search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maharashtra"

    • ஆண்கள் பிரிவிற்கான கபடி போட்டியை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் தொடங்கிவைத்தார்.
    • போட்டிகளுக்கு இடையே ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடந்தது.

    திசையன்விளை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 69- வது பிறந்தநாளையொட்டி நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஏற்பாட்டில் திசையன்விளையை அடுத்த அப்புவிளை வி.எஸ்.ஆர் விளையாட்டு மைதானத்தில் அகில இந்தியஅளவிலான ஆண்கள், பெண்கள் அணியினர் மின்னொளி கபடி போட்டி 11-ம் தேதி தொடங்கியது.

    நேற்று இரவு 3-வது நாளாக நடந்த ஆண்கள் பிரிவிற்கான கபடி போட்டியை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் வீரர்களை அறிமுகம் செய்து தொடங்கிவைத்தார்.

    ஆண்கள் பிரிவில் மராட்டிய அணியும், எஸ்.ஆர்.எம்.பல்கலைகழக அணியும் விளையாடியது. இதில் மராட்டிய அணி 28 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. எஸ்.ஆர்.எம்.அணி 26 புள்ளிகள் பெற்றது.

    மற்றொரு ஆண்கள் பிரிவு ஆட்டத்தில் டெல்லி சி.ஆர்.பி.எப். அணியும், குஜராத் இன்கம்டேக்ஸ் அணியும் விளையாடியது. இதில் டெல்லி அணி 37 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. குஜராத் அணி 22 புள்ளிகள் எடுத்தது.போட்டிகள் இன்று அதிகாலை வரை நடந்தது.

    பல்வேறு ஆண்கள் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவினர் கலந்துகொண்டு விளையாடினர். போட்டிகளுக்கு இடையே நடனம் மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடந்தது.

    ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, அப்புவிளை பஞ்சாயத்து தலைவர் சாந்தா மகேஷ்வரன், முன்னாள் தலைவர் வி.எஸ்.ஆர்.சுரேஷ், தொழில் அதிபர்கள் வி.எஸ்.ராமச்சந்திரன், வி.எஸ்.ஆர்.சுபாஷ்.நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார், ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், மாநில காங்கிரஸ் விவசாய பிரிவு செயலாளர் விவேக் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மகாராஷ்டிராவில் 20 கிராமங்கள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
    • 3,873 பேர் அங்கிருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டியது. கடந்த 24 மணி நேரத்தில் கட்சிரோலி மற்றும் சந்திராப்பூர் மாவட்டங்களில் 20.5 மி.மீட்டர் மழை பதிவானது. வெள்ளப்பெருக்கால் அந்த மாநிலத்தின் பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளன.

    20 கிராமங்கள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில், 3,873 பேர் அங்கிருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை தொடர்பாக விபத்துக்களில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

    இதுதொடர்பாக மகாராஷ்டிரா மாநில பேரீடர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூலை 14ந் தேதி வரை மழை வெள்ளம், மின்னல், நிலச்சரிவு மரம் மற்றும் பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்தது உள்ளிட்ட சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




    • அதிருப்தி எம்எல்ஏக்கள் குழு, பால்தாக்கரே பெயரை பயன்படுத்த உத்தவ் தாக்கரே எதிர்ப்பு.
    • தடை கோரி, தேர்தலை ஆணையத்திடம் முறையீடு செய்ய சிவசேனா முடிவு.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் அரசியல் நெருக்கடி நீடிக்கும் நிலையில், ஆதரவு அதிருப்தி எம்எல்ஏக்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில்  தனியார் சொகுசு விடுதியில் தங்கியுள்ள மகாராஷ்டிரா மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா பாலாசாஹேப் என்ற பெயரில் புதிய அணியாக செயல்பட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது குறித்து பேசிய அதிருப்தி எம்எல்ஏ தீபக் வசந்த் கேசர், தங்கள் முகாமில் இருந்து யாரும் சிவசேனாவை விட்டு வெளியேற மாட்டார்கள் என்றார். மேலும் வேறு எந்த கட்சியிலும் இணையும் திட்டமில்லை என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.  தங்கள் அணிக்கு மகாராஷ்டிரா சட்டசபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உள்ளதாகவும், தங்கள் அணித் தலைவராக ஏக்நாத் ஷிண்டே இருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் குழு, சிவசேனா மற்றும் அதன் நிறுவனர் பால்தாக்ரேவின் பாலாசாஹேப் என்ற பெயரை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில்,கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் அளிக்கப் பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பால்தாக்கரேவும், சிவசேனாவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்றும், சிவசேனாவைத் தவிர, அவரது பெயரை யாரும் பயன்படுத்த முடியாது என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்கள் குழு சிவசேனா மற்றும் பால்தாக்கரே பெயரை பயன்படுத்துவதற்கு தடை விதிக்ககோரி, தேர்தல் ஆணையத்திடம் முறையிட, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளார்.

    இதனிடையே மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து விவாதிக்க வதோதராவில் மாநில பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிசை, ஏக்நாத் ஷிண்டே சந்தித்ததாகவும், அவர்களது சந்திப்பு நடைபெற்ற போது, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வதோதராவில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மகாராஷ்டிராவில் தற்போது ஆட்சியில் உள்ள மகா விகாஸ் அகாடி அரசின் பிடியில் இருந்து சிவசேனா தொண்டர்களை விடுவிக்க தான் போராடுவதாகவும், இந்த போராட்டம் சிவசேனாக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

    தற்போது மகாராஷ்டிராவில் 80 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டிருக்கின்றனர். இதனால் நோய் தொற்று பாதிப்பு அளவும், இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.
    மும்பை :

    மகாராஷ்டிராவில் ஏற்பட்ட கொரோனா முதல் மற்றும் 2-வது அலை நாட்டையே முடக்கிப்போட்டது. ஊரங்கிற்கு இணையான கொரோனா கட்டுப்பாடுகள் தொழில்களும் முடங்கின. அனைத்து வகையிலும் மாநிலத்தினை ஆட்டிப்படைத்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

    இதனால் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு உள்ளது.

    ஆனால் கொரோனா 3-வது அலை அச்சம் இன்னும் குறையவில்லை. எனவே நோய் பாதிப்பின் தாக்கத்தை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

    இந்தநிலையில் வரும் டிசம்பர் மாதத்தில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் லேசாக ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அதிர்ச்சி தகவலை மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மாநிலத்தில் டிசம்பர் மாதத்தில் கொரோனா 3-வது அலை பாதிப்பு ஏற்படலாம். இருப்பினும் பாதிப்பு குறைவானதாகவே இருக்கும். மருத்துவ ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சை படுக்கைகள் (ஐ.சி.யூ) தேவை ஏற்படாது. தற்போது மகாராஷ்டிராவில் 80 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டிருக்கின்றனர். இதனால் நோய் தொற்று பாதிப்பு அளவும், இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.

    கொரோனாவை எதிர்த்து போராடிய சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், அதிகம் பாதிக்கப்படக்கூடிய மூத்த குடிமக்கள் மற்றும் பாதிக்கப்பட கூடிய பிரிவினருக்கு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் வழங்குவது குறித்த கோரிக்கையுடன் கடந்த வாரம் மத்திய மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்தித்தேன். மேலும் 12 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன்.

    ஆனால் அவர் ஐ.சி.எம்.ஆருடன் இந்த பிரச்சினை குறித்து விவாதித்துவிட்டு பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

    கொரோனா நோயின் முதல் அலை செப்டம்பர் 2020-ம் ஆண்டிலும், 2-வது அலை பாதிப்பு ஏப்ரல் 2021-லும் தீவிரமாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அரசு ஆஸ்பத்திரி தீ விபத்தில் 11 கொரோனா நோயாளிகள் பலியான சம்பவத்தில் பெண் டாக்டர், 3 செவிலியர்களை மராட்டிய போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
    மும்பை :

    மராட்டிய மாநிலம் அகமதுநகரில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சனிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 11 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான அனைவரும் 65 முதல் 83 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

    தீ விபத்து குறித்து விசாரணை நடத்த மாநில அரசு 7 நபர் கமிட்டியை அமைத்தது. இந்த கமிட்டி நடத்திய விசாரணையில் கிடைத்த முதல் கட்ட தகவலின் பேரில் டாக்டர்கள் சுனில் போகர்னா, சுரேஷ் தக்னே, விஷாகா ஷிண்டே, செவிலியர் சப்னா பதாரே ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் செவிலியர்கள் அஸ்மா சேக், சன்னா ஆனந்த் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் பெண் டாக்டரான விஷாகா ஷிண்டே மற்றும் செவிலியர்களான சப்னா பதாரே, அஸ்மா சேக், சன்னா ஆனந்த் ஆகியோரை அகமது நகர் கிராமப்புற போலீசார் நேற்று மாலை அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் மீது கொலை அல்லாத மரணத்தை விளைவித்தல், கவனகுறைவால் மரணத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இது குறித்து அகமது நகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோஜ் பாட்டீல் கூறியதாவது:-

    சம்பவம் நடந்தபோது டாக்டர் விஷாகா ஷிண்டே பணியில் இருந்தார். ஆனால் சம்பவம் குறித்து அவர் அறிக்கை அளிக்க தவறிவிட்டார். கைதான 3 செவிலியர்களும் தீவிர சிகிச்சை பிரிவுக்குள் இருந்து பணியாற்றி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு வெளியே இருந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் நோயாளிகளை காப்பாற்ற வார்டுக்குள் சென்று உறவினர்கள் போராடிய போது, இந்த செவிலியர்கள் வெளியே தான் நின்று உள்ளனர். இதனால் பணியில் அலட்சியமாக செயல்பட்ட டாக்டரும், செவிலியர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மகாராஷ்டிராவில் இன்று 3 ஆயிரத்து 431 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    மும்பை:

    இந்தியாவில் கொரோனா வைரஸ்  பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

    ஆனால், தொடக்கத்தில் தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அம்மாநிலத்தில் கொரோனா தொற்று பரவும் வேகம் பெருமளவு குறைந்து வருகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிராவின் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

    அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று 3 ஆயிரத்து 431 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதனால் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 13 ஆயிரத்து 382 ஆக அதிகரித்துள்ளது.

    வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 56 ஆயிரத்து 823 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1 ஆயிரத்து 427 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 6 ஆயிரத்து 298 ஆக அதிகரித்துள்ளது.

    ஆனாலும், மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு இன்று 71 பேர் உயிரிழந்தனர். இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 129 ஆக அதிகரித்துள்ளது.
    தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில முன்னாள் மந்திரி ஜைடுட்டா ஷிர்சாகர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் இன்று சிவசேனாவில் இணைந்தார்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் மந்திரி ஜைடுட்டா ஷிர்சாகர். சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் தற்போது மகாராஷ்டிரா சட்டசபை உறுப்பினராக உள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த பொறுப்பாளர்களுக்கும் ஷிர்சாகருக்கும் சமீபகாலமாக கருத்து மோதல் இருந்து வந்தது.



    இந்நிலையில், மும்பையில் உத்தவ் தாக்கரே முன்னிலையில் இன்று அவர் சிவசேனா கட்சியில் இணைந்தார். தனது சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஷிர்சாகர் குறிப்பிட்டார்.
    மகாராஷ்டிரா மாநிலத்தின் தானேவில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கியதில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள தோகாலி பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை கழிவுநீர்தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென விஷவாயு தாக்கியதால் சம்பவ இடத்திலேயே 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மயக்கம் அடைந்த 5 தொழிலாளர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில்சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
     
    அதிகாலையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்து நிறுத்தியும் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியும் தேர்தலை சீர்குலைக்க திரிணாமூல் காங்கிரஸ் முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். #Modi #Mamata #WestBengalpollviolence
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 9 மாநிலங்களில் உள்ள 72 மக்களவை தொகுதிகளுக்கு இன்று நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
     
    மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள 8 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்காளத்தில் உள்ள அசன்சோல் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பாபுல் சுப்ரியோவின் காரை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கி சேதப்படுத்தினர்.

    பல்வேறு வாக்குச்சாவடிகளில் பாஜக - திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களிடையே வாக்குவாதமும், மோதல்களும் நடந்தன. மாநில காவல்துறையை வைத்து ஆளும்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் பாஜகவினரை மிரட்டுவதாகவும், மத்திய துணை ராணுவப் படையினரை வைத்து  திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரை மத்தியில் ஆளும் பாஜகவினர் மிரட்டுவதாகவும் இருதரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சேரம்பூர் நகரில் இன்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி மக்களை வாக்களிக்க விடாமல் தேர்தலை சீர்குலைக்க திரிணாமூல் காங்கிரஸ் முயற்சிப்பதாக தெரிவித்தார். மேலும், இம்மாநிலத்தில் பாஜகவினரை தேர்தல் பிரசாரம் செய்ய விடாமல் ஆளும்கட்சியினர் மிரட்டுவதாகவும் குறிப்பிட்டார்.



    மே 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது நாடு முழுவதும் தாமரை மலரும். மம்தாவிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் அவரை விட்டு விலகுவார்கள். இன்றைய நிலவரப்படி அவரது கட்சியை சேர்ந்த 40 எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்றும் மோடி கூறினார்.

    இதற்கிடையில், மேற்கு வங்காளம் மாநிலத்தின் பிர்பம் பாராளுமன்ற தொகுதியில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிக்குள் மத்திய  துணை ராணுவப் படை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தலைமை தேர்தல் கமிஷனுக்கு திரிணாமூல் காங்கிரஸ் கடிதம் அனுப்பியுள்ளது. #Modi #Mamata #WestBengalpollviolence
    மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி பகுதியில் பாதுகாப்பு படை இன்று நடத்திய என்கவுண்டரில் 2 பெண் நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #naxalkilled
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தின் பாம்ரகாட் பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

    அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்கள் பாதுகாப்பு படையினரை கண்டதும் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். இந்த என்கவுனட்ரில் 2 பெண் நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    #naxalkilled
    பாராளுமன்ற தேர்தலில் மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை தந்தை முகேஷ் அம்பானி ஆதரிக்கும்போது இன்று மும்பையில் மோடி பேச்சை அவரது மகன் முதல் வரிசையில் அமர்ந்து ரசித்தார். #ModiRally #MukeshAmbani #AnantAmbani
    மும்பை:

    ரபேல் போர் விமானம் கொள்முதலில் பிரபல தொழிலதிபர் அனில் அம்பானிக்கு பிரதமர் மோடி 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சலுகை செய்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.

    அதேவேளையில், பாராளுமன்ற தேர்தலில் மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மிலின்ட் டியோரா-வை அனில் அம்பானியின் சகோதரர் முகேஷ் அம்பானி சமீபத்தில் வெளிப்படையாக ஆதரித்தார். 

    அவரை ஆதரித்து வாக்களிக்குமாறு முகேஷ் அம்பானி கேட்டுக் கொள்ளும் வீடியோ பதிவை  மிலின்ட் டியோரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாக்கு சேகரிக்கிறார்.

    இந்நிலையில், மும்பை புறநகர் பகுதியான பன்ட்ரா குர்லா காம்பிளக்ஸ் என்ற இடத்தில் இன்றிரவு நடைபெற்ற பாஜக பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.



    மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, இந்திய குடியரசு கட்சி தலைவர் ராம்தாஸ் அத்வாலே ஆகியோர் பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில் முன்வரிசையில் முக்கிய பிரமுகர்கள் வரிசையில் அமர்ந்திருந்த முகேஷ் அம்பானியின் மகனான அனன்ட் அம்பானி மோடியின் பேச்சை மிகவும் ரசித்து கேட்டார். 

    பாராளுமன்ற தேர்தலில் மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை தந்தை முகேஷ் அம்பானி ஆதரிக்கும்போது இன்று மும்பையில் மோடி பேச்சை அவரது மகன் முதல் வரிசையில் அமர்ந்து ரசித்த சம்பவத்தை சில ஊடகங்கள் கேலியாக குறிப்பிட்டுள்ளன. #ModiRally #MukeshAmbani #AnantAmbani
    மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, நான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என கூறியுள்ளார். #LokSabhaElections2019 #PMModi
    நந்தர்பார்:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 11, 18 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23,29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் வடக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் நந்தர்பார் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    நான் ஆட்சிக்கு மீண்டும் வந்தபின், இட ஒதுக்கீட்டை மாற்றி அமைத்து விடுவேன் என எதிர்கட்சியினர் பொய்யான பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால்,  மோடியாகிய நான் இங்கு இருக்கும் வரை இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க இயலாது. இட ஒதுக்கீட்டிற்கு எவ்வித பாதிப்பும் நேராது. டாக்டர். பாபாசாகிப் அம்பேத்கார் எங்களுக்கு கொடுத்த இந்த இட ஒதுக்கீட்டை யாராலும் தொட இயலாது.

    வடக்கு மகாராஷ்டிராவில் எத்தனால் தயாரிப்பிற்காக கரும்புகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர இயலும். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் இதனை நடைமுறைப்படுத்த விடமாட்டார்கள்.

    மாற்றாக எரிபொருள்  இறக்குமதி செய்வதன் மூலம் காங்கிரஸ் கட்சியினர் லஞ்சம் பெற முயல்கின்றனர். எத்தனால் இறக்குமதி செய்தால் எரிபொருளால் கிடைக்கும் வருமானத்தை இழக்க நேரிடும் என்பதனால் இவ்வாறு செய்ய மறுக்கின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #PMModi 
    ×