search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தானே"

    மகாராஷ்டிரா மாநிலத்தின் தானேவில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கியதில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள தோகாலி பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை கழிவுநீர்தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென விஷவாயு தாக்கியதால் சம்பவ இடத்திலேயே 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மயக்கம் அடைந்த 5 தொழிலாளர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில்சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
     
    அதிகாலையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மகாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு லேசான நில அதிர்வு உணரப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். #Thane #MildTremors
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டது. டோம்பிவிலி, கல்யாண், உல்லாஸ்நகர் மற்றும் பிவண்டி உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.  

    இதனால் வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.சிறிது நேரம் கழித்து நிலைமை சீரானதும் அவர்கள் மீண்டும் வீடுகளுக்கு திரும்பினர்.

    இது தொடர்பாக பேரிடர் மேலாண்மை மைய அதிகாரிகள் கூறுகையில், மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டது.  இது சுமார் 2.4 ரிக்டர் அளவில் பதிவானது. இதனால் சேதம் ஏற்படவில்லை எனதெரிவித்தனர்.
    ×