என் மலர்
நீங்கள் தேடியது "admk meeting"
- 8-ம் தேதி நடைபெறும் குடியரசுத் தலைவர், எதிர்க்கட்சி துணைத் தலைவர் தேர்வு உள்ளிட்டவை குறித்து விவாதம்.
- ஈ.பி.எஸ். பதவியேற்றபின் முதன்முறையாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத்தில், 18-ம் தேதி நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தல், எதிர்க்கட்சி துணைத் தலைவர் தேர்வு உள்ளிட்டவை குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் விவாதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இடைக்கால பொதுச்செயலாளராக ஈ.பி.எஸ். பதவியேற்றபின் முதன்முறையாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
நன்னிலம் வடக்கு தெருவில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நன்னிலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராம.குணசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் மனோகரன், ஒன்றிய பாசறை செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராணிசுவாதிகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பக்கிரிசாமி வரவேற்றார். நாகை கே.கோபால் எம்.பி., தலைமை பேச்சாளர் அறந்தை செல்வம் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளோம். உங்கள் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்துள்ளோம். என்னை எம்.எல்.ஏ.வாக உருவாக்கிய உங்களை மறக்கமாட்டேன். நீங்கள் என்றும் அ,தி.மு.க.வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இதில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சம்பத், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் சந்திரன், வடக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நன்னிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பு நன்றி கூறினார்.
சிவகங்கை நகர் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நகர் செயலாளர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. இளைஞரணி செயலாளர் ஜெயச்சந்திரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பின்பு ஜெயலலிதா தான் தமிழகத்தை சிறப்பாக வழி நடத்தினார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. இந்த தொகுதியில் பலமுறை எம்.பி.யாக இருந்த ப.சிதம்பரம் தொகுதிக்கு என்ன செய்தார். ஏதாவது திட்டங்களை கொண்டு வந்துள்ளாரா. சாமானிய மக்களால் அவரை சந்திக்க தான் முடியுமா.
இன்று (புதன்கிழமை) கிராமம் கிராமமாக சென்று மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறோம். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முருகானந்தம், சந்திரன், எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் கருணாகரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கோபி, மாணவரணி செயலாளர் என்.எம்.ராஜா, மருத்துவ அணி செயலாளர் கோட்டையன், முன்னாள் தலைவர் மானாகுடி சந்திரன், மகளிரணி பொருளாளர் கயல்விழி, எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் எறும்பகுடி ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முத்துபாண்டி நன்றி கூறினார்.
ஆரணி காமக்கூரில் நேற்றிரவு அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தூசி மோகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் அரையாளம் வேலு வரவேற்றார்.
வக்கீல் சங்கர் தலைமை தாங்கினார். அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார்.
கூட்டத்தில், பேச்சாளர் விழுப்புரம் செல்வராஜிடம் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ‘இது ஆன்மீக பூமி, நான் இந்து சமய அறநிலையத்துறையாக இருப்பதால் பக்தி பாடல் பாடுங்கள். பின்னர் பேச்சை தொடங்கலாம் என்றார்.
அமைச்சர் கேட்டுக்கொண்டதால், பேச்சாளர் செல்வராஜ் ‘மேல்மலையனூர் அங்காளியே’ என்ற அம்மன் பக்தி பாடலை இசையுடன் பாடினார். அப்போது, திரண்டிருந்த பெண் தொண்டர்களில் 15-க்கும் மேற்பட்டோர் தலைவிரி கோலத்துடன் சாமி ஆடினர்.
இதையடுத்து, தண்ணீர் கொடுத்து சாமி ஆடிய பெண்களை தொண்டர்கள் சமரசப்படுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக பொது கூட்டத்தில் பக்தி பாடல் - சாமி ஆடிய பெண்கள்#AIADMK | #AIADMKMeeting | #DevotionalSong | #VillupuramSelvarajpic.twitter.com/jjvy5G2p4x
— Thanthi TV (@ThanthiTV) October 26, 2018
அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி காஞ்சீபுரம் பஸ்நிலையம் அருகில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை 30 மாவட்டங்களில் சிறப்பாக நடத்தி காட்டினோம். மக்கள் கூட்டம் அலைமோதியதை பொறுக்க முடியாத எதிர் கட்சியினர் மக்களிடம் தவறான தகவல்களை பரப்பிகொண்டு வருகிறார்கள்.
வரும் 22-ந்தேதி கன்னியா குமரியிலும், வரும் 30-ந்தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா நிறைவு விழா நடக்க இருக்கிறது. அப்போது அ.தி.மு.க.வின் வலுவினை நாட்டுமக்களும், எதிர்கட்சியினரும் அறிந்துகொள்வார்கள்.
கண்ணுக்கு தெரியாத காற்றில் ஊழல் செய்யும் அளவிற்கு விஞ்ஞான மூளை படைத்தவர்கள் தி.மு.க.வினர்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்பார் என அக்கட்சியினர் கூறிவரும் நிலையில் அவர் தி.மு.க.வினரால் தாக்கப்பட்டவர்களை வீடு வீடாகச் சென்று ஆறுதல் கூறி வருகின்றார்,
தி.மு.க.வினர் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பில்லை கொடுக்காமல் அதன் உரிமையாளரையே அடிக்கின்றனர். வேலூரில் ஒரு செல்போன் கடையில் செல்போன் வாங்கிவிட்டு அவரையே அடிக்கின்றனர். ஒரு அழகு நிலையத்தில் தி.மு.க. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் உள்ளே சென்று ஒரு பெண்ணை அடித்து உதைக்கிறார். எதிர்கட்சியாக இருக்கும்போதே இந்த நிலை என்றால் ஆளும் கட்சியாக வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. அ.தி.மு.க.வில் மட்டும் தான் நேர்மை, பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது.
தி.மு.க. ஆட்சியில் எவ்வளவு ஊழல் நடந்தது என்று நாட்டு மக்களுக்கு தெரியும். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு ஆட்சி என்றால் அது தி.மு.க. ஆட்சிதான். அப்படிப்பட்டவர்கள் நம்மை விமர்சனம் செய்கிறார்கள்.
தி.மு.க.வில் தான் வாரிசு அரசியல் உள்ளது, அ.தி.மு.க. சாமானிய தொண்டர்களுக்கான கட்சி, இங்கு விசுவாசத்துடன் உழைப்பவர்கள் உயர் பதவிக்கு வருவார்கள். நாடாளுமன்ற தேர்தலில் தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் செயல்பட்டு அனைத்து தொகுதிகளிலும் அதிக அளவில் வெற்றியை ஏற்படுத்தி தரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் எடப்பாடி பழனிசாமிக்கு மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜா பாத் பா.கணேசன் வெள்ளியிலான விநாயகர் சிலை மற்றும் வெள்ளி வீரவாளினை பரிசாக வழங்கினார். #edappadipalaniswami
திருவள்ளுர் மேற்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் பொன்னேரி ஹரிஹரன் பஜாரில், மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது.
கிழக்கு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் முன்னிலை வகிக்கிறார். கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின், எம்.பி.க்.கள் வேணுகோபால், வெங்கடேஷ் பாபு, திருத்தணி அரி, எம்.எல்.ஏ.க்கள் நரசிம்மன், விஜயகுமார், எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட அம்மா பேரவை தலைவர் பரிமேழலகன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் பானுபிரசாத், பொதுக்குழு உறுப்பினர் பொன்னுத்துரை, சுமித்ராகுமார், சங்கர், செல்வகுமார், 11-வது வார்டு செயலாளர் வெற்றிவேல், ராமலிங்கம், உபயதுல்லா, செந்தில் குமார், சம்பத், சவுகத்அலி சலிம், நாகராஜ் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழகநிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.
திருப்பரங்குன்றம்:
மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன்செல்லப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அம்மாவின் நல்லாசியுடன், துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்ட மன்ற தொகுதியில் உள்ள 95, 96 ஆகிய வார்டு களின் பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் திருப்பரங்குன்றத்தில் உள்ள மரகதம் மகாலில் எனது தலைமையில் நடைபெறுகிறது
மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், பகுதி செயலாளர்கள் பன்னீர்செல்வம், முனி யாண்டி, பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய துணைச்செயலாளர் நிலை யூர் முருகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அம்மா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட் டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் ராஜூ ஆகியோர் ஆலோசனை வழங்குகின்றனர்.
நிகழச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் நீதிபதி, பெரியபுள்ளான் (எ) செல்வம், மாணிக்கம், சரவணன், நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் செயல்வீரர்களும், செயல்வீரங்கனைகளும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
பாலையம்பட்டி:
அருப்புக்கோட்டை தொகுதி அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் செம்பட்டியில் நடைபெற்றது. மாவட்ட பிரதிநிதி பொன்னழகு சின்னராசு தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய குழு தலைவர் யோகவாசுதேவன், நகர பேரவை செயலாளர் சக்திவேல், பொதுகுழு உறுப்பினர் வீரசுப்பிரமணி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பிரேமா முன்னிலை வகித்தனர்.
தலைமை கழக பேச்சாளர் பண்ணை கருப்பையா, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சங்கிலிச்சாமி வரவேற்றனர். தலைமை கழக பேச்சாளர்கள் செல்வராஜ், சம்ஸ்கனி பேசினர்.
பாலையம்பட்டி ஊராட்சி செயலாளர் குருசாமி, கிளை செயலாளர்கள் சந்திரன், பெருமாள், பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்ட ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் சங்கரலிங்கம். நகர செயலாளர் கண்ணன், சாத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தேவதுரை ஆகியோர் செய்திருந்தனர். செம்பட்டி கிளை செயலாளர் பொன்னம்பலம் நன்றி கூறினார்.