search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Death of old woman"

    • மதுரை அருகே மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
    • திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மேலகோபுரதெரு சென்ட்ரல் சினிமா தியேட்டர் அருகில் மூதாட்டி ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ரோட்டில் விழுந்து கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மேல் மதுரை கிராம உதவியாளர் சமையன் திலகர்திடல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில், இறந்த மூதாட்டி தூத்துக்குடி காந்திநகரை சேர்ந்த கருப்பையா என்பவரின் மனைவி ஜீவா(வயது 60) என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மானாமதுரை அருகே கார் மோதி மூதாட்டி பலியானார்.
    • இறந்த முதியவர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அன்னவாசல் கால்வாய் பாலம் அருகே அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அய்யப்பன் மகன் அசின் என்பவர் ஓட்டிச்சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி பலியானார். தகவலறிந்து வந்த போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மானாமதுரை போலீஸ் நிலையத்தில் பெரும்பச்சேரி குரூப் கிராம நிர்வாக அதிகாரி செல்வி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பஸ் நிலை யத்தில் அடையாளம் தெரி யாத 80 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து திருப்பத்தூர் போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அதிகாரி விக்னேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிதம்பரம் அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி பலியானார்.
    • அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனை க்காக அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே கண்டியாமேடு நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மனைவி நாகாயாள் (வயது 75) இந்நிலையில் இவர் இன்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிலிருந்து குளக்கரைக்கு சென்றுள்ளார். அப்போது குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் நீரில் மூழ்கி இறந்த மூதாட்டியின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் தாலுகா போலீசார் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் நீரில் மூழ்கி இறந்த மூதாட்டி உடலை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனை க்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×