search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stealing gold jewelry"

    • மின்னல் வேகத்தில் 4 சவரன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.
    • காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சின்ன காட்டூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது80). இவரது மனைவி அருக்காணி (75). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று வெள்ளகோவில் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்துள்ளனர்.

    காட்டூர் பிரிவு அருகே பஸ்ஸிலிருந்து இறங்கி இரண்டு பேரும் வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் ஆறுமுகத்தை வீட்டில் கொண்டு விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றதும் அவரை அங்கே இறக்கி விட்டு விட்டு, மீண்டும் அருக்காணி நடந்து வந்த இடத்திற்கு அருகே வந்துள்ளார். வந்த உடன் மின்னல் வேகத்தில் அவர் அணிந்திருந்த 4 சவரன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    இது குறித்து அருக்காணி கொடுத்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். உதவி செய்வது போல் நடித்து தங்க நகையை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×