் இதுவும் ஒரு பகுதியாக உருவாகியுள்ளது. சுமார் 30,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் பாளையக்காட்டில் இருந்து கோல்டன் நகர் செல்லும் ரெயில்வே பாலத்தின் கீழ் மழைக்காலங்களில் மழை தண்ணீர் வெள்ளம் போல் தேங்கி காட்சி அளிக்கிறது. இதனால் நடந்து செல்பவர்கள் முதல் வாகனத்தில் செல்பவர்கள் வரை பாதையை கடக்க முடியாமல் நீந்தி செல்ல வேண்டிய அவலம் ஏற்படுகிறது. வயதானவர்கள் வீட்டில் முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமின்றி பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

    அவசரத் தேவைக்காக அழைக்கும் ஆம்புலன்ஸ் கோல்டன் நகருக்குள் வருவதில்லை. இதனால் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் கோல்டன் நகரில் உள்ள குடியிருப்புகளின் ரோடுகள் மிகவும் மேடு பள்ளங்களாக காணப்படுகின்றன. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இது குறித்து சம்பந்தப்ட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுமார் 1 லட்சம் பேர் திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
    • மாற்றுத்திறனாளிகள் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்ல சாய்தளம் அமைக்க வலியுறுத்தியும் அது சம்மந்தமான எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது.

    திருவள்ளூர் ரெயில் நிலையம் வழியாக தினந்தோறும் சென்னையில் இருந்து அரக்கோணம், திருத்தணி மற்றும் காட்பாடி வழியாக திருப்பதி, மும்பை, பெங்களூர் செல்லும் விரைவு ரெயில்களும், மின்சார புறநகர் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் என நாள் ஒன்றுக்கு 350-க்கும் மேற்பட்ட ரெயில்கள் கடந்தும் செல்கின்றன.

    மாவட்டத் தலைநகரான திருவள்ளூரில் இருந்து நாள்தோறும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், வியாபாரிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள் என சுமார் 1 லட்சம் பேர் திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    திருவள்ளூரில் இருந்து சென்னைக்கும், அரக்கோணத்திற்கும் செல்லும் ரெயில்களில் அதிகளவில் பயணிகள் செல்வதால் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த ரெயில் நிலையமாக இந்த திருவள்ளூர் ரெயில் நிலையம் உள்ளது.

    திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உள்ள 6 நடைமேடைகளில் இரு புறமும் மேம்பாலம் இருந்தும் ஒரு சிலரைத் தவிர ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர் என அனைத்து பொது மக்களும் ரெயில் தண்டவாளத்தை கடந்து தான் செல்கின்றனர். இதனால் அடிக்கடி ரெயில்கள் மோதி விபத்துக்களும் உயிரிழப்பும் ஏற்படுகிறது. மணவாளநகர் பகுதியில் இருந்து பெரிய குப்பம் செல்லும் பொது மக்களும் ரெயில் தண்டவாளங்களை கடந்து செல்கின்றனர்.

    இதனை தடுக்கும் வகையில் கடந்த 2019-ல் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை, மற்றும் எஸ்கலேட்டர் தானியங்கி நடை மேடை, முதியவர்கள் படிக்கட்டுகளில் ஏறி இறங்க முடியாததால் அவர்களின் வசதிக்காக லிப்ட் வசதி, ஆகியவை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

    2019 - ல் கொரோனா தொற்று காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் காலதாமதமாக தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. ஆனால் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில் ரெயில் பயணிகள் பாதுகாப்பு நடவடிக்கை, மழை நீர் ஒழுகுதல், மின் விளக்கு, ஒலி பெருக்கி வசதி, சி.சி.டிவி கேமரா வசதி, மின்சாரம் தடைபடும் நேரங்களில் பயன் படுத்தக் கூடிய தடை இல்லா மின்சார விளக்கு வசதி, நடைமேடை செல்லும் வழி காட்டி பலகைகள், மின்னணு தகவல் பலகை, டைல்ஸ் பதிக்கப்பட்ட நடந்து செல்லும் பாதை, நீர் வடிகால் அமைப்பு, குப்பை தொட்டிகள் போன்ற ஒரு சில பணிகள் நிறைவடையாததால் மக்கள் பயன்பாட்டிற்குகொண்டு வர தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    ரூ. 6 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட இந்த பணியானது 2 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ரெயில் பயணிகளின் அத்தியாவசிய பணிகள் முடிவடையாமல் இருப்பதால் ரெயில் பயணிகள் ஆபத்தான நிலையில் ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலையே மேலும் தொடர்கிறது.

    அதே நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்ல சாய்தளம் அமைக்க வலியுறுத்தியும் அது சம்மந்தமான எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது.

    இதனால் சாய்தளம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே பொது மக்கள் பயணிகள் ரெயில் தண்டவா ளத்தை ஆபத்தான முறையில் கடக்கும் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மீதமுள்ள சுரங்கப்பாதைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் முதிய வர்கள் படியில் ஏறி இறங்க முடியாத காரணத்தால் லிப்ட் வசதியும் ஏற்படுத்த வேண்டும் என்றும், எஸ்கலேட்டர் எனப்படும் தானியங்கி நடைமேடையை முதல் பிளாட்பாரத்திலும் அமைக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றி அப்பகுதி மக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
    • சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சாலை அமைக்கும் பணிக்காக மண் ஏற்றி வந்த லாரிகளை சிறைப்பிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    சென்னை, எண்ணூரில் இருந்து மாமல்லபுரம் வரை 6 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை மீஞ்சூரை அடுத்த வன்னிப்பாக்கம், பொன்னேரி அடுத்த நெடுவரம்பாக்கம், பெரியபாளையம், வெங்கல் கூட்டு ரோடு வழியாக செல்கிறது.

    இந்நிலையில் பொன்னேரி அருகே உள்ள நெடுவரம்பாக்கம் பகுதியில் 6 வழிச்சாலை பணிக்காக கிராமத்தில் உள்ள பிற பகுதிகளுக்குச் செல்லும் முக்கிய உள் வட்டச் சாலையில் வாகனங்களும், பொதுமக்களும் வந்து செல்ல முடியாத வகையில் நிரந்தர தடை ஏற்படுத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றி அப்பகுதி மக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

    இதைத்தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் அப்பகு தியில் முதலில் சுரங்கப்பாதை அமைத்து, அதன் பின்னர் 6 வழிச்சாலை பணிகளை தொடங்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் சுரங்கப்பாதை அமைக்காமல் சாலைப்பணி தொடர்ந்து நடந்து வந்தது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சாலை அமைக்கும் பணிக்காக மண் ஏற்றி வந்த லாரிகளை சிறைப்பி டித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலைப் பணியையும் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார், துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ.ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக கடிதம்மூலம் உறுதிமொழி அளித்தனர். இதன்பின்னர் கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த சாத்தியக்கூறுகள் உள்ளதாக திட்ட இயக்குநர் பேட்டியளித்துள்ளார்.
    • வைகையாற்றில் பாறை பகுதிகளில் மெட்ரோ வழித்தடம் அமைப்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றார்.

    மதுரை

    மதுரையில் மெட்ரோ ரெயில் சேவை அமைக்கப்படும் என சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. அதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் மதுரையில் நடைபெற்று வருகிறது. திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை மண் பரிசோதனை, வழித்தடம் போன்றவற்றை அதிகாரி கள் ஆய்வு செய்தனர்.

    மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக மதுரையில் திட்ட இயக்குநர் அர்ஜூனன் மற்றும் அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை மெட்ரோ ரெயிலுக்காக மண் பரிசோதனை செய்யப்பட்டு 90 சதவீத பணிகள் முடிந்து இறுதி அறிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டோம். திருமங்கலம் பஸ் நிலையம் அருகில், தோப்பூர், மதுரை ரெயில் நிலையம் அருகில் மற்றும் மாசி வீதிகளில் மெட்ரோ ரெயில் நிறுத்தம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி மாசி வீதிகளில் தேரோட்டம் பாதிக்கப்படாத வகையிலும், பழமையான கட்டிடங்கள் சேதமடையாத வகையிலும் மெட்ரோ ரெயில் நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை வைகை ஆறு முதல் கோரிப்பாளையம் வரை மெட்ரோ சுரங்கப்பாதை அமைப்பதற்காக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் தாமதமாக வாய்ப்புள்ளது.

    வைகையாற்றில் பாறை பகுதிகளில் மெட்ரோ வழித்தடம் அமைப்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை பொறுத்தவரை வைகை ஆற்றின் கீழ் வழித்தடம் அமைப்பது, மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் மெட்ரோ ரெயில் நிறுத்தம் அமைப்பது சவாலான பணிகளாக இருக்கும். மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகளவில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×