search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாடு முட்டியதில் மூதாட்டி சாவு
    X

    மாடு முட்டியதில் மூதாட்டி சாவு

    • ராஜி (வயது 72) என்பவர் மீது மாடு மோதியதில் படுக்காயம் அடைந்தார்.
    • சிகிச்சைக்கான அனுமதித்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம். வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் ராமச்சந்திரம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எருது விடும் விழா நடைபெற்றது. அப்போது விழாவில் கிராமத்தில் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த ராஜி (வயது 72) என்பவர் மீது மாடு மோதியதில் படுக்காயம் அடைந்தார்.

    இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தின் அவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதித்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை ராஜி பரிதாபமாக உயிரிழந்தார். இதை அடுத்து அவரது மகன் ரவி வேப்பனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×