search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கம்"

    • சமூக வலைதளங்களில் கட்சியின் உறுப்பினர் படிவம் என வதந்தி.
    • அதிகாரப்பூர் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகே விஜய் மக்களை சந்திப்பார் என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

    சமூக வலைதளங்களில் கட்சியின் உறுப்பினர் படிவம் என பரவி வந்த நிலையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதிகாரப்பூர் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும்.

    கட்சியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில் மட்டுமே அறிவிப்புகள் வெளியாகும்.

    யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் செய்திகளை கழகத் தோழர்களும், பொது மக்களும் நம்ப வேண்டாம்.

    கடந்த பிப்ரவரி 2ம் தேதி விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே பொதுமக்கள் சந்திப்பு குறித்து தெளிவாக விளக்கியுள்ளார்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நாதம் கீதம் புக் செல்லர்ஸ் முருகன் செயலாளராக தேர்வு.
    • நக்கீரன் பதிப்பகம் நக்கீரன் கோபால் துணைத் தலைவராகவும் (தமிழ்) தேர்வு.

    பபாசி என்று அழைக்கப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தேர்தல் இன்று மாலை மயிலாப்பூரில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

    இதில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவராக கவிதா பப்ளிகேஷன் சேது சொக்கலிங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    நாதம் கீதம் புக் செல்லர்ஸ் முருகன் செயலாளராகவும், ஏசியன் பப்ளிகேஷன்ஸ் டபுள்யுஜே சுரேஷ் பொருளாளராகவும், நக்கீரன் பதிப்பகம் நக்கீரன் கோபால் துணைத் தலைவராகவும் (தமிழ்), சர்வோதய இலக்கியப் பண்ணை புருஷோத்தமன் துணைத் தலைவராகவும் (ஆங்கிலம்), பழனியப்பா பிரதர்ஸ் மு.துரைமாணிக்கம் இணைச் செயலாளராகவும், புலம் லோகநாதன் துணை செயலாளராகவும் (தமிழ்), ஃபார்வேடு மார்க்கெட்டிங் சாதிக் பாட்சா துணை செயலாளராகவும் (ஆங்கிலம்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

    செயற்குழு உறுப்பினர்களாக (தமிழ் -நான்கு பேர்) ஜலால் (இஸ்லாமிக் சொசைட்டி), செந்தில்நாதன்(பரிசல்), அருணாசலம் (அருண் பதிப்பகம்), கண்ணப்பன் (கண்ணப்பன் பதிப்பகம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல், செயற்குழு உறுப்பினர்களாக (ஆங்கிலம்- நான்கு பேர்) பாலாஜி( பாலாஜி புக் செல்லர்ஸ்), சங்கர் (ஈஸ்வர் புக்ஸ்),

    ராம் குமார் ( ஆப்பிள் புக்ஸ்), அசோக் குமார் (மெட்ராஸ் புக் ஹவுஸ்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    நிரந்தர புத்தகக் காட்சி உறுப்பினர்களாக (தமிழ்- இரண்டு பேர்) ஹரிபிரசாத் (ஆண்டாள் திரிசக்தி), மோகன் ( மயிலின் பதிப்பகம்) மற்றும் நிரந்தர புத்தகக் காட்சி உறுப்பினர் (ஆங்கிலம்-இரண்டு பேர்) சிவகுமார் (சிவா புக்ஸ்), யுவராஜ் (புக் வேர்ல்டு) ஆகியோரும் தேர்வாகியுள்ளனர்.

    • ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடைகளுக்கான டியூட்டி டிராபேக்கை உயா்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
    • எங்களது கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு டிராபேக் சலுகையை உயா்த்தி வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது.

    திருப்பூர்,அக்.22-

    ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடைகளுக்கான டியூட்டி டிராபேக்கை உயா்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

    ஏற்றுமதி வா்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பல்வேறு நிலையில் ஏற்றுமதியாா்கள் செலுத்தும் வரியின் செலவை ஈடுகட்டும் வகையிலும் டியூட்டி டிராபேக் போன்ற சலுகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஏற்றுமதி வா்த்தகத்தில் சரக்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்ததும், ஏற்றுமதியான சரக்குக்கு சுங்கத் துறை டியூட்டி டிராபேக் வழங்கி வருகிறது. இந்நிலையில், பின்னலாடைகளுக்கான டியூட்டி டிராபேக்கை உயா்த்தி வழங்க வேண்டும் என்று திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவா் ஆ.சக்திவேல், தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் ஆகியோா் வலியுறுத்தி வந்தனா். இதனிடையே, ஏற்றுமதி செய்யப்படும் காட்டன் டி-சா்ட்டுகளுக்கு 2.1 சதவீதமாக இருந்த டியூட்டி டிராபேக்கை தற்போது 3.1 சதவீதமாகவும், செயற்கை நூலிழை ஆடை டி-சா்ட்டுகளுக்கு 3 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாகவும், குழந்தைகளுக்கான காட்டன் ஆடைகளுக்கு 2.1 சதவீதத்தில் இருந்து 2.8 சதவீதமாகவும் டிராபேக் சலுகையை உயா்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வரும் அக்டோபா் 30 -ந்தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது.

    இது குறித்து திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    எங்களது கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு டிராபேக் சலுகையை உயா்த்தி வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த அறிவிப்பு திருப்பூா் ஏற்றுமதியாளா்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது. இதன் மூலமாக சா்வதேச சந்தையில் நிலவும் போட்டிகளை சமாளிக்க திருப்பூா் ஏற்றுமதியாளா்களுக்கு வாய்ப்பாக அமையும்.

    இதற்கு மத்திய அமைச்சா் பியூஷ் கோயல், ஜவுளித் துறை செயலாளா் ரக்ஷனா சா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளோம் என்றாா்.

    • தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க மாநாடு நடந்தது.
    • சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் 8-வது மாவட்ட மாநாடு மதுரை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மனோகரன் தலைமை தாங்கினார். இதில் சாலை பணியாளர்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், சாலை பணியாளர்கள் அனைவருக்கும் சீருடை மற்றும் சலவை படி வழங்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்து படி வழங்க வேண்டும், இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நெடுஞ்சாலை துறையிலே பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மாநில நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு வலியுறுத்தப்பட்டது.

    தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில செயலாளர் சந்திரபோஸ், மாநில துணை தலைவர் ராஜமாணிக்கம், பொருளாளர் தமிழ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டுறவு சங்க தலைவர் அய்யப்பன் அவரை பணியில் சேர விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.
    • கூட்டுறவுத்துறை களப்பணியாளர்கள் 2 பேர் கூட்டுறவு சங்கத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

    கன்னியாகுமரி:

    மண்டைக்காடு புதூரை சேர்ந்தவர் ஜாண்சன். இவரது மனைவி ஜெய மலர்விழி (வயது 40).மாற்றுத்திறனாளி. இவர் மணவாளக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேசன் கடையில் விற்பனையாளராக வேலையில் சேர கடந்த 4 நாட்களுக்கு முன்பு பணி நியமன ஆணைப் பெற்று கூட்டுறவு சங்கத்திற்கு சென்றார்.அங்கு கூட்டுறவு சங்க தலைவர் அய்யப்பன் அவரை பணியில் சேர விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று காலை ஜெய மலர்விழி மீண்டும் அவர் மணவா ளக்குறிச்சி கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு சென்றார்.அப்போதும் அவரை பணியில் சேர விடவில்லை என கூறப்படுகிறது.இதனால் அவருக்கு ஆதரவாக அப்பகுதி மக்கள் கூட்டுறவு சங்கம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்த கல்குளம் தாசில்தார் கண்ணன், மண வாளக்குறிச்சி இன்ஸ் பெக்டர் பெருமாள் ஆகியோர் விரைந்து சென்று கூட்டுறவு சங்க தலைவர் அய்யப்பனிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    தாசில்தாரிடம் அய்யப்பன் கூறியதாவது:- இங்கு 2 பணியிடங்களில் ஒருவர் பணியில் சேர்ந்து விட்டார்.15 வருடம் முன் இங்கு வேலை பார்த்து நீண்ட நாள் விடுப்பில் சென்ற மற்றொருவர் தற்போது வேலை கேட்டு வழக்கு தொடர்ந்து தீர்ப்பு பெற்றுள்ளார்.இதற்கு கூட்டுறவு சங்கம் சார்பில் அப்பீல் செய்ய வேண்டியுள்ளது.அதனால் கூட்டுறவு சங்க குழுவினர்களுடன் கலந்தாலோசித்துதான் முடிவு செய்ய முடியும் என்றார்.இதனால் இந்த விவகாரத்தில் முடிவு ஏற்படவில்லை. இதற்கிடையே கூட்டுறவுத்துறை களப்பணியாளர்கள் 2 பேர் கூட்டுறவு சங்கத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சுமூக முடிவு ஏற்பட்டது.

    பேச்சுவார்த்தை முடிவில் மாலை 5.30 மணியளவில் ஜெய மலர்விழி பணியில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு ஆதரவாக கூட்டுறவு சங்கம் முன் திரண்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கட்டிட பொறியாளர் சங்கத்தின் சார்பில் கட்டிட அலங்கார பொருட்கள் கண்காட்சி வருகிற 7 ந்தேதி முதல் 10-ந்தேதி வரை காங்கேயம் ரோட்டில் உள்ள காயத்திரி மண்டபத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து, சங்க நிர்வாகிகள் சிவசுப்ரமணி, திருமலைசாமி, குணசேகரன், செந்தில்குமார், ஆலோசகர் ஹேமந்த்ராம் உட்பட பலர் கூறியதாவது:

    திருப்பூரில் முதன் முறையாக கட்டடங்களுக்கான எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியர் கட்டுமானப் பொருட்களுக்கான கண்காட்சி வரும், 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை, காங்கயம் ரோடு, காயத்ரி மஹாலில் நடக்கவுள்ளது.

    காலை 10 முதல் இரவு 8 மணி வரை இக்கண்காட்சியை பார்வையிடலாம். திருப்பூர் மேயர் தினேஷ்குமார், முன்னணி கட்டட கலை நிபுணர் பிரசன்னா பர்வதிகர் ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைக்கின்றனர். தேசிய வர்த்தக வாரிய உறுப்பினர் ராஜா சண்முகம், 'ஆர்ம்ஸ்ட்ராங்' பழனிசாமி, 'சக்தி பிலிம்ஸ்' சுப்ரமணியம் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர்.

    இந்த கண்காட்சியில் தமிழகம், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கட்டுமானப் பொருள், கட்டட உள் மற்றும் வெளி அலங்கார பொருள் விற்பனை நிறுவனங்களின் அரங்குகள் அமையவுள்ளது. ஸ்மார்ட் ஹோம், ஹோம் தியேட்டர், கிச்சன் வேர்ஸ், 'ஏசி', அலங்கார விளக்குகள், மார்பிள் மற்றும் டைல்ஸ், பசுமை தொழில் நுட்பம் சார்ந்த பொருட்கள், அனைத்து அறைகளுக்கான அலங்கார பொருட்கள், மெத்தைகள் என அரங்குகள் பல வகையிலும் அமைகிறது.

    விரிவான பார்க்கிங், குழந்தைகள் விளையாட்டு பகுதி, குலுக்கல் அதிர்ஷ்டப்பரிசு ஆகியவற்றுடன், தினமும் மாலை நேரம் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • குடியிருப்போர் நலச்சங்க கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கவுன்சிலர் நாகநாதன் வாக்குறுதி அளித்தார்.
    • நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி 67-வது வார்டு பகுதியில் உள்ள அனைத்து குடியி ருப்போர் நல சங்கத்தின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இப்பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட குடியிருப்பு நலச் சங்க தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் இந்த பகுதியில் உள்ள சாலைகள் சரியில்லாமல் குண்டும், குழியுமாக இருக்கிறது. மேலும் தெருவிளக்குகள் சரியாக எரியவில்லை. பாதாள சாக்கடை வசதி இணைப்பு அனைத்து வீடுகளுக்கும் சரியான முறையில் இல்லை. குடிநீர் தினசரி வழங்க வேண்டும். பொது சுகாதாரம் சரி இல்லை என வார்டு கவுன்சிலர் நாகநாதனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    மனுவை பெற்றுக் கொண்ட நாகநாதன் இன்னும் ஓரிரு மாதங்களில் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப் படும். அதற்கான முன் முயற்சிகளை செய்து வருகிறேன். பலமுறை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளரிடம் இதுகுறித்து எடுத்து கூறி இருக்கிறேன்.

    மேலும் மீண்டும் உங்கள் கோரிக்கை மனுவை காண்பித்து உடனடியாக உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற செய்வேன் என்று உறுதி கூறினார்.

    இதில் மாநகராட்சி மத்திய மண்டல உதவி வருவாய் ஆய்வாளர் பாலசுப்ரமணியம், உதவி பொறியாளர் ரகுநாதன், பில் கலெக்டர் அருண்குமார், தொழில் நுட்ப உதவி யாளர்கள் வடிவேல், அருணாசலம், மணிகண்டன், தீபன், முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நலிவடைந்த நிலையில் உள்ள ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தை மீட்டெடுக்க வேண்டும் என அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • பல ஊழியர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் 40 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான சங்கமாகும்.

    ஏ.கே.டி.பலராமராஜா தனது வீட்டையே சங்கத்திற்காக வழங்கி முதல் தலைவரானார். இந்த சங்கத்தில் திறமையான அதிகாரிகள், திறமையான தலைவர்கள் இருந்த காலத்தில் தினமும் 15 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்து ராஜ பாளையம் மக்களுக்கு விநியோகித்து வந்தனர்.

    இந்த சங்கம் விருதுநகர் மாவட்டத்திலேயே முதல் கூட்டுறவு சங்கமாக தேர்ந்தெடுத்து பல பரிசுகள் வென்றுள்ளது.

    திறமை வாய்ந்த அதிகாரி களுக்கு பின்னர் நிர்வாக திறமையின்மையின் காரணமாகவும், தலைவர்களாக வந்தவர்களும் முன்னேற்ற வேண்டும் என்ற நிலையில் இல்லாமல் அதிகமான ஊழியர்களை லஞ்சம் பெற்று பணி அமர்த்தினர்.

    பால் உற்பத்தி யாளர்களிடம் முறையாக பேச்சுவார்த்தை, போனஸ், கூலி உயர்வு வழங்காமல் இழுத்தடித்தது போன்ற காரணங்களால் தற்போது தினமும் 8 ஆயிரம் லிட்டருக்கும் குறைவாகவேப பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    குறிப்பாக தேவிபட்டினம் கிராமத்தில் இருந்து வரவேண்டிய தினமும் 3 ஆயிரம் லிட்டர் பால் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இவர்களது கூட்டுறவு சங்கத்தில் இருந்து பெறப்படும் பாலுக்கு சரியான விலை உயர்வு கொடுக்காமல் இருந்ததால் தனியார் பால் நிறுவனங்கள் தேவிபட்டினம் முழுவதும் அதிக விலைக்கு பால் வாங்கி வருவதால் 3 ஆயிரம் லிட்டர் பாலையும் கூட்டுறவு சங்கம் இழந்தது. தற்போது மாடு வளர்ப்ப தற்கான ஆர்வமும் மக்களி டையே இல்லாத நிலையில் பால் உற்பத்தி குறைந்து வருவதும் ஒரு காரணமாகும். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப பால் ஒரு முக்கியமான உணவு பொருளாக அமைந்து விட்டதால் தரம் வாய்ந்த கூட்டுறவு சங்க பாலுக்கு எப்பவுமே கிராக்கி இருந்து வருகிறது.

    இந்த நிலையில் பால் கிடைக்காத நிலையில் தனியார் பால் விற்பனை யாளர்களிடம் பொதுமக்கள் பால் வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு கடந்த பல வருட காலமாக தள்ளாடிய நிலையில் ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் இருந்து வருகிறது.

    தேவையில்லாத ஊழியர்கள் நியமனம், தேவையில்லாத செலவு, கூட்டுறவுத்துறை மேல திகாரிகளின் அலட்சியப் போக்கு போன்றவைகளால் நிர்வாக திறன் பாதிக்கப்பட்டு பல ஊழியர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

    அதிகாரிகள் நடவடிக்கை காரணமாக பல ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு படிப்படியாக பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர். அதிகாலை 5.30 மணிக்கு வர வேண்டிய பால் தற்போது 6 மணிக்கு மேல் 7 மணி வரை விநியோகம் செய்யும் நிலையில் இருந்து வருகிறது.

    இதன் காரணமாக மாதந்தோறும் முன்கூட்டியே பணம் செலுத்தி பால் அட்டை வாங்கும் நிலை தற்போது குறைந்து விட்டது. தனியார் விற்பனை யாளர்களிடம் பால் பெறும் நிலை இருந்து வருகிறது.

    எனவே புதிதாக பொறுப்பேற்றுள்ள பால் வளத்துறை அமைச்சர், ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க விஷயத்தில் கவனம் செலுத்தி நலிவடைந்த நிலையில் உள்ள சங்கத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், பால் உற்பத்தியாளர்கள் சங்க ஊழியர்களும் எதிர்பார்க்கின்றனர்.

    • சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றி வழங்க வேண்டும்,
    • இதற்கு பாலமுருகன் தலைமை தாங்கினார். பொருளாளர் கோபாலன் முன்னிலை வகித்தார்.

    கடலூர்:

    தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கம் சார்பில் ஜாக்டோ ஜியோ மற்றும் 3 அமைச்சர்கள் பேச்சு வார்த்தையில் ஏற்றுக் கொண்ட வாக்குறுதி களை நிறைவேற்ற வலியுறுத்தியும், அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்டவற்றை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றி வழங்க வேண்டும். அரசு துறையில் உள்ள காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு பாலமுருகன் தலைமை தாங்கினார். பொருளாளர் கோபாலன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட துணை தலைவர் (ஓய்வுதியர் சங்கம்) கருணாகரன், கூட்டு றவுத்துறை மாநில பொரு ளாளர் பாலகிருஷ்ணன் மாநிலத் துணைத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    • ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் காந்தி சிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 70 வயது ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத உயர்த்தி ஓய்வூதியம் வழங்க வேண்டும்,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் காந்தி சிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    70 வயது ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத உயர்த்தி ஓய்வூதியம் வழங்க வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை உடன் அமல் படுத்த வேண்டும், அகவிலைப்படி உயர்வை மத்தியஅரசு வழங்கிய நாளிலிருந்து வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வை உடன் வழங்க வேண்டும், ஓய்வூதியர் குடும்ப நல நிதியை ரூ.1 லட்சமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் நல்லாசிரியர் வரதராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கண்ணன் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் அம்பேத்கர் விருதாளர் பாண்டுரங்கன், மாவட்ட நிர்வாகிகள் மகாராஜன், வை.சிற்றரசு, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், ஜீவானந்தம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் பழனி, வட்டத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். ஜெயபாலு நன்றி கூறினார்.

    • அரியலூர் மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது
    • அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம் பகுதிகளில் பணிபுரியும் கோர்ட் ஊழியர்கள் ஒருங்கிணைந்த சங்கம்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம் பகுதிகளில் பணிபுரியும் கோர்ட் ஊழியர்கள் ஒருங்கிணைந்த அரியலூர் மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைமை குற்றவியல் நீதிமன்ற இரண்டாம் நிலை எழுத்தர் பொன்.சண்முகம் மாவட்ட தலைவராகவும், குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 1 அலுவலக உதவியாளர் பாஸ்கர் மாவட்ட செயலாளராகவும், முதன்மை சார்பு நீதிமன்ற இரண்டாம் நிலை எழுத்தர் நல்லதம்பி மாவட்ட பொருளாளராகவும், குடும்ப நல நீதிமன்றம் முதல் நிலை எழுத்தர் உதயகுமார், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அலுவலக உதவியாளர் வேல்முருகன், மகிளா கோர்ட் அலுவலக உதவியாளர் சுப்பிரமணியன், ஆகியோர்கள் மாவட்டத் துணைத் தலைவராகவும், மகிளா விரைவு நீதிமன்ற முதல் நிலை சுருக்கெழுத்து தட்டச்சர் தினேஷ், முதன்மை மாவட்ட நீதிமன்ற உதவியாளர் மதன்குமார், சார்பு நீதிமன்ற நகல் பரிசோதகர் பாஸ்கரன் ஆகியோர்கள் மாவட்ட துணைச் செயலாளராகவும், முதன்மை மாவட்ட நீதிமன்ற முதுநிலை கட்டளை பணியாளர் வடிவேல், ஜெயங்கொண்டம் சார்பு நீதிமன்ற இளநிலை கட்டளை பணியாளர் பாரத், ஆகியோர்கள் மாநில செயற்குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    • திருத்துறைப்பூண்டியில் நடைபெறும் கருத்தரங்கில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
    • 30-ம் தேதி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பேரவை நடத்த வேண்டும்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் அருகே ஆலங்குடியில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்க இடைக்கமிட்டி கூட்டம் ஒன்றிய தலைவர் மருதையன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ரவி பேசினார்.

    மாவட்ட துணை செயலாளர் ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் விளக்க உரையாற்றினர். முடிவில் மருதையன் கூட்டத்தை நிறைவு செய்தார்.

    கூட்டத்தில், வருகிற 26-ம் தேதி வெண்மணி தியாகிகள் நினைவு தினம் குறித்து திருத்துறைப்பூண்டியில் நடைபெறும் கருத்தரங்கில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும், வருகிற 30-ம் தேதி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பேரவை நடத்த வேண்டும்.

    மேலும் ஜனவரி 6-ம் தேதி நடைபெற இருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜி.எம். முருகையன் நினைவு தினத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×