search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மூதாட்டியிடம் செயின் பறிப்பு
    X

    கோப்பு படம்

    மூதாட்டியிடம் செயின் பறிப்பு

    • தவளங்குப்பம் அருகே புதுக்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேணுகோபால்
    • திருமண நிகழ்ச்சிக்காக வேணுகோபால் அதிகாலை 5 மணி அளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.

    புதுச்சேரி:

    தவளங்குப்பம் அருகே புதுக்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேணுகோபால். சலவை தொழிலாளி. இவரது மனைவி சாந்தா 73. நேற்று அந்த கிராமத்தில் நடைபெற்ற திருமண முகூர்த்தக்கால் நலங்கு நிகழ்ச்சிக்காக வேணுகோபால் அதிகாலை 5 மணி அளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார். அப்போது வீட்டின் கதவை மூடாமல் சென்றதாக கூறப்படுகிறது.

    இதனை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சாந்தாவின் முகத்தில் துணியை மூடி அழுத்திக்கொண்டு கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி செயினை பறித்தனர்.

    சாந்தாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வருவதற்குள் அந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கொள்ளையர்கள் தாக்கியதில் லேசான காயம் அடைந்த சாந்தா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×