search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Honorary"

    • அங்கன்வாடிக்கு மேஜை, பீரோ, நாற்காலிகள், தண்ணீர் டிரம், மற்றும் தேவையான சாமான்கள் சீர்வரிசையாக எடுத்து வரப்பட்டன.
    • இயற்கை உணவுகளான கேழ்வரகு கூழ், முளை கட்டிய பயிர், சுண்டல், கேழ்வரகு கொழுக்கட்டை அனைவருக்கும் கொடுக்கப்பட்டன.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுற்று சுவர், அங்கன்வாடி சீர்வரிசை திருவிழா மற்றும் மரம் நடுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வட்டார வளர்ச்சி) விஜயகுமார், (கிராம ஊராட்சி) சிவக்குமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கண்ணகி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக அங்கன்வா டிக்கு மேஜை, பீரோ, நாற்காலிகள், தண்ணீர் டிரம், மற்றும் தேவையான சாமான்கள் சீர்வரிசையாக எடுத்து மேழ தாள நாதஸ்வரத்துடன் எடுத்து செல்லப்பட்டன. நிகழ்வில் நம்பிக்கை தொண்டு நிறுவன இயக்குனர் சவுந்தரராஜன், திட்ட மேலாளர் விஜயா, பாலம் தொண்டுநிறுவனம் செந்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ராஜேஸ்வரி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராணி, ஓவர்சியர் மகேந்திரன், டெல்டா ரோட்டரி சங்கத் தலைவர் ரமேஷ், அங்கன்வாடி ஆசிரியை ராஜேஸ்வரி, மற்றும் துணைத் தலைவர் பாக்கியராஜ், செயலர் புவனேஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் முகம்மது யூசுப், மாவட்ட குழு உறுப்பினர் சுஜாதா, காவல் உதவி ஆய்வாளர் முருகவேல், கல்வியாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக கட்டிடம் கட்டி கொடுத்த ஒப்பந்தக்காரர் செந்தில், மற்றும் கட்டிடப்பணி செய்த மேஸ்த்திரி அய்யப்பன் மற்றும் வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் கட்டிமேடு ஊராட்சியின் சார்பாக ஊராட்சி மன்ற தலைவரால் கவுரவபடுத்தப்பட்டனர்.

    நிகழ்வில் இயற்கை உணவுகள் கேழ்வரகு கூழ், முளை கட்டிய பயிர் சுண்டல், கேழ்வரகு கொழுக்கட்டை அனைவருக்கும் கொடுக்க ப்பட்டன. இறுதியில் கல்வியாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    • பிரதம மந்திரி கிசான் கவுரவ நிதி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் நிலமுள்ள தகுதியுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ 2 ஆயிரம் வீதம், ஆண்டிற்கு ரூ. 6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் மற்றும் செலவினங்களை மேற்கொள்ள மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
    • வரும் 31-ம் தேதிக்குள் கைவிரல் பதிவேற்றம் செய்து புதுப்பித்தால் மட்டுமே விவசாயிகளுக்கு தொடர்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும்.

    பரமத்தி வேலூர்:

    கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    பிரதம மந்திரி கிசான் கவுரவ நிதி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் நிலமுள்ள தகுதியுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ 2 ஆயிரம் வீதம், ஆண்டிற்கு ரூ. 6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் மற்றும் செலவினங்களை மேற்கொள்ள மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்த தேதியின் அடிப்படையில் 11 தவணைகள் தொகை விடுவிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

    12-வது தவணை தொகை விடுவிப்பிற்கு ஆதார் விபரங்கள் சரிபார்ப்பு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பிரதம மந்திரி கிசான் கவுரவ ஊக்கத்தொகை பெறுகின்ற கபிலர்மலை வட்டார விவசாயிகள் அருகிலுள்ள இ- சேவை மையங்களையோ, தபால் அலுவலகங்களையோ அணுகி வரும் 31-ம் தேதிக்குள் ஆதார் அட்டை கொண்டு தங்களுடைய இருப்பை கைவிரல் ரேகையை பதிவு செய்வதன் வழியாக புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு வரும் 31-ம் தேதிக்குள் கைவிரல் பதிவேற்றம் செய்து புதுப்பித்தால் மட்டுமே விவசாயிகளுக்கு தொடர்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும். எனவே கபிலர்மலை வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் உடனடியாக ஆதார் அட்டை மூலம் புதுப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×