search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nomination"

    தமிழகம் மற்றும் புதுவையில் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்தது. நாளை மனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளன. #LokSabhaElections2019 #Nomination
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 11-ந்தேதி முதல் மே மாதம் 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

    தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ந்தேதி 2-வது கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலுடன் தமிழக சட்டசபையில் காலியாக உள்ள தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த 19-ந்தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. மனுதாக்கலுக்கு 26-ந்தேதி (இன்று) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    23, 24-ந்தேதிகளில் (சனி, ஞாயிறு) வேட்பு மனுதாக்கல் செய்யப்படவில்லை. இதனால் வேட்பு மனுதாக்கலுக்கு 6 நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

    முதல் 2 நாட்கள் வேட்பு மனுதாக்கல் மந்தமாக இருந்தது. வியாழன், வெள்ளிக் கிழமைகளில் மனுதாக்கலில் விறுவிறுப்பு ஏற்பட்டது. நேற்றும் இன்றும் கட்சி தலைவர்கள் வேட்பு மனு தாக்கலால் தேர்தல் களம் சூடுபிடித்தது.



    நேற்று மாலை வரை நிலவரப்படி தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் 613 வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அதிக பட்சமாக தென்சென்னை தொகுதியில் 28 பேர், திருவண்ணாமலையில் 27 பேர், சேலத்தில் 25 பேர், நாமக்கல்லில் 24 பேர், ஸ்ரீபெரும்புதூர், திருநெல்வேலியில் தலா 23 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

    வேலூர், விழுப்புரம், நீலகிரி, கடலூர், விருதுநகர், ராமநாதபுரம் தொகுதிகளில் வேட்பு மனுதாக்கல் சற்று குறைவாக இருந்தது.

    18 சட்டசபை தொகுதிகளுக்கு நடத்தப்படும் இடைத்தேர்தல்களில் போட்டியிடவும் கடந்த ஒரு வாரமாக விறுவிறுப்பான மனுதாக்கல் நடந்தது. 18 தொகுதிகளிலும் நேற்று மாலை வரை 232 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். சென்னை பெரம்பூர் தொகுதியில் அதிக பட்சமாக 36 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

    பூந்தமல்லி, அரூர், மானா மதுரை சட்டசபை தொகுதிகளில் மனுதாக்கல் மந்தமாக உள்ளது. குறிப்பாக பெண்கள் மத்தியில் தேர்தலில் போட்டியிட அதிக ஆர்வம் இல்லாத நிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் நேற்று மாலை வரை தாக்கலான 613 மனுக்களில் 75 பேர் மட்டுமே பெண்கள் ஆவார்கள். 2 பேர் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள். அதுபோல 18 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு மனு செய்துள்ள 232 பேரில் 38 பேர் மட்டுமே பெண்கள் என்று தெரியவந்துள்ளது.

    வேட்பு மனுதாக்கலுக்கு கடைசி நாளான இன்று வேட்பாளர்கள் போட்டி போட்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். எனவே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் எண்ணிக்கை 650 வரை உயர வாய்ப்புள்ளது. அதுபோல 18 தொகுதி இடைத்தேர்தல்களில் களம் இறங்குபவர்கள் எண்ணிக்கையும் 250 வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்பு மனுதாக்கலுக்கு இன்று கடைசி நாளாகும். இன்று பிற்பகல் 3 மணியுடன் மனுதாக்கல் முடிந்தது. நாளை (27-ந்தேதி) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.

    வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (28, 29-ந்தேதி) 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. மாற்று வேட்பாளர்கள் அனைவரும் அன்றைய தினம் தங்களது வேட்புமனுவைத் திரும்ப பெறுவார்கள். 29-ந் தேதி பிற்பகல் 3 மணி வரை இதற்கான அவகாசம் உள்ளது.

    29-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு பிறகு வேட்பாளர்கள் இறுதிப் பட்டியலை அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகள் வெளியிடுவார்கள். அன்றைய தினமே அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அவர்களுக்கு உரிய சின்னங்களும், மற்ற சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கி அறிவிக்கப்படும்.

    அதன்பிறகே ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் முழு விபரம் தெரியவரும். தேர்தல் பிரசாரத்துக்கு 30-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 16-ந்தேதி வரை 18 நாட்கள் அவகாசம் உள்ளது. 16-ந்தேதி பிரசார ஓயும். ஏப்ரல் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். மே மாதம் 23-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். #LokSabhaElections2019 #Nomination
    மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் பாராளுமன்ற தொகுதியில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். #DeveGowda #TumkurLSpolls
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு இருகட்டமாக ஏப்ரல் 18, 23-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொள்கின்றன. 

    இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டு காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 8 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் பாராளுமன்ற தொகுதியில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    இதே தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக பதவி வகிக்கும் முட்டாஹனுமேகவுடாவும் காங்கிரஸ் வேட்பாளராக இங்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

    முன்னர், ஹஸ்ஸன் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தேவேகவுடா அந்த தொகுதியை தனது பேரன் பிரஜ்வால் ரேவன்னா போட்டியிடுவதற்காக விட்டுக் கொடுத்தார். 

    தொகுதி பங்கீட்டின்படி மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு காங்கிரஸ் கட்சியால் முன்னர் ஒதுக்கப்பட்ட வடக்கு பெங்களூரு தொகுதிக்கு பதிலாக அக்கட்சியின் டெல்லி தலைமையிடம் பேசி தும்கூர் தொகுதியை தேவேகவுடாவுக்கு ஒதுக்குமாறு துணை முதல் மந்திரி பரமேஸ்வரா மூலம் கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி ஏற்பாடு செய்தார்.

    இதனால், தேவேகவுடாவுக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட வடக்கு பெங்களூரு தொகுதியில் போட்டியிட முட்டாஹனுமேகவுடாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

    ஆனால், அவர் எனக்கு இந்த தொகுதியில்தான் செல்வாக்கு அதிகம் என்று கூறி வீம்பாக தும்கூரில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர்கள் இருவரில் யார் வேட்புமனுவை வாபஸ் பெறுவார்கள்? என்பது புரியாத நிலையில் தும்கூரு தொகுதி பாராளுமன்ற வேட்பாளராக பாஜக சார்பில் பசவராஜ் போட்டியிடுகிறார். #DeveGowda #TumkurLSpolls
    பாராளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். #LSPolls #ADMK #DMK #congress
    சென்னை:

    பாராளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    தென்சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அடையாறு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    வடசென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி வடக்கு வட்டார துணை கமி‌ஷனர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.



    தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சந்தீப் நந்தூரியிடம் மனுதாக்கல் செய்தார்.

    அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபனிடம் மனுதாக்கல் செய்தார். வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் கலெக்டர் ராமனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    திருச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் திருச்சி கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சிவராசுவிடம் மனுதாக்கல் செய்தார். தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பல்லவி பல்தேவ்விடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான அன்பழகனிடம் மனுதாக்கல் செய்தார்.

    கரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தார். மதுரை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ் சத்யன் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தார்.



    தூத்துக்குடி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்தார். சிவகங்கை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜா மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தார்.

    தென்காசி தொகுதி புதியதமிழகம் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி தேர்தல் அதிகாரி முத்துராமலிங்கத்திடம் மனுதாக்கல் செய்தார். திருச்சி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன் கலெக்டர் சிவராசுவிடம் மனுதாக்கல் செய்தார்.

    சிதம்பரம் (தனி) தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன் அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனுதாக்கல் செய்தார்.

    ஈரோடு தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தார்.

    கோவை தொகுதி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் நடராஜன் மனுதாக்கல் செய்தார்.

    பெரம்பலூர் தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் பெரம்பலூர் கலெக்டர் சாந்தாவிடம் மனுதாக்கல் செய்தார்.

    திருப்பூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தார்.

    அரூர் சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ண குமார், மானாமதுரை சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் இலக்கியதாசன் ஆகியோர் தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தனர்.

    ஓசூர் சட்டசபை தொகுதியில் அ.திமு.க. வேட்பாளராக பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி போட்டியிடுகிறார். அவர் இன்று தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தார். #LSPolls #ADMK #DMK #congress #BJP
    ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மகன் நார லோகேஷ் மங்களகிரி தொகுதியிலும், ஜெகன் மோகன் ரெட்டி புலிவேந்துலா தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் செய்தனர். #JaganMohanReddy #NaraLokesh #Jaganfilesnomination
    அமராவதி:

    ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பின்னர் அவரது மகனான ஜெகன் மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி தலைவராக தொண்டர்களை வழிநடத்தி வருகிறார்.

    ஆந்திராவில் ஏப்ரல் 11-ம் தேதியன்று சட்டசபை மற்றும் 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஆந்திராவில் உள்ள 25 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

    தற்போது கடப்பா மாநிலத்தில் உள்ள புலிவேந்துலா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி வரும் தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். 

    இந்நிலையில், இன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் புலிவேந்துலா தொகுதி தேர்தல் அதிகாரியிடம் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனு தாக்கல் செய்தார்.

    ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மகனும் அம்மாநில தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரியுமான நாரா லோகேஷ் அமரவாதி மாவட்டத்தில் உள்ள மங்களகிரி தொகுதியில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். #JaganMohanReddy #NaraLokesh #Jaganfilesnomination #NaraLokeshnomination #APAssemblyElections
    தெலுங்கு முன்னணி நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான நடிகர் பவன்கல்யாணுக்கு ரூ.52 கோடி சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #PawanKalyan
    விசாகப்பட்டினம்:

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது.

    தெலுங்கு முன்னணி நடிகர் பவன்கல்யாண் அங்கு ஜனசேனா என்ற கட்சியை நடத்தி வருகிறார். அவர் சில சிறு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறார்.

    பவன்கல்யாண் கஜுவாகா சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். அவர் நேற்று மனுதாக்கல் செய்தார்.

    அவர் தனது மனுவில் ரூ.52 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். அதில் ரூ.12 கோடிக்கு அசையும் சொத்துக்களும், ரூ.40 கோடிக்கு அசையா சொத்துக்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    அசையும் சொத்துக்களில் தனது மனைவி பெயரில் ரூ.30 லட்சம் சொத்தும், தன்னை சார்ந்தவர்களிடம் ரூ.1 கோடியே 51 லட்சம் சொத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் மனைவி பெயரில் ரூ.40 லட்சம் அசையா சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    தன்னிடம் ரூ.72 லட்சம் மதிப்புள்ள பென்ஸ்கார், ரூ.1 கோடியே 6 லட்சம் மதிப்புள்ள வால்வோ கார், ரூ.32 லட்சம் மதிப்புள்ள ஹார்லே டேவிட்சன் கார் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் ரூ.27 லட்சத்துக்கு தனது பெயரிலும், ரூ.9 லட்சத்து 25 ஆயிரத்துக்கு மனைவி பெயரிலும் நகைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    அதே நேரத்தில் தனக்கு ரூ.33 கோடி அளவுக்கு கடன் இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். 2013-14-ல் பவன்கல்யாண் தனக்கு ரூ.7 கோடியே 32 லட்சம் வருமானங்கள் இருந்ததாக வருமானவரி கணக்கில் தாக்கல் செய்துள்ளார். #PawanKalyan
    தமிழகத்தில் பாராளுமன்ற மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. வருகிற 26-ந் தேதி வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். #ParliamentElections #TamilnaduByElection #Nomination
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அந்த தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.



    இந்த தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஓர் அணியாகவும், தி.மு.க. கூட்டணி கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. அ.ம.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

    இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வரும் 26-ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

    முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற வகையில் வேட்புமனு பெறப்படுகிறது. வேட்புமனுவை பெறுவதற்கான விதிமுறைகள் அடங்கிய புத்தகங்கள், அந்தந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன.  வேட்புமனு தாக்கல் செய்ய வரும் நபருடன் 4 பேர் மட்டுமே அலுவலக அறைக்குள் வர வேண்டும். அதுபோல் அதிகபட்சம் அலுவலக வளாகத்துக்குள் 3 கார்கள் மட்டுமே வேட்பாளருடன் வரலாம். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் (23 மற்றும் 24-ந் தேதிகளில்) விடுமுறை என்பதால் வேட்புமனுக்கள் பெறப்படாது.  #ParliamentElections #TamilnaduByElection #Nomination

    தமிழகத்தில் பாராளுமன்ற மற்றும் சட்டசபை இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. #LokSabhaElections2019 #ParliamentElections
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அந்த தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஓர் அணியாகவும், தி.மு.க. கூட்டணி கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. அ.ம.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

    இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

    இதுகுறித்து தேர்தல் அதிகாரி கூறுகையில், சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற வகையில் வேட்புமனு பெறப்படும். வேட்புமனுவை பெறுவதற்கான விதிமுறைகள் அடங்கிய புத்தகங்கள், அந்தந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன.



    வேட்புமனு தாக்கல் செய்ய வரும் நபருடன் 4 பேர் மட்டுமே அலுவலக அறைக்குள் வர வேண்டும். அதுபோல் அதிகபட்சம் அலுவலக வளாகத்துக்குள் 3 கார்கள் மட்டுமே வேட்பாளருடன் வரலாம். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் (23 மற்றும் 24-ந் தேதிகளில்) விடுமுறை என்பதால் வேட்புமனுக்கள் பெறப்படாது.

    வேட்புமனு தாக்கல் செய்ய 26-ந் தேதி கடைசி நாள் ஆகும். வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்படும் 26-ம் எண் விண்ணப்பத்தில் கூடுதல் தகவல்கள் கோரப்பட்டு உள்ளன. இதற்கான விதிகளில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு இருக்கின்றன.

    அதன்படி, ஒவ்வொரு வேட்பாளரும் 5 ஆண்டுகளுக்கான தனது வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். (முன்பு ஒரு ஆண்டு வருமான வரிக்கணக்கு). இந்து கூட்டுக்குடும்ப சொத்துக்கள், வெளிநாட்டில் உள்ள சொத்து விவரங்கள் ஆகியவற்றையும் சேர்த்து அந்த விண்ணப்பத்தில் காட்ட வேண்டும்.

    வேட்புமனு தாக்கல் செய்பவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தாலோ, ஏதாவது வழக்கில் அவர் தண்டிக்கப்பட்டு இருந்தாலோ அதையும் அவர் சுட்டிக்காட்ட வேண்டும்.

    அவரது வேட்புமனு ஏற்கப்பட்டதில் இருந்து வாக்குப்பதிவு நடப்பதற்கு முன் 3 முறை பிரபல நாளிதழ்கள், டி.வி. சேனல்களில் தன் மீதான வழக்கு விவரங்கள் பற்றிய விளம்பரங்களை வேட்பாளர் கொடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் விரைவில் தமிழகம் வர இருக்கிறார். இவ்வாறு கூறினார்.

    இதற்கிடையே திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தேர்தல் அறிக்கையை இன்று காலை வெளியிடுகின்றன. #LokSabhaElections2019 #ParliamentElections #TamilnaduByElection #Nomination

    அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இட்டெஹாதுல் முஸ்லிமின் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி ஐதராபாத் பாராளுமன்ற தொகுதியில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். #AIMIM #AsaduddinOwaisi #HyderabadLSseat
    ஐதராபாத்:

    அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இட்டெஹாதுல் முஸ்லிமீன் இயக்கத் தலைவரான அசாதுதீன் ஒவைசி கடந்த 2004 முதல் 15 ஆண்டுகளாக ஐதராபாத் தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார். 

    இந்நிலையில், இதே தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிட தீர்மானித்த ஒவைசி இன்று தனது வேட்பு மனுவை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘வறுமையின் பிடியில் சிக்கி நலிந்த நிலையில் உள்ளவர்கள், ஒடுக்கப்பட்டவர்களின் தேசிய குரலாக இந்த ஐதராபாத் பாராளுமன்ற தொகுதி காலகாலமாக இருந்து வந்துள்ளது. இது இனியும் தொடரும்’ என குறிப்பிட்டார்.

    இந்த தேர்தலில் ஒவைசிக்கு ஆதரவு அளிப்போம் என தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சி ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #AIMIM #AsaduddinOwaisi #HyderabadLSseat 
    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 26-ந் தேதி கடைசி நாள் ஆகும். #LokSabhaElection #Tamilnadu
    சென்னை:

    இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ந் தேதி நடக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தமட்டில் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ள இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 26-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

    தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள 18 தொகுதிகளுக்கான தேர்தலும் பாராளுமன்ற தேர்தலுக்கான அட்டவணைப்படியே ஏப்ரல் 18-ந் தேதி நடக்க உள்ளது. அந்த தொகுதிகளுக்கும் நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னையை பொறுத்தமட்டில் வடசென்னை தொகுதிக்கு சென்னை மாநகராட்சியின் வடக்கு வட்டார துணை ஆணையாளர் திவ்யதர்ஷினியும், தென்சென்னை தொகுதிக்கு தெற்கு வட்டார துணை ஆணையாளர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசும், மத்திய சென்னை தொகுதிக்கு மத்திய வட்டார துணை ஆணையாளர் பி.என்.ஸ்ரீதரும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொகுதிகளில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கென தனியாக உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    வடசென்னை தொகுதிக்கு பழைய வண்ணாரப்பேட்டை பேசின் பாலம் சாலையில் உள்ள மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்திலும், தென்சென்னை தொகுதிக்கு அடையாறு டாக்டர் முத்துலட்சுமி சாலையில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்திலும், மத்திய சென்னை தொகுதிக்கு செனாய்நகர் புல்லா அவென்யூ, 2-வது குறுக்கு தெருவில் உள்ள மத்திய வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்திலும் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.

    பெரம்பூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தமட்டில் சென்னை மாவட்ட வருவாய் அதிகாரி கருணாகரன் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். வியாசர்பாடி சர்மாநகர் 2-வது பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது. வேட்புமனுக்கள் பெறப்படும் இடங்களில் உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. 
    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் இன்று காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல் மந்திரி அசோக் கேலாட், அம்மாநில கட்சி தலைவர் சச்சின் பைலட் ஆகியோர் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். #VasundharaRaje #Rajasthanpolls #SachinPilot #AshokGehlot #SachinPilot
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் 152 வேட்பாளர்களின் பெயர்களை  கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டது.

    200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.

    அம்மாநில முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா ஜல்ராபட்டான் தொகுதியில் கடந்த 16-ம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    கடந்த 1985-ம் ஆண்டு முதன்முதலாக தோல்பூர் தொகுதியில் சட்டசபை தேர்தலை சந்தித்து வெற்றிபெற்ற வசுந்தரா, பின்னர் 1989 முதல் 2003 வரை ஜல்வார் பாராளுமன்ற தொகுதியில் தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.


    தற்போது, ஜல்ராப்பட்டான் தொகுதி எம்.எல்.ஏ.வாக இவர் வெற்றி பெற்றால் ஐந்தாவது முறையாக அம்மாநில சட்டசபை உறுப்பினராக பொறுப்பேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.  

    இந்நிலையில், ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் இன்று காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல் மந்திரி அசோக் கேலாட் சர்தார்புரா தொகுதியிலும், அம்மாநில கட்சி தலைவர் சச்சின் பைலட் டோங் தொகுதியிலும் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.  #VasundharaRaje #Rajasthanpolls #SachinPilot #AshokGehlot #SachinPilot
    ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். #VasundharaRaje #Rajasthanpolls
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் 152 வேட்பாளர்களின் பெயர்களை  கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டது.

    200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.

    காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த தேர்தலில் போட்டியிடும் 184 வேட்பாளர்களின் பெயர்களை  கொண்ட இரு பட்டியல்களாக அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது.

    இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதல் மந்திரி அசோக் கேலாட், சர்தார்பூர் தொகுதியிலும், அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், டோங்க் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.



    இதேபோல், பா.ஜ.க.வும் மூன்று பட்டியல்களின் மூலம் தங்கள் கட்சியை சேர்ந்த 170  வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.

    இந்நிலையில், அம்மாநில  முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா ஜல்ராபட்டான் தொகுதியில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    கடந்த 1985-ம் ஆண்டு முதன்முதலாக தோல்பூர் தொகுதியில் சட்டசபை தேர்தலை சந்தித்து வெற்றிபெற்ற வசுந்தரா, பின்னர் 1989 முதல் 2003 வரை ஜல்வார் பாராளுமன்ற தொகுதியில் தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

    தற்போது, ஜல்ராப்பட்டான் தொகுதி எம்.எல்.ஏ.வாக இவர் வெற்றி பெற்றால் ஐந்தாவது முறையாக அம்மாநில சட்டசபை உறுப்பினராக பொறுப்பேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.   #VasundharaRaje #Rajasthanpolls
    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் ரூ.22 கோடி சொத்து உள்ளதாக தனது வேட்புமனு தாக்கலில் தெரிவித்து உள்ளார். #ChandrasekharRao
    நகரி:

    தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற டிசம்பர் 7-ந்தேதி நடக்கிறது.

    இதில் ஆட்சியை மீண்டும் தக்க வைக்க சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தீவிரமாக உள்ளது.

    முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் கெஜ்லால் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதில் சந்திரசேகரராவ் தனது சொத்து கணக்குகளை தெரிவித்து உள்ளார்.

    அவருக்கு ரூ.22 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. தான் விவசாய தொழில் செய்து வருவதாகவும், ஆண்டு வருமானம் ரூ.31.5 லட்சம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    விவசாய தொழிலில் ரூ.3.2 கோடியை முதலீடு செய்து உள்ளதாகவும், பண்ணை வீடுகள் மதிப்பு ரூ.6.5 கோடி என்றும் தெரிவித்துள்ளார். ரொக்கமாக ரூ.1.3 கோடி இருப்பதாக கூறி உள்ளார்.

    மேலும் அவர் தனியார் கம்பெனிகளிலும் முதலீடு செய்துள்ளார்.

    சந்திரசேகரராவ் தனக்கு சொந்தமாக கார் இல்லை என்று வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். அவரது கட்சியின் சின்னம் கார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சந்திரசேகரராவுக்கு சொந்தமாக கார் இல்லை என்பது சுவாரசியமாக பார்க்கப்படுகிறது.

    அவரிடம் கார் இல்லாமல் இருந்தாலும் அவரது பாதுகாப்புக்காக அரசு சார்பில் சொகுசு கார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

    சந்திரசேகரராவ் ரூ.2.4 லட்சத்துக்கு நகைகள் வைத்துள்ளார். அவரது மனைவிக்கு ரூ.96 லட்சம் மதிப்பில் நகை இருக்கிறது. அவரது மகன் கே.டி.ராமராவ் ரூ.84 லட்சமும், மருமகள் ‌ஷலிமா ரூ.24 லட்சமும் ரொக்கம் வைத்துள்ளனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் வேட்புமனுவை தாக்கல் செய்த சந்திரசேகர ராவ் ரூ.15 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்து இருந்தார். தற்போது 4 வருடத்தில் அவரது சொத்து மதிப்பு ரூ.7 கோடி உயர்ந்துள்ளது.

    இதேபோல் 2014-ம் ஆண்டு 37 ஏக்கர் நிலம் இருந்ததாக தெரிவித்து இருந்தார். தற்போது 54 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக்கிறார். #ChandrasekharRao
    ×