search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "constructed"

    • ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • விவசாய தொழிலாளர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் ரெயில் நிலையத்தில் 2 மார்க்கங்களிலும் ரெயில்கள் வந்து செல்கின்றன. இதனால் அடிக்கடி ரெயில்வே கேட் அடைக்கப்படுகிறது. இதன் காரணமாக தெற்கு பகுதியில் இருந்து வட பகுதிக்கும், வட பகுதி யில் இருந்து தெற்கு பகுதிக்கும் செல்லக்கூடிய வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

    இது மட்டுமின்றி ஆம்புலன்சு வாகனமும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்த பகுதி அரசியல் கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் சோழவந்தானில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் சுமார் 12 ஆண்டுகளாக ரெயில்வே மேம்பால பணிகள் நடந்தன.

    தற்போது இந்த பணிகள் நிறை வடையும் தறுவாயில் இருக்கிறது. விரைவில் ரெயில்வே மேம்பாலம் திறப்பு விழாவும் நடைபெற உள்ளது. ரெயில்வே மேம்பாலம் திறந்தவுடன் ரெயில்வே கேட் நிரந்தரமாக அடைக்கப்படுகிறது. இதனால் சைக்கிளில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் மேம்பாலத்தில் ஏறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே அரசு நடவடிக்கை எடுத்து சைக்கிளில் செல்பவர்கள், நடந்து செல்பவர்களுக்காக மதுரை அருகே பரவையில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதை போன்று சோழவந்தானிலும் அமைக்க வேண்டும் என்று விவசாய தொழிலாளர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    சோழவந்தான் ரெயில்வே கேட்டுக்கு வடபுறம் பெரும்பாலும் விவசாய பகுதியாகும். இங்கு விவசாய பணிக்கு செல்லக்கூடிய தொழிலா ளர்கள் நடந்து செல்லக் கூடியவர்கள். இவர்கள் செல்வதற்கு கண்டிப்பாக சுரங்கப்பாதை அவசியமாகும்.

    அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் சோழவந்தானில் சுரங்கப்பாதை அமைத்து நடந்து செல்லக் கூடியவர்களுக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    சிலைகளை பாதுகாக்க 242 கோவில்களில் பாதுகாப்பு அறைகள் கட்டப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி அளித்தது. #TamilnaduGovernment #HighCourt
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களில் இருந்து புராதன சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதில் சில சிலைகளை, சர்வதேச கடத்தல் கும்பலுடன் சேர்ந்து சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் கடத்தியதாக சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், சிலைக்கடத்தல் குறித்த அனைத்து வழக்குகளையும் விசாரிக்க ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் ஒரு தனிப்படையை உருவாக்கினார்.



    மேலும், கோவில்களில் உள்ள புராதன சாமி சிலைகளை பாதுகாக்க, பாதுகாப்பு அறைகளை கட்ட வேண்டும் என்பது உள்பட பல உத்தரவுகளை தமிழக அரசுக்கு நீதிபதி பிறப்பித்தார்.

    ஆனால், இந்த உத்தரவுகளை தமிழக அரசு அமல் படுத்தவில்லை. இதையடுத்து தமிழக அரசுக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய பதில் மனுவில், ‘தமிழகத்தில் உள்ள 242 கோவில்களில் வருகிற 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் பாதுகாப்பு அறைகள் ஆகம சாஸ்திரங்களுடன் கட்டி முடிக்கப்படும். இதற்காக முன்னோடி திட்டமாக பந்தநல்லூர் பசுபதீஸ் வரர் கோவிலில் பாதுகாப்பு அறை கட்ட தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலமாக பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற இடங் களில் பாதுகாப்பு அறைகள் அமைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட உள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.

    இதையடுத்து நீதிபதி, எந்த கோவில்களில் உடனடியாக பாதுகாப்பு அறைகளை அமைக்க வேண்டும் என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டார். மேலும் கோவில் சிலைகள் மாயமான வழக்கில், தொடர்புடைய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ற விவரத்தையும் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். விசாரணை 2 வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.  #TamilnaduGovernment #HighCourt #tamilnews

    ஆக்ராவில் சாலைப் பணி மேற்கொண்ட தனியார் நிறுவனம் நாயைக் கொன்று புதைத்ததாக அளித்த புகாரைத் தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. #RoadOverDog
    ஆக்ரா:

    உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் சாலை அமைக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் இந்த நிறுவனம் சார்பில் பரேபூர் சாலையில் வேலை நடந்தபோது, ஒரு நாயைக் கொன்று புதைத்து அதன் மீது சாலை அமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    போலீசில் இதுபற்றி  புகாரும் அளிக்கப்பட்டது. புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், மனுதாரர் குறிப்பிட்ட சாலைக்கு சென்று நாயின் உடலை தோண்டி எடுத்து அப்புறப்படுத்தினர்.

    மேலும், சாலைப் பணி மேற்கொண்ட தனியார் நிறுவனத்திற்கு பொதுப்பணித்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  சாலைப் பணிக்காக நாயை பலி கொடுத்தார்களா? அல்லது இறந்து கிடந்த நாயை அப்புறப்படுத்தாமல் அப்படியே சாலை போட்டார்களா? என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும். #RoadOverDog
    ×