search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாற்காலி"

    • அலுவலக பணிகளை வீட்டில் இருந்து செய்வது பெண் ஊழியர்களுக்கு பல விதங்களிலும் பாதுகாப்பானது.
    • முதுகுவலி ஏற்படுத்தாத நாற்காலியை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

    பன்னாட்டு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் 'வீட்டில் இருந்து பணி செய்யும்' ஒர்க் ஃப்ரம் ஹோம் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கின்றன. மேலை நாடுகளில் பரவலாக இருந்த இந்த முறை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் பலவற்றிலும் தற்போது கடைபிடிக்கப்படுகிறது.

    இந்தியாவில் உள்ள இதர தனியார் நிறுவனங்களும் அவர்களது ஊழியர்களை வாரத்தின் குறிப்பிட்ட நாட்கள் வீட்டில் இருந்தபடியே பணிகளை மேற்கொள்ள தெரிவித்துள்ளன. அலுவலக உள்கட்டமைப்பு வசதிகள் அனைவரது வீடுகளிலும் இருக்காது என்பதால் சில மாற்றங்களை வீட்டில் செய்து கொள்வது அவசியம். அப்படிப்பட்ட மாற்றங்கள் பற்றி உள்கட்டமைப்பு வல்லுனர்கள் அளித்துள்ள குறிப்புகளை இங்கே காணலாம்.

    உள்கட்டமைப்பும், அலுவலக சூழலும் உள்ள இடத்தில் பணிபுரிவதற்கும், வீட்டின் ஒரு பகுதியை மாற்றியமைத்து பணி புரிவதற்கும் பல மாற்றங்களை, ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அலுவலக பணிகளை வீட்டில் இருந்து செய்வது பெண் ஊழியர்களுக்கு பல விதங்களிலும் பாதுகாப்பானது. வீட்டில் உள்ள ஒரு அறையை பணி புரிவதற்கேற்ப மாற்றம் செய்யும்போது லைப்ரரி, படிக்கும் அறை ஆகியவற்றுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம்.

    ஒரு படுக்கையறை கொண்ட வீடுகளில் ஒரு பகுதியை தடுப்பு அல்லது ஸ்கிரீன் அமைத்து தனிப்பட்ட இடமாக பயன்படுத்தலாம். அல்லது படுக்கை அறையின் ஒரு பகுதியை பயன்படுத்தலாம். வெளி நபர்கள் அடிக்கடி வந்து செல்லும் நிலையில் வரவேற்பறையின் ஒரு பகுதியை பார்டிஷன் மூலம் பிரித்து பயன்படுத்தலாம்.

    அறையின் கார்னர் பகுதி, மாடிப்படிகளின் கீழ்ப்புறம் அல்லது அறையின் ஒரு பக்க உள்ள சுவரை ஒட்டிய பகுதியை தேர்வு செய்து பணியிடமாக அமைக்கலாம். மேஜை, நாற்காலி, அலமாரி ஆகியவற்றுடன், மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை செய்யும் நிலையில் முதுகுவலி ஏற்படுத்தாத நாற்காலியையும் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

    பணிபுரியும் அறை ஜன்னலுக்கு அருகில், செடிகள் வளர்ந்துள்ள வெளிப்பகுதி, மரங்கள் உள்ள பகுதியாக இருந்தால் கண்களுக்கு இதமாக இருக்கும். அலுவலகங்களில் வைக்க இயலாத குடும்ப புகைப்படம், பரிசுகள் ஆகியவற்றை வீட்டில் பணிபுரியும் பகுதிகளில் வைக்க முடியும். பணிபுரிய அமரும் இடத்தில் எதிர்ப்புற சுவர் வெண்மை நிறத்தில் இருப்பதுடன், மின்விளக்கு வெளிச்சமும் பரவலாக இருப்பது நல்லது.

    பணி இடத்துக்கு அருகில் வெள்ளை மார்க்கர் போர்டு ஒன்றை சுவரில் மாட்டி வைத்து, தினமும் காலையில் அன்று செய்ய வேண்டிய பணிகள் பற்றிய குறிப்பினை எழுதி வைத்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால், கணினியில் ஸ்டிக்கி நோட்ஸ் பகுதியில் குறிப்புகளாக வைத்துக்கொண்டு பணிகளை செய்து வரலாம்.

    மனம் கவரும் நிறங்களில் லைட் செட்டிங் அமைப்பது கண்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். அறைகளில் இயற்கையான வெளிச்சம் வரும் அளவுக்கு மனதில் உற்சாகம் ஏற்படும். குறிப்பாக நல்ல வெளிச்சமும், காற்றும் வரக்கூடிய ஜன்னல் அமைந்துள்ள பகுதிகள் கணினி பணியின் களைப்பை அகற்ற உதவுகின்றன.

    பணி புரியும் அறை அல்லது இடங்களில் குழந்தைகள் குறுக்கீடு என்பதை தவிர்க்க இயலாது. வீட்டில் உள்ள குழந்தைகளுடன், பக்கத்து வீட்டு குழந்தைகளும் அந்த சிக்கலுக்கு துணையாக அமைந்து விடுவார்கள். படிப்பு சம்பந்தமான பயிற்சி முறைகளுக்கு மட்டுமே சில கட்டுப்பாடுகளுடன் அவர்களை அங்கே அனுமதிக்கலாம். வளர்ப்பு பிராணிகளான நாய் அல்லது பூனை போன்றவை அங்கே உலாவுவதை அனுமதிக்கக்கூடாது.

    • 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
    • 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் பஸ் நிலையத்தில் உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, கோவை, திருச்சி, போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில், உள்ளூர் பஸ்கள், வெளியூர் பஸ்கள் நிற்கும் இடங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் பயணிகள் அமரும் நாற்காலிகள், அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில்,அதில் சில நாற்காலிகள் உடைந்து, சாய்ந்து கிடக்கின்றன.இதனால் கூட்ட நேரங்களில் பயணிகள் அமர்வதற்கு சிரமமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே உடனடி நடவடிக்கை எடுத்து நாற்காலிகளை சீரமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 20 ஜோடி மேஜை, நாற்காலிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
    • சமூகவியலாளர் முருகன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மை துறையின் சார்பில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டத்தின் கீழ் வத்தல்மலை பெரியூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 20 ஜோடி மேஜை, நாற்காலிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    பிரதம மந்திரி விவசாய நீர்பாசனத் திட்டம் 2.0 திட்டத்தின் கீழ் வத்தல்மலை நீர்வடிப்பகுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் நுழைவு கட்ட பணிகள் திட்டத்தின் கீழ் வத்தல்மலை நீர்வடிப்பகுதிகுட்பட்ட பெரியூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1,39,000- மதிப்பிலான 20 ஜோடிகள் மேஜை, நாற்காலி வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தருமபுரி வேளாண்மை இணை இயக்குநர் உதவி இயக்கநர்சகாயராணி, .விஜயா, வேளாண்மை வேளாண்மை உதவி பொறியாளர் பத்மாவதி, பெரியூர் பள்ளி தலைமை ஆசிரியர் காமராஜ், அக்ரி அருண்ராஜ், சமூகவியலாளர் முருகன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான மேஜை, நாற்காலி வழங்கப்பட்டது.
    • மாணவர்களுக்கான மேஜை, நாற்காலி மற்றும் பீரோ ஆகியவற்றை வழங்கினார்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பாபநாசம் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டுநிதியில் இருந்து மாணவர்களுக்கான மேஜை நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    வடக்குமாங்குடி, சித்தர்காடு, அரசு நலப்பள்ளிகள், கொத்தங்குடி, சாலியமங்களம், அம்மாபேட்டை உள்பட 11 அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான மேஜை நாற்காலி வழங்கும் நிகழ்ச்சிக்கு அம்மாபேட்டை ஒன்றிய தலைவர் கலைச்செல்வன், துணைத்தலைவர் தங்கமணி, சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., மாணவர்களுக்கான மேஜை, நாற்காலி மற்றும் பீரோ ஆகியவற்றை வழங்கினார்.

    அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, வடக்குமாங்குடி ஊராட்சிமன்ற தலைவர் கலைச்செல்விகனகராஜ், மாவட்ட கவுன்சிலர் ராதிகா, பள்ளி தலைமை ஆசிரியர் சுசிலா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    அதேபோல் கொத்தங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மேசை நாற்காலி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் இரா.பழனி முன்னிலை வகித்தார் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீகலா அனைவரையும் வரவேற்றார்.

    ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., மாணவர்களுக்கான மேஜை நாற்காலிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் குமார், முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் பஞ்சாமி, ஆசிரியர் முருகன், ஊராட்சி செயலாளர் ஸ்ரீதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேஜை, நாற்காலி இருக்கைகள் உள்ளிட்ட தளவாட பொருட்களை மாணவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்.
    • செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அநாகரீகமாக பதிலளிப்பது கண்டிக்கத்தக்கது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மாபேட்டையில் உள்ள கும்பகோணம் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாபநாசம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தொடக்கப்பள்ளிக்கு மேசை நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியை விஜயலட்சுமி தலைமை வகித்தார்.

    வட்டார கல்வி அலுவலர் மதியழகன் முன்னிலை வகித்தார். இதில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரூ.3.29 லட்சம் மதிப்பிலான மேஜை, நாற்காலி இருக்கைகள் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளின் பயன்பாட்டிற்கு வழங்கி னார்.

    பின்னர் அவர் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    அரசியலில் நாகரீகம் அற்ற போக்கை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணா மலை தொடர்ந்து பின்பற்றி வருகிறார். கடலூரில் செய்தியா ளர்களை தரக்குறைவாக அநாகரீ கமாக பொதுவெளியில் பேசி உள்ளார்.

    செய்தியாளர்கள் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு நாகரீகமாக பதில் அளிக்காமல் அநாகரீகமாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. இவை அனைத்தையும் மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

    கூடிய விரைவில் அண்ணா மலைக்கும் பா.ஜ.க.வுக்கும் உரிய பதிலடி மக்கள் கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் எஸ். கே. முத்துச்செல்வன், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பாளர் பாதுஷா, மாவட்ட நிர்வாகிகள் ஹிபாயதுல்லா, மைதீன், அப்துல் ரஹ்மான், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அங்கன்வாடிக்கு மேஜை, பீரோ, நாற்காலிகள், தண்ணீர் டிரம், மற்றும் தேவையான சாமான்கள் சீர்வரிசையாக எடுத்து வரப்பட்டன.
    • இயற்கை உணவுகளான கேழ்வரகு கூழ், முளை கட்டிய பயிர், சுண்டல், கேழ்வரகு கொழுக்கட்டை அனைவருக்கும் கொடுக்கப்பட்டன.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுற்று சுவர், அங்கன்வாடி சீர்வரிசை திருவிழா மற்றும் மரம் நடுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வட்டார வளர்ச்சி) விஜயகுமார், (கிராம ஊராட்சி) சிவக்குமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கண்ணகி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக அங்கன்வா டிக்கு மேஜை, பீரோ, நாற்காலிகள், தண்ணீர் டிரம், மற்றும் தேவையான சாமான்கள் சீர்வரிசையாக எடுத்து மேழ தாள நாதஸ்வரத்துடன் எடுத்து செல்லப்பட்டன. நிகழ்வில் நம்பிக்கை தொண்டு நிறுவன இயக்குனர் சவுந்தரராஜன், திட்ட மேலாளர் விஜயா, பாலம் தொண்டுநிறுவனம் செந்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ராஜேஸ்வரி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராணி, ஓவர்சியர் மகேந்திரன், டெல்டா ரோட்டரி சங்கத் தலைவர் ரமேஷ், அங்கன்வாடி ஆசிரியை ராஜேஸ்வரி, மற்றும் துணைத் தலைவர் பாக்கியராஜ், செயலர் புவனேஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் முகம்மது யூசுப், மாவட்ட குழு உறுப்பினர் சுஜாதா, காவல் உதவி ஆய்வாளர் முருகவேல், கல்வியாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக கட்டிடம் கட்டி கொடுத்த ஒப்பந்தக்காரர் செந்தில், மற்றும் கட்டிடப்பணி செய்த மேஸ்த்திரி அய்யப்பன் மற்றும் வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் கட்டிமேடு ஊராட்சியின் சார்பாக ஊராட்சி மன்ற தலைவரால் கவுரவபடுத்தப்பட்டனர்.

    நிகழ்வில் இயற்கை உணவுகள் கேழ்வரகு கூழ், முளை கட்டிய பயிர் சுண்டல், கேழ்வரகு கொழுக்கட்டை அனைவருக்கும் கொடுக்க ப்பட்டன. இறுதியில் கல்வியாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    ×