search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old woman"

    • ெதாண்டி அருகே தலையில் கல்லை போட்டு மூதாட்டியை கொன்றது யார்? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    • தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள தளிர் மருங்கூர் பாகனவயல் பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலி(வயது75). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மகன், மகள்களுக்கு திருமணமாகிவிட்டது.

    இதன் காரணமாக ஜெயசீலி தனியாக வசித்து வந்தார். மேலும் பிழைப்புக்காக ஆடு வளர்ப்பு தொழிலை ஜெயசீலி செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று தனது வீட்டின் முன்பு ரத்தவெள்ளத்தில் ஜெயசீலி பிணமாக கிடந்தார். அவரை யாரோ மர்ம நபர்கள் தலையில் கல்லை போட்டும், கட்டையால் தாக்கியும் கொடுரமாக கொலை செய்துள்ளனர்.

    இதுகுறித்து அவரது மகள் கொடுத்த புகாரின் பேரில் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தர பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் கொலை நடந்த இடத்தை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அருண், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர்.

    தனியாக வசித்துவந்த மூதாட்டி ஜெயசீலியை கொன்றது யார்? எதற்காக கொலை செய்தனர்? முன் விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    முதற்கட்டமாக ஆடு திருட வந்த சிலர் ஜெயசீலியை கொன்றிருக்கலாம் என கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் கொலையாளிகள் யார்? என்று துப்புதுலக்க கொலை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    • சாலையோரம் 55 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • இறந்து கிடப்பவர் யார்? எந்த ஊர் ? என்ற விபரம் தெரியவில்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரெயில்வே குட்ஷெட் சாலை யோரம் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.

    ஆனால் இறந்து கிடப்பவர் யார்? எந்த ஊர் ? என்ற விபரம் தெரியவில்லை.

    இதையடுத்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அந்த மூதாட்டியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • மூதாட்டி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது பக்கத்து வீட்டில் 74 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வந்தார்.

    இவரது வீடு நேற்று முழுவதும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது அங்கு மூதாட்டி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.

    அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அந்த மூதாட்டியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மூதாட்டி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் மூதாட்டியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மூதாட்டி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மூதாட்டியின் வீடு அருகே வசித்து வந்த ராஜன், அவரை கற்பழித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் பழைய பஸ் நிலையத்தில் சுமார் 72 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் மயங்கி கிடந்தார்.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையத்தில் சுமார் 72 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் மயங்கி கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த சேலம் டவுன் போலீசார், அங்கு விரைந்து சென்று மயங்கி கிடந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்த மூதாட்டி கடந்த 27-ந்தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விசாரணையில், அவரது பெயர் ஜெயமணி என்பது தெரியவந்தது. ஆனால் ஊர் முகவரி, அவரது உறவினர்கள் பற்றிய விபரம் எதுவும் தெரியவில்லை.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த மூதாட்டி எந்த ஊரை சேர்ந்தவர்? விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவரை பற்றி தகவல் தெரிந்தால், உடனடியாக போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    • தவளங்குப்பம் அருகே புதுக்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேணுகோபால்
    • திருமண நிகழ்ச்சிக்காக வேணுகோபால் அதிகாலை 5 மணி அளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.

    புதுச்சேரி:

    தவளங்குப்பம் அருகே புதுக்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேணுகோபால்.  சலவை தொழிலாளி. இவரது மனைவி சாந்தா 73.  நேற்று அந்த கிராமத்தில் நடைபெற்ற திருமண முகூர்த்தக்கால் நலங்கு நிகழ்ச்சிக்காக வேணுகோபால் அதிகாலை 5 மணி அளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார். அப்போது வீட்டின் கதவை மூடாமல் சென்றதாக கூறப்படுகிறது.

    இதனை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சாந்தாவின் முகத்தில் துணியை மூடி அழுத்திக்கொண்டு கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி செயினை பறித்தனர்.

    சாந்தாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வருவதற்குள் அந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கொள்ளையர்கள் தாக்கியதில் லேசான காயம் அடைந்த சாந்தா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • 4 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
    • போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காட்டூர் ஊராட்சி, சின்ன காட்டுூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது80). இவரது மனைவி அருக்காணி (75). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று வெள்ளகோயில் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்துள்ளனர். காட்டூர் பிரிவு அருகே பஸ்சிலிருந்து இறங்கி இரண்டு பேரும் நடந்து சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் ஆறுமுகத்தை கொண்டு சென்று விடுவதாக பைக்கில் ஏற்றி சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றதும் அவரை அங்கே இறக்கி விட்டு விட்டு மீண்டும் அருக்காணி நடந்து வந்த இடத்திற்கு அருகே வந்துள்ளார். வந்த உடன் மின்னல் வேகத்தில் அவர் அணிந்திருந்த 4 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    இது குறித்து அருக்காணி கொடுத்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சின்ன காட்டூரை சேர்ந்த அருக்காணி என்பவரிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த பரமபட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவரது மகன் சந்திரசேகர் ( 37) , பல்லடம் கணபதிபாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது மகன் குமார் (38) என்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவர்களிடம் இருந்து 4 பவுன் தங்கநகை மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மின்னல் வேகத்தில் 4 சவரன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.
    • காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சின்ன காட்டூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது80). இவரது மனைவி அருக்காணி (75). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று வெள்ளகோவில் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்துள்ளனர்.

    காட்டூர் பிரிவு அருகே பஸ்ஸிலிருந்து இறங்கி இரண்டு பேரும் வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் ஆறுமுகத்தை வீட்டில் கொண்டு விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றதும் அவரை அங்கே இறக்கி விட்டு விட்டு, மீண்டும் அருக்காணி நடந்து வந்த இடத்திற்கு அருகே வந்துள்ளார். வந்த உடன் மின்னல் வேகத்தில் அவர் அணிந்திருந்த 4 சவரன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    இது குறித்து அருக்காணி கொடுத்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். உதவி செய்வது போல் நடித்து தங்க நகையை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுபோதையில் நுழைந்த ஒரு வாலிபர், மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்றார்.
    • மூதாட்டியை கொன்று விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

    திருப்பூர் :

    திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 55 வயது மூதாட்டி தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு மூதாட்டி வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் மதுபோதையில் நுழைந்த ஒரு வாலிபர், மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்றார். அவர் சத்தம் போடவே மூதாட்டியை கொன்று விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருமுருகன்பூண்டி போலீசார் விசாரித்தனர். விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தூத்துக்குடி ஸ்ரீவை குண்டத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 20) என்பது தெரியவந்தது. தோட்டத்து அருகே உள்ள தறிகுடோனில் லோடுமேனாக வேலை செய்து வந்த அவர் மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ரமேசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து சிறையில் அடைத்தனர்.

    • கணவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று காலமாகி விட்டார்.
    • 5 செண்ட் இடத்தை ரூ.60 லட்சத்திற்கு விற்பனை செய்து விட்டனர்

    திருப்பூர் :

    திருப்பூர் சூசையாபுரம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி. இவர் இன்று கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனக்குவயது 85. எனது கணவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று காலமாகி விட்டார். எனது பிள்ளைகள் ஆசைவார்த்தைகள் கூறி எனக்கு சொந்தமான வீடு, 5 செண்ட் இடத்தை ரூ.60 லட்சத்திற்கு விற்பனை செய்து விட்டனர். எனக்கு எந்த ஜீவனாம்சமும் தரவில்லை.

    எனவே முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து எனது சொத்தை மீட்டு தர வேண்டும் என கூறியுள்ளார். 

    • மூதாட்டியின் கழுத்தில் இருந்த 2 கிலோ எடையுள்ள தைராய்டு கட்டி அகற்றப்பட்டது.
    • இது போன்ற பிரச்சினைகள் புற்றுநோயாக கூட மாறிவிடும்.

    மதுரை

    சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பெண்ணின் வயிற்றில் இருந்த 2 கிலோ எடையுள்ள தைராய்டு கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இதுகுறித்து மதுரை நரிமேடு சரவணா மருத்துவமனை டாக்டர் சரவணன் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 63 வயது பெண் எங்களது மருத்துவ மனைக்கு வெளி நோயா ளியாக வந்தார். அவரை பரிசோதித்ததில் கழுத்துப் பகுதியில் பெரிய அளவி லான தைராய்டு கட்டி இருப்பது கண்டறி யப்பட்டது.

    சுமார் 30 வருடங்களுக்கு மேலாக அந்த கட்டி இருந்துள்ளது. உடனடியாக சரவணா மருத்துவ மனை அறுவை சிகிச்சை குழுவி னரின் உதவியுடன் அந்த கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இந்த கட்டி சுமார் 2 கிலோ எடையுள்ளதாக இருந்தது.

    கிராமப்புற மக்கள் அறியாமையால் ஆரம்ப கட்டத்திலேயே இது போன்ற கட்டிகளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இது போன்ற கட்டிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும். இதற்காக ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும். இல்லையெனில் இது போன்ற பிரச்சினைகள் புற்றுநோயாக கூட மாறிவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மூதாட்டி சேலையில் தீ பற்றிக்கொண்டது.
    • இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாராள் இறந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்துள்ள எலத்தூர் புதிய காலனி பகுதியை சேர்ந்தவர் மாராள் (74).

    தனியாக வசித்து வந்த மாராள் சம்பவத்தன்று இரவு வீட்டில் கொசுவர்த்தி பற்ற வைப்பதற்காக தீ குச்சியை உரசி உள்ளார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டி மாராள் சேலையில் தீ பற்றிக்கொண்டது.

    பின்னர் மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி மாராள் இறந்தார். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தென்னை பட்டை எடுத்தபோது அதிலி ரு ந்த தேன் பூச்சிகள் எதிர்பாராத விதமாக மூதாட்டி அம்மா சையை கடித்து விட்டது
    • இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னிமலை: 

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த வெள்ளோடு கவுண்டச்சி பாளையம் மாகாளி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அம்மாசை (83). இவரது கணவர் குழந்தைசாமி.

    இவர்களது மகள் ஆனந்தாயி. சம்பத் அன்று காலை அம்மாசை தனது மகளுடன் அதைப் பகுதியில் உள்ள புளிய மரத்து தோப்பு தோட்டத்திற்கு தென்னை பட்டை எடுப்பதற்காக சென்றார்.

    தென்னை பட்டை எடுத்தபோது அதிலி ரு ந்த தேன் பூச்சிகள் எதிர்பாராத விதமாக மூதாட்டி அம்மா சையை கடித்து விட்டது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்த மூதாட்டி அம்மாசை சிகிச்சை பலன் இன்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×