search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவ சேனா"

    • சபாநாயகருக்கு எதிராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்
    • சபாநாயகர் முடிவெடுக்கும் முன்னதாக முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து பேசியுள்ளார்

    முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகர் டிசம்பர் இறுதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. சபாநாயகர் தனது உத்தரவை அறிவிக்காததால் மேலும் 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகருக்கு எதிராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே உச்சநமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார் இதுதொடர்பாக அவர் கூறியதாவது, இந்த விவகாரத்தில் சபாநாயகர் முடிவெடுக்கும் முன்னதாக முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து பேசியுள்ளார். நீதிபதி குற்றவாளியை சந்தித்து பேசுவது போல இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். சபாநாயகரின் செயல் அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்த உத்தவ் தாக்கரே, இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும், சார்பற்ற முறையில் தனது கடமையை ஆற்றுவாரா என்ற சந்தேகதம் எழுகிறது எனவும் கூறினார்.

    உத்தவ் தாக்கரேவின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள சபாநாயகர் ராகுல் நர்வேகர், "ஏக்நாத் ஷிண்டே முதல் மந்திரி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர். சட்டப்பேரவை விவகாரம் தொடர்பாக நாங்கள் சந்தித்துக்கொள்வது அவசியம். இதில் உள்நோக்கம் இருப்பதாக கூறுவது தவறு. இது தொடர்பாக யாருக்கும் விளக்கம் அளிக்க வேண்டிய தேவை இல்லை" என கூறினார். மேலும், பாஜகவைச் சேர்ந்த நான், உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த எம்பி அணில் தேசாய் மற்றும் ஷரத் பவார் அணியைச் சேர்ந்த ஜெயந்த் பாடில் ஆகியோரை விமான நிலையத்தில் சந்தித்து பேசியுள்ளேன். அதற்கும் உள்நோக்கம் கற்பிப்பார்களா? என கேள்வி எழுப்பினார். அரசியல் சாசனத்துக்கு உட்பட்டும் இந்த விவகாரத்தில் நான் நல்ல முடிவை எடுப்பேன். எனது முடிவு தகுதியின் அடிப்படையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

    • தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டே அணிக்கு அங்கீகாரம் வழங்கியது
    • உத்தவ் தரப்பு தாக்கல் செய்த மனு தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவு

    புதுடெல்லி:

    மகாராஷ்ராவில் ஆளுங்கட்சியான சிவ சேனா இரண்டாக உடைந்தது. பெரும்பாலான எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே ஆட்சியைக் கைப்பற்றினார். அதன்பின்னர் கட்சியின் பெயர், சின்னத்துக்கு உரிமை கோரி உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணிகள் தரப்பில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டே அணிக்கு அங்கீகாரம் வழங்கியது. சிவசேனா பெயர், கட்சியின் வில் அம்பு சின்னத்தை ஷிண்டே அணிக்கு வழங்கியது.

    தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே அணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உத்தவ் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் நேற்று முறையிட்டார். தலைமை நீதிபதி இதை ஏற்கவில்லை. உத்தவ் தரப்பு மனு குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்திருந்தார்.

    அதன்படி, உத்தவ் தாக்கரே தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏக்நாத் ஷிண்டே அணியை அதிகாரப்பூர்வ சிவசேனா கட்சியாக அங்கீகரித்த தேர்தல் ஆணைய உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

    அதேசமயம், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். உத்தவ் தாக்கரே தரப்பு தாக்கல் செய்த மனு தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதில் அளிக்கவேணடும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    • சிவ சேனா கட்சி மற்றும் வில்-அம்பு சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது
    • உத்தவ் தாக்கரே இன்று தனது வீட்டின் முன் கூடியிருந்த ஆதவாளர்கள் மத்தியில் பேசினார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் சிவ சேனா கட்சிக்கு உரிமை கொண்டாடி உத்தவ் தாக்கரே அணியும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியும் தேர்தல் ஆணையத்தில் சட்டப் போராட்டம் நடத்தின. இதில், ஷிண்டே அணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

    ஏக்நாத் ஷிண்டே அணிதான் சட்டப்பூர்வ சிவசேனா என்று கூறிய தேர்தல் ஆணையம், கட்சியின் வில்-அம்பு சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கி உத்தரவிட்டது.

    இதற்கு உத்தவ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார்.

    இந்நிலையில், உத்தவ் தாக்கரே இன்று தனது வீட்டின் முன் கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'பிரதமர் மோடியின் அடிமையான தேர்தல் ஆணையம் இதற்கு முன் செய்யாததை செய்துள்ளது. ஆதரவாளர்கள் அனைவரும் பொறுமைகாக்க வேண்டும். மும்பை உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக வேண்டும். கட்சியின் சின்னம் திருடப்பட்டுள்ளது. திருடர்களுக்கு பாடம் புகட்டப்பட வேண்டும்' என்றார்.

    உத்தவ் தாக்கரே அணியினர் 'சிவ சேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே' என்ற பெயரையும், கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தீப்பந்தம் சின்னத்தையும் வைத்துக்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்த ஷிண்டே, பாஜகவுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றினார்.
    • ஷிண்டே அணியினர் தாங்களாகவே விலகிச் சென்தால் உரிமை கோர முடியாது என்று உத்தவ் குறிப்பிட்டார்.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கட்சிக்கு எதிராக திரும்பினார். பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்த அவர், பா.ஜனதாவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார். ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.

    அதன்பின்னர் சிவ சேனா கட்சியின் பெயர் மற்றும் கட்சியின் வில், அம்பு சின்னத்துக்கு ஷிண்டே தரப்பு உரிமை கோரியது. கட்சியின் பெரும்பான்மை எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் தனது பக்கம் இருப்பதால், சிவசேனாவின் வில், அம்பு சின்னத்தை தனது அணிக்கு ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் ஷிண்டே கோரினார். இதற்கான கடிதத்தை தேர்தல் ஆணையத்திடம் அளித்தார்.

    இதேபோல் தாங்கள்தான் உண்மையான சிவ சேனா என உத்தவ் தாக்கரே தேர்தல் ஆணையத்தில் தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார். 'ஏக்நாத் ஷிண்டே அணியினர் தாங்களாகவே சிவசேனா கட்சியில் இருந்து விலகிச் சென்று விட்டனர். இதனால், கட்சியின் வில் அம்பு சின்னத்துக்கு அவர்கள் உரிமை கோர முடியாது,' என்று உத்தவ் குறிப்பிட்டார்.

    இரு தரப்பு விளக்கங்கள், ஆவணங்கள் மற்றும் கட்சி விதிகளை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், இன்று உத்தரவு பிறப்பித்தது. உத்தவ் தாக்கரே தரப்பு கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா தான் சட்டப்பூர்வமான சிவ சேனா என்று கூறியது. அத்துடன், சிவ சேனா கட்சியின் பெயர் மற்றும் வில், அம்பு சின்னத்தை ஷிண்டே தரப்புக்கு வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முறையிட உத்தவ் தரப்பு முடிவு செய்துள்ளது.

    • அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரு அணியினரும் வேறு பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த வேண்டும்.
    • சிவ சேனா கட்சிக்கு உரிமை கோரி இரு தரப்பினரும் சட்டப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் ஆளும் சிவ சேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் முடக்கி உள்ளது. சிவ சேனா கட்சியானது ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே ஆகியோர் தலைமையில் 2 அணிகளாக பிரிந்து, தனித்தனியே கட்சிக்கு உரிமை கோரிய நிலையில் சின்னம் முடக்கப்பட்டுள்ளது.

    இரு அணிகளும் மறு அறிவிப்பு வெளியிடும் வரை 'வில், அம்பு' சின்னத்தை பயன்படுத்த முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே, அந்தேரி (கிழக்கு) தொகுதி இடைத்தேர்தலில் இரு அணியினரும் வேறு பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த வேண்டும். வரும் 10ஆம் தேதி (நாளை மறுநாள்) மதியம் 1 மணிக்குள் இரு அணிகளும் தங்களுக்கான புதிய பெயர் மற்றும் சின்னத்தை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

    சிவசேனாவின் முக்கிய தலைவரான ஏக்நாத் ஷிண்டே, கடந்த ஜூன் 20ஆம் தேதி உத்தவ் தாக்கரே மற்றும் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். மொத்தம் உள்ள 55 சேனா எம்எல்ஏக்களில் 40 எம்எல்ஏக்கள் ஷிண்டேவுக்கு ஆதரவாக திரும்பினர். மொத்தமுள்ள 18 சிவசேனா மக்களவை எம்.பி.க்களில் 12 பேர் ஷிண்டே அணிக்கு மாறினர்.

    உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சரானார். பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராக பதவியேற்றார்.

    அதன்பின்னர் சிவ சேனா கட்சிக்கு உரிமை கோரி இரு தரப்பினரும் நீதிமன்றங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு சட்டப் போராட்டத்தை நடத்திவருகின்றனர். இரு தரப்பினரும் தாங்கள்தான் உண்மையான சிவ சேனா என கூறி வருவதால் தேர்தல் ஆணையம் தற்போது சின்னத்தை முடக்கி உள்ளது.

    • அதிருப்தி எம்எல்ஏக்கள் குழு, பால்தாக்கரே பெயரை பயன்படுத்த உத்தவ் தாக்கரே எதிர்ப்பு.
    • தடை கோரி, தேர்தலை ஆணையத்திடம் முறையீடு செய்ய சிவசேனா முடிவு.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் அரசியல் நெருக்கடி நீடிக்கும் நிலையில், ஆதரவு அதிருப்தி எம்எல்ஏக்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில்  தனியார் சொகுசு விடுதியில் தங்கியுள்ள மகாராஷ்டிரா மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா பாலாசாஹேப் என்ற பெயரில் புதிய அணியாக செயல்பட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது குறித்து பேசிய அதிருப்தி எம்எல்ஏ தீபக் வசந்த் கேசர், தங்கள் முகாமில் இருந்து யாரும் சிவசேனாவை விட்டு வெளியேற மாட்டார்கள் என்றார். மேலும் வேறு எந்த கட்சியிலும் இணையும் திட்டமில்லை என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.  தங்கள் அணிக்கு மகாராஷ்டிரா சட்டசபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உள்ளதாகவும், தங்கள் அணித் தலைவராக ஏக்நாத் ஷிண்டே இருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் குழு, சிவசேனா மற்றும் அதன் நிறுவனர் பால்தாக்ரேவின் பாலாசாஹேப் என்ற பெயரை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில்,கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் அளிக்கப் பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பால்தாக்கரேவும், சிவசேனாவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்றும், சிவசேனாவைத் தவிர, அவரது பெயரை யாரும் பயன்படுத்த முடியாது என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்கள் குழு சிவசேனா மற்றும் பால்தாக்கரே பெயரை பயன்படுத்துவதற்கு தடை விதிக்ககோரி, தேர்தல் ஆணையத்திடம் முறையிட, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளார்.

    இதனிடையே மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து விவாதிக்க வதோதராவில் மாநில பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிசை, ஏக்நாத் ஷிண்டே சந்தித்ததாகவும், அவர்களது சந்திப்பு நடைபெற்ற போது, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வதோதராவில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மகாராஷ்டிராவில் தற்போது ஆட்சியில் உள்ள மகா விகாஸ் அகாடி அரசின் பிடியில் இருந்து சிவசேனா தொண்டர்களை விடுவிக்க தான் போராடுவதாகவும், இந்த போராட்டம் சிவசேனாக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

    • ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி
    • அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரும் நாளை மறுநாளுக்குள் நோட்டீஸூக்கு பதிலளிக்க துணை சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கொண்ட கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிவ சேனா மூத்த தலைவரும், மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். சிவசேனாவில் மொத்தம் உள்ள 56 எம்எல்ஏக்களில் 30க்கும் மேற்பட்டோர் எதிரணியில் உள்ளனர். இதனால் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சிவசேனா முடிவு செய்தது.

    மகாராஷ்டிர சட்டமன்றத்தில் சபாநாயகர் பதவி காலியாக உள்ள நிலையில் துணை சபாநாயகர் நர்ஹரி ஜெர்வாலிடம், 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யும்படி சிவசேனா மனு அளித்தது. அதன்படி அந்த 16 எம்எல்ஏக்களிடமும் விளக்கம் கேட்டு துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். நாளை மறுநாளுக்குள் நோட்டீஸூக்கு பதிலளிக்க துணை சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த சூழ்நிலையில், துணை சபாநாயகர் நர்கரி ஜெர்வால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக ஷிண்டே தரப்பில் உள்ள 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் நோட்டீஸ் அளித்தனர். ஆனால் இந்த நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்ட எம்எல்ஏக்கள் யாரும் அதை அலுவலகத்தில் சமர்ப்பிக்காததாலும், கடிதத்தில் அசல் கையொப்பம் இல்லாததாலும் நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஏக்நாத் ஷிண்டேவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    ×