search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சொத்துக்கள் அபகரிப்பு கலெக்டரிடம் மூதாட்டி பரபரப்பு புகார்
    X

    கலெக்டரிடம் மனு அளித்த பாப்பாத்தி.

    சொத்துக்கள் அபகரிப்பு கலெக்டரிடம் மூதாட்டி பரபரப்பு புகார்

    • கணவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று காலமாகி விட்டார்.
    • 5 செண்ட் இடத்தை ரூ.60 லட்சத்திற்கு விற்பனை செய்து விட்டனர்

    திருப்பூர் :

    திருப்பூர் சூசையாபுரம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி. இவர் இன்று கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனக்குவயது 85. எனது கணவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று காலமாகி விட்டார். எனது பிள்ளைகள் ஆசைவார்த்தைகள் கூறி எனக்கு சொந்தமான வீடு, 5 செண்ட் இடத்தை ரூ.60 லட்சத்திற்கு விற்பனை செய்து விட்டனர். எனக்கு எந்த ஜீவனாம்சமும் தரவில்லை.

    எனவே முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து எனது சொத்தை மீட்டு தர வேண்டும் என கூறியுள்ளார்.

    Next Story
    ×