search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Speed Breaker"

    • பாளை சமாதானபுரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி செல்லும் சாலையில் எம்.கே.பி. நகர் சந்திப்பு மற்றும் ராம் பாப்புலர் சந்திப்பு பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
    • மழைக்காலத்தில் வெள்ள நீர் நிரம்பி வீடுகளுக்குள் செல்வதை தடுக்க மணிக்கூண்டு அருகில் கூடுதலாக புதிய பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி 6-வது வார்டு கவுன்சிலரும், கல்வி குழு தலைவருமான பவுல்ராஜ் நெல்லை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளரிடம் மனு அளித்தார். அந்த மனுவில், பாளை சமாதானபுரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி செல்லும் சாலையில் எம்.கே.பி. நகர் சந்திப்பு மற்றும் ராம் பாப்புலர் சந்திப்பு பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே விபத்துகளை தடுக்க அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.

    அதேபோல் மழைக்காலத்தில் வெள்ள நீர் நிரம்பி வீடுகளுக்குள் செல்வதை தடுக்க மணிக்கூண்டு அருகில் கூடுதலாக புதிய பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அப்போது 7-வது வார்டு வட்ட பிரதிநிதி சுண்ணாம்பு மணி, நிர்வாகி சுனில் குமார் உட்பட பலர் உள்ளனர்.

    • பேரூராட்சி தலைவர் சம்பவ இடங்களை நேரில் வந்து பார்வையிட்டு 2 இடத்தில் வேகத்தடைஅமைக்க உத்தரவிட்டார்.
    • அதன்படி 2 இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுஎண் 16-ல் தங்கநகரம் செல்லும் தார்சாலைவழியாக பள்ளிகளுக்கு செல்லக்கூடிய மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக செல்கின்றனர். இந்த ரோட்டில் பலமுறை வாகன விபத்துகள் ஏற்படுகிறது. அதிவேகமாக வரும் வாகனங்களை கட்டுப்படுத்த இந்த ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று இப் பகுதியை சேர்ந்த கவுன்சிலர் முகமதுஆபித் உடன்குடி பேரூராட்சி தலைவர் ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசியிடம் கோரிக்கை மனு கொடுத்தார். பேரூராட்சி தலைவர் சம்பவ இடங்களை நேரில் வந்து பார்வையிட்டு 2 இடத்தில் வேகத்தடைஅமைக்க உத்தரவிட்டார். அதன்படி 2 இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டது.

    இதைப்போல கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் தெருவிளக்கு, குடிநீர் குழாய் சரி செய்தல் போன்றவற்றிற்கு நேரில் சென்று கோரிக்கை மனு கொடுத்தால் பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆலோசனையின்படி, பேரூராட்சி தலைவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பிரச்சினையை தீர்வு செய்கிறார். மேலும் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுபகுதியிலும், அடிக்கடி நேரில் சென்று மக்கள் பிரச்சினைகளை கேட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார் என பொதுமக்கள் கூறுகின்றனர். 

    ×