search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "opposition"

    • திருச்சி பாலக்கரையில் நில வணிகர்கள் நல சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
    • நில வணிக தரகர்களுக்கு பிடிக்கப்படும் 15 சதவீத ஜி.எஸ்.டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது

    திருச்சி:

    நில வணிகர்கள் நல சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி பாலக்கரையில் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அப்துல் நாசர் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் கருமாரி கருணாகரன் முன்னிலை வகித்தார். இளைஞரணி மாநில செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார்.

    மாநில பொதுச் செயலாளர் பால்பாண்டியன், மாநில பொருளாளர் எஸ்.ஏ.ரஹீம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் நிர்வாகிகள் மகாதேவன், எம்.பி.ராஜா, ரியாஸ் அகமது, மாநகர் மாவட்ட செயலாளர் யாசின், ஆரிப், ஏ.பி.ஆர் ரியல் எஸ்டேட் கதிர்ராசா, அன்சாரி, பயாஸ், ரியாஸ், சுப்ரீம் ரமேஷ், வெங்கடேசன்,கடலூர் அப்துல் கசன், காதர், பால யோகா உள்பட ஏராளமானநிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் புறநகர் மாவட்ட தலைவர் குண்டூர் கணேசன் நன்றி கூறினார். கூட்டத்தில் நில வணிக தரகர்களுக்கு பிடிக்கப்படும் 15 சதவீத ஜி.எஸ்.டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.அனைத்து உறுப்பினர்களுக்கும் இலவசமாக காப்பீட்டு வசதி செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தேசிய சின்னத்தை திறந்து வைக்கும் பெருமை எனக்கு கிடைத்தது.
    • கட்டிடப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பங்கு நம் நினைவில் இருக்கும்.

    தலைநகர் டெல்லியில் ரூ.971 கோடி செலவில் அதிநவீன வசதியுடன் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. வெண்கலத்தால் ஆன 6.5 மீ உயரம் உள்ள தேசிய சின்னத்தின் எடை சுமார் 9500 கிலோ ஆகும். இதை தாங்கும் வகையில் சுமார் 6500 கிலோ எடையுள்ள எஃகு தூண்கள் நான்கு புறங்களிலும் கட்டப்பட்டுள்ளன.

    இந்த தேசிய சின்னத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். முன்னதாக அங்கு நடைபெற்ற பூஜையிலும் அவர் கலந்து கொண்டார். 

    பாராளுமன்ற கட்டிடப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் பிரதமர் உரையாடினார்.இது தொடர்பாக பிரதமர் தனது டுவிட்டர் பதிவில், புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னத்தை திறந்து வைக்கும் பெருமை எனக்கு கிடைத்தது. கட்டிடப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் உரையாடினேன். அவர்களுடைய முயற்சிகள் கண்டு நாம் பெருமை அடைகிறோம். நமது நாட்டிற்கான அவர்களின் பங்கு என்றும் நம் நினைவில் இருக்கும் என்று கூறியுள்ளார்.

    இந்நிலையில், தேசிய சின்னத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தது தொடர்பாக, காங்கிரஸ்,மார்க்சிஸ்ட் மற்றும் ஏஐஎம்ஐஎம் போன்ற எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இது அரசியலமைப்பு மீறல் என்று அந்த கட்சிகள் கூறியுள்ளன. இதற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைமை செய்தித் தொடர்பாளரும் தேசிய ஊடகப் பொறுப்பாளருமான அனில் பலுனி தெரிவித்தார்.

    புதிய பாராளுமன்றத்திற்கு அடித்தளம் அமைத்தது மோடி என்றும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் வெளியிட்டது துரதிர்ஷ்டவசமானது என்றும், அவர் குறிப்பட்டார். கட்டுமான பணிகள் முடிந்ததும், கடடிடம், பாராளுமன்ற நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    திறப்பு விழாவை கேள்வி கேட்கும் எதிர்க்கட்சிகள், நிர்வாக செயல்முறையை புரிந்து கொள்ள வேண்டும் என்றும், பாராளுமன்றத்தின் வடிவமைப்பு முதல் நிதி மற்றும் கட்டுமான மேற்பார்வை வரை, முழு வேலைகளும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் வரம்பிற்கு உட்பட்டது என்றும் பலூனி குறிப்பிட்டார்.

    • டெல்டா மாவட்ட விவசாயிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் எதிா்பாா்க்கிறது.
    • தங்களுடைய கருத்துகளை தயக்கமின்றி அணை கட்டாத அளவில் எதிா்ப்புகளை பதிவு செய்ய வேண்டும்.

    நாமக்கல்:

    தமிழக விவசாயிகள் சங்க ( நாராயணசாமி நாயுடு) மாநிலத் தலைவா் வேலுசாமி நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மேகதாதுவில் அணை கட்டுவதற்கு காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதாக அண்மையில் திருச்சி வந்திருந்த ஆணையத்தின் தலைவா் தெரிவித்திருந்தாா். டெல்லியில் காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறும் நிலையில், இக் கூட்டத்தில் அணை கட்டுவதற்கு விவாதிக்கவோ, எவ்வித அனுமதியோ வழங்கக் கூடாது.

    மேகதாது அணை கட்டாமல் தடுப்பதற்கு உண்டான எதிா்ப்பு வாதங்களை தமிழக அரசு சாா்பில் தெரிவிக்க வேண்டும். மூத்த பொறியாளா்கள், அரசுத் துறை உயா் அதிகாரிகள், வழக்குரைஞா்கள் ஆகியோா் தங்களுடைய கருத்துகளை தயக்கமின்றி அணை கட்டாத அளவில் எதிா்ப்புகளை பதிவு செய்ய வேண்டும்.

    டெல்டா மாவட்ட விவசாயிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் எதிா்பாா்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரையில் உள்ள சுங்கவாரிய அலுவலகத்தை கோவைக்கு மாற்றக்கூடாது என கப்பலூர் தொழிலதிபா்கள் சங்கம் வலியுறுத்தினர்.
    • கோவைக்கு மாற்றினால் தென்மாவட்டங்களை சேர்ந்த சிறு மற்றும் குறுந்தொழில் அதிபர்கள் கோவைக்கு செல்லும் நிலை ஏற்படும்.

    திருமங்கலம்

    கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கத்தலைவர் ரகுநாதராஜா கூறியதாவது:-

    மத்திய கலால் மறைமுக வரிகள் சுங்கவாரிய தலைமை கமிஷனர் உத்தரவின் பேரில் சென்னை, மதுரை, கோவை, சேலம் மற்றும் திருச்சி ஆகிய 5 இடங்களில் மேல்முறையீட்டு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

    சிறு, குறுந்தொழில்கள் எதிர்கொள்ளும் ஜி.எஸ்.டி. கலால் சுங்கவரி சார்ந்த வழக்குகளை மேல்முறையீடு அலுவலகத்தில் தாக்கல்செய்து சிறு, குறு தொழிலாளர்கள் பயன் அடைந்து வருகிறோம். தற்போது மதுரை மண்டலத்தில் 250-க்கும் மேற்பட்ட ஜி.எஸ்.டி. குறித்த 1000-க்கும் மேற்பட்ட மத்திய கலால் சுங்கவரி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்தநிலையில் இந்த அலுவலகத்தை கோவைக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கோவைக்கு மாற்றினால் தென்மாவட்டங்களை சேர்ந்த சிறு மற்றும் குறுந்தொழில் அதிபர்கள் கோவைக்கு செல்லும் நிலை ஏற்படும். இதனால் நேரம், வீண்செலவுகள் மற்றும் அலைச்சல் ஏற்படும்.

    கொரோனா பின்னடைவுக்கு பின் தற்போது தொழிற்சா லைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் மத்திய கலால் கமிஷனர் அலுவலத்தில் செயல்படும் மண்டல மேல்முறையீடு அலுவலகத்தை உடனடியாக முறையான அதிகாரிகளை நியமித்து மதுரை மண்டல மேல்முறையீடு அலுவலகம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதால் சரத்பவார் கட்சியை இணைக்க திட்டமிட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு மோசமான தோல்வி ஏற்பட்டது.

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியால் பாராளு மன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிகமான இடங்களில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்கு கூட்டணி 91 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதில் காங்கிரசுக்கு வெறும் 52 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது.

    இதனால் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற குறைந்தபட்சம் 55 எம்.பி.க்களை பெற்றிருக்க வேண்டும்.

    எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற காங்கிரஸ் கட்சி புதிய முயற்சியில் இறங்கி உள்ளது.


    சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தங்களுடன் இணைத்தால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியும் என்று காங்கிரஸ் கருதுகிறது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    ராகுல்காந்தி ராஜினாமா செய்வதில் அடம்பிடிப்பதால் காந்தி குடும்பத்தில் இல்லாத ஒருவர் தலைவர் பதவிக்கு தேடப்பட்டு வருகிறார். இதற்கு ஏற்றவாறு சரத் பவாரின் கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டால் அவர் கட்சியின் தலைவராவதுடன் பாராளு மன்றத்திலும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும் என்ற யோசனை தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது’.


    இவ்வாறு அவர் கூறினார்.

    மராட்டியத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சரத்பவாருக்கு 4 எம்.பி.க்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது.

    தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இணைந்தால் காங்கிரசின் எண்ணிக்கை பாராளுமன்றத்தில் 57 ஆக அதிகரித்து எதிர்க் கட்சி அந்தஸ்து கிடைக்கும்.

    அத்துடன் சரத்பவாருக்கு காங்கிரசின் தலைவராகும் வாய்ப்பு கிடைக்கும் என கருதப்படுகிறது.

    காங்கிரசின் இந்த யோசனையை சரத்பவார் ஒப்புக்கொள்ள மாட்டார் என்றே கருதப்படுகிறது.

    இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூறும்போது, ‘மராட்டியத்தில் சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை நன்கு வளர்த்துள்ளார். இதனால் அவர் காங்கிரசுடன் தனது கட்சியை இணைப்பது கடினம்’ என்றனர்.

    பாராளுமன்றத்தில் நடிகை சுமலதா (கர்நாடகம்), நவ்னீத் ரவிரானா (மராட்டியம்), நம்பாகுமார் சரணியா (அசாம்), மோகன் பாய் டெல்கர் (தத்ரா நாகர் ஹவேலி) ஆகியோர் சுயேச்சை எம்.பி.க்களாக உள்ளனர்.

    இவர்களது ஆதரவை பெறவும் காங்கிரஸ் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற பயத்தில்தான், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்புவதாக அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று (வியாழக்கிழமை) எண்ணப்படுகின்றன. இதில் ஒப்புகைச்சீட்டுகளை முதலில் எண்ணிவிட்டு, வாக்குகளை பிறகு எண்ண வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து உள்ளன. இது தொடர்பாக 22 எதிர்க்கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் தேர்தல் கமிஷனை சந்தித்து வலியுறுத்தின.

    ஆனால் இதை நிராகரித்த தேர்தல் கமிஷன், வாக்குகளை முதலில் எண்ணிவிட்டு பின்னரே ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்படும் என திட்டவட்டமாக கூறிவிட்டது. இதில் தற்போது கடைப்பிடிக்கும் நடைமுறையே பின்பற்றப்படும் என கூறியுள்ளது.

    இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் இத்தகைய கோரிக்கையை பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா குறை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:-

    வாக்கு எண்ணும் நடை முறையை மாற்ற வேண்டும் என தேர்தல் கமிஷனில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து இருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்த விவகாரத்தில் எந்த முடிவானாலும், அதை அனைத்துக்கட்சிகளின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே எடுக்க வேண்டும்.

    6-வது கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எதிரான போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தொடங்கின. பின்னர். தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானதும், இந்த போராட்டங்கள் தீவிரமடைந்தன.

    எனவே தேர்தலில் தோல்வியடைவோம் என்ற பயத்தால்தான் வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்புகின்றனர். வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எதிராக போராடுவது மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். இதுபோன்ற ஜனநாயக நடைமுறைகள் மீது கேள்வி எழுப்புவதன் மூலம் உலக அரங்கில் நாட்டையும், அதன் ஜனநாயகத்தையும் அவமதிக்கின்றனர். அவர்கள் புகாரில் உண்மையில்லை, சுயநலமே அடங்கி இருக்கிறது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மையை எப்படி கேள்வி எழுப்ப முடியும்? மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெற்றி பெறவில்லையா?

    அப்படி வாக்குப்பதிவு எந்திரங்களை நம்பவில்லை என்றால், அந்த தேர்தல்களுக்கு பின்னர் நீங்கள் ஏன் அரசு அமைத்தீர்கள்? மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலமான தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால், அது தேர்தல் வெற்றி என்றும், தோல்வியடைந்தால் அதற்கு வாக்குப்பதிவு எந்திரங்கள்தான் காரணம் என்றும் கூற முடியுமா?

    இவ்வாறு அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதே கருத்தை மத்திய மந்திரியும், லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வானும் கூறியுள்ளார். அவர் கூறுகையில், ‘எதிர்க்கட்சிகள் தோல்வியடைவது உறுதியானால், அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதுதான் புகார் கூறுவார்கள் என நான் பல மாதங்களாக கூறி வருகிறேன். மின்னணு வாக்குப்பதிவு தொடர்பான வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டே 4 முறை விசாரித்து விட்டது. தோல்வியை மறைக்க அவர்கள் பல்வேறு போலி காரணங்களை கூறிவருகின்றனர்’ என தெரிவித்தார்.
    வடக்கு கோணம் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த உறவினர் மீது தாக்குதல் நடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    ராஜாக்கமங்கலம்:

    நாகர்கோவில் வடக்கு கோணம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசூர்யா (வயது 23). ஜெயசூர்யாவின் உறவு பெண் ஒருவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலித்தார். இதற்கு ஜெயசூர்யா எதிர்ப்பு தெரிவித்தார்.

    இந்த தகவல் அந்த வாலிபருக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபரும் அவரது நண்பர்கள் ரபீஸ், ரகு, சஞ்சு  உள்பட 6 பேர் சேர்ந்து வடக்கு கோணம் சென்று ஜெயசூர்யாவை தாக்கினர். இது பற்றி ஜெயசூர்யா, ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதில் ரபீஸ், ரகு, சஞ்சு உள்பட 6 பேர் சேர்ந்து தன்னை தாக்கி கொலை  மிரட்டல் விடுத்ததாக கூறியிருந்தார்.

    அதன் பேரில் ராஜாக்கமங்கலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜகோபால் விசாரணை நடத்தி 6 பேர் மீதும் வழக்குபதிவு செய்தார். இதில் ரகு, சஞ்சு இருவரும் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ஊத்துக்கோட்டை அருகே 6 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நடத்திய முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    ஊத்துக்கோட்டை:

    பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ. 3200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்துக்கு 6 வழி சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த சாலை கண்ணிகைப் பேர், பெரியபாளையம், தண்டலம், தும்பாக்கம், தொளவேடு, காக்கவாக்கம், பருத்திமேனிகுப்பம், பாலவாக்கம், சென்னங்காரணை, ஆலபாக்கம், பனபாக்கம், ஈன்றம்பாளையம், பேரண்டூர், மாம்பாக்கம், போந்தவாக்கம், சீதஞ்சேரி, வெங்களத்தூர், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை செல்கிறது.

    இந்த கிராமங்கள்வழியாக 6 வழி சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த அளவிடும் பணிகளில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சாலை பணியால் ஆயிரக்கனக்கான ஏக்கர் விவசாய விளை நிலங்கள், நூற்றுக்கனக்கான வீடுகள், கிணறுகள், பம்ப் செட்டுகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் 6 வழிச்சாலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.

    இந்தநிலையில் தொளவேடு, காக்கவாக்கம், பருத்திமேனிகுப்பம் ஆகிய கிராமங்களில் நிலம் அளவிட அதிகாரிகள் வந்தனர்.

    இதனை அறிந்த 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தொளவேடு கிராமத்தில் ஒன்று திரண்டு அதிகாரிகளை முற்றுகையிட்டனர். தங்கள் கிராமங்களின் வழியாக 6 வழி சாலை அமைக்க விடமாட்டோம் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    பின்னர் திடீரென அவர்கள் பாலவாக்கம்- தொளவேடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் நிலம் அளவிடும் பணியை நிறுத்தி விட்டு அங்கிருந்து சென்றனர்.

    கடந்த 8-ந் தேதி சென்னங்காரணை, ஆலபாக்கம் கிராமங்களில் அதிகாரிகள் இரவு நேரங்களில் அளவு கற்கள் நட்டியதை கண்டித்து கிராம மக்கள் ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகம் எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது. #tamilnews
    தமிழகத்திற்கு எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை தொடங்கி வைக்க வரும் பிரதமர் மோடிக்கு எதிர்கட்சிகள் கருப்புகொடி காட்டுவோம் என்று சொல்வது சரியல்ல என தமிழிசை தெரிவித்துள்ளார். #tamilisai #pmmodi #gajacyclone

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி சமீப காலமாக மட்டுமல்ல எப்போதுமே தமிழகத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர். இதை இதற்கு முன்பு 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கையும், தற்போதைய பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும்.

    பிரதமராக இருந்தபோது மன்மோகன்சிங் எத்தனை முறை தமிழகம் வந்துள்ளார். ஆனால் பிரதமர் மோடி ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்க வந்து படகுகளை கொடுத்தார். அதேபோன்று சென்னை ஆவடியில் ஆயுத தொழிற்சாலை கண்காட்சி நடந்ததை தொடங்கி வைத்தார்.

    ஆனால் அப்போது அவர் வந்தபோது எதிர்கட்சியினர் கருப்பு கொடி காட்டினார்கள். தமிழகம் ராணுவ ஆயுத தொழிற்சாலை உற்பத்தியில் சிறந்த இடம் என்பதனால் தான் 5 மாவட்டங்களில் அதை ஏற்படுத்த பிரதமர்மோடி அறிவித்துள்ளார். இதன்மூலம் புதிதாக 2 ½ லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

    பிரதமர் மோடி ஆட்சியில் இதுவரை ரூ.5 ½ லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதுபோன்று யாரும் செய்ததில்லை. தற்போது வருகிற 27-ந்தேதி மதுரையில் ரூ.1,300 கோடியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தொடங்கி வைக்கப்படுகிறது.

    எனவே பிரதமர் மோடி தமிழகத்தின் மீது எப்போதும் அக்கரை கொண்டவர் தான். கஜா புயல் பாதிப்பின்போது ஏன் அவர் வரவில்லை என மீண்டும் மீண்டும் தவறாக பொய் பிரச்சாரம் செய்யக்கூடாது. புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி உடனே முதலமைச்சரை தொடர்பு கொண்டு பேசினார்.


    தொடர்ந்து டுவிட்டரில் தனது வருத்தத்தினை பதிவு செய்தார். தமிழக பிரதிநிதிகளாக என்னையும், மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் என எங்களை அனுப்பி வைத்து தங்கி பணியாற்ற வைத்தார். ஆனால் மு.க.ஸ்டாலின் இது போன்று செய்தாரா?. எதிர் மறை பிரச்சாரம் எடுபடாது.

    பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரும் வகையில் தமிழகத்திலும் மிகப்பெரிய அடித்தளம் ஏற்படுத்த நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம். டெல்லி பொதுக்குழுவில் பேசிய பிரதமர் மோடி, நிலையான ஊழலற்ற ஆட்சி குறித்தும், நிலையற்ற ஆட்சி குறித்தும் தெளிவு படுத்தியுள்ளார். நிலையான ஊழலற்ற ஆட்சி மீண்டும் கொடுக்க பிரதமர் மோடி ஆட்சிக்கு வரவேண்டும்.

    இதற்காக பா.ஜனதா சிறப்பான அடித்தளத்தை அமைத்து வருகிறது. ஜனவரி 26-ந்தேதி ஒரு வாக்குச்சாவடி ஒரு நிர்வாகி என சுற்றுப்பயணம் செய்து தமிழகம் முழுவதும் உள்ள 66 வாக்குச்சாவடிகளிலும் சுற்றுப்பயணம் செய்கிறோம். பிப்ரவரி 1 முதல் 10-ந் தேதி வரை 5 வாக்குச்சாவடிக்கு ஒரு நிர்வாகி என்ற அளவில் சுற்றுப்பயணம் செய்து பணி செய்கிறோம்.

    தாமரை ஜோதி என்ற திட்டத்தில் பிரதமராக மோடி மீண்டும் வரவேண்டி வீட்டு முன்பு தாமரைக்கோலம், விளக்கு அமைத்து ஏற்றி வைக்கிறோம். தமிழகத்தில் பா.ஜனதா சிறப்பான அடித்தளத்தை அமைத்துள்ளது. பிரதமர்மோடி மதுரைக்கு வருவதையொட்டி 18-ந்தேதி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் பங்கேற்கிறார்.

    தொடர்ந்து 20-ந்தேதி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் திருச்சி வருகிறார். தமிழகத்திற்கு எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை தொடங்கி வைக்க வரும் பிரதமர் மோடிக்கு எதிர்கட்சிகள் கருப்புகொடி காட்டுவோம் என்பது சரியல்ல.

    கொடநாடு சம்பவம் குறித்து தமிழக முதலமைச்சர் மீதுள்ள குற்றச்சாட்டு குறித்து சட்ட ரீதியான விசாரணைக்கு பிறகு உண்மை தெரியும். பொய் குற்றச்சாட்டு சுமத்தி ஒரு ஆட்சியை கலங்கப்படுத்த முடியாது. நிலையற்ற தன்மையை ஏற்படுத்த முடியாது. மு.க.ஸ்டாலின் உண்மை என்கிறார். அது அவர் தரப்பு. அ.தி.மு.க.வினர் பொய் என்கின்றனர். இருவருமே இது தொடர்பாக தமிழக கவர்னரை சந்தித்துள்ளனர். அது அவர்கள் உரிமை. எது உண்மை என சட்ட ரீதியாக தீர்வு ஏற்படுத்தப்படும்.

    கஜா புயலுக்கு நிவாரண உதவி சரியாக வழங்கப்பபடாத நிலையில் பொங்கலுக்கு தமிழக அரசு ரூ.1,500 கோடி வரை ஒதுக்கி ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு கொடுத்ததை தவறு என கூற முடியாது. உதவி செய்வது நல்ல திட்டம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது திருச்சி மாவட்ட தலைவர் தங்க.ராஜையன் உள்பட பலர் உடனிருந்தனர். #tamilisai #pmmodi #gajacyclone

    வாசுதேவநல்லூர், சிவகிரி பகுதியில் விவசாய நிலங்களை அழித்து 4 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வயலில் கறுப்பு கொடிகளை நட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிவகிரி:

    திருமங்கலம் முதல் செங்கோட்டை வரை 147 கிலோ மீட்டர் தொலைவுக்கு நான்குவழிச்சாலை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் 1,863 ஏக்கர் நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்த முடிவு செய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் சிவகிரி, புளியங்குடி, வாசு தேவநல்லூர் பகுதியில் 69 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த சாலை அமைய உள்ளது. இதில் பெரும்பகுதி விவசாய நிலங்களாகும். தற்போதுள்ள திட்டப்படி 4 வழி சாலை அமைந்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஆயிரக்கணக்கான வாழை, தென்னை, மா, எலுமிச்சை மரங்கள் அழிக்கப்படும் நிலை உள்ளது.

    இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்கின்றனர் விவசாயிகள். இதை தவிர்த்து அருள்புத்தூர் முதல் பாம்பு கோவில்சந்தை வழியாக சாலை அமைந்தால் அதில் பெரும்பகுதி தரிசு நிலமாக இருக்கிறது.

    மேலும் இத்திட்டம் சில பெருநிறுவனங்கள், உயர்நிலை அரசியல் தலைவர்களின் லாபத்துக்காக கொண்டு வரப்படுகிறது. பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தாமல் நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை மேற்கொள்ளக்கூடாது என அப்பகுதி விவசாயிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    இந்த நிலையில் நேற்று சிவகிரி பகுதி விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு வழிசாலைக்காக அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைதுறை கற்களை அகற்றிய விவசாயிகள் அங்கு கறுப்பு கொடிகளை நட்டு எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்துக்கு வாசு தேவநல்லூர், சிவகிரி தாசில்தார்கள் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. #tamilnews
    கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக கோர்ட்டில் ரகசிய விசாரணை நடத்தக்கோரிய மனுவுக்கு பேராசிரியை நிர்மலாதேவி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. #Nirmaladevi #NirmaladeviLuredGirls #DevangarCollege
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. வழக்கை திறந்த நீதிமன்றத்தில் நடத்தக்கூடாது. ரகசியமாக விசாரணை நடத்த வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கருப்பசாமி, முருகன் தரப்பில் வழக்கை திறந்த நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என மனு செய்யப்பட்டது.

    இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி லியாகத் அலி முன்பு நேற்று நடைபெற்றது. வழக்கு விசாரணைக்காக நிர்மலாதேவி மற்றும் கருப்பசாமி, முருகன் ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.



    இந்த வழக்கில் ஆஜரான நிர்மலாதேவி, முருகன் தரப்பு வக்கீல்கள், கற்பழிப்பு வழக்குகள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் தொடர்பான வழக்குகளைத்தான் ரகசியமாக நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகள் ரகசியமாக நீதிமன்றத்தில் நடத்தப்பட வேண்டும் என்பது பொருந்தாது. இதற்கு பல தீர்ப்புகள் முன்னுதாரணமாக உள்ளன. ஆனால், அதற்குரிய ஆதாரங்களை கொண்டு வருவதற்கு காலஅவகாசம் வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டனர்.

    இதனையடுத்து நீதிபதி லியாகத் அலி, அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யுங்கள் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

    முன்னதாக கோர்ட்டுக்கு கருப்பசாமியை போலீசார் அழைத்து வந்தபோது, “பத்திரிகையில் வந்த செய்திகள் அனைத்தும் தவறானது. அதை யாரும் நம்ப வேண்டாம். இதை கோர்ட்டில் சட்டப்படி சந்திப்பேன்” என கத்தியபடி சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #Nirmaladevi #NirmaladeviLuredGirls #DevangarCollege

    பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. #admkmeeting
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஈழத்தமி ழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் சிங்க ராணுவத்திற்கு தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அரசு உதவியதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான தி.மு.க., காங்கிரஸ் கட்சியினரை போர்க்குற்றவாளியாக அறிவித்து விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. 

    கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசுகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது கடந்த பார்லிமெண்ட், சட்டசபை தேர்தல்களில் தனித்து நின்று வெற்றி பெற்றார். அதேபோல் வரும் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலில்களில் தி.மு.க. தனித்து நின்று போட்டியிட தயாரா? அதற்கு அந்த கட்சிக்கு திராணி உள்ளதா என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி சாவல் விட்டார்.

    அண்ணா தொழிற்சங்க பேரவை கன்வீனர் ஜக்கையன் எம்.எல்.ஏ. பேசுகையில், இலங்கையில் நடந்த போரில் ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க அப்போதைய காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி அரசு காரணமாக இருந்துள்ளது. இதனால் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான தி.மு.க., காங்கிரஸ் கட்சியினரை போர்க்குற்றவாளி அறிவித்து அவர்களை விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை வழங்கவேண்டும் என்றார். எம்.பி.க்கள் மருதராஜா, சந்திரகாசி, எம்.எல்.ஏ. தமிழ்ச் செல்வன் உட்பட பலர் பேசினர்.

    இதில் ஒன்றிய செயலாளர் கர்ணன், சிவப்பிரகாசம், கிருஷ்ணசாமி, சுரேஷ், பேரூர் செயலாளர்கள் வினோத், ரெங்கராஜ், செல்வராஜ், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் துரை, ராணி, பூவைசெழியன், லட்சுமி, மாவட்ட அணி செயலாளர்கள் ராஜாராம், சாகுல் அமீது, ராஜேஸ்வரி, வீரபாண்யன், ரமேஷ், முத்தமிழ்செல்வன், கூட்டுறவு வங்கி தலைவர் முகமது இக்பால், எசனை பன்னீர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். #admkmeeting
    ×