search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேனீ கடித்து"

    • தென்னை பட்டை எடுத்தபோது அதிலி ரு ந்த தேன் பூச்சிகள் எதிர்பாராத விதமாக மூதாட்டி அம்மா சையை கடித்து விட்டது
    • இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னிமலை: 

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த வெள்ளோடு கவுண்டச்சி பாளையம் மாகாளி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அம்மாசை (83). இவரது கணவர் குழந்தைசாமி.

    இவர்களது மகள் ஆனந்தாயி. சம்பத் அன்று காலை அம்மாசை தனது மகளுடன் அதைப் பகுதியில் உள்ள புளிய மரத்து தோப்பு தோட்டத்திற்கு தென்னை பட்டை எடுப்பதற்காக சென்றார்.

    தென்னை பட்டை எடுத்தபோது அதிலி ரு ந்த தேன் பூச்சிகள் எதிர்பாராத விதமாக மூதாட்டி அம்மா சையை கடித்து விட்டது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்த மூதாட்டி அம்மாசை சிகிச்சை பலன் இன்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×