search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ெரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ரூ.3.72 கோடி நிதி ஒதுக்கீடு
    X

    ெரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ரூ.3.72 கோடி நிதி ஒதுக்கீடு

    • சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக சுமார் ரூ. 3.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நேற்று முன்தினம் மல்லூர் பேரூராட்சிக்கு தென்னக ெரயில்வே கடிதம் அனுப்பி உள்ளது.
    • அதில், 2 மாதங்களில் சுரங்கப்பாதைக்கான பணி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர் ,வீரபாண்டி மெயின் ரோடு வேங்காம்பட்டி அருகே உள்ள ெரயில்வே கேட் பல்வேறு கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கக்கூடிய முக்கிய சாலையாக உள்ளது.

    இதன் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள், சரக்கு வாகனங்கள் வந்து

    செல்கின்றன. அதன் வழியாக ெரயில்வே மேம்பாலம் அமைக்கக்கோரி மல்லூர் பேரூராட்சியில் கடந்த 2011 -ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு அனுப்பப்பட்டது .

    மேலும் கடந்த 2021 -ம்

    ஆண்டு மல்லூர் பேரூ ராட்சி பொதுமக்கள் தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் வேங்காம்பட்டி ெரயில்வே கேட் முன்பு

    ெரயில் மறியல், ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தனர்.

    இதற்கிடையே பேரூராட்சி அலுவலகத்தில் அவசர கூட்டம் நடத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டு உதவி கோட்ட பொறியாளர் ஆத்தூர் துணைக்கோட்ட அலு வலகத்திற்கு தீர்மான நகல் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக சுமார் ரூ. 3.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நேற்று முன்தினம் மல்லூர் பேரூராட்சிக்கு தென்னக ெரயில்வே கடிதம் அனுப்பி உள்ளது. அதில், 2 மாதங்களில் சுரங்கப்பாதைக்கான பணி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் இன்று நடைபெறவிருந்த ெரயில் மறியல் போராட்டம் தற்கா

    லிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மல்லூர் பேரூராட்சி துணைத் தலைவர் வேங்கை

    அய்யனார் தெரி வித்துள்ளார். பாலம் அமைப்பதால் அந்த வழியாக போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதால் அந்த பகுதி மக்கள் மல்லூர் பேரூராட்சி துணைத் தலைவர் வேங்கை அய்யனாருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×