என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தலையில் கல்லை போட்டு மூதாட்டியை கொன்றது யார்?
- ெதாண்டி அருகே தலையில் கல்லை போட்டு மூதாட்டியை கொன்றது யார்? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள தளிர் மருங்கூர் பாகனவயல் பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலி(வயது75). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மகன், மகள்களுக்கு திருமணமாகிவிட்டது.
இதன் காரணமாக ஜெயசீலி தனியாக வசித்து வந்தார். மேலும் பிழைப்புக்காக ஆடு வளர்ப்பு தொழிலை ஜெயசீலி செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று தனது வீட்டின் முன்பு ரத்தவெள்ளத்தில் ஜெயசீலி பிணமாக கிடந்தார். அவரை யாரோ மர்ம நபர்கள் தலையில் கல்லை போட்டும், கட்டையால் தாக்கியும் கொடுரமாக கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து அவரது மகள் கொடுத்த புகாரின் பேரில் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தர பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் கொலை நடந்த இடத்தை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அருண், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர்.
தனியாக வசித்துவந்த மூதாட்டி ஜெயசீலியை கொன்றது யார்? எதற்காக கொலை செய்தனர்? முன் விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
முதற்கட்டமாக ஆடு திருட வந்த சிலர் ஜெயசீலியை கொன்றிருக்கலாம் என கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் கொலையாளிகள் யார்? என்று துப்புதுலக்க கொலை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்