என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக ஆலோசனை கூட்டம்"

    • வரும் 17ம் தேதியன்று தென்காசி மாவட்டத்தில் சசிகலா சுற்றுப்பயணம் தொடங்க உள்ளார்.
    • மொகரம் மற்றும் ஆடி 1 காரணத்தினால் வரும் 17ம் தேதி நடக்க இருந்த கூட்டம் ஒத்திவைப்பு.

    அதிமுக பொதுசு்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

    அதன்படி, வரும் 17ம் தேதி தேனி, திண்டுக்கல், தென்காசி பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற இருந்தது.

    மொகரம் மற்றும் ஆடி 1 காரணத்தினால் வரும் 17ம் தேதி நடக்க இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதற்கிடையே, வரும் 17ம் தேதியன்று தென்காசி மாவட்டத்தில் சசிகலா சுற்றுப்பயணம் தொடங்க உள்ளார். இந்நிலையில், தென்காசி தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    அதிமுக ஆலோசனை கூட்டம் வரும் 17ம் தேதி நடைபெற இருந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • தி.மு.க. அமைச்சர்களுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் நெருக்கம் காட்டி வருவதாகவும் எனக்கு தகவல் கிடைத்து உள்ளது.
    • அ.தி.மு.க.வினருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் பல்வேறு கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

    இதில், 82 மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் தங்களது மாவட்டங்களில் இருந்தபடியே பங்கேற்றனர்.

    சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது பற்றியும், பூத் கமிட்டிகளை முழுமையாக அமைத்து கட்சியை பலப்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.

    அ.தி.மு.க.வினருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் பல்வேறு கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

    அப்போது அவர், "திருச்சி உள்பட பல மாவட்டங்களில் தி.மு.க. அமைச்சர்களுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் நெருக்கம் காட்டி வருவதாகவும் எனக்கு தகவல் கிடைத்து உள்ளது. அது போன்று செயல்படுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன். அவர்களை கட்சியில் இருந்து நீக்குவேன்" என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார்.

    இந்த நிலையில், அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், சென்னை மாவட்ட நிர்வாகிகளிடம் பேசியபோது அமைச்சர் சேகர்பாபுவை இ.பி.எஸ் புகழ்ந்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது குறித்து பெரம்பலூரில் நாளை அதிமுக ஆலோசனை கூட்டம் நடக்கிறது. கட்சியினர் திரண்டு வர ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. அழைப்பு விடுத்துள்ளார். #vaithilingammp
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் நாளை (28-ந்தேதி) மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், அமைப்பு செயலாளரும், எம்பியுமான வைத்திலிங்கம் கலந்துகொண்டு பேசுகிறார்.
    பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர். டி.ராமச்சந்திரன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வருகிற பாராளுமன்ற தேர்தல் பணி குறித்தும், பாராளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், சிறப்பு ஆலோசனை கூட்டம்  பெரம்பலூர் துறைமங்கலம் ஜே.கே. மகாலில் நாளை (28-ந் தேதி, சனிக்கிழமை) காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. 

    இதில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான வைத்திலிங்கம் கலந்து கொண்டு பேசுகிறார். எனவே இக்கூட்டத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள், அனைத்து நிலை பொறுப்பாளர்கள், கழக தொண்டர்கள் பெருந்திரளாக  கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். 

    இவ்வாறு ஆர்.டி.ராமச்சந் திரன் எம்.எல்.ஏ. அந்த அறிக்கையில் கூறியுள்ளார். #vaithilingammp
    ×