search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister sellur raju"

    ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கியதால் அ.தி.மு.க. செல்வாக்கு அதிகரித்துள்ளது என்று அமைச்சர் செல்லூர்ராஜூ கூறியுள்ளார். #MinisterSellurRaju #ADMK
    மதுரை

    மதுரை மாநகர் தெற்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டம் முனிச் சாலையில் நடந்தது.

    கூட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா தலைமை தாங்கினார். அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    மக்கள் நலம் பேணும் அரசாக அ.தி.மு.க. அரசு திகழ்ந்து வருகிறது. மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பான ஆட்சி தந்து வருகிறார்.

    ஏழை-எளிய மக்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூ.1000 வழங்கியது அ.தி.மு.க. அரசு.

    இதன் மூலம் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி மேலும் அதிகரித்துள்ளது. அ.தி.மு.க.வின் செல்வாக்கும் அதிகரித்து வருவதால் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த அரசுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்கள். இதனை மக்கள் நம்பமாட்டார்கள்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படியாவது முதல்வராகி விட வேண்டும் என்று துடிக்கிறார். ஆனால் அவரது ஆசை நிறைவேறாது. மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது.

    மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நிர்வாகிகள் தங்கம், துரைப்பாண்டியன், எம்.எஸ்.பாண்டியன், கிரம்மர் சுரேஷ், திரவியம், சோலை ராஜா, பரவை ராஜா, கலைச்செல்வன், சண்முவள்ளி, முத்து கிருஷ்ணன், நல்லுச்சாமி, அரியநாச்சி, பார்த்தசாரதி, சக்தி விநாயகர் பாண்டியன், பிரிட்டோ, ஜெயரீகன், எம்.டி.ரவி, சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #MinisterSellurRaju #ADMK
    எழும்பூர் தொகுதி 58-வது வார்டில் பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கி வரும் ரேசன் கடை மாநகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு விரைவில் மாற்றப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது தி.மு.க. எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன் கேட்ட கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பதில் வருமாறு:-

    எழும்பூர் தொகுதி 58-வது வார்டு இ.கே.குரு தெருவில் சிந்தாமணி ரே‌சன் கடை பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கி வருவதாகவும் அதை சாமி தெருவில் உள்ள மாநகராட்சி புதிய கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விரைவில் அந்த ரே‌சன் கடை அங்கு மாற்றப்படும்.

    சென்னை நகரில் பல்வேறு ரே‌சன் கடைகளை மாற்ற கோரிக்கைகள் வருகின்றன என்றாலும் இடம் கொடுக்க யாரும் முன்வரவில்லை. அரசு இடமும் இல்லை. என்றாலும் மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் தேர்தல் வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #ADMK #SellurRaju
    மதுரை:

    மதுரையில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஊழல் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போன்றதாகும். முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மக்களுக்கு சிறப்பாக பணியாற்றி வருகிறோம்.

    பல்வேறு ஊழல் வழக்குகள் தி.மு.க.வினர் மீது உள்ளது. எனவே தவறு செய்பவர்கள், திருடக்கூடியவர்கள் யார் என்று மக்களுக்கு நன்றாக தெரியும். யார் சிறைக்கு போவார்கள் என்று விரைவில் தெரியும்.

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பச்சோந்தி, அவரது கருத்துக்களை பொருட்படுத்த தேவையில்லை. சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவத்தில் துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



    வருகிற பாராளுமன்ற தேர்தல்களுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. அது குறித்து முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அதிகாரப்பூர்வ குழு அமைத்து பேசுவார்கள்.

    ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனை துறை ரீதியில் அமைச்சர்கள் சந்தித்து பேசியுள்ளனர்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்து நின்று வெற்றி பெற தேவையில்லை.

    தேர்தல் வியூகங்கள் வகுத்து பணியாற்றி வருகிறோம். தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் உள்ள சூழ்நிலைகளை பொறுத்து மேலிடம் முடிவு செய்யும்.

    கஜா புயல் சேதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை தீவிரமாக செய்துள்ளது.

    மத்திய அரசு உதவியை எதிர்பார்க்காமல் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கட்சி சார்பிலும் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    ரேசன் கடைகளில் சி.சி.டி.வி. கேமிரா பொருத்துவது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #ADMK #SellurRaju
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர்ராஜு பதில் அளித்துள்ளார். #Gajacyclone #SellurRaju #EdappadiPalaniswami
    கடலூர்:

    கடலூருக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று வருகை தந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்ய வேண்டுமானால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொள்கை முடிவின்படி தான் நடவடிக்கை எடுக்க முடியும். கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள் நேரில் சென்றனர்.

    குழு அமைத்து பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. சேத மதிப்பீடு குறித்து கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. இவர்கள் தங்களது அறிக்கையை முதலமைச்சரிடம் தெரிவித்த பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக 4 லட்சத்து 19 ஆயிரம் பேரை இணைத்துள்ளோம். பாதிக்கப்பட்ட விவசாயிகள் பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

    கூட்டுறவு சங்கங்களில் கடன் வாங்கியவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரம்.

    இதுபோக வெளியிடங்களிலும் வெளி நபர்களிடம் பலர் கடன் வாங்கியுள்ளனர். அனைவரையும் பயிர் காப்பீடு திட்டத்தில் இணைத்துள்ளோம்.

    மேலும் தமிழக அரசின் பயிர் காப்பீட்டு திட்டம் மற்றும் பாரத பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் ஆகிய 2 திட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சலுகைகள் கிடைக்க உள்ளது. ஆகையால் இந்த அரசு விவசாயிகள்அரசு என்று எடுத்துக் காட்டுகிறது.


    ஜெயலலிதா அரசு பதவி ஏற்ற பிறகு தான் கூட்டுறவுத்துறை லாபத்தில் இயங்கி வருகிறது. தமிழகத்தில் 147 நலிவடைந்த கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு நிதி ஒதுக்கி கொடுத்து அதன்மூலம் வரவு செலவு செய்து வருகின்றனர். ரே‌ஷன் கடை பணியாளர்களை நியமிக்க வேண்டுமானால் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அமைத்த பிறகு ரே‌ஷன் கடை பணியாளர்களுக்கு பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.

    கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு வரலாறு காணாத அளவிற்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை தனிப்பட்ட நிர்வாக அமைப்பு. இதனால் தமிழக அரசு நிதி ஒதுக்க முடியாது மேலும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். ஆனால் அந்த அமைப்பின் நிர்வாகக் குழு தீர்மானம் செய்து அவர்கள் நிதி ஒதுக்குவார்கள்.

    தமிழகத்தில் 22 ஆயிரத்து 265 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    இந்த தேர்தலில் ஒரு சில இடங்களில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்திருக்கும். ஆனால் கடந்த தி.மு.க ஆட்சியில் கூட்டுறவு சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டு பெரிய அளவிலான பிரச்சனைகள் ஏற்பட்டு அதன் காரணமாக கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறாமல் இருந்தது. ஆனால் விவசாய குடும்பத்தை சேர்ந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சத்தமில்லாமல் சாமர்த்தியமாக கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Gajacyclone #SellurRaju #EdappadiPalaniswami
    அ.தி.மு.க.வில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை நிச்சயம் உண்டு என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். #ADMK #SellurRaju
    மதுரை:

    மதுரை மாநகராட்சியின் 76-வது வார்டான பழங்காநத்தத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் மாநகராட்சி பள்ளிக்கு கூடுதல் கட்டிடம், ஆழ்துளை கிணறுகளை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எதிரிகள் வலுவாக இருந்தால் தான் அ.தி.மு.க.வினர் சுறுசுறுப்பாக பணியாற்ற வசதியாக இருக்கும். அந்த வகையில் கருணாநிதி வலுவான தலைவர் என்பதால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அவரை எதிர்த்து அரசியல் செய்தார்கள்.

    ஆனால் இன்றைக்கு உள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலுவான தலைவராக எங்களுக்கு தெரியவில்லை. அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் அரசியலுக்கு வந்துவிட்டார். அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.


    ஆனால் தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளிலும், எம்.பி.யாகவும் உள்ள கனிமொழிக்கு முக்கியத்துவம் இல்லை. வாரிசு அரசியலை தி.மு.க தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதனை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    பிரியாணி கடை, அழகு நிலையம் போன்ற இடங்களில் தி.மு.க.வினர் ரவுடித்தனத்தை காட்டி வருகின்றனர். இது போன்ற அராஜகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள். மதுரை ஆவின் நிறுவனத்தில் வெளியான புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    அ.தி.மு.க.வினர் புடம் போட்ட தங்கம் போன்றவர்கள். ஆனால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை நிச்சயம் உண்டு.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே யார் தவறு செய்தாலும் தயவு தாட்சண்யம் இருக்காது.

    மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல், பாராளுமன்றத்தேர்தல் தொடர்பான பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம் அண்மையில் நடந்தது. மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்திற்கு என்னை அழைத்தார்.

    கட்சி ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் அனுமதியோடு இந்த கூட்டம் நடத்தப்பட்டதால் நானும் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினேன்.

    அதே நாளில் பேரவை செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் எய்ம்ஸ் தொடர்பாக வேறு ஒரு நிகழ்ச்சியை நடத்தி உள்ளார். இதில் எங்களுக்குள் எந்த பூசலும் இல்லை. மற்ற வி‌ஷயங்களை வெளியே பேச முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அ.தி.மு.க. அரசு ஒரு போதும் அனுமதிக்காது.

    இவ்வாறு அவர் பேசினார். #ADMK #SellurRaju
    ரேசன் கடைகளில் முறைகேடுகளை தடுக்க கண்காணிப்பு கேமிரா பொருத்துவது குறித்து பரிசீலனையில் உள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். #ministersellurraju #rationshop

    மதுரை:

    மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட துவரிமானில் ரூ.8 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று திறந்து வைத்தார். கலெக்டர் நடராஜன் முன்னிலை வகித்தார். பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    துவரிமானில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ. 8 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் பயன்பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை வங்கி, கூட்டுறவு வங்கிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் 32, 909 ரேசன் கடைகள் உள்ளன. இங்கு விலையில்லா அரிசியும், சிறப்பு வினியோக திட்டத்தின் கீழ் பாமாயில், துவரை வழங்கப்பட்டு வருகிறது.

    முதல்-அமைச்சர் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் 25 இடங்களில் சிறு பல்பொருள் அங்காடி திறக்கப்பட்டுள்ளன. ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க வருபவர்களிடம் கைரேகை பதிவு செய்யப்படுகிறது.

    ரேசன் கார்டுக்கு பதிலாக ஸ்மார்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ரேசன் கடைகளில் முறைகேகடுகள் குறைந்துள்ளது. முழுமையாக முறைகேடுகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    ரேசன் கடைகளில் கண்காணிப்பு காமிரா பொருத்துவது குறித்து பரிசீலனையில் உள்ளது.

    எய்ம்ஸ் மருத்துவமனை ஆரம்ப பணியை தொடங்கியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அதன்பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எய்ம்ஸ்சை மதுரைக்கு கொண்டு வந்து சாதித்துள்ளார்.

    பாரதப்பிரதமர், தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு தான் இந்த வெற்றியில் பங்கு உள்ளது. அமைச்சர்களும், தொண்டர்களும் எய்ம்ஸ் கொண்டு வந்தது குறித்து பெருமை கொள்ளலாம். இந்த வெற்றிக்கு எந்தவித தனி நபரும் உரிமை கொண்டாட முடியாது.

    எய்ம்ஸ் தொடர்பான நிகழ்ச்சியில் நான் புறக்கணிக்கப்படுவதாக கூறுவதில் எந்தவிதமான உண்மையும் இல்லை. அ.தி.மு.க. கடல் போன்றது. இதில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகளை பார்த்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக திறப்புவிழா நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, திரவியம், எம்.எஸ்.பாண்டியன், பரவை ராஜா, சோலைராஜா, கலைச்செல்வம், பிரிட்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர். #ministersellurraju #rationshop

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தி என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார். #ministersellurraju #SenthilBalaji

    மதுரை:

    மதுரை மாநகராட்சியின் 91-வது வார்டான ஜெய்ஹிந்துபுரத்தில் ஆழ்துளை கிணறு, புதிய சாலை உள்ளிட்ட மக்கள் நலப்பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் நடராஜன், மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ்சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழா முடிந்ததும் அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கவுன்சிலராக இருக்கும் போது அ.தி.மு.க.விற்கு வந்தார். அம்மா இல்லாத நேரத்தில் அ.தி.மு.க.வை காக்க வேண்டிய அவர் இந்த நேரத்தில் நிறம் மாறி தி.மு.க.வுக்கு சென்று விட்டார்.

    செந்தில்பாலாஜி அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தி. அவர் அ.தி.மு.க. எனும் மாபெரும் இயக்கத்திற்கு வந்தார், போனார் என்ற அடிப்படையில் தான் பார்க்கிறோம். அவர் ஒன்றும் தியாகி கிடையாது. அவரை பொறுத்தவரை ஒரு சுயநலவாதி.

    அம்மா தனது ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக அவரை அமர்த்தி அழகுபார்த்தவர். தி.மு.க. ஊழல் இல்லாத கட்சி என்று மு.க.ஸ்டாலின் பறை சாற்றி வருகிறார். ஆனால் ஊழலின் ஊற்றுக்கண்ணாக திகழ்பவர் செந்தில்பாலாஜி. அவர் மீது பல வழக்குகள் உள்ளன. எப்படி அவரை ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்?

    ஒரு ஊழல் கட்சி, ஊழல்வாதியை ஏற்றுக்கொள்வது சர்வ சாதாரணம் தான்.

    இது போன்று தான் செல்வகணபதி, ரகுபதி போன்றவர்கள் எங்களிடம் இருக்கும்போது நல்லவர்களாக இருந்தார்கள். தி.மு.க.வில் சேர்ந்தபின்னர் ஊழல்வாதிகளாக மாறி விட்டனர்.

    நாங்கள் அம்மா வழியில் சிறப்பாக செயலாற்றி வருகிறோம். தினகரன் அணியை பொருட்படுத்த மாட்டோம். அம்மாவின் கொள்கையை ஏற்றுள்ள எந்த தொண்டனும் தி.மு.க.வுக்கு போக மாட்டார்கள். தி.மு.க.வில் சேருவது என்பது தற்கொலைக்கு சமமானது.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி கஜா புயல் நிவாரணப்பணியில் அமைச்சர்களை ஈடுபடுத்தி மக்களுக்கு தேவையானதை செய்தார். மத்திய அரசை எதிர்பார்க்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறோம்.

    தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து மத்திய அரசுக்கு கடிதம் மற்றும் மத்தியக்குழுவின் மூலம் முதல்-அமைச்சர் வலியுறுத்தி நிவாரண நிதியை பெற நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    பிரதமர் சேதமடைந்த பகுதியை பார்ப்பது என்பது ஒரு பொருட்டல்ல. ஆனால் சேதத்திற்குரிய நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்பது தான் எங்களின் எதிர்பார்ப்பாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நலத்திட்டங்களை தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் புதூர் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, முன்னாள் மேயர் திரவியம், எம்.எஸ்.பாண்டியன், பரவை ராஜா, சோலைராஜா, பைக்காரா கருப்புசாமி, பிரிட்டோ, கலைச்செல்வம், ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கமல்ஹாசன் இன்னும் கற்றுக்கொண்டு அரசியலுக்கு வரவேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #TNMinister #sellurRaju #KamalHaasan
    மதுரை:

    மதுரையில் இன்று அமைச்சர் செல்லூர்ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    கமல் தூய்மையானவர் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. நடிப்பு உலகத்தில் அவர் சிறந்த கலைஞர், தமிழன், அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. உலகநாயகன் நடிப்பில் சிறந்த மேதை.

    ஆனால் அவரது வாழ்க்கையை பொறுத்தவரை தூய்மையானவர் இல்லை. இதுவரை எந்த மக்கள் பணியும் ஆற்றவில்லை.

    சினிமாவில் நடித்து விட்டு எல்லோரும் முதல்- அமைச்சராக வேண்டும் என்று நினைப்பது சரியில்லை. தமிழக மக்களுக்கு அவர் இதுவரை என்ன செய்தார்.


    நடிகர் வருகிறார் என்பதற்காகவும், அவர் வெள்ளைத்தோல் என்பதாலும் கூட்டம் கூடுகிறது.

    ஸ்டெர்ட்லைட் விவகாரத்தில் தமிழக அரசு சரியான நிலைப்பாட்டில் தான் உள்ளது என்று தெரிவித்தார்.

    பொதுமக்களை அனைத்து பகுதியிலும் சென்று பார்த்துவிட்டு அதற்குப் பிறகு கமல்ஹாசன் பேச வேண்டும். எங்கும் செல்லாமல் எங்கோ இருந்துகொண்டு அ.தி.மு.க. அரசு துருப்பிடித்த அரசு என்று கூறுவது சரியானது கிடையாது.

    அவர் குடும்ப வாழ்க்கையிலும் சரி பொது வாழ்க்கையிலும் சரி நிறைவான எந்த ஒரு அரசியல் தலைவர் என்ற பணியையும் செய்யவில்லை. மக்கள் மையம் என்று ஆரம்பித்துவிட்டு அதிலிருந்து நிறைய அறிவாளிகள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் மனம் புண்படும் வகையில் அவரது நடைமுறைகள் உள்ளதாக இருக்கிறது.

    அவர் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் அவர் நடிப்பு உலகிற்கு செல்லட்டும் அவருக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. அரசியலுக்கு அவர் இன்னும் கற்றுக் கொண்டு வரவேண்டும். தமிழிசை சவுந்தரராஜன் எதிர்க்கட்சிகளை தான் குறை சொல்லி இருக்கிறார்

    நம்பிக்கைதான் வாழ்க்கை. நிவாரணப் பணிகளை தமிழக அரசு வேகமாகச் செய்து வருகிறது. பிரதமரை சந்தித்து முதலமைச்சர் புயலின் தாக்கத்தை பற்றியும் சேதாரம் குறித்தும் விளக்கமாக எழுதி கொடுத்துள்ளார்.

    பிரதமர் காலம் தாழ்த்தாமல் மத்தியகுழுவை அனுப்பி வைத்தார், மத்திய குழு அனைத்து பகுதியையும் பார்வையிட்டு சென்றனர். அவர்களிடம் மக்கள் தாங்கள் 25 ஆண்டு காலம் பின்னோக்கி சென்று விட்டதாகவும் அதை சமாளித்து வருவதற்கு இயல்பு நிலைக்கு வருவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகாலம் ஆகுமோ என்று கூறினர்.

    தமிழக அரசு யாருக்கும் அடிபணிந்து செல்ல வேண்டியது இல்லை நாங்கள் யாருக்கும் அடிமையாக இல்லை மத்திய அரசின் திட்டங்களை பெறவும் நிவாரண தொகையை பெறுவதற்கும் சுமூகமாக சென்று வருகிறோம்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #TNMinister #sellurRaju #KamalHaasan
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரேசன் பொருட்கள் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். #gajacyclone #ministersellurraju

    திருவாரூர்:

    திருவாரூர் நகராட்சி தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணைய அலுவலகத்தில் மாவட்டத்தில் கஜா புயலினால் பாதிக்கபட்ட பகுதிகளில் நிவாரண பணிகளின் முன்னேற்றம் மற்றும் எடுக்கபட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மற்றும் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில் நடைபெற்றது

    இக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை பொது விநியோகத் திட்டம் சிறப்பாக இயங்கி வருகிறது. ஏற்கனவே முதல்-அமைச்சர் உத்தரவின்படி முன்கூட்டியே 3 மாதத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் நியாய விலைக்கடைகளில் இருப்பு வைக்கபட்டது. அந்த வகையில் அடுத்த மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய குடிமை பொருட்கள் இந்த மாதமே வாங்கி கொள்ளலாம். மேலும் விவசாயிகள் நிறைந்த மாவட்டமான இம்மாவட்டத்தில் பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகள் சேருவதற்கு கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற காலதாமதமானால், உடனடியாக வட்டார உதவி வேளாண்மை அலுவலரிடம் பயிர் சான்றிதழ் பெறலாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் என்ற முறையில் அல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களோடு இணைந்து நிவாரண பணிகள் மேற்கொண்டு வருகிறோம்.

    கஜா புயலினால் கூட்டுறவு நியாயவிலைக்கடைகளில் பாதிப்புகள் இருந்தால் கடைகள் உடன் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படுவதுடன், மாற்றம் செய்யப்பட்ட கடைகளின் முகவரிகள் குறித்து பழுதடைந்த நியாயவிலைக்கடைகளில் குறிப்பிட வேண்டும்.

    நியாய விலைக்கடைகளில் பொருள் இல்லாத நிலை கவனிக்கப்பட வேண்டும். அவ்வாறு பொருள் இல்லாத நிலை கண்டறியப்பட்டால் உடனடியாக முன்னுரிமை அளித்து பொருள்கள் அந்த நியாய விலைக்கடைகளுக்கு முதலில் நகர்வு செய்யப்பட வேண்டும்.

    நியாய விலைக்கடைகளில் மின்சாரம் இல்லாத நிலையில் மின்னணு தராசில் பொருட்கள் எடையிட்டு பொருட்கள் வழங்க இயலாத நிலையில் சாதாரண எடை தராசு, மேடை தாராசு கொண்டு பொருட்களை எடையிட்டு வழங்கலாம். இம்மாவட்டத்தினை பொறுத்த வகையில் 529 முழு நேர நியாய விலை கடைகளும், 142 பகுதி நேர நியாய விலை கடைகளும் உள்ளன. இவைகள் அனைத்தும் கட்டாயம் திறந்திருக்க வேண்டும், அனைத்து பொருட்களும் தடையின்றி மக்களுக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #gajacyclone #ministersellurraju

    தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மு.க.ஸ்டாலின் பாராட்டியது வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். #GajaCyclone #MinisterSellurRaju
    மதுரை:

    கஜா புயல் தொடர்பான முன்னெச்சரிகை நடவடிக்கைகளில் தமிழக அரசை பாராட்டியுள்ள மு.க.ஸ்டாலின் குறித்து மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயல் தொடர்பான தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டியது வரவேற்கத்தக்கது. மு.க.ஸ்டாலின் தமிழக அரசை வாழ்த்தியுள்ளது ஆரோக்கியமான அரசியலை காட்டுகிறது.


    சிறந்த பணியை மேற்கொள்ளும் போது அதனை வாழ்த்துவது அரசிற்கு உற்சாகத்தை தரும். குறை உள்ளபோது அதனை சுட்டிக்காட்டுவதும், சிறந்த பணி மேற்கொள்ளும்போது வாழ்த்துவதும் உற்சாகத்தை தரும்.

    இதே நிலை தொடர வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GajaCyclone #MinisterSellurRaju
    மக்கள் நல திட்டங்களை எரிக்கும் காட்சியில் நடிகர் விஜய், முருகதாஸ் நடித்தது மன்னிக்க முடியாத குற்றம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #ADMK #SellurRaju #sarkar
    மதுரை:

    சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் காட்சிகள் கடும் சர்ச்சையை உருவாக்கி உள்ள நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-


    அருமை தம்பி விஜய் நல்ல நடிகர், எதிலும் முத்திரை பதிக்க வேண்டும் என நினைப்பவர்.  ஆனால் சர்கார் படத்தில் மக்கள் நல திட்டங்களை எரிக்கும் காட்சியில் நடிகர் விஜய், முருகதாஸ் நடித்தது மன்னிக்க முடியாத குற்றம். ஜெயலலிதா இருக்கும்போது மக்கள் நல திட்டங்களை வாழ்த்தி பேசிய விஜய், இப்போது படத்தில் எதிர்க்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ADMK #SellurRaju #sarkar
    அ.தி.மு.க.வுக்கு பெண் தலைமை தாங்குவார் என்று சசிகலாவைத்தான் அமைச்சர் செல்லூர் ராஜூ குறிப்பிட்டார் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran #Sasikala #SellurRaju
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி. வி.தினகரன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.விற்கு விரைவில் பெண்மணி தலைமை தாங்கிடும் நிலை வரும் என்று செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார். ஏற்கனவே பொதுச்செயலாளராக பெண்மணிதான் தலைமையில் இருக்கிறார். செல்லூர் ராஜூ சூசகமாக சொல்வது, மற்றவர்களை விட அவருக்கு நன்றி உணர்வு அதிகமாக உள்ளதாக தெரிகிறது.

    மற்றவர்கள் எல்லாம் பொதுச்செயலாளரை பெயர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு தைரியம் உள்ளவர்கள் போன்று காண்பிக்கின்றார்கள்.

    அவரோ இன்று வரை சின்னம்மா என்று மரியாதையாக அழைக்கின்றார். மனதில் உள்ளதை சொல்லியுள்ளார். பெண்மணி தலைமையில் வரவேண்டும் என்று கூறி உள்ளார்.


    ஏற்கனவே அம்மாவின் காலத்தில் அ.தி.மு.க. ஒரு பெண்மணி தலைமையில்தான் இருந்தது. இப்போதும் கட்சியில் பொதுச்செயலாளராக இருப்பதும் பெண்மணி தலைமைதான். சசிகலா பொதுச்செயலாளராக உள்ளார். அதில் எந்த மாற்றமும் கிடையாது.

    முதல்- அமைச்சரை மாற்ற வேண்டும் என்பதுதான் 18 எம்.எல்.ஏ.க்கள் விருப்பம். அது தொடர்பாக ஒரு நெறியாளர் என்னிடம் கேட்டபோது அப்போது நான் சொன்னேன் அரசாங்கத்தின் மீது ஊழல் என்றால் தனிப்பட்டது. அமைச்சர்கள் 10, 12 பேர் மீதுதான் ஊழல் குற்றச்சாட்டுகள் உறுதியாகி உள்ளது.

    எனவே அவர்களை நீக்கி விட்டால் இவர்கள் ஆட்சி அமைக்க முடியும் என்று சொன்னேன். ஒருவேளை 33 பேரும் ஊழல்வாதிகள் என்றால் அதில் மாற்றம் கொண்டு வர முடியும் என்றால் கொண்டு வருவார்கள். இல்லை என்றால் தேர்தல்தான் வரும் என்று சொன்னேன்.

    முதல்-அமைச்சர் மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள்.

    இதில் கட்சிக்கு என்ன வேண்டி கிடக்கிறது. டி.வி.ஏ.சி. (கண்காணிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்குநரகம்) தொடரும் என்று சொல்வதற்கு இவர்களுக்கு அதிகாரம் கிடையாது.

    டி.வி.ஏ.சி.யை தலைமை ஏற்றிருப்பவர் யார் என்றால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான முருகன்தான். அவர் சொல்வதற்கு தயாராக இருக்கின்றாரா? என்று தெரியவில்லை. பொன்னையன் எப்படி சொல்ல முடியும். உடனே மறுநாள் மாற்றி பேசுகிறார்.


    ஜெயக்குமார் தினந்தோறும் பேட்டி தருவாரே? அவரை ஏன் காணவில்லை? என்ன காரணம்? அதைப் பற்றி ஏன் ஊடகத்தார் சொல்ல மாட்டீர்களே? பழனிசாமி விவகாரத்தில் வாயை திறக்காமல் ஏன் அமைதியாக இருக்கிறார்.

    டி.வி.ஏ.சி. சரியாக விசாரிக்கவில்லை என்பதால் தான் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்கள். அதனால்தான் பொன்னையன் தவறுதலாக பேசி விட்டு இப்போது வாபஸ் பெறுகிறார்.

    சி.பி.ஐ. விசாரணைக்கு ஆளாகியுள்ள பழனிசாமி தார்மீகப் பொறுப்பேற்று முதல்-அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தியது.

    ஆனால் தார்மீகப் பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலகும் பெருந்தன்மை, தைரியம் கிடையாது. அவர் அது போன்று நடந்து கொள்ள மாட்டார். ராஜினாமா செய்ய மாட்டார்.

    தானாக சி.பி.ஐ. விசாரணை செய்து அதில் வழக்குப்பதிவு செய்து வழக்கு நடைபெற்று கைது செய்யும் அளவுக்கு சென்றால்தான் அவர் முதல்-அமைச்சர் பதவியில் இருந்து இறங்குவார். அவரிடம் அதுபோன்ற பெருந்தன்மையை எதிர்பார்க்க முடியாது.

    எதிர்க்கட்சியை விட எங்களுக்கு பழனிசாமியை பற்றி நன்றாக தெரியும். நிச்சயம் பழனிசாமி முதல்- அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார்.

    இவ்வாறு தினகரன் கூறினார். #TTVDhinakaran #Sasikala #SellurRaju
    ×