search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிவ சேனா வழக்கு: தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
    X

    சிவ சேனா வழக்கு: தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

    • தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டே அணிக்கு அங்கீகாரம் வழங்கியது
    • உத்தவ் தரப்பு தாக்கல் செய்த மனு தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவு

    புதுடெல்லி:

    மகாராஷ்ராவில் ஆளுங்கட்சியான சிவ சேனா இரண்டாக உடைந்தது. பெரும்பாலான எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே ஆட்சியைக் கைப்பற்றினார். அதன்பின்னர் கட்சியின் பெயர், சின்னத்துக்கு உரிமை கோரி உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணிகள் தரப்பில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டே அணிக்கு அங்கீகாரம் வழங்கியது. சிவசேனா பெயர், கட்சியின் வில் அம்பு சின்னத்தை ஷிண்டே அணிக்கு வழங்கியது.

    தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே அணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உத்தவ் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் நேற்று முறையிட்டார். தலைமை நீதிபதி இதை ஏற்கவில்லை. உத்தவ் தரப்பு மனு குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்திருந்தார்.

    அதன்படி, உத்தவ் தாக்கரே தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏக்நாத் ஷிண்டே அணியை அதிகாரப்பூர்வ சிவசேனா கட்சியாக அங்கீகரித்த தேர்தல் ஆணைய உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

    அதேசமயம், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். உத்தவ் தாக்கரே தரப்பு தாக்கல் செய்த மனு தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதில் அளிக்கவேணடும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×