என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓட்டுனர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க வேண்டும் - மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத்
Byமாலை மலர்12 Jun 2018 10:32 AM GMT (Updated: 12 Jun 2018 10:32 AM GMT)
ஓட்டுனர் உரிமத்துடனும் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். #aadhaarcard #ravishankarprasad
புதுடெல்லி:
பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களுள் ஒன்று ஆதார் அட்டை. தனி மனித அடையாளமாக அறிவிக்கப்பட்ட இந்த ஆதார் வங்கி கணக்கு முதல் அனைத்திலும் இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதன்மூலம் மக்கள் பல்வேறு சிரமத்துக்கு உள்ளான நிலையில், ஆதார் எண்ணை கொண்டு ஊழல் செய்ய பா.ஜ.க அரசு முயற்சிப்பதாகவும், தனி மனித விவரங்களை அரசு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு அளித்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரியுடன் மத்திய சட்டத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். சுமார் ஒரு ஆண்டாக இந்த பேச்சு வார்த்தை குறித்த தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், இன்று, செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத், ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சாலைகளில் மதுபோதையிலோ அல்லது வேறு காரணங்களினால் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடும் ஓட்டுனர்களை இதன் மூலம் எளிதில் பிடித்து விட முடியும் என்றும், மாநிலம் விட்டு வேறு மாநிலத்துக்கு தப்பிச்சென்றாலும் ஓட்டுனரை கைது செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஒருவர் தன் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை மட்டுமே மாற்றியமைக்க முடியும் என்றும் கைரேகையினை மாற்ற முடியாது எனவும் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார். #aadhaarcard #ravishankarprasad
பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களுள் ஒன்று ஆதார் அட்டை. தனி மனித அடையாளமாக அறிவிக்கப்பட்ட இந்த ஆதார் வங்கி கணக்கு முதல் அனைத்திலும் இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதன்மூலம் மக்கள் பல்வேறு சிரமத்துக்கு உள்ளான நிலையில், ஆதார் எண்ணை கொண்டு ஊழல் செய்ய பா.ஜ.க அரசு முயற்சிப்பதாகவும், தனி மனித விவரங்களை அரசு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு அளித்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.
மேலும், இந்த ஆதார் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும், வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரியுடன் மத்திய சட்டத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். சுமார் ஒரு ஆண்டாக இந்த பேச்சு வார்த்தை குறித்த தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், இன்று, செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத், ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சாலைகளில் மதுபோதையிலோ அல்லது வேறு காரணங்களினால் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடும் ஓட்டுனர்களை இதன் மூலம் எளிதில் பிடித்து விட முடியும் என்றும், மாநிலம் விட்டு வேறு மாநிலத்துக்கு தப்பிச்சென்றாலும் ஓட்டுனரை கைது செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஒருவர் தன் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை மட்டுமே மாற்றியமைக்க முடியும் என்றும் கைரேகையினை மாற்ற முடியாது எனவும் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார். #aadhaarcard #ravishankarprasad
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X