search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electioncampaign"

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தால், அதற்கு பொறுப்பேற்க அக்கட்சியினர் நியமித்திருக்கும் இருவரின் பெயர்களை பிரதமர் மோடி கூறியுள்ளார்.
    தியோகார்:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 29ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 3 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தியோகார் பகுதியில் பிரதமர் மோடி பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவ தான் போகிறது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்க காங்கிரஸ் கட்சி,  மணி சங்கர் ஐயர் மற்றும் சாம் பிட்ரோடா ஆகிய இரு நபர்களை நியமித்திருக்கிறது. இதில் ஒருவர், 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கேட்டால், ‘ஆமாம் நடந்து விட்டது, அதற்கென்ன?’ என கேள்வி கேட்கிறார். இவர் தான் குஜராத்தில் தேர்தலின்போது என்னை அவதூறாக பேசினார். இப்போது மீண்டும் என்னை தாக்கி பேசுகிறார்.



    55 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தின் ஆட்சியில் செய்யமுடியாத முன்னேற்றத்தை, எங்கள் பாஜக ஆட்சி 55 மாதங்களில் செய்து முடித்திருக்கிறது. 5 ஆண்டுகளில் கரை படியாத நேர்மையான ஆட்சியினை பாஜக நடத்தி இருக்கிறது.  மேலும் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. நான் இதை கோவில் நகரமான தியோகார் பகுதியில் இருந்து கூறுவதை பெருமையாக கருதுகிறேன். 

    இது மட்டுமின்றி மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து நேர்மையான அரசை நடத்தும் பொறுப்பை தந்துள்ளனர். இதனால் மிகுந்த பெருமைக்குரியவன் ஆகிறேன். உங்கள் காவலாளியான நான் எப்போதும் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவதையே கடமையாக கொண்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் பேசினார். 
    மேற்கு வங்காளம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி என்னை பிரதமராக ஏற்காததால் அரசியலமைப்பை அவமதித்துள்ளார் என தாக்கி பேசினார். #PMModi #MamthaBanerjee
    பங்குரா:

    மேற்கு வங்காளம்  மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 5 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு மே 12,19 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் பங்குரா பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசாரப்பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது:



    மம்தா பானர்ஜி பொது மேடையிலேயே மக்களுக்கு  முன்பாக இந்த நாட்டை ஆளும் என்னை பிரதமராக ஏற்க முடியாது என கூறினார். ஆனால் பாகிஸ்தான் பிரதமரை, பிரதமர் என அழைப்பதையே பெருமிதமாக கருதுகிறார். தேர்தலுக்கு அப்பாற்பட்டு, இந்திய அரசியலமைப்பை அவமதித்துள்ளார்.  

    பயங்கரமான பாதிப்பை ஏற்படுத்திய பானி புயல் குறித்து மாநிலத்தின் அனைத்து துறை அதிகாரிகள் , அரசியல் தலைவர்கள் ஆகியோருடன் இணைந்து ஆலோசனை நடத்த வேண்டும் என்பதற்காக மமதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் தரப்பில் எவ்வித பதிலும் இல்லை. என்னை மீண்டும் தொடர்பு கொள்ள மம்தா முயற்சி கூட செய்யவில்லை.

    மேற்கு  வங்காளம் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் எதுவும் செய்ய மம்தா தயாராக இல்லை.  ஒரு கட்சியின் தலைவராகவும், முதல் மந்திரியாகவும் முக்கிய பொறுப்பு வகிக்கும் மம்தா என்னை பற்றி தரகுறைவாகவும் பேசி வருகிறார். இப்போது நான் இந்த வார்த்தைகளை ஏற்க பழகி கொண்டேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #PMModi #MamthaBanerjee  

    அரியானா மாநிலத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரப்பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சீக்கிய மக்களுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றுவேன் என கூறியுள்ளார். #PMModi #ElectionCampaign
    பதேபாத்:

    அரியானா மாநிலத்தில் வரும் மே 12ம் தேதி  ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அரியானா மாநிலத்தில் பதேபாத் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது:

    உலகில் ஏதேனும் ஒரு நாட்டினை, பாதுகாப்பு இல்லை என்றால் சக்திவாய்ந்த நாடு என கருத முடியுமா? , மகா கூட்டணியோ அல்லது காங்கிரசோ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தான் பேச முடியுமா? நிச்சயம் முடியாது. அவர்கள் வரலாற்றில் கூட நாட்டின்  பாதுகாப்பு பற்றி எடுத்துரைக்க முடியாது.



    கடந்த 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக  நடந்த தாக்குதல்களில் சீக்கியர்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்தனர். இதன் காரணமாக சீக்கியர்களுக்கு கொடுமை இழைத்தவர்களை தண்டிப்பேன் என உங்கள் காவலாளியான நான், அவர்களுக்கு அளித்த சத்தியத்தினை நிச்சயம் நிறைவேற்றுவேன்.

    அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதை எண்ணி ஆறுதல் அடைகிறேன். ஆனால் காங்கிரசோ, இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களை பாராட்டி பேசுகிறது. இதிலிருந்தே அவர்களுக்கு மக்களின் உணர்வுகள் குறித்து எந்த கவலையும் இல்லை என்பது புரிகிறது.

    மக்கள் என் மீதும், பாஜக மீதும் கொண்டுள்ள நம்பிக்கையினை நான் உணர்வேன். பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. உங்களுக்காக இந்த காவலாளி என்றும் பணியாற்றுவான்.

    இவ்வாறு அவர் பேசினார். #PMModi #ElectionCampaign    
    பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சொகுசு கார்களில் சிவப்பு விளக்குகளை நீக்கி ஏழைகளின் வீட்டில் விளக்கேற்றி வைத்தோம் என பெருமிதமாக கூறியுள்ளார். #PMModi #PublicRally
    முசாபர்பூர்:

    பீகார் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11 ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 18,23,29  ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிவடைந்தது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பீகார் மாநிலத்தில் முசாபர்பூர் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    பயங்கரவாதத்தினை உருவாக்கும் அனைவரும் இந்த காவலாளிக்கு எதிராக இருக்கிறார்கள். குற்றங்கள் புரிந்து வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு சென்று ஜாமீன் கேட்பவர்கள், இந்த உறுதியான அரசினை கண்டு அஞ்சுகின்றனர்.  எதிர்க்கட்சியினர் அவர்களின் வெற்றிக்காக பாடுபடவில்லை, தங்களின் குறைந்த செல்வாக்கை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விழிப்புடன் இருங்கள். பீகாரில் எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைத்தால் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவார்கள், வீட்டை தாண்டினால் பெண்களுக்கு  பாதுகாப்பு இருக்காது.  இருண்ட பின் மக்கள் யாராக இருந்தாலும் வெளியே வர முடியாத சூழல் உருவாகும்.



    ஆனால் எங்கள் ஆட்சியில் சொகுசு கார்களில் இருந்த சிவப்பு விளக்குகளை நீக்கி, ஏழைகளின் வீட்டில் விளக்கேற்றி வைத்தோம். பாஜக கூட்டணியில் இருக்கும் எந்த கட்சிகளுக்கு வாக்களித்தாலும், அது இந்த மோடிக்கே என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #PMModi #PublicRally

    பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவை குறை கூறி வீடியோ வெளியிட்ட தேஜ் பகதூர் யாதவ் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். #Varanasipolls #TejBahadurYadav #Samajwadi
    லக்னோ:

    பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து குறை கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டதால் தேஜ் பகதூர் யாதவ் என்ற பாதுகாப்பு படை வீரர் கடந்த 2017 ஆம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இந்த நிலையில், முன்னாள் பாதுகாப்பு படை வீரரான தேஜ் பகதூர் யாதவ் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
     
     ஊழல் பிரச்சினையை நான் எழுப்பியதால், என்னை பணி நீக்கம் செய்தார்கள். எனது முதல் நோக்கம் பாதுகாப்பு படை துறையில் உள்ள ஊழலை ஒழிப்பதுதான். எனவே, வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ளேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.



    இந்த பாராளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதிக்கு ஏழாவது கட்டமாக மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிரதமர் மோடி கடந்த 26-ம் தேதி இங்கு வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இன்றுடன் வேட்புமனு தாக்கல்  முடிவடைகிறது.

    இந்நிலையில் தேஜ் பகதூர் யாதவை தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக சமாஜ்வாதி கட்சி கடைசி நேரத்தில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.#Varanasipolls #TejBahadurYadav #Samajwadi
    மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்து நிறுத்தியும் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியும் தேர்தலை சீர்குலைக்க திரிணாமூல் காங்கிரஸ் முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். #Modi #Mamata #WestBengalpollviolence
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 9 மாநிலங்களில் உள்ள 72 மக்களவை தொகுதிகளுக்கு இன்று நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
     
    மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள 8 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்காளத்தில் உள்ள அசன்சோல் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பாபுல் சுப்ரியோவின் காரை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கி சேதப்படுத்தினர்.

    பல்வேறு வாக்குச்சாவடிகளில் பாஜக - திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களிடையே வாக்குவாதமும், மோதல்களும் நடந்தன. மாநில காவல்துறையை வைத்து ஆளும்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் பாஜகவினரை மிரட்டுவதாகவும், மத்திய துணை ராணுவப் படையினரை வைத்து  திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரை மத்தியில் ஆளும் பாஜகவினர் மிரட்டுவதாகவும் இருதரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சேரம்பூர் நகரில் இன்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி மக்களை வாக்களிக்க விடாமல் தேர்தலை சீர்குலைக்க திரிணாமூல் காங்கிரஸ் முயற்சிப்பதாக தெரிவித்தார். மேலும், இம்மாநிலத்தில் பாஜகவினரை தேர்தல் பிரசாரம் செய்ய விடாமல் ஆளும்கட்சியினர் மிரட்டுவதாகவும் குறிப்பிட்டார்.



    மே 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது நாடு முழுவதும் தாமரை மலரும். மம்தாவிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் அவரை விட்டு விலகுவார்கள். இன்றைய நிலவரப்படி அவரது கட்சியை சேர்ந்த 40 எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்றும் மோடி கூறினார்.

    இதற்கிடையில், மேற்கு வங்காளம் மாநிலத்தின் பிர்பம் பாராளுமன்ற தொகுதியில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிக்குள் மத்திய  துணை ராணுவப் படை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தலைமை தேர்தல் கமிஷனுக்கு திரிணாமூல் காங்கிரஸ் கடிதம் அனுப்பியுள்ளது. #Modi #Mamata #WestBengalpollviolence
    வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். முன்னதாக தொண்டர்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தேர்தலின்போது தொண்டர்கள் அதிக விழிப்புடன் இருக்கும்படி அறிவுரை கூறியுள்ளார். #PMModi #AddressingWorkers
    வாரணாசி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 3 கட்டங்களாக முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

    இதையடுத்து உத்தரபிரதேசம் மாநிலத்தில் வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ள பிரதமர் மோடி இன்று காலை 11.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக பாஜக தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    தேர்தலின்போது வாக்குச்சாவடிக்குச் செல்லும் தொண்டர்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் . நாம் நேர்மையான  கூட்டணி அமைத்துள்ளோம்.  நாட்டுக்காக எவ்வித சூழலிலும்  ஓய்வின்றி உழைக்க வேண்டும். நாடு முழுவதும் நமக்கு ஆதரவான அலை உருவாகியுள்ளது. தேர்தலின் போது அத்துமீறுவது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும்.



    நாம் அவ்வழியில் செல்லக்கூடாது. பிரதமர் மோடி தான் மீண்டும் வரவேண்டும் என நாடே ஆசைப்படுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கொண்டாடும் வகையில்  ஆட்சி நடைபெறுகிறது.  நான் நேற்று ரோட்ஷோ நடத்தியபோது உங்களின் உழைப்பை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

    மக்களின் உள்ளங்களை வெல்லும் அளவிற்கு உங்கள் பணி இருக்க வேண்டும். பாஜக எப்போதும் தொண்டர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறது. கேரளா, வங்காளம் ஆகிய மாநிலங்களில் தேர்தலின்போது வன்முறை நடந்தபோதும் உங்களின் ஊக்கம் சற்றும் குறையவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார். #PMModi #AddressingWorkers 
    பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, புதிய இந்தியா பயங்கரவாதிகளை ஒழிக்க பாடுபடும் என கூறியுள்ளார். #PMModi #LokSabhaElections2019
    தர்பங்கா:

    பீகார் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11 ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 18,23  ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்று மொத்தம் 3 கட்ட வாக்குப்பதிவு  முடிவடைந்தது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பீகார் மாநிலத்தில் தர்பங்கா பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமார், துணை முதல் மந்திரி சுஷில் குமார் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இதில் பிரதமர் மோடி பேசியதாவது:



    நடந்து முடிந்த 3 கட்ட வாக்குப்பதிவுகளின் நிலை, பாஜகவிற்கு சாதகமாக உள்ளதை நினைத்து எதிர்கட்சியான காங்கிரஸ் நடுங்கிக் கொண்டிருக்கிறது. மகா கூட்டணியில் இருப்பவர்கள், வாக்குப்பதிவு  இயந்திரங்களில் பழுது எனவும், பாலக்கோட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டும் வருகின்றனர்.

    பீகாரின் முதல் மந்திரி நிதீஷ் குமார், துணை முதல் மந்திரி சுஷில் குமார் ஆகியோர் மிகச்சிறிய கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கினர். இதனால் அவர்கள் மாநிலத்தையே ஒளிபெறச் செய்தனர்.

    மக்களே, ஓய்வெடுங்கள். பயங்கரவாதிகளை ஒழிக்க உங்கள் காவலாளியாகிய நான் இருக்கிறேன். மகா கூட்டணியில் இருப்பவர்களுக்கு பயங்கரவாதிகள் குறித்த கவலை இல்லை. ஆனால் புதிய இந்தியா பயங்கரவாதிகளை ஒழிக்க பாடுபடும். நீங்கள் பாஜகவினருக்கோ, அதன் கூட்டணி கட்சியினருக்கோ வாக்களிக்கிறீர்கள் என்றால்,  உங்கள் காவலாளிக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதை மறக்காதீர்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #PMModi #LokSabhaElections2019

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, நான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என கூறியுள்ளார். #LokSabhaElections2019 #PMModi
    நந்தர்பார்:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 11, 18 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23,29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் வடக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் நந்தர்பார் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    நான் ஆட்சிக்கு மீண்டும் வந்தபின், இட ஒதுக்கீட்டை மாற்றி அமைத்து விடுவேன் என எதிர்கட்சியினர் பொய்யான பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால்,  மோடியாகிய நான் இங்கு இருக்கும் வரை இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க இயலாது. இட ஒதுக்கீட்டிற்கு எவ்வித பாதிப்பும் நேராது. டாக்டர். பாபாசாகிப் அம்பேத்கார் எங்களுக்கு கொடுத்த இந்த இட ஒதுக்கீட்டை யாராலும் தொட இயலாது.

    வடக்கு மகாராஷ்டிராவில் எத்தனால் தயாரிப்பிற்காக கரும்புகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர இயலும். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் இதனை நடைமுறைப்படுத்த விடமாட்டார்கள்.

    மாற்றாக எரிபொருள்  இறக்குமதி செய்வதன் மூலம் காங்கிரஸ் கட்சியினர் லஞ்சம் பெற முயல்கின்றனர். எத்தனால் இறக்குமதி செய்தால் எரிபொருளால் கிடைக்கும் வருமானத்தை இழக்க நேரிடும் என்பதனால் இவ்வாறு செய்ய மறுக்கின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #PMModi 
    மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, நாங்கள் பயங்கரவாதிகளிடம் கோழையான அணுகுமுறையை கையாளும் காங்கிரஸ் அல்ல என கூறியுள்ளார். #LokSabhaElections2019 #PMModi
    நாசிக்:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 11, 18 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23,29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் மாவட்டத்திற்குட்பட்ட பிம்பல்கலின் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியாவிற்கு அருகிலிருக்கும் இலங்கையில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். 2014ம் ஆண்டுக்கு முன், இந்தியாவில் டெல்லி, மும்பை, அயோத்தியா ஆகிய இடங்களில்  இது போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. காங்கிரஸ்- தேசிய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் என்ன செய்தனர்?



    இரங்கல் கூட்டங்களை தான் நடத்திக் கொண்டிருந்தனர். உலகம் முழுவதும் சென்று, பாகிஸ்தான் அதை செய்தது, இதை செய்தது என குறைக் கூறி அழுவதே அவர்கள் செயல். ஆனால், நாங்கள் என்ன செய்தோம்? பயங்கரவாதிகளை கோழைத்தனமாக கையாளும் காங்கிரஸின் அணுகுமுறையை மாற்றினோம்.

    மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த 2 கட்ட தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் மத்தியில் கிடைத்த செல்வாக்கை நினைத்து எதிர்க்கட்சியினர் தூக்கமின்றி இருக்கின்றனர்.  எனது தலைமையிலான அரசு வெங்காயத்தின் உற்பத்தி உயர்வு மற்றும் போக்குவரத்துக்கான வரிகளை குறைக்கவும் பாடுபடுகிறது.  பயிர் விலைகளை மாற்றி  இடைத்தரகர்களுக்கு வருமானத்தை ஏற்படுத்தி தரும் வகையில்  காங்கிரஸ் செயல்பட்டது. இந்த இடைத்தரகர்களுக்கு எதிராக நான் போராடுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #PMModi

    தேனியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வாரிசு மற்றும் ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மக்களை கேட்டுக்கொண்டார். #PMModi #LoksabhaElections2019
    தேனி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கரிசல்பட்டி விலக்கில் அதிமுக-பாஜக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு அதிமுக- பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:

    நாடும் நமதே, நாற்பதும் நமதே. முதலில் ஜாலியன் வாலாபாக் 100வது ஆண்டு நினைவுதினமான இன்று, உயிரிழந்தவர்களுக்கு என் அஞ்சலியை செலுத்துகிறேன். நாளை தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. அதற்காக தமிழக மக்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய இந்தியாவை நோக்கி நாம் சென்றுக் கொண்டிருக்கிறோம்.

    ஒவ்வொருவரும் கண்ணியத்துடனும், வளத்துடனும் வாழ்வதை உறுதி செய்யவே புதிய இந்தியா. காங்கிரசும் திமுகவும் மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின்,  ராகுலை பிரதமர் என கூறுகிறார். மக்கள் யாரும் அதனால் மகிழ்ச்சி அடையவில்லை என்பதே உண்மை.  காங்கிரஸ்- திமுக கூட்டணியை  பொருத்தவரை சிறுபிள்ளை தனமாக செயல்படுகின்றனர்.



    ஆனால் உங்கள் காவலாளி உங்களுக்காக சேவை செய்ய காத்திருக்கிறேன். நான் எந்த தீமைக்கும் வழி விடமாட்டேன். தமிழகத்தை வளமான பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் திமுக , காங்கிரசுக்கு முடிவு கட்ட வேண்டும். வாரிசு, ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு திமுக- காங்கிரஸ்  கூட்டணி பாதிப்பானது.

    வீரமான தேனி மாவட்டத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் என்னைப் பற்றி தெரியும். காங்கிரஸ் நாட்டை கொள்ளையடிக்கிறது. பயங்கரவாதிகளுக்கு  எதிராக  நடத்தப்பட்ட ராணுவத்தினரின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து  காங்கிரஸ் கட்சியினர் கேள்வி கேட்கிறார்கள். தேசத்தின் அனைத்து பயங்கரவாதிகளையும் ஒழிக்க தொடர்ந்து போராடுவேன்.

    கடந்த 60 ஆண்டுகாலமாக நம் தேசத்திற்கு அநியாயம் செய்தவர்கள் தான் காங்கிரஸ் ஆட்சி.  தலித் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு காங்கிரஸ் நீதி தருமா? காங்கிரஸ் ஆட்சியில் போபால் பகுதியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த மக்களுக்கு நியாயம் தருமா?

    இவ்வாறு அவர் பேசினார்.  #PMModi #LoksabhaElections2019

     
    குஜராத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாலக்கோட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் பாகிஸ்தானுக்கு எதிரானது. ஆனால் காங்கிரஸ் தான் பாதிப்புக்குள்ளானது என குற்றம் சாட்டியுள்ளார். #PMModi #LoksabhaElections2019
    ஜுனாகார்க்:

    குஜராத் மாநிலத்தில் ஏப்ரல் 23ம் தேதி  ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் குஜராத்  மாநிலத்தில் ஜுனாகார்க் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த 4 நாட்களாக காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. ஏழைக் குழந்தைகளின் உணவுகளை பறித்து காங்கிரஸ்  தலைவர்களின் வயிற்றை நிரப்புகிறது. காங்கிரஸ் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.



    ஊழல் செய்து காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு அவபெயர்களை பெற்றுள்ளனர். ஆனால், நான் 5 ஆண்டுகளாக என்ன சாதனை செய்திருக்கிறேன் என்பதை கூறவே இங்கு வந்திருக்கிறேன்.  அடுத்த 5 ஆண்டுகளுக்கு நான் என்ன செய்யவேண்டுமென்று கட்டளை இடுங்கள், செய்து முடிப்பேன்.

    உங்கள் மகன், இந்த காவலாளி செய்த செயல்கள் உங்களுக்கு பெருமையாக உள்ளதா? ஊழலே இல்லாமல் நான் நடத்திய 5 ஆண்டுகால ஆட்சி உங்களை பெருமை படுத்துகிறதா? . மேலும் உங்கள் மகனும், காவலாளியுமான என்னை அகராதியில் உள்ள அனைத்து அவதூறான வார்த்தைகளையும் கூறி காங்கிரஸ் கட்சியினர் பேசி வருகின்றனர்.  

    பாலக்கோட்டில் நடத்திய தாக்குதல், பயங்கரவாதிகளை அழிக்கத்தான். ஆனால் அதனால் பாதிப்புக்குள்ளானது காங்கிரஸ் கட்சியினர் ஆவர். மேலும் ஜம்மு காஷ்மீரினை பிரித்து, அதற்கென தனி பிரதமரை உருவாக்கும் எண்ணத்துடனே தேசியவாத காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார். #PMModi #LoksabhaElections2019   

    ×