search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "march"

    • ஜி.வி. பிரகாஷ் அடுத்ததாக நடித்திருக்கும் படம் "டியர்"
    • டியர்" படம் வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது

    நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், மமிதா பைஜூ முன்னணி கதாப்பாத்திரங்களாக நடித்து மார்ச் 22 ஆம் தேதி வெளியாகியது ரெபெல் திரைப்படம். இந்த படம் மக்களிடையே கலந்த விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

    ஜி.வி. பிரகாஷ் அடுத்து நடித்த கள்வன் திரைப்படம் ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகிறது. பாரதிராஜா, இவானா மற்றும் தீனா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் அடுத்ததாக நடித்திருக்கும் படம் "டியர்". "செத்தும் ஆயிரம் பொன்" படத்தை இயக்கிய ஆனந்த் ரவிசந்திரன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். ஐஷ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷும் ஐஷ்வர்யா ரஜேஷும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் பாடலான 'மஜா வெட்டிங்' என்ற பாட்டின் ப்ரோமோ வீடியோவை இன்று மாலை வெளியிடுகிறார்கள்.

    பாட்டின் முழு வீடியோவை நாளை வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்."டியர்" படம் வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • WIFE’ படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
    • 'WIFE’ என்ற தலைப்பை இதற்கு முன் எந்தத் திரைப்படத்திற்கும் பயன்படுத்தப்படவில்லை என்ற விஷயம் தெரிய வந்தபோது ஆச்சரியமாக இருந்தது.

    அறிமுக இயக்குநர் ஹேமநாதன் ஆர் இயக்கத்தில் மிர்ச்சி விஜய் மற்றும் அஞ்சலி நாயர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'WIFE' படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    படத்தின் தலைப்பு மற்றும் கதையின் முக்கியத்துவம் பற்றி இயக்குநர் ஹேமநாதன் ஆர் கூறுகையில், "கணவன் - மனைவிக்கு இடையிலான நவீன உறவை மையமாகக் கொண்டது இந்தப் படம்.

    அதனாலேயே இந்தத் தலைப்பை நாங்கள் தேர்வு செய்தோம். சதுரங்க விளையாட்டில் ஒரு ராணிக்கு எப்படி அசைக்க முடியாத ஒரு சக்தி இருக்கிறதோ அதுபோலவே, ஒவ்வொரு வீட்டிலும் மனைவி ஒரு குடும்பத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

    திருமணத்திற்குப் பிறகு மலரும் அன்பை எமோஷனலாக கதையில் எடுத்து வருவதே என் நோக்கம். 'WIFE' என்ற தலைப்பை இதற்கு முன் எந்தத் திரைப்படத்திற்கும் பயன்படுத்தப்படவில்லை என்ற விஷயம் தெரிய வந்தபோது ஆச்சரியமாக இருந்தது.

    அப்படி பயன்படுத்ததாது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன். எல்லா வயதினரும் இந்தப் படத்துடன் கனெக்ட் செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்றார்.

    பல படங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மிர்ச்சி விஜய் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் நடித்து வெளியான அடியே படத்தில் மிர்ச்சி விஜய் சிறப்பாக நடித்து இருந்தார்.

    விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட 'டாணாக்காரன்' படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் புகழ் பெற்ற அஞ்சலி நாயர் இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மைத்ரேயன், ரெடின் கிங்ஸ்லி, கல்யாணி நடராஜன், விஜய் பாபு, லல்லு, கதிர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    கே.ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார் மற்றும் சிவசங்கர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜான்வி கபூர் திருப்பதி வந்தது முதல் விமானத்தில் கேக் வெட்டி கொண்டாடியது வரை அவரது காதலன் ஷிகா பஹிரியா தனது செல்போனில் வீடியோ போட்டோக்களாக பதிவு செய்து இருந்தார்.
    • ஜான்வி கபூர் தனது காதலனுடன் முட்டி போட்டபடி மலை பாதையில் உள்ள படிக்கட்டில் 3 மணி நேரம் ஏறி சென்றார்.

    நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் தற்போது இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

    ஜான்வி கபூர் தனது தாயைப் போலவே அடிக்கடி ஆன்மீக சுற்றுலாவாக கோவில்களுக்கு சென்று வருகிறார்.

    அதன்படி ஜான்வி கபூர் தனது பிறந்த நாளை முன்னிட்டு அவரது காதலன் என கூறப்படும் ஷிகா பஹாரியா மற்றும் அவரது நண்பர் ஓரியுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார்.

    ஜான்வி கபூர் மற்றும் அவரது காதலன் இருவரும் வெள்ளை நிற பேண்ட், வெளிர் நிறத்தில் குர்தாவும் அணிந்து இருந்தனர்.

    பின்னர்ஜான்வி கபூர் தனது காதலனுடன் முட்டி போட்டபடி மலை பாதையில் உள்ள படிக்கட்டில் 3 மணி நேரம் ஏறி சென்றார். அதன் பிறகு முட்டி போட்டபடி செல்ல சிரமம் அடைந்ததால் நடந்து சென்றார்.

    ஜான்வி கபூரை அடையாளம் கண்ட பக்தர்கள் அவருடன் சேர்ந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்த பிறகு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

     

     

    விமானத்திலேயே கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். ஜான்வி கபூர் திருப்பதி வந்தது முதல் விமானத்தில் கேக் வெட்டி கொண்டாடியது வரை அவரது காதலன் ஷிகா பஹிரியா தனது செல்போனில் வீடியோ போட்டோக்களாக பதிவு செய்து இருந்தார். அவரது செல்போன் பதிவுகளை தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் Sk23 படத்தை இயக்குகிறார்.
    • இதுகுறித்து ஏ.ஆர் முருகதாஸ் சமூக வலைத்தளங்களில் பதிவினை பகிர்ந்துள்ளார்.

    ஏ.ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர். விஜய்-க்கு திருப்பு முனையாக அமைந்த துப்பாக்கி மற்றும் கத்தி படத்தை இயக்கினார். மக்கள் மனதில் என்றும் ஏ.ஆர் முருகதாஸ் படங்களுக்கு என்றும் எதிர்பார்ப்புண்டு.

    கடைசியாக அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த தர்பார் திரைப்படம் பெரிதாக வசூல் இல்லை.

    பின் ஏ.ஆர் முருகதாஸ் சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் வெளிவந்த அகிரா படத்திற்கு பிறகு சல்மான் கானை வைத்து பேன் இந்தியன் படத்தை இயக்கிக் கொண்டு வருகிறார். அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு இந்த படத்தை வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் Sk23 படத்தை இயக்குகிறார். ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இந்நிலையில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான ரமணா படத்தின் லொகேஷனுக்கு 23 வருடங்களுக்கு பிறகு சென்றுள்ளார். Sk23 படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது சென்னை திருமயிலை ரயில் நிலையத்தில் நடைப்பெற்று வருகிறது.

    இதுகுறித்து ஏ ஆர் முருகதாஸ் சமூக வலைத்தளங்களில் பதிவினை பகிர்ந்துள்ளார். அதில் "23 வருடங்களுக்கு பிறகு Sk23 படத்தின் ஷூட்டிங்கிற்காக ரமணா படம் எடுத்த அதே லொகேஷனுக்கு வந்து இருக்கிறேன், எங்கு ஆரம்பித்ததோ அங்கேயே வந்து நிக்கிறேன் இது கனவா? நிஜமா? என்று தெரியவில்லை". மிஸ் யூ கேப்டன் என உருக்கமான பதிவினை பகிர்ந்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • "டியர்" படம் வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது
    • "செத்தும் ஆயிரம் பொன்" படத்தை இயக்கிய ஆனந்த் ரவிசந்திரன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்

    ஜிவி பிரகாஷ் நடிப்பில் நிகேஷ் இயக்கத்தில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் "ரெபெல்". இந்த படம் வெளியாகி மக்களிடையே கலந்த விமர்சனங்களை பெற்று வருகிறது.

    இதை அடுத்து, ஒளிப்பதிவாளர் பி. வி சங்கரின் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் "கள்வன்". ஜனவரி மாதம் இப்படத்தின் டீசர் வெளியானது. பாரதிராஜா, இவானா மற்றும் தீனா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 4 வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் அடுத்ததாக நடித்திருக்கும் படம் "டியர்". "செத்தும் ஆயிரம் பொன்" படத்தை இயக்கிய ஆனந்த் ரவிசந்திரன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். ஐஷ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷும் ஐஷ்வர்யா ரஜேஷும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது.

    மனைவி குறட்டை சத்தத்தினால் அவதிப்படும் கணவனை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    "டியர்" படம் வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஜிவி பிரகாஷிற்கு அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளதால், ரசிகர்கள் உற்சகத்தில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கல்லூரியில் படித்து கொண்டே பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கும் இளைஞரின் வறுமையை உணர்ந்து அந்த மாணவருக்கு பைக்கை பரிசாக பாலா வழங்கினார்.
    • நடிகர் பாலா ஏழை இளைஞருக்கு பைக் வழங்கிய சம்பவத்தை பொம்மையாக உருவாக்கி உள்ளார்

    சின்னத்திரை காமெடி நடிகராக லட்சக் கணக்கானோர் மனதில் இடம் பிடித்தவர் பாலா. இவரது சமூக சேவை பணிகள் வைரலாகி வருகின்றன.

    அந்த வகையில் மேல்மருவத்தூரில் கல்லூரியில் படித்து கொண்டே பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கும் இளைஞரின் வறுமையை உணர்ந்து அந்த மாணவருக்கு பைக்கை பரிசாக பாலா வழங்கினார்.

    அனைவராலும் பாராட்டப்பட்ட இதனை செய்தியாக கடந்து விடாமல் கலை சிற்பமாக மாணவர் ஒருவர் வடிவமைத்துள்ளார். புதுச்சேரி சேலியமேடு கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர் ஜெகதீஷ் கலை பொம்மையாக மாற்றியுள்ளார்.

    பள்ளியின் நுண்கலை ஆசிரியர் உமாபதி கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களுக்கு கிராமங்களில் கிடைக்கும் பயனற்ற தேங்காய் குருமி,தென்னை நார், சுரக்காய் குடுவை போன்றவற்றைக் கொண்டு கலைநயமிக்க பொம்மைகளை உருவாக்கும் பயிற்சி அளித்து வந்தார்.

     

    இதில் பயிற்சி பெற்ற மாணவர் ஜெகதீஷ்,நடிகர் பாலா ஏழை இளைஞருக்கு பைக் வழங்கிய சம்பவத்தை பொம்மையாக உருவாக்கி உள்ளார்.இந்த பைக் பொம்மையை பாலாவுக்கு தான் தர விரும்புவதாக கூறியுள்ளார்.

    தான் சென்னைக்கு செல்ல இயலாது என்ற காரணத்தினால் புதுச்சேரிக்கு நடிகர் பாலா எப்பொழுது வருகிறாரோ அப்போது தருவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வினீத் ஸ்ரீனிவாசன் அடுத்த படைப்பாக ”வருஷங்களுக்கு சேஷம்” என்ற படத்தை இயக்கியுள்ளார்
    • தியான், அஜூ வர்கீஸ், பேசில் ஜோசப், நீரஜ் மாதவ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

    'மலர்வாடி ஆர்ட்ஸ் க்லப்' என்ற மலையாள படத்தின் மூலம் மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார் வினீத் ஸ்ரீனிவாசன். 2012 ஆம் ஆண்டு வெளியான தட்டத்தின் மறையத்து படத்தை இயக்கினார்.

    இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்தது. மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. மக்களிடம் வினீத் ஸ்ரீனிவாசன் பிரபலம் அடைய தொடங்கினார்.

    இவர் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் முன்னணி கதாப்பாத்திரமாக நடித்து ஹ்ருதயம் படம் 2022 ஆம் ஆண்டு வெளியானது. மக்களிடையே மிகவும் வரவேற்கப்பட்டது. இளைஞர்கள் மத்தியில் ஹ்ருதயம் படம் கொண்டாடப்பட்ட இப்படம் தமிழக மக்களாலும் ரசிக்கபட்டது.

    அடுத்ததாக வினீத் ஸ்ரீனிவாசன் அடுத்த படைப்பாக "வருஷங்களுக்கு சேஷம்" என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெயிலர் நேற்று வெளியானது.

    ஹ்ருதயம் வெற்றிக்கு பிறகு பிரணவ் மோகன்லால் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடித்துள்ளனர். அவர்களுடன் தியான், அஜூ வர்கீஸ், பேசில் ஜோசப், நீரஜ் மாதவ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

    80 களில் படம் நடப்பதாக காண்பிக்கபடுகிறது. இரு நண்பர்கள் பிரணவ் மற்றும் தியானும் மிகப்பெரிய நடிகர்கள் ஆக வேண்டும் என்ற கனவோடு கேரளாவிலிருந்து சென்னை கோடம்பாக்கம் வருகின்றனர். வந்த இடத்தில் அவர்களுக்கு சினிமா துறையின் உண்மை முகம் தெரிய வருகிறது, மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அதில் தியான் பிரணவினால் நம்பிக்கை துரோகம் செய்யப்படுகிறான்.

    இவர்கள் திரைதுறையில் சாதித்தார்களா என்பதே கதை. டிரெயிலர் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது. படத்தை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்பை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்தின் டிரெயிலர் வெளியானதில் இருந்து ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    விசாக் சுப்பிரமணியனின் மெரிலேண்ட் சினிமாஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். அமிரித் ராம்நாத் இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். ஏப்ரல் 11 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடவுள் கிருஷ்ணரின் 10 ஆவது அவதாரமான கல்கி அவதாரத்தை மையப்படுத்தி அறிவியல் புனைவு படமாக இப்படம் உருவாகி வருகிறது
    • இப்படத்தில் தற்பொழுது பிரபாஸுக்கு எதிராக சர்ச்சை கிளம்பியுள்ளது

    தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகருள் ஒருவர் பிரபாஸ். எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான பான் இந்தியன் படமான பாகுபலி படத்தில் நடித்தார். இந்திய சினிமாவில் 1000 கோடி வசூலித்த படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்தில் இருந்து பிரபாஸின் புகழ் உச்சத்திற்கு சென்றது முதல் பேன் இந்தியன் ஸ்டார் என பெயரைப் பெற்றார்.

    2019 ஆம் ஆண்டு சாஹோ படத்தில் நடித்தார், 2023 ஆம் ஆண்டு சலார் படம் நடித்தார். பாகுபலி படத்திற்கு அடுத்து நடித்த பான் இந்தியன் படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்தது.

    இந்நிலையில் அடுத்ததாக பிரபாஸ் கல்கி 2898 என்ற படத்தில் நடித்து வருகிறார். கடவுள் கிருஷ்ணரின் 10 ஆவது அவதாரமான கல்கி அவதாரத்தை மையப்படுத்தி அறிவியல் புனைவு படமாக இப்படம் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.

    டோலிவுட் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கும் இப்படத்தினை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவரான நடிகர் கமல்ஹாசன் வில்லனாக இப்படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிக்கவிருக்கிறார்.

    இது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளைக் ஏற்படுத்தியுள்ளது.

    கல்கி 2898 ஏடி மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கபட்டு வருகின்றது. ரூ.600 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

    சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தில் தற்பொழுது பிரபாஸுக்கு எதிராக சர்ச்சை கிளம்பியுள்ளது

    நடிகர் பிரபாஸ் கல்கி படத்தின் படப்பிடிப்பில், தினந்தோறும் அசைவம் சாப்பிடுவதாகவும், கடவுள் விஷ்ணுவின் கடைசி அவதாரமான கல்கி அவதாரத்தில் நடிக்கும் பிரபாஸ் இப்படி அசைவம் சாப்பிட்டு கடவுள் அவதாரத்தில் நடிப்பது தவறு என்று பிரபல பாலிவுட் விமர்சகர் கமல் ஆர் கான் {கேஆர்கே} அவரின் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ”கேங்க்ஸ் குருதி புனல்” என்ற வெப் சீரிஸின் ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் ப்ரைம் வாங்கியுள்ளது
    • நடிகர் அசோக் செல்வன், சத்யராஜ், நிமிஷா சஜயன், ரித்திகா சிங், ஈஸ்வரி ராவ் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

    ஓடிடி தளத்தில் முதன்மை தளமான அமேசான் ப்ரைம் வீடியோ மார்ச் 20 ஆம் தேதி மும்பையில் "ப்ரைம் வீடியோ பிரசண்ட்ஸ்" என்ற விழாவை நடித்தினர். இவ்விழா மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் பங்கேற்றனர்.

    2024 ஆம் ஆண்டில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் என்னனென்ன படங்கள் இடம்பெற போகிறது என்பதை அறிவிப்பதற்காகவே இந்த விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் அடுத்த ஆண்டு வெளியாகும் 69 படங்கள் மற்றும் வெப் சீரிஸ் பற்றிய தகவல்களை வெளியிட்டனர்.

    தமிழ் சினிமாவில் மிகவும் எதிர் பார்க்கப்படும் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் கங்குவா படத்தை 80 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் "கேங்க்ஸ் குருதி புனல்" என்ற வெப் சீரிஸின் ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் ப்ரைம் வாங்கியுள்ளது. நடிகர் அசோக் செல்வன், சத்யராஜ், நிமிஷா சஜயன், ரித்திகா சிங், ஈஸ்வரி ராவ் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

    இக்கதை 70 காலக்கட்டத்தில் நடக்கும் நாடகமாகும், ஒரு துறைமுக நகரத்தின் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலுக்குள் பழிவாங்கும் மற்றும் அதிகாரத்தை மீட்டெடுக்கும் ரத்தப் போராட்டமாக இக்கதைக்களம் அமைந்துள்ளது.

    ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இந்த வெப் சீரிஸ்சில் கிரியேட்டிவ் ப்ரொட்யூசராக பணியாற்றி இருக்கிறார். நோவா இக்கதையை இயக்கியுள்ளார். இக்கதையை நோவாவுடன் சேர்ந்து தமிழ் பிரபா மற்றும் பிரபு காளிதாஸ் எழுதியுல்ளனர். கேங்க்ஸ் குருதி புனல் வெப்சீரிசின் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கபடவில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கதிர் நடித்திருந்தார்
    • கதிர், மாணவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்

    நடிகர் கதிர் 2013-ம் ஆண்டு வெளியான மதயானைக்கூட்டம் படத்தின் மூலமாக நாயகனாகி அறிமுகமானார். அதன் பின்னர் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம், நல்ல நடிகர் என்ற பெயர் வாங்கினார்.

    பின்னர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கதிர் நடித்திருந்தார். அடுத்ததாக அமேசான் பிரைமில் வெளியான சூழல் வெப் தொடரில் நடித்திருந்தார். விரைவில் சுழல் 2-ம் பாகம் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் கதிர், மாணவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்..இப்படத்தை எஸ்.எல்.எஸ் ஹென்றி இயக்குகிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றிந்தது. இப்படத்தை பார்ச்சூன் ஸ்டுடியோஸ் மற்றும் எமினன்ட் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

    தற்போது, இப்படத்தின் முதல் பாடலாக கொல்லுறாளே என்கிற பாடல் இன்று மாலை வெளியாகியது. இப்பாடலை சந்துரு வரிகளில் பிரதீப் குமார் பாடியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • அப்படத்தில் ரஜினிக்கு மருமகளாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் மிர்னா மேனன்.
    • மிர்னாவின் நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது

    நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2023-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜெயிலர். இப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ரஜினி முற்றிலும் மாறுப்பட்ட நடிப்பை வெளிப்படுத்திருப்பார். அப்படத்தில் ரஜினிக்கு மருமகளாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் மிர்னா மேனன்.

    இவர், 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த 'பட்டதாரி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். படம் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், மிர்னாவின் நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது.

    பின் 2020 ஆம் ஆண்டு மோகன் லால் நடிப்பில் வெளிவந்த 'பிக் பிரதர்'படத்தில் நடித்தார். 2023 ஆம் ஆண்டு க்ரேசி ஃபெல்லோ' மற்றும் உக்ரம் போன்ற படத்திலும் நடித்தார் மிர்னா மேனன்.

    இந்நிலையில் இன்று மிர்னா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பார்கோர் ஸ்டண்ட் பயிற்சி செய்வதுப் போன்று ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் ஓடுவதும், குதிப்பதும், தலை கீழாக சுழலுவதும் பிரமிக்க வைக்கின்றது.

    தற்போது இப்பதிவு இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 47 வருடங்களாக இசைத் துறையில் யாரும் தொட முடியாத உச்சத்தில் இருப்பவர் இசைஞானி இளையராஜா
    • பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்று இருக்கிறார் இளையராஜா

    47 வருடங்களாக இசைத் துறையில் யாரும் தொட முடியாத உச்சத்தில் இருப்பவர் இசைஞானி இளையராஜா. இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார். இளையராஜாவை இசை ஞானி என்றும் , மேஸ்ட்ரோ என்றும் அழைப்பர். பல விருதுகளை வென்று இருக்கிறார் இளையராஜா. பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றுள்ளார்.

    வசீகரிக்கும் மெல்லிசைகளை உருவாக்குவதில் புகழ்பெற்ற இசை மேஸ்ட்ரோ இளையராஜா, இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் இசை ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமானவர். இப்போது, அவரது பணியை நினைவுகூரும் வகையில், அவரது வாழ்க்கை பற்றிய பயோபிக் உருவாகிறது.

    இப்படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும், இத்திரைப்படத்தில் இளையராஜா இசையமைப்பாளர் ஆவதற்கு முன் அவர் பயணித்த வாழ்க்கையை எடுத்துக்காட்டும் விதமாக இருக்கும் என கூறப்படுகிறது. படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குவார் என சொல்லப்படுகிறது.

    சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்தை இவர் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மார்ச் 20 ஆம் தேதி லீலா பேலசில் படப்பிடிப்பை துவங்கவுள்ளனர். 2025 ஆம் ஆண்டு வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், நாளை மதியம் 12.30 மணிக்கு ஒரு அற்புத பயணம் தொடங்குகிறது என்னு தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது இளையராஜா பயோபிக் படமாக தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    ×