search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டி சாவு"

    • டிரைவர் கைது
    • திருப்பதி கோவிலுக்கு சென்ற போது விபரீதம்

    வேலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் நல்லம்மாள் (வயது 65). இவர் அதே பகுதி யை சேர்ந்த உறவினர்கள் மற்றும் நபர்களுடன் திருப் பதி ஏழுமலையான் கோவி லுக்கு நேற்று பஸ்சில் சென்றார்.

    வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த வல்லம் டோல்கேட் அருகே சென்ற போது இயற்கை உபாதை களை கழிக்க பஸ்சை நிறுத்தி னர். நல்லம்மாள் பஸ்சில் இருந்து கீழே இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ் நல்லம் மாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நல்லம்மாள் உடலை மீட்டு பிரேத பரி சோதனை க்காக அடுக்கம்

    பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராணிப்பே ட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த நாரா யணபுரம் பகுதியைச் சேர்ந்த பஸ் டிரைவர் வேணுகோபால் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொன்னாளுக்கு திடீரென தலைசுற்ற ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.
    • பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பொன்னாள் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி இச்சிபாளையம் காலனியை சேர்ந்தவர் தங்கவேல் (65). இவரது தாயார் பொன்னாள் (86). இவர் தனது மகனின் வீட்டின் அருகிலேயே தனியாக வசித்து வருகிறார்.

    100 நாள் வேலைக்கு சென்று வரும் பொன்னாள் சம்ப வத்தன்று காலையில் வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். சுமார் 10 மணியளவில் பொன்னாளுக்கு திடீரென தலைசுற்ற ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.

    அருகில் இருந்தவர்கள் உடனடி யாக அவரை மீட்டு கொடுமுடி யில் உள்ள தனியார் மருத்துவம னையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பொன்னாள் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பூஜை செய்ய தீபம் ஏற்றியபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் கொணவட்டம், லால் பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி பாப்பம்மாள் (வயது 90). இவர் கடந்த 13-ந் தேதி பூஜை செய்வதற்காக வீட்டில் தீபம் ஏற்றிக்கொண்டு இருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக பாப்பம்மாள் சேலையில் தீ பிடித்து எரிய தொடங்கியது. தீ உடல் முழுவதும் பரவியதால் வலியால் அலறி துடித்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தினர் பாப்பமாளை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழனியப்பன். இவரது மனைவி அங்கம்மாள் (88). இவர் தோட்டத்திற்கு மாட்டை பிடித்துக்கொண்டு ஜேடர்பாளையத்தில் இருந்து கபிலர்மலை செல்லும் சாலையை கடக்க முயன்றுள்ளார்.
    • கபிலர்மலை நோக்கி வந்த இரு சக்கர வாகனம் ஒன்று அங்கம்மாள் மீது மோதியுள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள பெரியசோளிபாளையம் செம்மடை பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி அங்கம்மாள் (88). இவர் தோட்டத்திற்கு மாட்டை பிடித்துக்கொண்டு ஜேடர்பாளையத்தில் இருந்து கபிலர்மலை செல்லும் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

    அப்போது செம்மடையில் இருந்து கபிலர்மலை நோக்கி வந்த இரு சக்கர வாகனம் ஒன்று அங்கம்மாள் மீது மோதியுள்ளது. இதில் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் படுகாயமடைந்த அங்கம்மாளை அவ்வழியாக சென்றவர்கள் காப்பாற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இரு சக்கர வாகனத்தில் வந்த பெரியசோளிபாளையம் செம்மடை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (45) என்பவர் படுகாயமடைந்து கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தனர் புகாரின் பேரில் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய சக்திவேல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையை கடந்தபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    கர்நாடக மாநிலம், கோலாரை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி ஜெகதா (வயது 70). இவர் கொணவட்டத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தார்.

    நேற்று முன்தினம் காலை கொணவட்டம் அரசு போக்குவரத்து பணி மனை அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்தார்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஜெகதா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ஜெகதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெகதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கே.வி.குப்பத்தை சேர்ந்த லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • மாரியப்பன். இவரது மனைவி பெரியா (70), இவர் நேற்று முன்தினம் அங்குள்ள எடப்பாடி-குமார பாளையம் சாலையை மேற்கில் இருந்து கிழக்காக கடக்க முயன்றார்.
    • அதிவேகமாக வந்த ஆம்னி கார் மோதி தூக்கி வீசப்பட்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தேவூர் அருகே உள்ள பூலா கவுண்டம்பட்டி வடக்கு காடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி பெரியா (70), இவர் நேற்று முன்தினம் அங்குள்ள எடப்பாடி-குமார பாளையம் சாலையை மேற்கில் இருந்து கிழக்காக கடக்க முயன்றார்.

    கார் மோதி பலி

    அப்போது எடப்பாடியில் இருந்து குமாரபாளையம் நோக்கி அதிவேகமாக வந்த ஆம்னி கார் மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் அந்த கார் அதே வேகத்தில் நிற்காமல் சென்று விட்டது. இதனை பார்த்த அவரது மகன் கந்தசாமி அவரை மீட்டு ஈேராடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து தேவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள தென்னை மரத்தான் வளைவு இலகூத்தூர் பகுதியை சேர்ந்தவர் காவேரி ( 67), தொழிலாளியான இவர் தனக்கு சொந்த மான ஆட்டை விற்பதற்காக நேற்று முன்தினம் இருப்பாளி சந்தைக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். வன்னாங்குட்டை-இருப்பாளி ரோட்டில் சென்ற போது அவரது மகனின் மடியில் இருந்த ஆடு திடீரென துள்ளிதயதால் நிலை தடுமாறிய வாகனம் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட காவேரி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ேசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிக்சசை அளித்தும் பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார், இது குறித்து பூலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சம்பவத்தன்று சரஸ்வதியை விஷப்பூச்சி கடித்துள்ளது.
    • சிகிச்சை பெற்று வந்த சரஸ்வதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அழுகுளி பிள்ளையார் கோயில் துறையில் வசித்து வருபவர் கந்தசாமி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 66). இந்நிலையில் சம்பவத்தன்று சரஸ்வதியை விஷப்பூச்சி கடித்துள்ளது.

    இதையடுத்து உறவினர்கள் சரஸ்வதியை கோபி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சரஸ்வதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பின்னர் இதுகுறித்து சரஸ்வதியின் மகன் ரகுநாதன் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வலியால் அலறி துடித்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம்.

    இவரது மனைவி யசோதா (வயது 69). இவர் நேற்று முன்தினம் தங்களது விவசாய நிலத்தில் மாடுகளுக்கு புல் அறுத்துக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென அங்கிருந்த தேனீக்கள் யசோதாவை சூழ்ந்து கொண்டு உடல் முழுவதும் கொட்டியது.

    வலியால் அலறி துடித்த யசோதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி யசோதா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நன்செய் இடையாறு பகுதியில் 80 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் உணவு வாங்கி சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார்.
    • இந்நிலையில் அந்த மூதாட்டிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாறு பகுதியில் 80 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் உணவு வாங்கி சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த மூதாட்டிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் மூதாட்டியை பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி இறந்து விட்டார். இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

    • பாலாக்குறிச்சி என்ற பகுதியில் நடந்து சென்ற மூதாட்டி மீது பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள நொச்சிகுத்துப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி காளியம்மாள் (வயது75).இவர் இன்று காலை எரியோடு ரோட்டில் பாலாக்குறிச்சி என்ற பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் காளியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    விபத்தை ஏற்படுத்திய வாலிபரும் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு ஆஸ்ப த்திரி யில் சேர்க்கப்பட்டு ள்ளார். இது குறித்து வட மதுரை சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • எருமை ஒன்று திடீரென எதிரே வந்ததை அறிந்த ஓட்டுநர் காட்டெருமை மீது மோதாமல் இருக்க வாகனத்தை திடீரென திருப்பியதில் பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • வாகனத்தின் முன் பகுதியில் அமர்ந்து பயணம் செய்த பெருமாயி தலையில் பலத்த காயமடைந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் தாலுகாவிற்கு உட்பட்ட சித்தேரி நொச்சிக் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மனைவி பெருமாயி (64).

    இவர் கடந்த 21-ம் தேதியன்று நொச்சிகுட்டை கிராமத்தைச் சேர்ந்த தனது உறவினரான பெருமாள் என்பவருக்கு சொந்தமான வாகனத்தில் சுத்தியல் சந்தைக்கு சமையல் பொருட்கள் வாங்க சென்று கொண்டிருந்தார்.

    சந்தைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது சித்தேரியில் இருந்து நொச்சிக்கோட்டை செல்லும் சாலையில் காட்டு எருமை ஒன்று திடீரென எதிரே வந்ததை அறிந்த ஓட்டுநர் காட்டெருமை மீது மோதாமல் இருக்க வாகனத்தை திடீரென திருப்பியதில் பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் வாகனத்தின் முன் பகுதியில் அமர்ந்து பயணம் செய்த பெருமாயி தலையில் பலத்த காயமடைந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சித்தேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குப்பைகளை சேகரித்து தீயிட்டு கொளுத்திய போது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த புது வசூரை சேர்ந்தவர் பங்கஜவள்ளி (வயது 76). இவர் கடந்த 11-ந் தேதி வீட்டிற்கு முன்பாக இருந்த குப்பைகளை சேகரித்து தீயிட்டு கொளுத்தினார்.

    அப்போது எதிர்பாராத விதமாக பங்கஜ வள்ளியின் சேலையில் தீப்பிடித்து மளமளவென உடல் முழுவதும் பரவியது. இதனை பார்த்த அவரது உறவினர்கள் பங்கஜவள்ளி மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    பின்னர் சிகிச்சைக்காக பங்கஜ வள்ளி வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    தீவிர சிகிச்சை பெற்று வந்த பங்கஜவள்ளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×