search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "license"

    • சேலம் மாவட்டத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சேலம் மாநகரில் வீடுகள் நிறைந்து காணப்படுகிறது.
    • அதை ஏற்று கடந்த மாதம் அதிவேகமாக ஓட்டியதாக 82 பேர், அதிக பாரம் ஏற்றிய 44 பேர், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 52 பேர் என 178 பேரின் ஓட்டுநர் உரிமத்தை 3 மாதங்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சேலம் மாநகரில் வீடுகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் சேலம் மாநகரில் தினமும் புதிது புதிதாக குடியிருப்புகள் முளைத்து வருகின்றன. இதனால் சேலம் மாநகரில் பல லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதனால் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

    குறிப்பாக வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்வோர், சொந்த விஷயங்களுக்காக வாகனங்கள் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதில் பலர் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனங்களை ஓட்டுகின்றனர். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    அந்த வகையில் சேலம், தருமபுரி மாவட்டங்களில் சாலை விதிமீறி வாகனங்களை இயக்கியவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய காவல் துறை சார்பில் போக்குவரத்து துறைக்கு பரிந்துரைக்கப்படடது. அதை ஏற்று கடந்த மாதம் அதிவேகமாக ஓட்டியதாக 82 பேர், அதிக பாரம் ஏற்றிய 44 பேர், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 52 பேர் என 178 பேரின் ஓட்டுநர் உரிமத்தை 3 மாதங்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.

    சரக்கு வாகனங்கள்

    இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறுகையில், குடிபோதையில் வாகன இயக்கம், அதிவேகம், மொபைல் போன் பேசியபடியே வாகன இயக்கம், சரக்கு வாகனத்தில் அதிக பாரம் ஏற்றிச் செல்வது, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் செல்வது, ரெட் சிக்னலில் நிற்காமல் செல்வது போன்ற பிரிவுகளில் சிக்கும் வாகன ஓட்டிகளின் டிரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக, நிரந்தரமாக முடக்கி வைக்க சென்னை உயர்நீதிமன்றம், சில வழிகாட்டு நெறிமுறைகளை தெரிவித்து உள்ளது. அதன்படி போலீசார் வழக்குகளை பதிவு செய்து, டிரைவிங் லைசென்சை தற்காலிகமாக, நிரந்தரமாக ரத்து செய்யகோரி அனுப்புகின்றனர் என, தெரிவித்தனர்.

    • விதி மீறி இயக்கிய 694 ஆட்டோக்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
    • முறையான அனுமதியுடன் 1,911 ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது.

    மதுரை

    மதுரை மாவட்ட மினி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் ஆட்டோக்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்குகின்றனர். இதனால் பயணிகள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். பல நேரங்களில் விபத்து களும் ஏற்படுகின்றன. எனவே இவற்றை தவிர்க்க ஆட்டோவில் பயணிகளை ஏற்றி, இறக்க தனி இடம் ஒதுக்கி தருமாறு உத்தர விட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி கள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறி இருந்ததாவது:-

    விதிமுறைகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகி றது. கடந்த 2013ம் ஆண்டு முதல் முதல் 2017ம் ஆண்டு வரை அதிக மக்களை ஏற்றியதாக 27 ஆயிரத்து 751 ஆட்டோக்களும், மீட்டர் இல்லாமல் இயக்கி யதாக 10 ஆயிரத்து 286 ஆட்டோக்களும், சீட்டை மாற்றி அமைத்து இயக்கி யதாக 2 ஆயிரத்து 354 ஆட்டோக்கள் உள்பட பல்வேறு விதிகளை மீறியது தொடர்பாக 1 லட்சத்து 56 ஆயிரத்து 468 ஆட்டோக்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த ஆட்டோக்களிடம் இருந்து அபராத தொகையாக ரூ.2 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மதுரை மாநகர் முழுவதும் 113 ஆட்டோ நிறுத்தும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. முறையான அனுமதியுடன் 1,911 ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. தொடர்ந்து விதிமுறைகளை மீறும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதேபோல வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கடந்த 2013 முதல் 2017-ம் ஆண்டு வரையில் விதி மீறியது தொடர்பாக 1,412 ஆட்டோக்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

    இதில் வழக்கு பதியப்பட்ட 694 ஆட்டோக்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. 813 ஆட்டோக்கள் பறி முதல் செய்யப்பட்டன. அபராதமாக ரூ.9 லட்சத்து 26 ஆயிரத்து 850 வசூலிக்கப்பட்டது.

    பயணிகள் சிரமமின்றி பயணம் செய்யவும், விதிமீறலை கட்டுப்படுத்த வும் தொடர் நடவ டிக்கைகள் எடுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

    • 6-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
    • வீட்டின் முன்பு கூடாரம் அமைத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்பல்லடம் ஒன்றியம் ,இச்சிப்பட்டி ஊராட்சி கொத்துமுட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40).இவர் கடந்த 30-ந்தேதி வீட்டின் முன்பு கூடாரம் அமைத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.இவர் கொத்துமுட்டிபாளையம் அருகே உள்ள கோடங்கிபாளையம் பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி இன்று 6-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வருவாய்த்துறை அதிகாரிகள் , கனிமவளத்துறை அதிகாரிகள், மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பல்லடம் ஒன்றியம் ,கொத்துமுட்டிபாளையம் அருகே உள்ள கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில் விதிகளை மீறி கல்குவாரி செயல்படுகிறதா என ஆய்வு செய்தனர். பின்னர் ஆய்வு முடிவடைந்த பின்னர் பல்லடம் தாசில்தார் நந்தகோபால் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி விஜயகுமாரிடம் " கல்குவாரியில் ஆய்வு செய்துள்ளோம்.ஆகவே உண்ணாவிரதப்போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார். எனினும் பேச்சுவார்த்தையில் சமரசம் அடையாத விஜயகுமார் "கோடங்கிபாளையம்பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்தார். தற்போது தொடர்ந்து 6-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    சமீபத்தில் பல்லடம் எம்.எல்.ஏ.,எம்.எஸ்.எம்.ஆனந்தன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி விஜயகுமாரை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் விவசாயி விஜயகுமாரின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாளை 5-ந்தேதி( திங்கட்கிழமை ) தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் விவசாயிகள் இணைந்து கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் விவசாயிகள் குதிக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பி அபராதம் செலுத்திய பிறகு விடுவிக்கப்படும்.
    • இருசக்கர வாகனத்தில் செல்லும் மாணவர்கள் தலைக்கவசம் அணியாதது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்து.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நெடுஞ்சாலை மருத்துவம் மற்றும் போக்கு வரத்து துறை இதர அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நாகை மாவட்டத்தில் 11 பேர் ஜூலை மாதம் உயிரிழந்துள்ளனர்.

    இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள், மாணவர்கள் தலைக்கவசம் அணியாதது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது இதை தடுக்கும் பொருட்டு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஜவகர்ஆகியோர் உத்தரவின் அடிப்படையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் காவல்து றையினர் இணைந்து வாகன சோதனை செய்தனர்.

    சோதனையில் ஓட்டுநர் உரிமம் இல்லாத 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பி அபராதம் செலுத்திய பிறகு விடுவிக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    சோதனையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு, நாகை நகர இன்ஸ்பெக்டர் சரவணன், போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், வின்சென்ட் ராஜ், லோகநாதன், செல்வராஜ் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து இந்த சோதனை நடைபெறும் என வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.

    • சட்டம், 2014”, பிரிவு 4-ன்படி உரிமம் பெற வேண்டும் .
    • வழிமுறைகள் குறித்து விவரம் அறிய மற்றும் கருத்துருக்கள் சமர்ப்பிக்க அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசுப்பள்ளிகள் மூலம் நடத்தப்படும் விடுதிகள் "தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் (நெறிமுறைப்படுத்தும்) சட்டம், 2014", பிரிவு 4-ன்படி உரிமம் பெற வேண்டும் .அவ்வாறு உரிமம் பெறாது நடத்தும் விடுதிகள் மேற்படி சட்டப்பிரிவு 20-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆதலால் அனைத்து தனியார் மற்றும் அரசுப்பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகையான விடுதிகளும் உரிமம் பெற்று நடத்திட விடுதி உரிமம் பெறுவதற்கான விண்ணப்பம் மற்றும் வழிமுறைகள் குறித்து விவரம் அறிய மற்றும் கருத்துருக்கள் சமர்ப்பிக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு , மாவட்ட ஆட்சியர் வளாகம், தளம்-6, அறை எண் : 627, பல்லடம் ரோடு , திருப்பூர். தொலைபேசி : 0421 - 2971198, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம்)கைபேசி எண் : 6382614880.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    • பட்டாசுக்கடை உரிமம் பெற இன்று முதல் அக்டோபா் 8 ந் தேதி வரையில் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
    • உரிமக் கட்டணம் ரூ.1200-ஐ கருவூலகத்தில் செலுத்தியதற்கான சலான் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

    திருப்பூர் :

    தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, திருப்பூா் மாநகரில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற இன்று விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாநகர காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி தற்காலிகமாக பட்டாசுக்கடை உரிமம் பெற இன்று முதல் அக்டோபா் 8 ந் தேதி வரையில் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் கீழ்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

    இதில் விண்ணப்பிக்க விண்ணப்பப் படிவம் ஏ 5ல் ரூ.2 மதிப்புள்ள நீதிமன்ற வில்லை ஒட்டப்பட்டிருக்க வேண்டும். உரிமக் கட்டணம் ரூ.1200-ஐ கருவூலகத்தில் செலுத்தியதற்கான சலான் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் (சலான் மாநகர காவல் அலுவலகத்தில் கிடைக்கும்), பட்டாசுகளை இருப்புவைத்து விற்பனை செய்யப்படவுள்ள இடத்தின் வரைபடம் 6 நகல்களுடன், வரைபடத்தில் சம்பந்தப்பட்ட இடத்தின் முகவரி முழுமையாக குறிப்பிட்டிருப்பதுடன், மனுதாரா் தனது கையொப்பம் இட்டிருக்க வேண்டும். பட்டாசு விற்பனை செய்யும் இடம் சொந்தக் கட்டடமாக இருந்தால் 2022 -23 ஆம் ஆண்டுக்கான சொத்துவரி ரசீது இணைக்கப்பட வேண்டும். வாடகை கட்டடமாக இருந்தால் சொத்து வரி ரசீது மற்றும் சாட்சிகள் முன்னிலையில் கட்டட உரிமையாளருடன் ரூ. 20க்கான முத்திரைதாளில் வாடகை ஒப்பந்த ஆவணத்தையும் இணைக்க வேண்டும்.

    மேலும் கடை அமையவுள்ள இடங்களைப் பாா்வையிட்டு விசாரணைக்கு பின் காவல் துறை, தீயணைப்புத் துறை ஆய்வில் திருப்தியடைந்தால் மட்டும் பட்டாசு உரிமம் வழங்கப்படும். அதேவேளையில் குறித்த காலக்கெடுவுக்குள் முழுமையாக பெறப்படாத விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் தள்ளுபடி செய்யப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வாழப்பாடி அருகே உரிமம் இல்லாமல் 5 நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
    • விவசாயியின் தோட்டத்தில் போலீசார் சோதனை செய்து, அங்கு பதுக்கி வைத்திருந்த உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த கூட்டாத்துப்பட்டி செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி முருகன் (வயது 40). இவர், குறிச்சி பகுதியிலுள்ள இவரது தோட்டத்தில் நாட்டு துப்பாக்கி மறைத்து வைத்திருப்பதாக வாழப்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம்,21-ந்தேதி முருகனின் தோட்டத்தில் போலீசார் சோதனை செய்து, அங்கு பதுக்கி வைத்திருந்த உரிமம் இல்லாத 5 நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். முருகன் தலைமறைவாக இருந்தார்.இதையடுத்து வாழப்பாடி போலீசார் அவரை தேடி வந்தனர்.

    இதை தொடர்ந்து 3 மாதங்களுக்கு பிறகு நேற்று விவசாயி முருகனை போலீசார் கைது செய்தனர். பின்பு முருகன் கோர்ட்டில் ஆஜர்படுத் தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    விருதுநகர் மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 18 பட்டாசு கடைகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரவிட்டு இருப்பதாக வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை துணை முதன்மை அதிகாரி சுந்தரேசன் தெரிவித்தார்.
    சிவகாசி:

    மத்திய அரசின் வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை துணை முதன்மை அதிகாரி சுந்தரேசன் சிவகாசியில் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை சார்பில் 694 பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுஉள்ளது. இந்த கடையின் உரிமையாளர்கள் வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறையின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டுசெயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுஉள்ளது. இந்தநிலையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு சில நாட்கள் முன்னதாக பட்டாசு கடைகளில் சிறப்பு சோதனை நடத்துவது வழக்கம்.

    இந்த நிலையில் தற்போது 110 பட்டாசு கடைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த ஆய்வில் 18 பட்டாசு கடைகள் விதிகளை மீறி செயல்பட்டது தெரியவந்தது. பட்டாசு கிப்ட் பாக்சுகளில் கேப் வெடி மற்றும் கலர் மத்தாப்பூ பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் இது போன்ற வெடிகளை கிப்ட் பாக்சுகளில் வைக்க வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை தடை விதித்துள்ளது.

    இதை தொடர்ந்து அந்த பட்டாசு கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிமத்தை ரத்து செய்துள்ளோம். அதே போல் தயாரிப்பு முகவரி இல்லாத பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என விதி உள்ளது.

    ஆனால் சில கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் தயாரித்தவர்களின் முகவரி இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த கடைகளின் உரிமங்களையும் ரத்து செய்துள்ளோம். மொத்தத்தில் இந்த ஆய்வில் விதிகளை மீறியதாக 18 பட்டாசு கடைகளின் உரிமங்களை ரத்து செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
    கோவில் வளாகங்களில் வைக்கப்பட்டுள்ள கடைகளில் உரிமம் முடிந்த கடைகளை அகற்ற இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #MaduraiHC
    மதுரை:

    உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கல்யாண சுந்தரம் என்பவர் கோவில்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், உரிம காலம் முடிந்த கடைகளை அகற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், கந்தசிஷ்டி கவச விழாவுக்கு என திருச்செந்தூர் கோவிலில் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் எனவும், கோவில்களின் சொத்து விவரங்களை அந்தந்த கோவில்களில் விளம்பர பலகைபோல் வைக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. #MaduraiHC
    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் நிறுவன உரிமம் ரத்து செய்யப்படும் என்று திருப்பூர் கலெக்டர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் 20162 உணவு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 19004 நபர்கள் உரிமம்- பதிவு பெற்றுள்ளனர். உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின்படி உணவு பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவு பெற்ற பின்பே உணவுத் தொழில் புரிய வேண்டும். அவ்வாறு உரிமம், பதிவு பெறாதவர்கள் மீது பிரிவு 63, 55-ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    உணவு பாதுகாப்பு துறையில், உணவின் தரம், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது, கலப்பட டீத்தூள், போலி குடிநீர் நிறுவனங்கள், கலப்படம் மற்றும் போலி எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள்

    ஆகியவை குறித்து 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். அதன்மீது 24 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக புகையிலைப் பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் உரிமம் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ஓட்டுனர் உரிமத்துடனும் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். #aadhaarcard #ravishankarprasad
    புதுடெல்லி:

    பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களுள் ஒன்று ஆதார் அட்டை. தனி மனித அடையாளமாக அறிவிக்கப்பட்ட இந்த ஆதார் வங்கி கணக்கு முதல் அனைத்திலும் இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

    இதன்மூலம் மக்கள் பல்வேறு சிரமத்துக்கு உள்ளான நிலையில், ஆதார் எண்ணை கொண்டு ஊழல் செய்ய பா.ஜ.க அரசு முயற்சிப்பதாகவும், தனி மனித விவரங்களை அரசு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு அளித்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.

    மேலும், இந்த ஆதார் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும், வழக்குகளும் நிலுவையில் உள்ளன.



    இந்நிலையில், ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரியுடன் மத்திய சட்டத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். சுமார் ஒரு ஆண்டாக இந்த பேச்சு வார்த்தை குறித்த தகவல் வெளியாகி வருகிறது.

    இந்நிலையில், இன்று, செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத், ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், சாலைகளில் மதுபோதையிலோ அல்லது வேறு காரணங்களினால் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடும் ஓட்டுனர்களை இதன் மூலம் எளிதில் பிடித்து விட முடியும் என்றும், மாநிலம் விட்டு வேறு மாநிலத்துக்கு தப்பிச்சென்றாலும் ஓட்டுனரை கைது செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

    மேலும், ஒருவர் தன் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை மட்டுமே மாற்றியமைக்க முடியும் என்றும் கைரேகையினை மாற்ற முடியாது எனவும் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார். #aadhaarcard #ravishankarprasad
    நீரா பானம் உற்பத்தி செய்ய 3 நிறுவனங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிமங்களை வழங்கினார்.
    சென்னை:

    தென்னை சாகுபடி பரப்பில் அகில இந்திய அளவில், தமிழ்நாடு முதலிடத்திலும், தென்னை உற்பத்தியில் 2-ம் இடத்தையும் வகிப்பதோடு, லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு தென்னை வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது.

    தென்னை விவசாயிகளுக்கு உதவிடும் வகையிலும், அவர்களது வருமானத்தை உயர்த்தவும், தமிழ்நாடு அரசு தென்னை மரத்தின் மலராத தென்னம்பாளையில் இருந்து ‘நீரா’ பானத்தை இறக்கவும், அதனை பதப்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய உதவிடும் வகையில், ‘தமிழ்நாடு நீரா விதிகள், 2017’-ஐ வடிவமைத்து, அறிவிக்கை செய்துள்ளது.

    நீரா பானத்தில் இருந்து நீரா வெல்லம், நீரா பாகு, நீரா சர்க்கரை, நீரா சாக்லேட்டுகள், நீரா கூழ், நீரா கேக் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம், கிராமப்புற வேலைவாய்ப்பை பெருக்கவும், விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.



    மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்திடம் பதிவு செய்த தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் மட்டுமே நீரா பானத்தையும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களையும் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்படுவர்.

    இதன் தொடக்கமாக, கோவை மாவட்டத்தில் உள்ள விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனம், கோவை தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்களுக்கு, நீரா பானம் உற்பத்தி செய்யவும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் உரிமங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    மேலும், தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களில் உள்ள விவசாயிகளுக்கு நீரா வடிப்பது தொடர்பாகவும், நீரா பானத்தில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வது தொடர்பாகவும் தமிழ்நாடு அரசு பயிற்சிகள் வழங்கும். தமிழ்நாடு அரசு குளிர்பதன அலகுகள், பிற எந்திரங்கள் அமைக்கவும், நீரா பானம் மற்றும் அதன் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்யவும் உதவிபுரியும்.

    இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, இரா.துரைக்கண்ணு, டாக்டர் சி.விஜயபாஸ்கர், சட்டமன்ற பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தென்னை வளர்ச்சி வாரியத்தின் உயர் அதிகாரி டி.பால சுதாஹரி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 
    ×