search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைப்பறிப்பு"

    • 4 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
    • போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காட்டூர் ஊராட்சி, சின்ன காட்டுூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது80). இவரது மனைவி அருக்காணி (75). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று வெள்ளகோயில் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்துள்ளனர். காட்டூர் பிரிவு அருகே பஸ்சிலிருந்து இறங்கி இரண்டு பேரும் நடந்து சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் ஆறுமுகத்தை கொண்டு சென்று விடுவதாக பைக்கில் ஏற்றி சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றதும் அவரை அங்கே இறக்கி விட்டு விட்டு மீண்டும் அருக்காணி நடந்து வந்த இடத்திற்கு அருகே வந்துள்ளார். வந்த உடன் மின்னல் வேகத்தில் அவர் அணிந்திருந்த 4 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    இது குறித்து அருக்காணி கொடுத்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சின்ன காட்டூரை சேர்ந்த அருக்காணி என்பவரிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த பரமபட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவரது மகன் சந்திரசேகர் ( 37) , பல்லடம் கணபதிபாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது மகன் குமார் (38) என்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவர்களிடம் இருந்து 4 பவுன் தங்கநகை மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மோட்டார் சைக்கிள் தடுமாறி கணவன்- மனைவி இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
    • சுந்தரி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள குப்புசாமி நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி சுந்தரி(வயது 54). சம்பவத்தன்று கணவன் - மனைவி இருவரும் பல்லடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செம்மிபாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், முத்துசாமி ஒட்டிய மோட்டார் சைக்கிளை, காலால் எட்டி உதைத்துள்ளனர் .இதில் மோட்டார் சைக்கிள் தடுமாறி கணவன்- மனைவி இருவரும் கீழே விழுந்துள்ளனர்.

    இதனைப் பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் சுந்தரி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து சுந்தரி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர்.
    • வாலிபர் திடீரென அவரது கழுத்தில் இருந்த 2½ தங்க நகையை பறித்தனர்.

    கோவை,

    கோவை சரவணம்பட்டி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலுசாமி. இவரது மனைவி லட்சுமி (வயது 72).

    இவர் சம்பவத்தன்று வீட்டின் முன்பு நடைப்பயிற்சி செய்து கொண்டு இருந்தார். அப்போது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் லட்சுமியிடம் முகவரி கேட்பது போல் நடித்தனர்.

    லட்சுமி அசந்த நேரம் பார்த்து மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த வாலிபர் திடீரென அவரது கழுத்தில் இருந்த 2½ தங்க நகையை பறித்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார்.

    அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் கண் இமைக்கும் நேரத்தில் பறந்து சென்றனர். இதுகுறித்து லட்சுமி சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து நகைப்பறிப்பில் ஈடுப்பட்ட கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    ×