என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரம் அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி சாவு
    X

    சிதம்பரம் அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி சாவு

    • சிதம்பரம் அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி பலியானார்.
    • அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனை க்காக அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே கண்டியாமேடு நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மனைவி நாகாயாள் (வயது 75) இந்நிலையில் இவர் இன்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிலிருந்து குளக்கரைக்கு சென்றுள்ளார். அப்போது குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் நீரில் மூழ்கி இறந்த மூதாட்டியின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் தாலுகா போலீசார் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் நீரில் மூழ்கி இறந்த மூதாட்டி உடலை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனை க்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×