என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருவட்டார் அருகே தீயில் கருகிய மூதாட்டி சாவு
Byமாலை மலர்24 Dec 2022 9:01 AM GMT
- உடல்நலக் குறைவுடன் வீட்டில் இருந்த சுலோசனா, நேற்று மாலை வீட்டில் நடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த விளக்கை தட்டி விட்டுள்ளார்.
- திருவட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி ;
திருவட்டார் அருகே உள்ள குட்டக்குழி காலனி காட்டாத்துரை பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பன். இவரது மனைவி சுலோ சனா (வயது 65). உடல்நலக் குறைவுடன் வீட்டில் இருந்த சுலோசனா, நேற்று மாலை வீட்டில் நடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த விளக்கை தட்டி விட்டுள்ளார். அப்போது விளக்கு தீ, சுலோசனா உடையில் பிடித்தது. இதில் அவரும் தீயில் கருகினார். அவரது அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் உடல் கருகிய சுலோசனாவை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை சுலோசனா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் ராஜு புகாரின் பேரில், திருவட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X