search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "admk meeting"

    • கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. ஆத்தூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.
    • கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கலந்து கொண்டு பேசினார்.

    ஆத்தூர்:

    திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. ஆத்தூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய வாக்கு ச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 உரிமைத் தொகை தருவதாக உறுதியளித்து விட்டு தற்போது தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என கூறி ஏமாற்றி வருகின்றனர்.

    அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு குடும்பத்துக்கு ரூ.7000 இருந்தால் மாத செலவை சமாளித்து விடலாம். ஆனால் தற்போது ரூ.1000 இருந்தாலும் பற்றாக்குறை யாக உள்ளது. 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியு ள்ளளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது மோசடியான ஏமாற்று வேலை. சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் உள்ளிட்ட கட்டண ங்களை பல மடங்கு உயர்த்தியுள்ளனர். இனால் தொழில் துறையினர் கடுமை யாக பாதிக்கப்பட்டு ள்ளனர். தாலிக்கு தங்கம், லேப்டாப் உள்ளிட்ட அ.தி.மு.க.வின் பல நல்ல திட்டங்களை தி.மு.க.வினர் நிறுத்தி விட்டனர்.

    மக்களை திறமையாக ஏமாற்றி மோசடி செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று நடத்தி வருகின்றனர். இது போன்ற அதிருப்தியை வாக்குகளாக சேகரிக்க அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் கவனமுடன் பணியாற்ற வேண்டும்.

    போலீஸ் அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்த ஒரு கட்சித் தலைவர் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து கொண்டே அண்ணாவை கொச்சைப்படுத்தி பேசும் அளவுக்கு ஆணவத்துடன் நடந்து வருகிறார். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போன்ற சிலர் மீடியா வெளிச்சத்தில் அரசியல் நடத்துகின்றனர்.

    கூட்டணி என்ற பெயரில் நம் தோளில் அமர்ந்து காதை கடிக்கின்ற வேலையை செய்தனர். தற்போது அவர்களை நாம் தூக்கி எறிந்து விட்டோம். இனி அ.தி.மு.க.வின் வெற்றிக்கு எந்த தடையும் இல்லை. அனைத்து மதங்களையும் அரவணை க்கும் இயக்கமாக அ.தி.மு.க. செயல்படும். சனாதனம் என்ற போர்வையில் இந்து மதத்தை தி.மு.க.வினர் எதிர்க்கின்றனர். தமிழ்நாடு இது வரை கண்டிராத மோசமான நிர்வாகத்தை நடத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசினார்.

    பழனி:

    திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் பழனி ஆர்.எப். ரோடு பகுதியில் நடைபெற்றது. பழனி நகர செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.வும், கிழக்கு மாவட்ட பொருளாளருமான வேணுகோபாலு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    மாவட்ட அவைத்தலைவர் குப்புச்சாமி, முன்னாள் எம்.பி. குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். முன்னதாக பழனி நகர அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனுக்கு செங்கோல் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் பேசியதாவது,

    அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த பா.ஜ.க. கூட்டணியில் இருந்த விலகியதை தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி குறித்து அனைவரிடமும் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டது. இறுதியில் பா.ஜ.க வேண்டவே வேண்டாம் என்ற கருத்தை கூறினர். அ.தி.மு.க. செல்வாக்கை பயன்படுத்தி தமிழகத்தில் வளர்ந்து வந்த பா.ஜ.க, அ.தி.மு.க.வையே அழிக்க நினைக்கிறது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்ற ஆசை இல்லை. அவர் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி அரசியல் செய்து வருகிறார்.

    கட்சிக்கு வந்து குறைந்த காலமே ஆன அவருக்கு முதல்வராக வேண்டும் என்ற பேராசை இருக்கிறது. "என் மண்' என அண்ணாமலை உரிமை கொண்டாட முடியாது. இந்த மண் தமிழ்நாட்டு மண். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க.வை முன்னிலைப்படுத்தி நடைபயணம் மேற்கொள்ளாமல் தமிழகத்தில் தன் பெயரை அனைவரும் சொல்ல வேண்டும் என்பதற்காக அண்ணாமலை நடைபயணம் செல்கிறார். முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவை விமர்சிக்க அண்ணாமலைக்கு எந்த தகுதியும் கிடையாது.

    அ.தி.மு.க தனது சுயமரியாதையை இழந்து, பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. நம் மக்களின், தொண்டர்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு மத்தியில் பிரதமராக மோடியும், தமிழகத்தில் முதல்-அமைச்சராக அண்ணாமலை இருக்க வேண்டும் என்று பா.ஜ.க பேராசை படுகிறது. ஆனால் பா.ஜ.க எனும் வேண்டாத சுமையை தூக்கி எறிந்ததால் அ.தி.மு.க சுதந்திரமாக இருக்கிறது.

    தமிழகத்தில் விலைவாசி உயர்வு, மது கலாச்சாரத்தால் தி.மு.க மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். 505 தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றிரண்டை மட்டும் நிறைவேற்றி விட்டு 100 சதவீதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக தி.மு.க மக்களை ஏமாற்றி வருகிறது.

    பெட்ரோல், சிலிண்டர் விலை உயர்வால் மத்திய அரசு மீதும், விலை வாசி உயர்வு காரணமாக தமிழகத்தில் தி.மு.க அரசு மீதும் மக்கள் கோபத்தில் உள்ளனர் இவ்வாறு அவர் பேசினார்.

    • எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆகஸ்டு 19ம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கக்கோரி வழக்கு.
    • அதிமுக தரப்பில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என்று வாதாடப்பட்டது.

    அதிமுக மாநாடு வரும் 20ம் தேதி அன்று மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதற்காக, அதிமுகவினர்

    இந்நிலையில், காரைக்குடி பகுதியை சேர்ந்த கணேச தேவர் என்பவர் அதிமுக மாநாட்டில் கலந்து கொள்ளும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆகஸ்டு 19ம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று மதுரை கிளை நீதிபதி நாகார்ஜூனா முன் வந்தது. அப்போது, அதிமுக தரப்பில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என்று வாதாடப்பட்டது.

    மேலும், 19ம் தேதி போராட்டம் நடத்த அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனையில் உள்ளதாக அரசு தரப்பு குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இந்நிலையில், இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி " 20ம் தேதிதான் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. 19ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை" என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும், மனுதாரர் காவல் துறையை அணுகி உரிய அனுமதி பெற்று 19ம் தேதி போராட்டம் நடத்தலாம் என நீதிபதி தெரிவித்தார்.

    • திண்டுக்கல்லில் அ.தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோனை கூட்டம் மாவட்ட கட்சி அலுவலக்தில் நடைபெற்றது.
    • இதில் முன்னாள் அமைச்சர் வளர்மதி கலந்துகொண்டு பேசினார்.

    திண்டுக்கல்:

    மதுரையில் அடுத்த மாதம் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு திண்டுக்கல்லில் அ.தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோனை கூட்டம் மாவட்ட கட்சி அலுவலக்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் வளர்மதி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிருக்கும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தனர். தற்போது தகுதியுள்ள மகளிருக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவித்து அதற்காக விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர்.

    இது பெரும்பாலான மகளிருக்கு கிடைக்காது. தி.மு.க.வின் ஏமாற்று வேலைதான் இந்த உரிமைத் தொகை திட்டம். தி.மு.க.வின் பொய் பிரசாரங்களை மகளிர் அணி நிர்வாகிகள் வீடு தோறும் சென்று பிரசாரம் செய்ய வேண்டும்.

    அடுத்த மாதம் மதுரையில் நடைபெற உள்ள கட்சியின் எழுச்சி மாநாட்டுக்கு குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமி, மேற்கு மாவட்ட செயலாளர் வளர்மதி ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் சி.சீனிவாசன், இரா.விசுவநாதன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

    தேன்மொழி எம்.எல்.ஏ., அமைப்புச் செயலாளர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பரமசிவம், பிரேம்குமார், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, முரளி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், வி.டி.ராஜன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணியை உறுதிப்படுத்தவும், பலப்படுத்தவும் பா. ஜனதா முயன்று வருகிறது.
    • கடந்த சட்டமன்ற தேர்தலில் 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க. குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்திலேயே தோற்றது.

    சென்னை:

    தமிழகத்தில் அ.தி.மு.க. தனித்தனி அணிகளாக பிரிந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சட்டபோராட்டம் நடத்தி கட்சியை தன்வசப்படுத்தினார். பெருவாரியான தொண்டர்கள் பலமும் அந்த தரப்புக்கே உள்ளது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தி.மு.க.வுக்கு எதிராக வலிமையான அணியாக இருக்க வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்காக அ.தி.மு.க.வை ஒன்றுபடுத்த பா.ஜனதா தலைவர்கள் இதுவரை எடுத்த எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை.

    இப்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணியை உறுதிப்படுத்தவும், பலப்படுத்தவும் பா. ஜனதா முயன்று வருகிறது.

    ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா எல்லோரையும் ஒருங்கிணைத்து கட்சியை பலப்படுத்த அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் அந்த 3 பேரையும் சேர்ப்பதில்லை என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.

    இதுவரை அ.தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட தயார் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறி வந்தார். ஆனால் எக்காரணத்தை கொண்டும் அவரை மட்டும் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்றார் எடப்பாடி பழனிசாமி.

    இப்போது அதையே ஓ.பன்னீர்செல்வம் திருப்பி சொல்கிறார். அதாவது எடப்பாடி பழனிசாமியை சேர்க்க மாட்டோம் என்று கூறி உள்ளார். அதே நேரம் மோடிதான் பிரதமர். பா.ஜனதா கூட்டணியில் இடம் பெறுவோம் என்றும் கூறி வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க. குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்திலேயே தோற்றது. அதற்கு காரணம் டி.டி.வி.தினகரன் கட்சி வாங்கிய ஓட்டுகள் தான். மேலும் தி.மு.க.-அ.தி.மு.க. இடையேயான வாக்குவித்தியாசம் ஒரு சதவீதம்தான். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்த வாக்கு வித்தியாசத்தை ஈடுகட்ட அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று பா.ஜனதா தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. பா.ஜனதாவின் இந்த நிபந்தனையை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.

    இந்த நிலையில் நாளை மறுநாள் (5-ந் தேதி) அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது, கூட்டணி அமைக்க பா.ஜனதா விதித்துள்ள நிபந்தனைகள் பற்றி விவாதிக்கப்படுகிறது.

    ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா இணைப்பு உள்ளிட்ட எந்த நிபந்தனைகளையும் பா.ஜனதா விதிக்கக்கூடாது. நிபந்தனையற்ற முறையில் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை என்று தீர்மானமும் நிறைவேற்றப்படுகிறது.

    • திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் மணிக்கூ ண்டில் நடைபெற்றது.

    கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி ஆகிய 3 பேரும் சேர்ந்து திருமங்கலம் பார்முலாவை தேர்தலில் முதன்முறையாக அறிமுகப்படுத்தினர். தற்போது அதைவிட பல மடங்கு தில்லுமுல்லு செய்து ஈேராடு கிழக்கு தேர்தலில் வாக்காளர்களை பட்டியில் ஆடு மாடுகளைப்போல அடைத்து வைத்து புதிய பார்முலாவை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனையின் பேரில் ஏற்படுத்தி உள்ளனர். பழைய தில்லுமுல்லு பார்முலாவை தி.மு.க.வே முறியடித்துள்ளது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் ஆகியோரை தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தில்லுமுல்லு செய்கின்றனர்.

    வார்டுக்கு 2 அமைச்சர்கள் வீதம் செயல்பட்டு வாட்ச் முதல் வீட்டுக்கு தேவையான பொருட்கள், தினசரி ரூ.1000 என கூலி நிர்ணயித்து வாக்கா ளர்களை விலைக்கு வாங்கி தேர்தல் விதிமுறை களை காற்றில் பறக்க விட்டனர். ஒரு ஓட்டுக்கு ரூ.25 ஆயிரம் வரை தி.மு.க. செலவழித்துள்ளது.

    238 பூத்துகள் உள்ள இடத்தில் 450 இடங்களில் முகாமிட்டு இவர்களின் தேர்தல் விதிமீறலில் கைவண்ணம் காட்டி உள்ளனர். தேர்தலில் சர்வாதிகார சூழ்நிலைக ளை உருவாக்கி தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. ஆளும் கட்சியாக இருந்தபோது 22 இடைத்தேர்தல்களில் 3 தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழந்தது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தபோதிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அதாவது, இந்த தேர்தலில் அ.தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்று சூழுரைத்த தி.மு.க.வினர் சூழ்ச்சியை முறியடித்து நமக்கு வா க்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

    மு.க.ஸ்டாலினை தனது ராஜதத்திரத்தால் எடப்பாடி பழனிசாமி வென்று விட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

    • கரூர்-ஈரோடு சாலையில் உள்ள வேலுச்சாமிபுரத்தில் இன்று மாலை 5 மணிக்கு கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
    • கண்டன பொதுக்கூட்டத்திற்கு அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமை தாங்குகிறார். 

    கரூர்:

    கரூர் மாவட்ட ஊராட்சி குழுவில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 6 வார்டுகளை தி.மு.க.வும், 6 வார்டுகளை அ.தி.மு.க.வும் கைப்பற்றி சம பலத்துடன் இருந்தன.

    மாவட்ட ஊராட்சி குழுத்தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.எஸ்.கண்ணதாசன் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் துணைத்தலைவர் பதவி தொடர்ந்து காலியாக இருந்தது.

    இந்த பதவிக்கான தேர்தல் பல்வேறு காரணங்களால் 6 முறை தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த மாதம் 19-ந்தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் துணைத்தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் திருவிகாவும், தி.மு.க. சார்பில் தேன்மொழியும் போட்டியிட திட்டமிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் 9-வது வார்டு கவுன்சிலர் திருவிகா சென்ற கார் மீது, தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தி, கவுன்சிலரை கடத்தி சென்றதாக புகார் எழுந்தது. தேர்தல் முடிந்த பின் அவர் விடுவிக்கப்பட்டார். தன்னை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டத்துக்கு புறம்பாக நடத்தப்பட்ட இந்த தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது என்றும் அ.தி.மு.க. வேட்பாளர் திருவிகா கூறினார்.

    இதற்கு மறுநாள் (20-ந்தேதி) கரூர் அருகே கோதூர் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் சிவராஜ் (45) என்பவரை கரூர்-ஈரோடு சாலையில் வேலுசாமிபுரம் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது காரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்து கடத்தி சென்றது. பின்னர் அவர் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் தி.மு.க.,வினரின் அராஜக செயல்களை கண்டித்து கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். 

    அதன்படி இன்று கண்டன பொதுக்கூட்டம் கரூர்-ஈரோடு சாலையில் உள்ள வேலுச்சாமிபுரத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கண்டன பொதுக்கூட்டத்திற்கு அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமை தாங்குகிறார். 

    இதில் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வரவேற்புரை ஆற்றுகிறார். முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, சின்னசாமி, கரூர் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். கூட்டத்தில் திரளானோர் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்து எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஆலோசனை.

    சென்னையில் இன்று மாலை 5 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் தற்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    தமிழக சட்டப்பேரவை நாளை கூடவுள்ள நிலையில், சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்து எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது.

    • நிலக்கோட்டையில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் சிறப்புரையாற்றி பேசினார்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளரும், நிலக்கோட்டை ஒன்றியக்குழு துணைத் தலைவருமான யாகப்பன, மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி ஆகியோர் தலைமையிலும், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ரெஜினா நாயகம், நிலக்கோட்டை நகர செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் திண்டுக்கல் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் சிறப்புரையாற்றி பேசினார்.

    கூட்டத்தில் ஒன்றிய அவைத்தலைவர் தவமணி, மாவட்ட கவுன்சிலர் ராஜா, ஊராட்சி மன்றத்தலைவர்கள் செல்வி ஜெயசீலன், முனிராஜா, பாண்டி, செல்வராஜ், மாவட்ட வக்கீல் பிரிவு துணைச் செயலாளர் புரட்சிமணி, நகர பொருளாளர் பூக்கடை சரவணன், பேரூராட்சி வார்டு கவுன்சிலர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பேரூர் நிர்வாகி அண்ணாமலை நன்றி கூறினார்.

    • ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர். திடலில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான சீனிவாசன் சிறப்புரையாற்றி பேசினார்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர். திடலில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான சீனிவாசன் சிறப்புரையாற்றி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    1972-ல் இருந்து நான் அ.தி.மு.க.வில் இருக்கிறேன். சாதாரண தொண்டனாக இருந்த நான் 50 ஆண்டு காலத்தை முடித்து பொதுச் செயலாளர் பதவியை தவிற என்னென்ன பதவிகள் உள்ளதோ அத்தனை பதவிகளையும் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரால் பெற்றுள்ளேன்.

    எங்களுக்கும், ஓ.பி.எஸ்.க்கும் வாய்க்கால் வரப்பு தகராறு கிடையாது. முதல்-அமைச்சராக இருப்பவர்தான் கட்சிக்கு தலைமையாக இருக்க வேண்டும் என்பது நியதி.

    அப்படி இருந்த போதும் முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படவில்லை. இதனால் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத்தலைமை விவகாரம் வெடிக்கத் தொடங்கியது.

    அப்போது பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிதான் பொதுச் செயலாளராக வரவ ேவண்டும் என ஏகமனதாக ெதரிவித்தனர். இதற்கு காரணம் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் ஸ்டாலினை பார்த்து சிரிப்பதும், அவரது மகன் ரவீந்திரநாத் நேரடியாக ஸ்டாலினை சந்தித்து ஆட்சியை பாராட்டி பேசுவதும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பிடிக்க வில்லை. அதனால்தான் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதின்றம் சென்ற ஓ.பி.எஸ். கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர். உண்மையிலேயே தொண்டர்கள் பலம் ஓ.பி.எஸ். பக்கம் இருக்குமானால் அவர் தனியாக கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்கட்டும்.

    ஸ்டாலினை பொறுத்தவரை அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த அனைத்து நலத்திட்டங்களையும் முடக்குவதிலேயே குறியாக உள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகிறார்.

    முதல் கையெழுத்தாக நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று கூறி தற்போது வரை மாணவர்கள் உயிரிழப்புக்கு காரணமாக உள்ளார். இந்த ஆட்சி அகற்றப்பட்டு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலரும் என்றார்.

    கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக்குமார், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் முருக்கோடை ராமர், முன்னாள் எம்.பி. பார்த்திபன், ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், ஒன்றிய துைணச் செயலாளர் அமரேசன், பேரூர் செயலாளர் அருண்மதி கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 8-ம் தேதி நடைபெறும் குடியரசுத் தலைவர், எதிர்க்கட்சி துணைத் தலைவர் தேர்வு உள்ளிட்டவை குறித்து விவாதம்.
    • ஈ.பி.எஸ். பதவியேற்றபின் முதன்முறையாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்.

    அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த கூட்டத்தில், 18-ம் தேதி நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தல், எதிர்க்கட்சி துணைத் தலைவர் தேர்வு உள்ளிட்டவை குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் விவாதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    இடைக்கால பொதுச்செயலாளராக ஈ.பி.எஸ். பதவியேற்றபின் முதன்முறையாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    நன்னிலம் வடக்கு தெருவில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நன்னிலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராம.குணசேகரன் தலைமை தாங்கினார்.
    நன்னிலம்:

    நன்னிலம் வடக்கு தெருவில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நன்னிலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராம.குணசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் மனோகரன், ஒன்றிய பாசறை செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராணிசுவாதிகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பக்கிரிசாமி வரவேற்றார். நாகை கே.கோபால் எம்.பி., தலைமை பேச்சாளர் அறந்தை செல்வம் ஆகியோர் பேசினர்.

    கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளோம். உங்கள் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்துள்ளோம். என்னை எம்.எல்.ஏ.வாக உருவாக்கிய உங்களை மறக்கமாட்டேன். நீங்கள் என்றும் அ,தி.மு.க.வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இதில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சம்பத், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் சந்திரன், வடக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நன்னிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பு நன்றி கூறினார்.
    ×