search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GST TAXES"

    • திருச்சி பாலக்கரையில் நில வணிகர்கள் நல சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
    • நில வணிக தரகர்களுக்கு பிடிக்கப்படும் 15 சதவீத ஜி.எஸ்.டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது

    திருச்சி:

    நில வணிகர்கள் நல சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி பாலக்கரையில் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அப்துல் நாசர் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் கருமாரி கருணாகரன் முன்னிலை வகித்தார். இளைஞரணி மாநில செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார்.

    மாநில பொதுச் செயலாளர் பால்பாண்டியன், மாநில பொருளாளர் எஸ்.ஏ.ரஹீம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் நிர்வாகிகள் மகாதேவன், எம்.பி.ராஜா, ரியாஸ் அகமது, மாநகர் மாவட்ட செயலாளர் யாசின், ஆரிப், ஏ.பி.ஆர் ரியல் எஸ்டேட் கதிர்ராசா, அன்சாரி, பயாஸ், ரியாஸ், சுப்ரீம் ரமேஷ், வெங்கடேசன்,கடலூர் அப்துல் கசன், காதர், பால யோகா உள்பட ஏராளமானநிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் புறநகர் மாவட்ட தலைவர் குண்டூர் கணேசன் நன்றி கூறினார். கூட்டத்தில் நில வணிக தரகர்களுக்கு பிடிக்கப்படும் 15 சதவீத ஜி.எஸ்.டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.அனைத்து உறுப்பினர்களுக்கும் இலவசமாக காப்பீட்டு வசதி செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×