search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AP assembly"

    • பதவியேற்பு விழாவில் அரசியல், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
    • மேடையில் இருந்த தனது அண்ணனான நடிகர் சிரஞ்சீவி காலில் விழுந்து பவன் கல்யாண் ஆசீர்வாதம் பெற்றார்.

    ஆந்திர பாராளுமன்ற தேர்தலில் 135 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியும், 21 இடங்களில் ஜனசேனா கட்சியும் வெற்றி பெற்றது. பா.ஜ.க போட்டியிட்ட 10 இடங்களில் 8 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த கூட்டணி மொத்தமாக 164 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனால் தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி இன்று ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது.

    விஜயவாடா கன்னவரம் விமான நிலையம் அருகே உள்ள கேசரப்பள்ளி தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜேபி நட்டா நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் மற்றும் அரசியல், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    இதில், ஆந்திராவின் முதல்-மந்திரியாக 4-வது முறையாக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் நசீர் அகமது பதவி பிரமாணம் செய்து வைத்தார். சந்திரபாபு நாயுடுவுக்கு அடுத்ததாக ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணும் பதவியேற்றுக்கொண்டார்.

    பதவியேற்று முடிந்தவுடன் பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற பவன் கல்யாண், மேடையில் இருந்தவர்களிடம் வாழ்த்து பெற்றார். மேலும் மேடையில் இருந்த தனது அண்ணனான நடிகர் சிரஞ்சீவி காலில் விழுந்து பவன் கல்யாண் ஆசீர்வாதம் பெற்றார்.

    இதனிடையே, சந்திரபாபு தலைமையிலான அமைச்சரவையில் பவன் கல்யாணுக்கு துணை முதல்-மந்திரி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, தேர்தல் வெற்றியை உறுதி செய்ததில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு பெரும் பங்குண்டு என்பதால் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கக்கூடும் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.


    • ஆந்திராவில் ஆட்சி அமைக்க வரும்படி சந்திரபாபு நாயுடுவுக்கு கவர்னர் அப்துல் நசீர் அழைப்பு விடுத்தார்.
    • பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலுக்கும் வாக்கு பதிவு நடந்தது. இதில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி இமாலய வெற்றி பெற்றது.

    மொத்தம் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி மட்டும் 135 இடங்களிலும், ஜனசேனா கட்சி போட்டியிட்ட 21 இடங்களிலும் வெற்றி பெற்றது.

    பா.ஜ.க போட்டியிட்ட 10 இடங்களில் 8 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த கூட்டணி மொத்தமாக 164 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

    தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கூட்டம் விஜயவாடாவில் நேற்று நடந்தது. இதில் கூட்டணி கட்சிகளின் தலைவராக சந்திரபாபு நாயுடு ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    இதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்துடன் பா.ஜ.க. மாநில தலைவர் புரந்தேஸ்வரி மற்றும் தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சி பிரதிநிதிகள் கவர்னர் நசீர் அகமதுவை நேரில் சந்தித்து சந்திரபாபு நாயுடுவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

    ஆந்திர முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழா இன்று காலை விஜயவாடா கன்னவரம் விமான நிலையம் அருகே உள்ள கேசரப்பள்ளி தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் பிரமாண்டமாக நடந்தது.

    விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி விமானம் மூலம் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார். அவரை சந்திரபாபு நாயுடு, கவர்னர் நசீர் அகமது ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    விழாவில் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவரை அடுத்து ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணும் பதவியேற்றுக்கொண்டார். மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் நசீர் அகமது பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    பிரதமர் மோடி முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜேபி நட்டா நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் மற்றும் அரசியல் சினிமா பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

    சந்திரபாபு நாயுடுவுக்கு விழாவில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள் பொன்னாடை அணிவித்தும் பூங்கொத்துகளை கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

    பதவியேற்பு விழா நடந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    தெலுங்கு தேசம் ஜனசேனா,பா.ஜ.க கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றக் கொண்ட போது கைதட்டி பலத்த ஆரவாரம் செய்தனர்.

    ஆந்திர மாநில அமைச்சர்கள் தேர்வு குறித்து அமித்ஷா மற்றும் ஜே.பி. நட்டாவுடன் நடந்த சந்திப்பிற்கு பிறகு சந்திரபாபு நாயுடு இறுதி முடிவு எடுத்துள்ளார்.

    அமைச்சர்கள் பட்டியலில் 17 புது முகங்கள் தெலுங்கு தேசம் கட்சியில் இடம் பெற்றிருந்தனர். சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷுக்கு முக்கிய இலாக்கா ஒதுக்கப்படுகிறது.

    இது தவிர நடிகர் பவன் கல்யாண் உட்பட அவருடைய கட்சியில் 3 மந்திரிகளும், பா.ஜ.க.வுக்கு ஒரு மந்திரி பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

    சந்திரபாபு நாயுடு ஒரு மந்திரி பதவியை காலியாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மந்திரிகள் குழுவில் 3 பெண்கள் உள்ளனர்.

    முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று மாலை திருப்பதி வருகிறார். அங்கு இரவு தங்குகிறார். நாளை அதிகாலை ஏழுமலையான் கோவிலில் சந்திரபாபு நாயுடு சாமி தரிசனம் செய்கிறார்.













    • சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக ஆந்திர முதல்-மந்திரியாக இன்று பதவியேற்கிறார்.
    • பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.

    விஜயவாடா:

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் 175 இடங்களை கொண்ட மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இதில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.எம்.ஏ.க்கள் கூட்டம் விஜயவாடாவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டசபை கட்சி தலைவராக (முதல்-மந்திரியாக) சந்திரபாபு நாயுடுவை பவன் கல்யாண் முன்மொழிந்தார். பா.ஜ.க. மாநில தலைவர் டகுபதி புரந்தேஸ்வரி இதை ஆதரித்தார்.

    தொடர்ந்து, அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இதை ஏற்றுக்கொண்டதால் சட்டசபை கட்சி தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். சட்டசபை கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் கவர்னர் அப்துல் நசீரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    அதன்படி சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக ஆந்திர முதல்-மந்திரியாக இன்று பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில், சந்திரபாபு நாயுடு தலைமையில் பதவியேற்க உள்ள 24 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது.

    இதில், தேர்தல் வெற்றியை உறுதி செய்ததில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு பெரும் பங்குண்டு உள்ளதால் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமைச்சரவை பட்டியலில் பவன் கல்யாண் பெயர் முதலாவதாக இடம்பெற்றுள்ளது.

    பவன் கல்யாணுக்கு அடுத்தப்படியாக சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் இடம்பெற்றுள்ளார். பட்டியலில் முதன்மை பெற்றிருப்போருக்கு முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றிரவு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. .

    கிஞ்சரபு அட்சதை, கொல்லு ரவீந்திரன், நாதெண்டல மனோகர், பொங்குரு நாராயணா, அனிதா வாங்கலபுடி, சத்ய குமார் யாதவ், நிம்மல ராம நாயுடு, நசியம் முகமது ஃபாரூக், ஜனார்தன் ரெட்டி, பாரத், சவிதா உள்ளிட்டோர் அமைச்சரவை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.


    • தெலுங்கு தேசம் கட்சியினர் ரவுடித்தனம் செய்தால் அதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்.
    • 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாலகிருஷ்ணா ஓட்டு போட்ட மக்களுக்காக சட்டசபையில் இதுவரை எதையும் பேசவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. சட்டசபையில் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.வும் பிரபல நடிகருமான பாலகிருஷ்ணா தொடையை தட்டி மீசையை முறுக்கி சந்திரபாபு நாயுடுவை சட்ட விரோதமாக கைது செய்து உள்ளதாக பேசினார்.

    இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது சட்டசபைக்கு வந்த அமைச்சர் ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் நீங்கள் 23 பேர் மட்டுமே. நாங்கள் 151 பேர். எங்களை சட்டப் பேரவையில் மதிக்கவில்லை என்றால், உங்கள் நிலைமை என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்.

    நாங்கள் அமைதியாக இருக்கிறோம். ஏனென்றால் நாங்கள் சட்டசபை, சபாநாயகர் மற்றும் சட்டங்களை மதிக்கிறோம்.

    தெலுங்கு தேசம் கட்சியினர் ரவுடித்தனம் செய்தால் அதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்.

    சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததற்கான உறுதியான ஆதாரங்களை சி.ஐ.டி. கண்டுபிடித்த பின்னரே அவர் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    நடிகர் பாலகிருஷ்ணா மீசையை முறுக்கினால் நாங்கள் யாரும் பயப்பட மாட்டோம். 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாலகிருஷ்ணா ஓட்டு போட்ட மக்களுக்காக சட்டசபையில் இதுவரை எதையும் பேசவில்லை. பெண்களை இழிவாக பேசுவது அவரது வழக்கம்.

    மைத்துனர் சந்திரபாபு நாயுடுவை காப்பாற்ற சட்டமன்றத்தில் சத்தமாக கூச்சலிட்டபடி அழுகிறார். சந்திரபாபு நாயுடுவை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக சித்தரிக்க பார்க்கின்றனர்.

    சந்திரபாபு நாயுடு மீது சட்ட விரோத வழக்கு இருந்தால் விவாதம் நடத்த வேண்டும்.

    சட்டசபையில் முறைபடி விவாதம் நடத்தப்பட வேண்டும். அதை விடுத்து சைக்கோக்கள் போல் கத்தி சபாநாயகர் மீது பாட்டில் வீசுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆந்திர முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டி நடிகை ரோஜாவுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    நகரி:

    ஆந்திராவில் ராயலசீமா பகுதியில் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது நகரி சட்டசபை தொகுதி. இந்த தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரோஜா போட்டியிட்டார்.

    இதில், ரோஜா 79,499 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளர் காளி பானு பிரகாஷ் 76,818 வாக்குகள் பெற்றார். எனவே, 2,681 வாக்குகள் வித்தியாசத்தில் ரோஜா வெற்றி பெற்றார்.

    கடந்த 2014 சட்டசபை தேர்தலில் இதே தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரோஜா தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளரைவிட 858 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். தொடக்கத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த ரோஜா, அங்கு உரிய மரியாதை கிடைக்காததால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு தாவினார்.


    ஜெகன்மோகன் ரெட்டிக்காக பல போராட்டங்களை நடத்தினார். ரோஜா பிரசாரம் செய்த இடங்களில் 97 சதவீதம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் ரோஜாதான் அங்கு கேம் சேஞ்சராக மாறி உள்ளார். அதனால் ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    அவருக்கு மின்சாரத்துறை வழங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. நாளை நடைபெறும் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் ரோஜா அமைச்சராக பதவியேற்க உள்ளார்.
    ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மகன் நார லோகேஷ் மங்களகிரி தொகுதியிலும், ஜெகன் மோகன் ரெட்டி புலிவேந்துலா தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் செய்தனர். #JaganMohanReddy #NaraLokesh #Jaganfilesnomination
    அமராவதி:

    ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பின்னர் அவரது மகனான ஜெகன் மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி தலைவராக தொண்டர்களை வழிநடத்தி வருகிறார்.

    ஆந்திராவில் ஏப்ரல் 11-ம் தேதியன்று சட்டசபை மற்றும் 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஆந்திராவில் உள்ள 25 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

    தற்போது கடப்பா மாநிலத்தில் உள்ள புலிவேந்துலா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி வரும் தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். 

    இந்நிலையில், இன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் புலிவேந்துலா தொகுதி தேர்தல் அதிகாரியிடம் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனு தாக்கல் செய்தார்.

    ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மகனும் அம்மாநில தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரியுமான நாரா லோகேஷ் அமரவாதி மாவட்டத்தில் உள்ள மங்களகிரி தொகுதியில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். #JaganMohanReddy #NaraLokesh #Jaganfilesnomination #NaraLokeshnomination #APAssemblyElections
    ×